புதுவை ஞானம்
————————-
ஆசான் நாங்குவோ ஜிக்கி ஒரு மேசையில் சாய்ந்தவாறு உட்கார்ந்தார்.
தலையை முன்னும் பின்னுமாக அசைத்து ஆழ்ந்த மூச்சு இழுத்து விட்டு
தன்னைக் கடந்ததோர் மோன நிலைக்குள் லயித்தார்.
அவரது சீடரான ஜியோயு கேட்டார், “என்னவாயிற்று குருவே?”
அசைவற்ற உடல் காய வைத்த விறகு போல் ஆகலாம்; எனில்
அசைவற்ற மனம் சாம்பல் போல் ஆகி விடுமா ”
இன்று மேசை மேல் சாய்ந்து உட்கார்ந்த மனிதன் ஏற்கனவே அதில் சாய்ந்து
உட்கார்ந்தவன் அல்ல.
இந்த வாக்கியம் கவித்துவமாகவும் சுற்றி வளைத்துப் பேசுவதாகவும் இருக்கிறது.
ஆசான் ஜிக்கி பதில் அளித்தார்:” நல்ல கேள்வி ! இன்று நான் எனது ஆணவ
மையக் கண்ணோட்டத்தைத் தூக்கி எறிந்து விட்டேன். நான் சொல்லுவது என்னவென்று
உனக்குப் புரிகிறதா? மக்களின் இசையை நீ கெட்டு இருக்கிறாய், ஆனால் மண்ணின்
இசையை அல்ல. மண்ணின் இசையை நீ கேட்டிருந்தாலும் சொர்க்கத்தின் இசையை நீ
கேட்டது இல்லை!”
சீடர் ஜியோயு சொன்னார், “நான் அது பற்றிக் கேட்கலாமா?”
“காற்று ஊளையிடுவதை நீ கேட்டதில்லையா? மிகப் பெரிய இந்தப் பூமி மூச்சு
விடும் போது அதனை நாம் காற்று என அழைக்கிறோம். மலை மீதுள்ள மூங்கில்
மரங்களைப் பார். பெரிய முதிர்ந்த மரங்களில் மூக்குத்துவாரங்கள், காதுத்துவாரங்கள்
போன்ற ஓட்டைகளும், குழிவுகளும், திருகி முறுக்கிய கிளைகள் போன்றவையும்
பேனாக்கள், மைக்கட்டிகள் (Grind stones), ஆழமான குட்டைகள், ஆழமற்ற குட்டைகள்
போல இருக்கின்றன. இவை தண்ணீர் விரைந்து ஒடுவதைப் போன்றும் அம்பு காற்றைக்
கிழித்து விரைவதைப் போன்றும், திட்டுவதைப் போன்றும், மூச்சிழுப்பது போலவும் கூவி
அழைப்பது போலவும், கூச்சலிடுவது போன்றும், சிரிப்பது போன்றும், பெரு மூச்சு விடுவது
போலவும் ஓசையிடுகின்றன. துவக்கத்தில் காற்று ஒற்றைச் சுருதியைத்தான் இசைக்கிறது.
அடுத்து லயத்துக்காகவென மற்றொரு சுருதியை எழுப்புகிறது. புயல் இரைச்சலாகச் சீறுகிறது.
புயல் வலுவிழக்கும் போது இந்த எல்லாத் திறப்புகளும் – ஒட்டைகளும் அமைதியடைகின்றன.
காற்று அடங்கும் போது கிளைகளும் இலைகளும் எப்படி அசைகின்றன என்பதை நீங்கள்
கண்டதில்லையா?
சீடர் ஜியோயு சொன்னார்: “புயலின் இசை பரந்தடர்ந்த பாழ் நிலத்தின் திறப்புகளிலிருந்து
வருகின்றது. மக்களின் இசை புல்லாங்குழலில் இருந்தும் இசைக் கருவிகளில் இருந்தும் வருகின்றது.
தேவலோக சொர்க்கத்தின் இசை பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா ? ”
ஆசான் ஜிக்கி பதிலளித்தார்: “இந்த வெவ்வேறு ஓசைகள் வெவ்வேறு விதமான ஒட்டைகள்
வழியே காற்று புகுந்து செல்வதனால் உருவாகின்றன. அவ்வோட்டைகளை இவ்வாறு அமைத்தது
யார்? இவற்றின் பின்னால் இருந்து செயல் படுத்தும் சக்தி எது?”
இந்தக் கேள்வியோடு இந்தக் கதை முடிவடைகிறது. இதன் இறுதிப் பொருள் என்ன என்பது
வாசகரின் சிந்தனைக்கு யூகத்துக்கு விடப்படுகிறது.
தேவலோக இசை என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள
உதவும் சில சிந்தனைகள் கீழே தரப்படுகின்றன: ஆசான் ஜிக்கி தேவலோக இசை பற்றி
வெளிப்படையாக விவரிக்கவில்லை. யாருக்கு அதில் ஈடுபாடு இருக்கிறதோ அவர்களே
ஒவ்வொருவரும் அது பற்றிக் கண்டுபிடிக்கட்டும் என விட்டு விட்டார்.
புவியின் இசை பற்றி விவரிப்பதன் மூலம் முனிவர்கள் பாழ்வெளி பற்றி நாம் காண்பதற்கு
நம்மை அனுமதிக்கின்றனர். அல்லது இயற்கையைக் கண்டுணர நடத்திச் செல்கின்றனர்.
காற்று வீசும் போது ஒரு மனிதன் புல்லாங்குழல் வாசிப்பது போல் துளைகளின் ஊடே
புகுந்து செல்கிறது. அடிநாதமான இணைக்கும் சிந்தனை என்னவெனில் ஒரு சக்தி – காற்று
அல்லது மூச்சு இருப்பில் – இயற்கையில் உள்ள அனைத்துப் பல பொருட்களினூடே புகுந்து
செல்கையில் மொத்த பிரபஞ்சமுமே இசைக்கருவி ஆகிவிடுகிறது. இங்கும் கூட இருப்பில்
உள்ள அனைத்து பொருட்களினூடேயும் புகுந்து செல்லும் சர்வ வல்லமை பொருந்திய சக்தியை
நாம் காண்கிறோம். நம்மிடையே ஊடுருவிச் செல்லும், சர்வ வல்லமைகொண்ட சக்தியை நாம்
காண்கிறோம்.நம்மிடையே ஊடுருவிச் செல்லும், நம்மைச் சுற்றியுள்ளவற்றில் ஊடுருவிச் செல்லும்
அனைத்துமே அழகிய இசையை உருவாக்குகின்றன ஆன்மீக சாம்ராஜ்யத்தின் கூட்டு இசையை
உருவாக்குகின்றன.
தேவலோக இசை என்பது நாம் புரிந்து கொண்டது போல் ஓசைகளின் இசை அல்ல. லயத்தை
நாம் புரிந்து கொண்டோமானால் அது ஒரு அண்டக் காற்று – வாழ்வைப் பிரதிபலிக்கும்
படைப்பையும் பரிணாம வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் ஆரோகண அவரோகணம் மற்றும்
இசையின் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டால் அதன் லயம் ஆரோகணம் அவரோகணம் நமக்குத்
தெரியும். இருந்த போதிலும் அது ஓசையற்ற ஒரு இசை. இயற்கையின் அழகில் தாரகைகளின்
பால்வீதிகளின் பிறப்பிலும் இறப்பிலும் இயற்கையின் மேன்மையான வெளிப்பாட்டைக் காணத்
தொடங்கினால் எளிய மானிடச்சிறப்பிலும் அது வெளிப்படுகிறது.
மூலம்: ஷ¤வாங்ட்ஸ¤
தமிழாக்கம்: புதுவை ஞானம் 8:46 AM 8/2/06
- புது வழித்தோன்றல்!
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7
- கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..
- நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு
- மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)
- கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!
- கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை
- எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!
- பெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஏன் தற்கொலை?
- கவிதைகள்
- கடிதம்
- களையிழந்தக் கச்சேரிகள்
- ஒப்புக்கொண்ட உண்மை
- வடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்
- பெண் போனால் . . .
- Screening of ‘a little dream’ a docu-film on Dr.APJ.Abdul Kalam
- கடித இலக்கியம் – 16
- இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்
- கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )
- அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32
- கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை
- 2006 தேர்தல் / சில குறிப்புகள்
- உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்
- தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி
- இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!
- தோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு
- தாய் வீடு
- அட்லாண்டிக்குக்கு அப்பால்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்