இளங்கோ
1.
சடசடத்தோடும்
இரயில்களின் இடைவெளியில்
பூக்களின் தோழமையுடன்
நிகழ்கிறது
நமது முதல் சந்திப்பு
பேசுவதற்கான வார்த்தைகள்
திசைகளைத் துழாவும்
விழிகளில் புதைய
நமக்கான வெளிகளில் மட்டும்
நிரம்புகிறது நிசப்தம்
இணையத்தின்
இருப்பை வியந்தபடி
நேசத்தின் முதல்தளிர்
தண்டவாளத்தருகில் துளிர்க்கிறது
காலத்தின் அடுக்குகளைப் பிளந்தபடி
மழைக்கால இரவில்
ஒளியின் அரூபநடனத்துடன்
பயங்களற்று பயணிக்கின்றோம்
திசைகள் தெரியாப்
புராதனத் தெருக்களில்
புலம்பெயர்கையில்
ஓலமிட்டுப் பிளிறிய
ஆன்மாவின் அழுகுரல்
இனியேனும் சற்று அதிராதிருக்கக்கூடும்
உனையிறுகவணைக்கும்
இந்தக்கணத்திலேனும்
தாய்மொழியின் சுவையறியாது
சபிக்கப்பட்ட வாழ்வின் மீதியை
துயரங்கள் துலங்க
விழித்தெழும் நீண்ட இரவுகளை
தனிமைத்திரை கவிழ
வெளிறும் வெற்றுப்பகல்களை
பகிர்வதற்கான நம்பிக்கைகள்
உதடுகள் நனைக்க
கிற்ங்கிப்போகும் உன்விழிகளில்
மின்னலாய் வெட்டுகிறது
2.
நீளும்
இத்தொலைதூரப் பேரூந்துப்பயணத்தில்
உனது விழிநீரும் வியர்வையும் கலக்க
பிரிவுத்துயர் தாங்கிய ஆடையின் வாசத்திலிருந்து
இதமாய் விரிகிறது
ந்மக்கான முதற்கவிதை.
- இழந்த யோகம்
- ஈழத்தில் சமாதானம்
- நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்
- எதிர்காலத்துப் பணம் உண்மையிலேயே பேசலாம்
- நான் வானவியலுக்கு புதியவன். நான் எந்த தொலை நோக்கியை வாங்குவது ?
- அமெரிக்க ஆக்க மேதை – தாமஸ் ஆல்வா எடிசன்
- கோயிலுக்கு
- எனக்குப்பிடித்த கதைகள் – 4 – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் ‘முட்டாள் கிம்பெல் ‘ ஆசை என்னும் வேர்
- Mahakavi’s Puthirathoru Veedu and Ionesco’s The Chairs to be plays at Manaveli’s Ninth Festival
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- இந்திய இளவரசர்களே!
- மெளனம்
- பயணம்
- சீரணி அரங்கத்தில் பேரணி
- மாற்றம்
- சின்னப் பூக்கள்
- பால்யகாலத்து நண்பன்!
- என் அக்கா
- இந்த வாரம் இப்படி – மார்ச் 3 2002. (எரியும் குஜராத், தன்னார்வக் குழுக்களின் கொடூர முகம், குருமூர்த்தியும் சிவகாசியும்)
- ஞாநிக்கு மீண்டும்
- மதக்கல்விக்கு அரசு ஆதரவு தரலாகாது
- என் தந்தையார் பற்றி சிறு விளக்கம்
- விருந்துக்கு வந்த இடத்தில்
- அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்
- உதிரும் சிறகு
- தலைப்பாரம்…..
- குழந்தை யேசு
- காவல்
- தீ தித்திப்பதில்லை…
- தேவகோட்டை – சிவகங்கை