கோபால் ராஜாராம்
பி கே சிவகுமார் எழுதிய கடிதமும் அதன் பின் அவரை ஆதரித்தும், அவரை விமர்சனம் செய்தும் வந்த கடிதங்கள் சென்ற வாரம் வெளியாயின. சென்ற வாரம் அதனால் சிவகுமார் சிறப்பு மலர் என்று சொல்லும்படியாயிற்று. ஒருவர் எழுதுவதால், தனக்குப் பிடித்த இன்னொரு நல்ல எழுத்தாளர் திண்ணையில் எழுதாமல் போய்விடுவாரோ என்ற ஆதங்கத்துடன் சேர்ந்து, சிலர் பிரசுரிக்கத் தக்கவர்கள், சிலர் அப்படியில்லை என்ற குறிப்பும் இந்தக் கடிதங்களில் வெளியாயிற்று. அவர் எனக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தில், சில நண்பர்கள் அவருடன் உடன்பட்டு, திண்ணைக்கு தான் எழுதாதற்கு இதனைக் காரணாய்க் கூறியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார். இருக்கலாம்.
திண்ணையின் கடந்த எட்டாண்டு வரலாற்றில் திண்ணையின் சாதனை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. சில தெரியப்படாத எழுத்தாளர்களை முன்வைத்து அறிமுகம் செய்ததும், தமிழ் ஏடுகள் தொட அஞ்சுகிற சில உண்மைகளை வெளிக் கொணர்ந்ததும் பரவலான ஒரு வாசகர் சமூகத்தை உலக அளவில் கட்டி எழுப்பியதும் எவருமே செய்திருக்கக் கூடிய ஒன்று தான்.
இந்த எட்டாண்டுகளில் திண்ணைக்கு தாமாக முன்வந்து பலரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். முன்பு தொடர்ந்து எழுதி வந்த சிலர், இபோது எழுதுவதில்லை. இதற்கு பி கே சிவகுமார் குறிப்பிட்ட காரணமும் இருக்கக் கூடும் தான். ஆனால் அது மட்டுமே காரணம் இல்லை. தொடர்ந்து செயல்படமுடியாத அளவில் தனிப்பட்ட காரணங்களும் இருக்கலாம். திண்ணை அனைவரையும் எழுதுங்கள் என்று அழைத்ததுண்டு. யாரையும் அழைத்து, வற்புறுத்தி எழுத வைப்பது இல்லை. அதுவும் எழுத்துக்கு அன்பளிப்புத்தர வாய்ப்பில்லாத நிலையில் அப்படிச் செய்யவும் முடியாது.
ஆனால், இன்னார் எழுதினால் நான் எழுதமாட்டேன் என்று சொல்பவர்களின் கருத்துக்கு நிச்சயம் செவி சாய்க்க முடியாது. அது சாத்தியமே இல்லை. திண்ணையில் ரசூல் பிரசினையில் , இஸ்லாமிய அடிப்படை வாதிகள் ரசூலுக்கு எதிராக எழுதியதையும் வெளியிட்டோம். இதனால் ரசூல் இனி திண்ணைக்கு எழுதமாட்டேன் என்று சொல்லியிருந்தால் அது குறித்து நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. எதிர் எதிர்க் கருத்துகள் நாகரிகமான முறையில் வெளிப்படவேண்டும் என்பது தான் திண்ணையின் நோக்கம். நேசகுமார் அளித்த இஸ்லாம் பற்றிய விமர்சனக் கருத்துகளுக்கு , இஸ்லாமியர்களின் கடுமையான விமர்சனங்கள் வந்தன. மலர்மன்னனுக்கும் பல விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் என்று தனிப்பட்ட முறையில் நான் கருதும் காந்தி பற்றிய விமர்சனமும் திண்ணையின் பக்கங்களில் வெளிவந்தது. எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்திருந்த சில கட்டுரைகளையும் கூட சில காரணங்களுக்காக திண்ணையில் வெளியிட இயலவில்லை. அதற்கு அந்தக் கட்டுரை ஆசிரியர்கள் நிச்சயம் வருந்தியிருப்பார்கள் .ஆனால் அது குறித்து ஒன்றும் செய்வதற்கில்லை.
திண்ணை முஸ்லிம் முரசோ, விஜய பாரதமோ, முரசொலியோ, விடுதலையோ அல்ல. இந்த ஏடுகளில் எழுதுபவர்கள் திண்ணைக்கு எழுத முன்வந்தால், இந்த ஏடுகளில் எழுதுகிறார்கள் என்ற ஒரு காரணத்துக்காக மட்டும் அவர்களை நிராகரிக்க மாட்டோம்.
தனிப்பட்ட முறையில் விஜயன், வாஸந்தி போன்றோர் எழுதுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சார்புகள் அற்று பிரசினையை அணுகுபவர்கள் துரதிர்ஷ்ட வசமாக பத்திரிகை உலகில் மிகவும் அருகி வருகிறார்கள். அரசியல் கட்சிகளின் ஊதுகுழல்களாகவும், செயல்திட்டத்தின் சார்பாக நின்று மற்ற கருத்துகளை விமர்சனம் என்ற வரம்பை மீறி சாதி/மதக் கண்ணோட்டத்தில் குறுகிய முறையில் அணுகுபவர்களும் நிரம்பி வரும் சூழ்நிலை வளர்ந்து வருகிறது. ஆனால் சார்பற்றவர்கள் தான் ஜனநாயக உணர்வை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்கள். ஆனால் அவர்களும் கூட நிச்சயம் மாறுபட்ட கருத்துகளை, அவை கட்சி சார்புள்ளவர்களிடமிருந்து வந்தாலும் கூட , அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்த குறிப்பு திண்ணை பற்றிய விமர்சனங்களைக் கொண்டுள்ள மனங்களை மாற்றிவிடாது. ஆனாலும் பதிந்து வைப்போமே என்று தான் இதனை எழுதுகிறேன்.
gorajaram@yahoo.com
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)
- வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- இனியொரு விதி செய்வோம்
- நிச்சயிக்கப்பட்ட திருமணம்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
- தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்
- ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)
- ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்
- கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..
- சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு
- ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை
- பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்
- கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )
- சிறுகதை எழுதப் போய் ..
- சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…
- கடிதம்
- கடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா
- கடிதம்
- பட்டிமன்றம் 25 நவம்பர் 2007
- புன்னகைக்கும் பெருவெளி
- இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)
- பள்ளிக்கூடம்
- மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை
- ஒரே கேள்வி
- மாத்தா ஹரி அத்தியாயம் -36
- இறந்தவன் குறிப்புகள் – 2
- மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்
- மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)
- படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்
- ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ
- கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்
- திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்
- நாம் எப்படி?
- தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !
- கவிதைகள்
- குற்றாலச் சிற்றருவி
- கல்யாணம் பண்ணிப்பார்!