மார்க்க மயக்கத்தில் மார்க்ஸ்களும் மார்க்ஸியர்களும்- 2 (contd)

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

அருணகிரி


இவ்வாறு ஆனதற்கு சில சமூகவியல் காரணங்களும் உள்ளன. முன்பே சொன்னபடி 17-ஆம் நூற்றாண்டுக்குப்பின் ஐரோப்பிய கிறித்துவ சமுதாயம் சமூக, அரசியல் துறைகளில் மதத்தின் பிடியிலிருந்து விடுபடத்தொடங்கியது என்றால், அரேபிய முஸ்லீம் சமூகமோ இதற்கு நேர்மாறாக மாற்றங்களுக்கு இடம் தராமல் பிற்போக்கான மதச்சட்டங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளத் தொடங்கியது. வளர்ந்து வரும் ஐரோப்பியக் காலனிய ஆதிக்கம், வலுவிழந்து போன ஆட்டோமான் பேரரசு, இந்தியா முதலான நாடுகளில் ஆட்சியாளர் என்ற பீடத்திலிருந்து இறக்கப்பட்ட நிலை, இரண்டாம் உலகப்போரின் முடிவில் மத்திய கிழக்கில் ஆங்காங்கே எழுந்த ஜனநாயக எழுச்சி ஆகியவை கண்டு பயந்த முஸ்லீம் சமுதாயம், பாதுகாப்பு உணர்வு அருகிப்போன நிலையில் மதவாத முல்லாக்கள் கையில் அரசியல் அதிகாரத்தைப் படிப்படியாகத் தாரை வார்த்து, இன்று தம்முள் இறுகிய ஒரு பிற்போக்கு சமூகமாகக் குறுகிப் போய்க் கிடக்கிறது.

பெரும்பாலான கிறித்துவப் பெரும்பான்மை நாடுகளில் இன்று பைபிள் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்தப்படுவதில்லை. ஆனால் பெரும்பான்மையான இஸ்லாமிய நாடுகளில் ஷரியா மதச்சட்டங்களை வைத்துக்கொண்டு மதவாத அரசாங்கம் நடத்தப்படுகிறது. இந்த மதவாத அரசுகள் மாற்று மத நம்பிக்கையாளரை இரண்டாம் குடிகளாக நடத்துகின்றன. இருணட கால கிறித்துவ ஐரோப்பிய சமுதாயம் போல இக்கால இஸ்லாமிய சமுதாயம் இருக்கிறது. எந்தத் தேசிய இயக்கங்களுடனும், இனங்களுடனும், மொழிக்குழுவுடனும் முழுதும் அடையாளப்படுத்திக்கொள்ளாமல், முஸ்லீம் என்பதை மட்டுமே தங்களது முதன்மை அடையாளமாக்கும் இந்த உம்மா மனப்பான்மையானது, இஸ்லாமிய சமூகத்தை பயங்கரவாதம் உற்பத்தியாவதற்கேற்ற தேங்கிய குட்டையாகத்தான் ஆக்கி விட்டிருக்கின்றது. இந்தத் தேங்கிய குட்டையை உலகளாவிய உம்மா என்ற அளவில் பெருங்குளமாக ஆக்கி மதவாத மீன் பிடிக்க முனைகிறார்கள் அ.மார்க்ஸ் போன்ற மார்க்கவாதிகள்.

முல்லாக்களின் பிடியில் உள்ள இந்நாடுகளில், உள்ளிருந்து வரும் சீர்திருத்த முயற்சிகள் வெறித்தனமாக எதிர்க்கப்படுகின்றன. ஜனநாயக இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. இடதுசாரி இயக்கங்கள் நசுக்கப்படுகின்றன. எதிர்த்துப்பேச முனையும் ஒரு சிலரும் அரசாலேயே கொல்லப்படுகிறார்கள். முஸ்லீம் நாடுகளில் பலியிடப்படும் இடதுசாரிகளுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் ஆதரவாக நம்மூர் கம்யூனிஸ்டுகள் வாயைக்கூடத் திறப்பதில்லை. பொருள்முதல்வாத மார்க்ஸீயம் பேசும் அ. மார்க்ஸ் போன்றவர்கள் மதவாத முல்லாக்களுக்கு எதிராக முணுமுணுப்பதுகூட இல்லை; மாறாக தேசியம் தாண்டிய உம்மாவிற்கு அறைகூவல் விடுக்கும் மதவாதக் கயமையை மார்க்ஸீயப்போர்வையில் வெளிப்படையாகவே செய்கிறார். ஈராக் கம்யூனிஸ்டு கட்சியும், ஷியாக்களும் சதாமின் சாவை வரவேற்று மகிழ்ச்சி தெரிவிக்க நம்மூர் கம்யூனிஸ்டுகளோ சதாமின் மரணத்தை எதிர்த்துக் கூட்டம் போடுகிறார்கள்.

மட்டுமல்ல, இன்றும் கூட மதத்தால் அனுமதிக்கப்பட்ட போர்முறை என்ற அளவில் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதும், குழந்தைகளையும், பெண்களையும், முதியோரையும்கூடக் கொலை செய்வதும் உலகத்திலேயே முஸ்லீம்களால்தான் மதப்போர் என்ற பெயரால் தொடர்ந்து கையாளப்படுகிறது. எங்கோ உள்ள சதாம் செத்தால் அதற்கு இந்தியாவில் இந்துக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உலைவைக்கிறார்கள். இதனை எதிர்த்து இந்திய மார்க்ஸ்களும் மார்க்ஸிஸ்டுகளும் தும்மல் கூடப்போடுவதில்லையே, ஏன்?

இனமேலாண்மையை முன்னிறுத்தி மாற்றுக்கருத்தாளர்களையெல்லாம் இனத்தூய்மையற்ற இரண்டாம் குடிகளாக நடத்தி அப்பாவி மக்களைக்கொன்று குவித்தது அன்றைய ஹிட்லரின் பாசிசம் என்றால், பன்முகத்தன்மையை மறுத்து இஸ்லாமிய அரசுகள் பிற நம்பிக்கையாளரை எல்லாம் மார்க்கத்தூய்மையற்ற இரண்டாம் குடிகளாக சட்ட பூர்வமாகவே நடத்துவதும், மதப்போர் என்ற பெயரில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் ஜிஹாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதும் இன்று காணும் இஸ்லாமிய பாசிசம்.

முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் இல்லாத கருத்து சுதந்திரமும் மத சுதந்திரமும் பிற ஜனநாயக நாடுகளில் இருக்கிறது. ஜனநாயக விரும்பிகளும், அ.மார்க்ஸ் போன்ற எல்லை தாண்டிய மார்க்ஸீயவாதிகளும் நியாயமாக என்ன செய்ய வேண்டும்- மதவாத முஸ்லீம் நாடுகளில் மதவாதம் ஒழிந்து ஜனநாயகம் மலர வேண்டுமென்று, அங்கே பேச முடியாத மக்களுக்காக இங்கிருந்து இவர்கள் குரல் கொடுக்க வேண்டுமல்லவா? ஆனால், இவர்கள் செய்வது என்ன? முஸ்லீம் நாடுகளில் மதவாதத்தை உயிரைப்பணயமாக்கி எதிர்க்கும் இடதுசாரி ஜனநாயக இயக்கங்களை ஏளனம் செய்யும் வகையில் மதவாத முல்லாக்களுக்கு உதவும் வகையில் முஸ்லீம் உம்மாவுக்காக அல்லவா குரல் கொடுக்கிறார்கள்? இந்த அப்பட்டமான மதவாதத்திற்கு எதற்கு இடதுசாரிப்போர்வை வேண்டிக்கிடக்கிறது? கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் முல்லாஸ் மற்றும் கம்யூனிஸ்டு பார்ட்டி ஆஃப் இஸ்லாமிஸ்ட்ஸ் என்ற பெயர் வைத்துக்கொண்டு இந்த வேலையைச் செய்யலாம், ஒரு மார்க்க நேர்மையாவது இருக்கும்.

உலக நாடுகளில் இந்துக்களோ சீக்கியர்களோ பார்ஸிக்களோ சிறுபான்மையினராக வாழவில்லையா? அவர்கள் என்ன போகும் இடத்தில் எல்லாம் மத அடிப்படையில் தங்களுக்கு சிறப்புச் சலுகை தரப்பட வேண்டும் என்றா எதிர்பார்க்கிறார்கள்? முஸ்லீம் சமுதாயம்தான் எந்த நாட்டிற்கு சென்றாலும், உடை மாற்றும் அறையில் திடீரென்று மண்டிபோட்டு தொழுவதில் இருந்து, கண்காணிப்பில் இருக்கும் பொது இடங்களில் புர்கா அணிவது வரை மத அடிப்படையில் சிறப்புச் சலுகை கேட்கிறது. தனது மத நாடுகளில் இல்லாத கருத்து சுதந்திரத்தைப் பிற நாடுகளின் ஜனநாயக அரசியலில் அனுபவித்துக்கொண்டே தீட்டிய மரங்களில் கூர் பார்க்கிறது.

50-க்கும் மேற்பட்ட முஸ்லீம் நாடுகள் உலகில் உள்ளன. உண்மையிலேயே தங்கள் சமுதாயத்திற்கு உதவ வேண்டுமென்று முஸ்லீம் மக்கள் எண்ணினால், தத்தம் நாடுகளில் ஜனநாயகம் மலர தேசியம் வலுப்பட நவீன கல்வி பரவ முயற்சிகள் எடுக்க வேண்டும். பயங்கரவாத உற்பத்திக்கூடமான பாகிஸ்தான், பங்களாதேஷ், சவுதி அரேபியா போன்ற நாடுகள் மதப்பிடியில் இருந்து விடுபட உந்துதல் தர வேண்டும். ஒவ்வொரு முறையும் முஸ்லீம் வெறியர்கள் பயங்கரவாதம் நிகழ்த்துகையிலும், அதனை எதிர்த்து முஸ்லீம்கள் தெருவில் வந்தும் ஊடகங்களின் மூலமும் உரத்த குரல் எழுப்ப வேண்டும். மாற்று மதக்காரர் மீது நிகழ்த்தப்படும் ஜிஹாத் வெறியாட்டங்களை மதத்தலைவர்கள் நியாயப்படுத்தாமல், அதற்கு மாறாக இஸ்லாம் என்ற “அமைதி மார்க்கத்தின்” பேரைக் கெடுப்பதற்காக வன்முறை நடத்தும் ஜிஹாதிகள்மீதே பாத்வா கொடுக்க வேண்டும் .

இவற்றையெல்லாம் செய்யாமல், கம்யூனிசம் என்றும் மார்க்ஸீயம் என்றும் பேசிக்கொண்டு ஓட்டுப்பொறுக்குவதற்காகவும், முற்போக்கு வேஷத்தில் உள்ளூரில் அரசியல் செய்வதற்காகவும் இணையத்தின் மூலம் உம்மா வளர்க்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது விபத்தை நோக்கி நாட்டைச் செலுத்தும் விபரீதப் போக்குதானே தவிர வேறில்லை.

தேசீயம் என்பது உலக அளவில் இன்றைய ஜனநாயக அரசியல் அவசியம். ஜனநாயக முறைகளை எதிர்த்துக்கொண்டு, பலசமய நம்பிக்கைக்கு இடம்தராமல், தேசீயத்தில் கலக்காமல், பெரும்பான்மையுடன் சேர்ந்து இயங்காமல், உள்ளிருந்து மாற்றங்களைப் பெறாமல் , வெளியிலிருந்து விமர்சனங்களை அனுமதியாமல் தேங்கிப்போய்விட்ட ஒரு சமுதாயம் உலகளாவிய உம்மா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த சமூகம் மற்றவர்களின் அவநம்பிக்கைக்கு உள்ளாவதென்பதும் அதனால் மென்மேலும் தனிமைப்பட்டுப் போவதென்பதும் தவிர்க்க முடியாததாகிப்போய் விடும். இது இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்குச் சிறிதும் நல்லதல்ல.
———————————————————————————————————-
*அ. மார்க்ஸின் கட்டுரைக்கு: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=376&Itemid=119

** இந்த மேற்கோளுக்கு நன்றி: அரவிந்தன் நீலகண்டனது வலைப்பதிவு- http://arvindneela.blogspot.com/2007/01/1.html

Series Navigation

author

அருணகிரி

அருணகிரி

Similar Posts