மாம்பலம் கவிராயர்
சருகணிக்கு நாலுசீட்டு வீரசோழம் மூணரை
சேந்திஉடை நாதபுரம் ஏழுபேர் பாகனேரி
ஏறியது ஆறுகூடப் போலீசு பாஸொண்ணு
எண்ணிக்கும் செக்கரே முப்பது.
என்னப்பா தம்பி பலாச்சுளை வாசனையே
ஏறுமா றாவருதே நேத்து அறுத்ததா
வெள்ளரிப் பிஞ்சும் கருவாடு போலாச்சே
நல்லவெயில் காலமில்லே அப்பு.
சூனாபா னாதேவர் வீட்டிலே கேதமின்னு
சாமாஞ்செட் டோடுபோய்க் கொல்லையிலே தோசைசுட
ஆறப் பொறுக்காம ஆவூன்னு தின்னுபோட்டு
வீடியோ போட்டு விடியுமட்டும் பாத்தாங்க.
கண்ணாத்தா க்ஷப்பத்தான் உண்டா யிருக்காளா
காளையார் கோவில் திருவிளாலே பார்த்தப்போ
அத்தாச்சி சும்மா சிரிச்சாஹ ஆனாலும்
மொத்தமுமே உங்கசனம் தானே.
உரம்வாங்க பேங்கில் கடன்கேட்டா தண்டவட்டி
உடனேதான் கட்டுன்னு தாக்கீது தாறாங்க
வெள்ளாமை செத்துடும்னா யார்கேக்கப் போறாங்க
நாடார்ம ரக்கடையில் பத்தெழுதி வாங்கியாறேன்.
பூட்டான் பதினஞ்சு ரூபாங்க சிக்கிம்
பத்துரூபா பம்பர் தமிழ்நாடு அம்பது
பஞ்சாப் குலுக்கலில் ராவுத்தர் பேரனுக்குப்
பத்தா யிரமாம் பணமெப்போக் கிட்டுமோ ?
ஏறிவாங்க சீக்கிரம் வண்டி எடுக்கணும்
ஏத்துப்பா பூக்கூடை ஆகட்டும் மேலே
கருவாடு ஏத்தாதே கம்ளெயின் பண்ணுவாக
காலை நகர்த்தய்யா போலாம்ரைட்.
- இழந்த யோகம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- கோயிலுக்கு
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- இந்திய இளவரசர்களே!
- மெளனம்
- பயணம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- மாற்றம்
- சின்னப் பூக்கள்
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- ஞாநிக்கு மீண்டும்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- உதிரும் சிறகு
- தலைப்பாரம்…..
- குழந்தை யேசு
- காவல்
- தீ தித்திப்பதில்லை…
- தேவகோட்டை – சிவகங்கை