அப்பா

This entry is part [part not set] of 27 in the series 20020127_Issue

கே ஆர் விஜய்


ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
பள்ளியில் சேர்க்கும் போதும்
பொய்யான பிறந்தநாளைக் கொடுத்தாய்..
வீட்டில் உனக்கு சுமையென்று…

ஒன்றாம் வகுப்பு படிக்கும் போது
ஏழை எனச் சொல்லி
இலவச புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தாய்…

ஊருக்கு குடும்பத்தோடு
செல்லும் போது வேண்டுமென்றே
பேருந்தில்
என் வயதைக் குறைத்தாய்…

விருந்தாளிகள் யாரேனும் வந்தால்
பணமில்லை என
என்முன்னே பொய்யுரைத்தாய்..

ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
பிற்படுத்தப்பட்டோர் சமூக அந்தஸ்தைக்கொண்டு
இலவசமாய் கிடைக்கும் சலுகைகளை
பயன்படுத்திடவே நினைத்தாய்..

தொலைபேசியில் அழைப்பு வந்தால்
இருந்து கொண்டே இல்லை என்றாய்…

முதன் முதலாய் வேலைக்குப் போனபின்
பக்கத்து வீட்டார் சம்பளம் கேட்க
வேண்டுமென்றே மூவாயிரம் குறைத்தாய்…

ஏன் அப்பா இது போல என்னை வளர்த்தாய் ?
எதற்கெடுத்தாலும் நாம் நடுத்தர வர்க்கம்
என்று போலிப் பெயர் சூடிக் கொண்டாய்.
எதிர்த்துப் பேசிய போது
‘உனக்குத் தெரியாதுடா உலகம் ‘
எனத் தடுத்தாய்..

என் திருமணத்திற்கே
வரதட்சணை வாங்கினாய்…

உன் அப்பா அம்மாவை
முதியோர் இல்லத்தில் சேர்த்தாய்…

பணம் கேட்டு உறவினர் வந்த போது
அவரிடம் இல்லை என்று சொல்லி விட்டு
அமைதியாய் பீரோ திறந்து எண்ணிக் கொண்டாய்.

என் குழந்தையை நீ தொடாதே அப்பா….

அதை நான் வளர்க்கிறேன்…
உன்னை மாதிரியல்ல…
உன்னிலும் மேலாக….
சமூகத்திற்கு பயந்து கொண்டல்ல…
சமூகத்திற்கு பயன்தருபவனாக –
வருங்கால இந்தியாவை வலம்வருபவானாக-
முன்மாதிரியாக வளர்க்கிறேன்..
இனியாவது கற்றுக்கொள்…

***
vijay_r@infy.com

Series Navigation

author

கே ஆர் விஜய்

கே ஆர் விஜய்

Similar Posts