புதுவை ஞானம்
சுழலும் இவ்வுலகத்தை நான் சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம்
தனி நபர்கள்,கட்சிகள்,அரசுகள்,அல்லது; ஜன ரஞ்சகமான கொவில்களால்
வசியப்படுத்தப்பட்டும்,பாரம்பரியமான கட்டுக்கதைகளால் மயக்கடிக்கப்பட்டும்
இருக்கின்ற மக்கள் திரள் ஆகியவை மட்டும் மனித இனத்தின் துயரநிலக்குக் காரணமல்ல
என்பதோடு – சில அடிப்படையான கேள்விகளும் எழுகின்றன.அவையாவன : உலகம்
மற்றும் அனுபவம் என்பதன் பொருள் என்ன ? நான் யார் ? உயிர் வாழ்தலின் நோக்கம் என்ன ?
என்பன பற்றிய அறியாமை ஆகும்.பழமையான இந்த அறியாமைத் தடையை வெட்டி வீழ்த்தித்
தகர்ப்பது துயறுற்று உழலும் இப்பூமியின் மீது நீடித்த அமைதியைக் கவிய வைக்கும் என நான்
நம்புகிறேன்.
நமது சிக்கலான கால கட்டத்தில் ,உலகப் பிரச்சனையின் மையக்கருவைக் கண்டுணர்வது மிகவும்
எளிதானது. மனம் எனும் மறைவான ஊற்றிலிருந்துதான் எல்லாச் செயல்களும் சுரக்கின்றன,
மனிதர்கள் எப்போது சரியாகச் சிந்திக்கிறார்களோ அப்போது தான் சரியாக நடப்பார்களே ஒழிய
அதற்கு முன்பாக சரியாக செயல்பட மாட்டார்கள். அவர்களது செயல்கள் அவர்களது சிந்தனையை
விட எப்போதும் உயர்வாக இருக்க முடியாது .ஏனெனில், அவர்களது ஓசை மிக்க காலடிப் பயணங்கள்
கேட்க இயலாத மனதின் பிரகடனங்களால் தீர்மானிக்கப் படுகின்றன.
உலகத்தின் கசப்பான துயரங்களும், மிருகத்தனமான பாவங்களும் ; பழைமை அறியாமை என்ற
நோயின் அறிகுறிகள்.அந்த நோய்க்கான ஒரே மருந்து புதிய அறிவு தான். அறைகுறைப் பிரக்ஞையிலும்,
மேம்பட்ட வாழ்வுக்கான பக்குவமற்ற முயற்சிகளிலும் உழன்று கொண்டிருக்கும் ஒவ்வொரு
பகுத்தறிவாளனுக்கும் மேலே சொல்லப்பட்ட மூன்று கேள்விகளுக்குமான விடையைத் தேடும் முயற்சி
தவிர்க்க இயலாதது. மனத்தயக்கத்தில் மருண்டு கிடக்காமல் உண்மையின் ஒளியை வெளிக்கொணர்வது
அவர்களது கடமை ஆகும்.
புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து- மூலம் :Beyond yoga.By- -PAUL BRUNTON
- கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- விருந்தோம்பின் பாடல்
- எழுத்தாளர் சோமகாந்தனின் இழப்புத் தமிழ்கூறும் உலகிற்குப் பேரிழப்பு!
- யாத்ரா பிறந்த கதை
- கடித இலக்கியம் – 3
- நாயின் வயிற்றில் மணிக்கயிறு
- சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் 20 ஆண்டுகள் கடந்தும் கதிரியக்கம் -2
- செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?-2
- செந்தமிழ் நாடெனும் போதினிலே
- கண்டதும் காதல்
- வளர்ந்த குதிரை – 2
- அப்பாவின் அறுவடை
- ஒற்றைப் பனைமரம்
- தொடரும் வெளிச்சம் – பளீரென்று
- கவிஞர் மனுஷ்ய புத்திரனின் மலேசியா- சிங்கப்பூர் பயணம்
- கற்புக் கனல் அன்னை மர்யம்
- கடிதம்
- இவர்கள் அழிக்கப்படவேண்டும்
- மனுஷ்ய புத்திரன் மலேசிய வருகை
- உடன்பிறப்புக்கு என் நன்றி.
- ‘இருதய சூத்திரம்’
- கற்பதை விட்டொழி
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-2
- தேர்தலும், அதற்கு அப்பாலும்-1
- தலித்தலைவர்களின் தலித் துரோகங்கள்!
- புலம் பெயர் வாழ்வு 8 – எனது தொலைக்காட்சி அனுபவங்களும் இன்னும் உணர்வுகளும்
- எடின்பரோ குறிப்புகள் – 14
- த னி ம ர ம் நாளை தோப்பாகும் – தொடர்கதை -1
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-19)
- குறுநாவல்:சேர்ந்து வாழலாம், வா! – 1
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பில் இருந்து – 1 – யோகத்துக்கு அப்பால்………..
- தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்
- தோணி
- கால மாற்றம்
- இயற்கையின் மர்ம முடிச்சு
- அணுயுகப் பிரளய அரங்கேற்றம்
- கவிதைகள்
- பெரியபுராணம் — 87 — திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- பிரமோத் மகாஜனின் மறைவு
- உண்மையைத் தேடியலைந்தபோது
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 19