இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

நேசகுமார்



கடந்த திண்ணை இதழில் வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் இஸ்லாமிய சகோதரர் கமலாதாஸ்/சுரையா/மாதவிக்குட்டி இஸ்லாத்தை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டுள்ளார். அப்படி எழுதும்போது, எழுத்தாளர் ஜெயமோகன், தமது வலைத்தளத்தில்( http://jeyamohan.in/?p=2819) கமலாதாஸ் இஸ்லாத்துக்கு மதம் மாறியது குறித்து வருந்தியதை விவரித்து எழுதியுள்ளது தவறு என்றும் வாதிட்டுள்ளார்.

இது இஸ்லாத்தில் ஒரு முக்கியமான அம்சம். இஸ்லாம் துவங்கிய நாள் முதல் அது ஒரு வழிப்பாதையாகவே இருந்து வந்துள்ளது. உள்ளே எப்படியும் வரலாம் – கீழே கண்ட வகைகளின் மூலமாக

1.இஸ்லாத்துக்கு சம்பந்தமே இல்லாத சூஃபியிஸம் மூலமாக (ஏ.ஆர்.ரஹ்மான்),
2.கழுத்திற்கு கத்தி வந்தவுடன் (அபூ சூஃப்யான் இஸ்லாத்துக்கு வந்தது போல),
3.அரசியல் காரணங்களுக்காக ,
4.ஜிஸ்யாவிலிருந்து தப்பிப்பதற்காக(அவுரங்கசீப் காலத்தில் ஏராளமான இந்துக்கள் மதம் மாறியது போல) ,
5. சிறைத்தண்டனைக் கைதிகள் அதிலிருந்து விடுபடுவதற்காக (சவுதி அரசாங்கம் இன்றும் இதை செய்கிறது),
6.திருமணத்திலிருந்து வெளியேறுவதற்காக (சமீபத்தில் ஹரியாணாவின் துணை முதல்வராக இருந்த சந்தர் மோகன் சந்த் முஹம்மதுவாக மாறி அனுராதாவை பாலை ஃபிசா(Fiza)வாக மாற்றி நிக்காஹ் செய்து கொண்டது போல),
7.காதல் ஜிஹாத் மூலமாக(மசூதிகளில் இதற்கு ரேட் நிர்ணயம் செய்திருக்கிறார்கள் – காதலித்து மதம் மாற்றி பெண்களை இஸ்லாத்திற்குள் கொண்டு வருவதற்காக),
8. ஜாதி முறைகளிலிருந்து தப்பிப்பதற்காக (மீனாட்சிபுரம்),
9. எஜமானர்களிடமிருந்து, அடிமை முறையிலிருந்து தப்பிப்பதற்காக(பிலால்)

(குறிப்பு: கடைசியில் இருக்கும் இரண்டு முறைகளிலும் ஷரீயத்து என்ன சொல்கிறது என்றால், ஒரு தலித் தன்னைவிட மேலே ஜாதிப்படிநிலையில் இருப்பவர்கள் முஸ்லீமாக இல்லாத பட்சத்தில் முஸ்லீமாக மதம்மாறி ஜாதி ஒடுக்குமுறைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், மேல் ஜாதிக்காரர்கள் முதலில் இஸ்லாமியர்களாக மதம் மாறினால், அவர்களுக்கு தமது ஜாதி மேலாண்மையை தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது – பாகிஸ்தானில் இதனால் தான் இன்னமும் மேல் ஜாதி முஸ்லீம்கள் சகலவித ஒடுக்குமுறைகளையும் செய்துகொண்டு மேல் ஜாதியினராகவே இருக்கின்றார்கள். எல்லா பாகிஸ்தான் பிரதமர்களும், இராணுவ தளபதிகளும், அரசு அதிகாரிகளும் மேல் ஜாதி முஸ்லீம்களே – அடிமை முறையிலும் இதே சட்டம் தான். முஸ்லீம் எஜமானரிடமிருந்து அடிமை தப்பித்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியாது. முஸ்லீம் எஜமானரே மனதுவைத்து போனால் போகிறது என்று கொடுத்தால் தான் உண்டு. காஃபிர் எஜமானரிடமிருந்து தப்பி வருபவர்களுக்கே இஸ்லாம் விடுதலை வழங்குகிறது. முஹமதிடமே சாகும் வரை தலித் அடிமைகள் இருந்தனர்).

***

இப்படி உள்ளே எப்படியும் வரலாம். மேலே சொன்னதுபோல எப்படியும் இஸ்லாத்துக்கு உள்ளே மானுடர்களை கொண்டு வருவதை இறைக்கடமையாக நினைத்து உலகெங்கும் வெறித்தனத்துடன் பல இஸ்லாமிய இயக்கங்கள் இயங்கியும் வருகின்றன. இவற்றிற்கு தற்போது அரபு நாடுகளிலிருந்து ஏராளமான பணமும் வருகின்றது. ஆனால், இப்படி உள்ளே வருபவர்கள் வெளியே எப்படியும் போக முடியாது. அதற்கு அல்லாஹ்வின் தண்டனை – தலையை வெட்டுவதுதான். அதனால் தான், இஸ்லாத்துக்கு உள்ளிருந்தே எதிர்ப்பை தெரிவிக்கும் முறை தோன்றியது. சூஃபியிஸம், ஷியா இஸ்லாம், அஹமதியா இஸ்லாம், பஹாய் இஸ்லாம் போன்றவற்றில் இந்த முறையைக் காணலாம். ஷியாக்கள் ஹஜருல் அஸ்வத்தை கைப்பற்றி பஹ்ரைனுக்கு எடுத்துக் கொண்டு போய் உடைத்தாலும், அவர்களால் தாங்கள் தங்களது பாரம்பரிய மதத்துக்கு திரும்பிவிட்டோம் என்று வெளிப்படையாக அறிவிக்க முடியவில்லை. மூடத்தனம் மூர்க்கமாய் உடைந்து போன அணை வெள்ளம் போன்று செல்லும்போது அந்த நீரோட்டத்தை சுய சிந்தனையுள்ள தனிநபர்கள் அல்லது சிறு குழுக்கள் எப்படி எதிர்க்க முடியும்? வெளிப்படையாய் முக்காடு போட்டுக்கொண்டு உள்ளே குமைந்து கொண்டு இருக்க மட்டுமே முடியும்.

இதுதான் கமலா தாஸ் விஷயத்திலும் நடந்தது. வஹ்ஹாபியின் கட்டுரையிலேயே அதற்கு சான்றுகள் இருக்கின்றன. எப்போதும் அடிப்படைவாத முஸ்லீம் அடியாட்கள் எட்டுபேர் கூட இருக்கும் நிலையில் வயதான ஒரு பெண்மணிக்கு, அதுவும் நிறுவனப்படாத ஒரு மதத்தில், சமூகத்தில் இருந்து வரும் ஒரு கலகக்காரப் பெண்மணிக்கு மனதில் தோன்றியதை வெளிப்படையாக சொல்ல எப்படி தைரியம் வரும்? அல்லது அப்படி சொல்லி கடைசி காலத்தில் எந்தவொரு இஸ்லாமிய அடிப்படைவாதியினால் கழுத்தறுபட்டு சாக யாருக்குத்தான் விருப்பமிருக்கும்? விதியை நொந்துகொண்டு, எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு, ‘எல்லாம் புகழும் அல்லாஹ்வுக்கே’ என்று புன்சிரிப்புடன் சொல்ல வேண்டியதுதான். அதைத்தான் கமலாதாஸ் செய்தார்.

ஆயினும், இதனூடாகவே தனது எதிர்ப்பையும் மறைமுகமாக காட்டவும் தவறவில்லை. அதனால் தான் இஸ்லாத்துக்கு எதிரான தனது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்த தஸ்லீமா நஸ் ரீனை தனது வீட்டிற்கு வெளிப்படையாக வரவேற்று அவரிடம் தான் ஒரு முஸ்லீமிடம் காதல் வயப்பட்டு அதன் காரணமாகவே மதம் மாறியதாகவும் அதற்கு தாம் இப்போது வருந்துவதாகவும் தெரிவித்திருக்கிறார். திருவனந்தபுரத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தஸ்லீமா இதைத் தெரிவித்த செய்தி அப்போது பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது. இப்போதும் இணையத்தில் இருக்கிறது (http://ibnlive.in.com/news/islam-is-history-says-taslima/19373-3.html).

***
கமலாதாஸை சுற்றி என்.டி.எஃபின் அடியாட்கள் இருக்கும்போது, வயதான ஒரு பெண்மணியிடம் அவரை கொல்ல ஆட்கள் தயாராக இருக்கிறார்கள், விஷம் வைத்து கொல்லப்போகிறார்கள் என்றெல்லாம் ஃபோபியாவை ஏற்படுத்தி, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ‘பாதுகாப்பு’ கொடுக்கும்போது, ஒரு வயதான பெண்மணியால், ‘தான் இந்த தலைவெட்டி கல்ட்டிற்குள் உள்ளே வந்து மாட்டிக்கொண்டு அவஸ்தைப் படுகிறோம்’ என்பதை வெளிப்படையாக எப்படி சொல்ல முடியும்? மிரட்டலையும் விட மோசமானது அன்பான அரவணைப்பு. கமலாதாஸ் மதம் மாறிவிட்டார் என்றவுடன் சாரி சாரியாக வீட்டிற்கு படையெடுத்துவிட்டார்கள் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள். தன்னை வந்து பார்ப்பதே பாக்கியமாக பல இஸ்லாமிய பெண்கள் கருதுவதாக கமலாதாஸ் தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானில் இது தொடர்ந்து நிகழ்வதை பார்க்க முடியும். முஸ்லீம் ரவுடிகள் இந்து பெண்களை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மதம் மாற்றி நிக்காஹ் புரிந்து கொள்வார்கள். பின்பு அந்தப் பெண்களின் பெற்றோர்கள் போலீஸ், கோர்ட் என்று அலைந்து, பத்திரிகைகள், என்.ஜி.ஓ அமைப்புகள் என்று போராடி அந்தப் பெண்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படும்போது இஸ்லாமிஸ்டுகள் கும்பலாக கூடி நின்று அந்தப்பெண்கள் கடவுளின் மார்க்கத்திற்கு வந்துவிட்டதாக கூக்குரலிட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்து கோஷமெழுப்பி அவர்கள் மீது பூக்களைத் தூவுவார்கள். அந்த அப்பாவி பெண்களால் என்ன சொல்ல முடியும்? தான் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, வன்புணரப்பட்டதை, மதம் மாற்றப்பட்டதை சொல்லி மதம் திரும்பவும் முடியாது, ஏனெனில் இஸ்லாம் ஒரு வழிப்பாதை. சட்ட ரீதியாக பாதுகாப்பு கொடுத்தால் கூட , ஈமான் இதயம் முழுவதும் நிரம்பிய எதாவது ஒரு அடிப்படைவாதி கடவுளின் கட்டளையை நிறைவேற்றுவதாகக் கருதிக்கொண்டு கழுத்தை அறுத்துவிடக் கூடும். சொந்த சமூகத்திலோ சாகும்வரை இது ஒரு களங்கமாக பார்க்கப்படும். சொந்த தாயையும், தகப்பனையும் பார்ப்பதைக் கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை – ஏனெனில் அவர்கள் காஃபிர்கள், மதம் மாறியவுடன் ஒரு முஸ்லீமுக்கு தனது முந்தய சமுதாயத்துடனான உறவு முழுவதுமாக அறுந்துவிடுகிறது. உள்ளே இருப்பவர்களையே தீட்டானவர்கள்/அசுத்தமானவர்கள்/நஜூஸிகள் என்று கடவுள் சொல்லியிருப்பதாக நம்பும் இவர்கள், காபிர்களை அவர்கள் தந்தைதாயாக இருந்தபோதிலும் பக்கத்தில் வரக்கூட விடுவதில்லை (http://blog.taragana.com/n/sindh-court-asks-police-to-produce-hindu-girls-on-april-9-21775/).

எனவே, இவர்கள் உள்ளேயே ஒருவருக்கொருவர் விற்கப்பட்டோ அல்லது ஒரு இஸ்லாமிய ஆணுக்கு மூன்றாம் அல்லது நாலாந்தாரமாகவோ ஆகி கடைசியாக அந்தப்பெண்கள் எல்லாம் வேறு வழியின்றி இஸ்லாமிய சமூகத்தில் அடைக்கலமாகி விடுகின்றனர். இப்படி இஸ்லாத்துக்கு மதம் மாறாதவர்கள் கடைசி வரை செக்ஸ் அடிமையாக, வைப்பாட்டியாக இருக்க வேண்டியதுதான்(1). இது சம்பந்தமாக மரியானா பாபர் அவுட்லுக்கில் எழுதிய விரிவான கட்டுரை இந்த விவரங்களை விளக்குகிறது(http://www.islam-watch.org/MarianaBaabar/HindusInPakistan.htm).

***

Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts