சேவியர்
சில பயங்களின்
சிறகு பிடித்துச் சிறகு பிடித்துப்
பறந்துப் பழக்கப்பட்டது தான்
மனித இனம்.
அப்பாவின் குரலின் கம்பீரத்தில்
மருளும் விழிகள் வழிய
அவசர அவசரமாய் இரவு உணவு அருந்திய
சிறு வயதுப் பயம்…
வகுப்புக்கணக்கைப் போட மறந்து
கணக்கு வாத்தியாாின் பிரம்பின் நினைவில்
காய்ச்சல் வருத்திக்கொண்ட
பள்ளிக்கூடப் பயம்…
தேர்வு முடிவுக்கு முன்னிரவில்
துரத்தும் யானைமுன் நகர்த்தமுடியா கால்களுமாய்
விழுந்துகிடப்பதாகவும்,
ஏதோ ஓர் நீர்நிலைக்குள் கால்கள் கட்டப்பட்டு
மூழ்கித்தவிப்பதாகவும்
கனவு கண்டு பயந்து…..
வேலை…
குடும்பம்..
எதிர்காலம் என்று
பக்கத்துக்குப் பக்கம் பயத்தை
பிள்ளையார் சுழியாய்ப் போட்ட வாழ்க்கை.
என் சிறுவயது மகனாவது
இந்த பயமில்லாத வாழ்க்கை வாழவேண்டும்,
கோலி விளையாடிக் கொண்டிருந்தவனை
அணைத்துக் கொண்டு சொன்னேன்…
மெதுவாய் என் முகம் பார்த்தான்.
அப்பா சொல் காப்பாற்ற முடியுமா என்னும் பயம்
அவன் கண்களில் மிதப்பது தொிந்தது…
- யூரேக்கா! (2) அறிவியலில் படைப்புத் தருணங்கள்
- புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை
- பூசணி அல்வா
- இணையக் கலைச் சொற்கள்
- வாழ்க்கை
- ஈசன் தந்த வீசா.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி – ஒரு நினைவாஞ்சலி
- பயம்
- முதல் காலை
- ஆளற்ற லெவல் க்ராசிங்.
- இலவங்காடுகள்.
- ர்வாண்டா, ஏன் எப்படி இனப்படுகொலை நடந்தது
- இந்த வாரம் இப்படி – 9 சூன் 2001
- தமிழகத்தில் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் ?
- டெல்லிக்குப் போகும் முஷாரஃப்
- அறம்
- தேடல்
- வீரப்பன் முதல்வரானால் சிறப்பிதழ்