புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

புதுவை ஞானம்



சுழலும் இவ்வுலகத்தை நான் சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம்
தனி நபர்கள்,கட்சிகள்,அரசுகள்,அல்லது; ஜன ரஞ்சகமான கொவில்களால்
வசியப்படுத்தப்பட்டும்,பாரம்பரியமான கட்டுக்கதைகளால் மயக்கடிக்கப்பட்டும்
இருக்கின்ற மக்கள் திரள் ஆகியவை மட்டும் மனித இனத்தின் துயரநிலக்குக் காரணமல்ல
என்பதோடு – சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன.அவையாவன : உலகம்
மற்றும் அனுபவம் என்பதன் பொருள் என்ன ? நான் யார் ? உயிர் வாழ்தலின் நோக்கம் என்ன ?
என்பன பற்றிய அறியாமை ஆகும்.பழமையான இந்த அறியாமைத் தடையை வெட்டி வீழ்த்தித்
தகர்ப்பது துயறுற்று உழலும் இப்பூமியின் மீது நீடித்த அமைதியைக் கவிய வைக்கும் என நான்
நம்புகிறேன்.

நமது சிக்கலான கால கட்டத்தில் ,உலகப் பிரச்சனையின் மையக்கருவைக் கண்டுணர்வது மிகவும்
எளிதானது. மனம் எனும் மறைவான ஊற்றிலிருந்துதான் எல்லாச் செயல்களும் சுரக்கின்றன,
மனிதர்கள் எப்போது சரியாகச் சிந்திக்கிறார்களோ அப்போது தான் சரியாக நடப்பார்களே ஒழிய
அதற்கு முன்பாக சரியாக செயல்பட மாட்டார்கள். அவர்களது செயல்கள் அவர்களது சிந்தனையை
விட எப்போதும் உயர்வாக இருக்க முடியாது .ஏனெனில், அவர்களது ஓசை மிக்க காலடிப் பயணங்கள்
கேட்க இயலாத மனதின் பிரகடனங்களால் தீர்மானிக்கப் படுகின்றன.

உலகத்தின் கசப்பான துயரங்களும், மிருகத்தனமான பாவங்களும் ; பழைமை அறியாமை என்ற
நோயின் அறிகுறிகள்.அந்த நோய்க்கான ஒரே மருந்து புதிய அறிவு தான். அறைகுறைப் பிரக்ஞையிலும்,
மேம்பட்ட வாழ்வுக்கான பக்குவமற்ற முயற்சிகளிலும் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு
பகுத்தறிவாளனுக்கும் மேலே சொல்லப்பட்ட மூன்று கேள்விகளுக்குமான விடையைத் தேடும் முயற்சி
தவிர்க்க இயலாதது. மனத்தயக்கத்தில் மருண்டு கிடக்காமல் உண்மையின் ஒளியை வெளிக்கொணர்வது
அவர்களது கடமை ஆகும்.

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து- மூலம் :Beyond yoga.By- -PAUL BRUNTON

Series Navigation

author

புதுவை ஞானம்

புதுவை ஞானம்

Similar Posts