கே ஆர் விஜய்
ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
பள்ளியில் சேர்க்கும் போதும்
பொய்யான பிறந்தநாளைக் கொடுத்தாய்..
வீட்டில் உனக்கு சுமையென்று…
ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது
ஏழை எனச் சொல்லி
இலவச புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தாய்…
ஊருக்கு குடும்பத்தோடு
செல்லும் போது வேண்டுமென்றே
பேருந்தில்
என் வயதைக் குறைத்தாய்…
விருந்தாளிகள் யாரேனும் வந்தால்
பணமில்லை என
என்முன்னே பொய்யுரைத்தாய்..
ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
பிற்படுத்தப்பட்டோர் சமூக அந்தஸ்தைக்கொண்டு
இலவசமாய் கிடைக்கும் சலுகைகளை
பயன்படுத்திடவே நினைத்தாய்..
தொலைபேசியில் அழைப்பு வந்தால்
இருந்து கொண்டே இல்லை என்றாய்…
முதன் முதலாய் வேலைக்குப் போனபின்
பக்கத்து வீட்டார் சம்பளம் கேட்க
வேண்டுமென்றே மூவாயிரம் குறைத்தாய்…
ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
எதற்கெடுத்தாலும் நாம் நடுத்தர வர்க்கம்
என்று போலிப் பெயர் சூடிக் கொண்டாய்.
எதிர்த்துப் பேசிய போது
‘உனக்குத் தெரியாதுடா உலகம் ‘
எனத் தடுத்தாய்..
என் திருமணத்திற்கே
வரதட்சணை வாங்கினாய்…
உன் அப்பா அம்மாவை
முதியோர் இல்லத்தில் சேர்த்தாய்…
பணம் கேட்டு உறவினர் வந்த போது
அவரிடம் இல்லை என்று சொல்லி விட்டு
அமைதியாய் பீரோ திறந்து எண்ணிக் கொண்டாய்.
என் குழந்தையை நீ தொடாதே அப்பா….
அதை நான் வளர்க்கிறேன்…
உன்னை மாதிரியல்ல…
உன்னிலும் மேலாக….
சமூகத்திற்கு பயந்து கொண்டல்ல…
சமூகத்திற்கு பயன்தருபவனாக –
வருங்கால இந்தியாவை வலம்வருபவானாக-
முன்மாதிரியாக வளர்க்கிறேன்..
இனியாவது கற்றுக்கொள்…
***
vijay_r@infy.com
- மனைவி!
- கேள்வி
- புகை அடர்ந்த வட இந்திய மாநிலங்கள்
- குஜராத்தின் ‘பூகம்பம் தாங்கும் வீடு ‘
- ஆந்த்ராக்ஸ் விஷத்தின் ஆதாரக்காரணம்
- சாக்கடையில் போகும் ஒளிநாறு தொழில்நுட்பம் (Broadband)
- மின் அஞ்சல்
- கணித மேதை ராமானுஜன்
- இத்தாலிய கொண்டைக்கடலை சூப்
- கார தேன் கோழிக்கால்கள்
- கலாச்சாரம் பற்றிய மாலன் கேள்விகளுக்குப் பதில்
- இலங்கைத் தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் கனடாவில் வெளியீட்டு விழா
- அன்பு என்ற அமுதம்
- இருட்டு பேசுகிறது!
- மரணம்
- தெரியாமலே
- ‘நந்தன் வழி ‘ பத்திரிக்கையில் வந்த கண்ணகி கட்டுரைக்கு பதில்
- தலைவர்களே படிக்காதீர்கள் .. பேசுங்கள்
- முதலமைச்சர் போன்ற பதவிகளுக்கு தேவையான பதவிக்கால வரையறை (term limits)
- புதிய சமுதாயமும் இளைஞர்களும்
- இந்த வாரம் இப்படி – ஜனவரி 27, 2002 (புத்தக விழா, ஆண்டிப்பட்டி, அக்னி, மனோரமா)
- துயரம்
- அது அந்தக் காலம்….
- அப்பா
- என் வீட்டருகே ….
- இதற்கும் புன்னகைதானா… ?
- பிறவழிப் பாதைகள்