முதலாளித்துவச் சூழலியல் – முதலாளித்துவச் சூழலியற் சிக்கல் – இறால் பண்ணைகள்; (Prawn Farms)

This entry is part [part not set] of 28 in the series 20050826_Issue

ஏ.எம். றியாஸ் அஹமட்


(A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg).

வர்த்தகமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ விவசாய (Agriculture), நீர்ியல்வளர்ப்பு (Aquaculture) முறைகள்தான் இன்றைய சூழலின் நிலைத்;த பேணுகைக்கு சவால்விடும் காரணிகளாக இருந்து வருகின்றன. இவைகள் தமது தொழில் நலன்களை மட்டும் கருத்திற் கொண்டு, உணவுப் பொருட்களின் தரம், மதிப்பு, நோய்த் தடுப்புத் திறன், சூழலுக்கு ஏற்ற தன்மை போன்றவற்றை தூர எறிந்த விட்டது. முதலாளித்துவமானது சந்தையைக் கட்டுப்படுத்துவதற்காக வர்த்தகத்தைக் கைப்பற்றியது. பின்னர் விவசாயத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதில் தனது நுட்பங்களை பயன்படுத்தியது. இதனால் சூழலின் சமனிலை பாதிக்கப்பட்டு, சூழல் மாசடைந்து, பல்தேசியக் கம்பனிகளுக்கு சாதகமான சூழலின் உயிாியலின் எளிமையான தன்மை உதயமானது. மேற் சொன்ன விடயங்களை இலங்கையின் வடமேற்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் செய்கைபண்ணப்பட்டுவரும் இறால் பண்ணை- நீாியல் வளர்ப்பு முறைகளுடாக நோக்குவோம்.

நீாியல் வளர்ப்பை (Aquaculture) – நீர்ச் சூழலில் வாழுகின்ற தாவர விலங்குகளை அச் சூழலில் வளர்த்து அறுவடை செய்யும் முறை என வரைவிலக்கணப்படுத்தலாம். இம் முறையில் மீன்கள், (உணவிற்காகவும், மீன்களுக்கான இரைகளாகவும், அலங்கார வளர்ப்பு நோக்கத்திற்காகவும், முத்து, மட்டி, நத்தைகள், கடற் சாதாளைகள், களைகள், முதலைகள் (தோல்களுக்காக), தவளைகள் (உணவிற்காகவும், பாிசோதனைகளுக்காகவும்), கணவாய், ஆமைகள் போன்றவைகளும் வளர்க்கப்படுகின்றன.

Penaeus monodon (வெள்ளை இறால்)ஐ மையமாகக் கொண்ட இறால் வளர்ப்பானது மிகவும் விரைவாக வளர்ந்து வரும், ஏற்றமதி நோக்கான கைத்தொழிலாகவும், இலங்கைக்கு அதிக வெளிநாட்டுச் செலாவணியை பெற்றுக் கொடுக்கும் ஒரு கைத்தொழிலாகவும் வளர்ந்து வருகின்றது. நீாியல் வளர்ப்புப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் கிடைத்த வெளிநாட்டுச் செலாவணியில் இறாலானது 48 வீதம் தொடக்கம் 70 வீதம் வரையில் பங்கு வகிக்கின்றது. துரதிருஸ்டவசமாக இறால் வளர்ப்புக்குத் தேவையான நிலமும், உவர் நீர் வசதிகளும் உள்ள பகுதிகள் இலங்கையில் மிகக் குறைவாகும். இதன் காரணமாக இறால் பண்ணைகளின் பரம்பல் இலங்கையில் ஒரு குறித்த பகுதிகளுக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இறால் வளர்ப்பானது, இலங்கையில் வடமேல் மாகாணத்தின் 120 கிலோமீற்றர் நீள 10 கிலோமீற்றர் அகலப் பரப்பிற்குள் அடங்கும் சிலாபம் கடனீரேரி, டச்சுக் கால்வாய், முந்தல் கடனீரேரி, புத்தளம் கடனீரேரி, மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு கடனீரோி, வாழைச்சேனை கடனீரோி, வாகரை கடனீரோி பகுதிகளில் இரு ஏக்கா;கள் முதல் 300 ஏக்கா;கள் வரை நூற்றுக் கணக்கணக்கான அனுமதியுள்ளதும் , மற்றும் சட்டவிரோதமானதுமான முயற்சிகள் வர்;த்தக நோக்கில் குறுகிய கரையோர பரப்பில் செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. வுடமேல் மாகாணத்தின், முந்தல் கடனீரோி, டச்சுக் கால்வாய்ப் பகுதிகளில் மொத்தப் பண்ணைகளில் 70 வீதமான இறால் பண்ணைகள் இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இறாலின் தேவையானது ஜப்பான், அமாிக்கா. ஐரோப்பிய நாடுகளில் மிக அதிகம். ‘இறால் வளர்ப்புத் திட்டங்கள் அதிகாித்து வருகின்றபோதும், கடலில் இருந்து பிடிக்கப்படும் இறாலின் அளவு மிகவும் அதிகமாகவே உள்ளது. மேல் நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகாிப்பு இறால் வளர்ப்புத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக அமைந்துள்ளது. நமது நாட்டின் தற்போதைய ஏற்றுமதி மிகவும் குறைவு. ‘ என்று கருதிய நமது நாட்டுக் கொள்கை வகுப்பாளர்களும், முதலீட்டு அதிகார சபையும் (BOI) இத்தகைய இறால் வளர்ப்புப் போன்ற நீாியல் வளர்ப்பு முறைககள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பாிந்துரை செய்தனா. இதன் நிமித்தம் அரச, தனியார் வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சிகரமான கடன்களை வழங்கின. வழங்கியும் கொண்டிருக்கின்றன.

பெருகி வரும் இத்தகைய சட்டபூர்வ, சட்டவிரோத இறால் பண்ணைகளே, அதிகாித்து வரும் கடல்நீரேரிகளினதும், அதனை அண்டி வாழும் மக்களினதும், உயிாிகளினதும் சுற்றுச் சூழலுக்கு மிகவும் மாசையும், அபாயத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக செய்யப்பட்டு வருகின்ற ஆய்வுகள் தொிவிக்கி;ன்றன. இலங்கையில் தற்போது நடைமுறையில் இருந்து வருகின்ற இறால் வளர்ப்பு முறைகள் தன்மாசுபடலையும் (autopollution) – அதாவது தானே தனது சுற்றுச் சூழலையும் தன்னையும் மாசுபடுத்திக் கொள்வதுடன் மற்றச் சூழலையும் மாசுபடுத்தச் செய்து கொண்டிருக்கின்றன. வடமேல் மாகாணத்தின் கடனீரேரிகளில் (lagoon)8 இல் செய்யப்பட்ட ஆய்வுகள் அந்த நீரேரிகளை அண்டி வாழ்ந்த மக்களினதும், உயிாிகளினதும், பெளதிக, கலாச்சார, மானிட கூறுகள் இறால் பண்ணைகளினால் எதிர் கொண்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்;தன.

இந்த வெளிப்படுத்தப்படட பிரச்சினைகள் யாவை என்று பர்ர்ப்பதற்கு முன், இறால் பண்ணைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கம், இறால் பண்ணை செய்கையாளர்களை ஆரம்ப சுற்றாடற் பாிசீலனை (Initial Environmental Examination) செய்ய வேண்டுமென பணிக்கப்படுகின்றது. இந்த பாிசீலனை அறிக்கையானது, இறால் பண்ணைகளினால் சூழலுக்கு ஏற்படக் கூடிய தீய பாதிப்புக்களையும், இவற்றிற்கான பாிகாரங்களையும், அல்லது தீர்வுகளையும் கொண்டிருக்கின்றன. இந்தப் பாிசீலனை அறிக்கையின் பிரதிகள், சில அனுமதிப் பத்திரங்களை வழங்கும் அதிகாரமுள்ள அரச நிறுவனங்களுக்கும், சுற்றுச்சூழல் பற்றிய அக்கறையுள்ள அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும். இத் திட்டத்தினால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதக-சாதகங்கள் மக்களுக்கு தொிவிக்கப்படும். அத்துடன்; முதலாளி அல்லது தொழிலாளி சார்பான முடிவுகளை எடுக்க அல்லது மதில்மேல் பூனையாக இருக்க அரசியல்வாதிகளும், இத்திட்ட அறிக்கைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இந்தபாிசீலனை அறிக்கையானது, இத்திட்டங்களை அங்கிகாிக்கும் அதிகாரமளிக்கப்பட்ட சபை அவசியமென்று கருதினால், சுற்றாடற் பாதிப்பு அறிக்கையை (Environmental Impact Assessment) சுருக்கமாக EAIஐத் தொடர்வதற்கான அவசியத்தையும், தேவைகளையும் கொண்டதாக இருக்கும்.

சுற்றாடல், சமூக பொருளாதார பிரச்சினைகள்

இறால் பண்ணைகளிலிருந்து வெளியேறிய கழிவுகளை பாிகாிக்காது நேரடியாக நீர்நிலைகளில் விட்டதன் காரணமாக, நீர்நிலைகளில் வெப்பநிலை, உவர்த்தன்மை, மின்கடத்துகை, பீஎச், BOD, COD, நீர் வன்மை, கல்சியம், மகனீசியம், கட்மியம், இரசம், செம்பு, குளோரைட், சல்பேற், சல்பைற், பொற்பேற், நைத்திரேற், நைத்திரைற் போன்றவற்றின் அளவுகள் நியம அளவைவிட மாறுபட்டுக் காணப்பட்டன. வடமேல் மாகாணத்தில் ஜெயசிங்க குழுவினாின் ஆய்வுகளும் (1995), கிழக்கு மாகாணத்தில் றியாஸ் அஹமட் குழுவினாின் ஆய்வுகளும் (2000) இதே முடிவுகளையே கொடுத்திருக்கின்றன.

இறால் பண்ணைகளினால் ஏற்பட்ட சமூக பொருளாதார பிரச்சினைகளைப் பற்றி நோக்குவோம். சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு மூல காரணம் இறால் பண்ணையாளர்களுக்கம் சுற்றயல் மக்களுக்குமிடையே தோன்றும் முரண்பாடுகளே (conflicts)13. வட மேல் மாகாணத்தில் அவதானிக்கப்பட்டதில், இறால் திருடுதல் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்றது. 25 தொடக்கம் 35 கிராம் அளவுள்ள ( 3 தொடக்கம் 4 மாத வயதான ) இறால்களுள்ள குளத்தில் ஒரு வீச்சு வலையின் (உயளவ நெவ) வீச்சில் 2 தொடக்கம் 3 கிலோ கிராம் இறால்கள் அகப்பட முடியும். இது 2500 ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியைக் கொண்டது. ஒரே இரவில் பல்லாயிரக் கணக்கான ரூபா பெறுமதியுள்ள இறால்கள் திருடு போகின்றன. நாள் முழவதும் நதியில் இறங்கி மீன்பிடித்தாலும் ஒரு மீனவனுக்கு 350 ரூபாவிற்கு மேல் கிட்டுவதில்லை. எனவே பணத்தாசை காரணமாக திருட்டுத்தனம் ஊக்குவிக்கப்பட்டு திருடர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் இறால் திருடு போவது சம்பந்தமான முறைப்பாடுகள் அதிகாித்துக் கொண்டே வருகின்றன. ஆராச்சிக்கட்டுவ மதுரங்குளி போன்ற பகுதிகளிலும் மட்டக்களப்பு பகுதிகளிலும் இது நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது.

யாதாயினும் ஒரு பொருள் விவசாயிக்கு அல்லது பண்ணையாளனுக்கு தொந்தரவை அல்லது விரும்பத்தகாததை செய்யுமாயின் பீடை என்கிறது உயிாியல். மட்டக்களப்பு வாவியைச் சுற்றிச் செய்கை பண்ணப்படும் இறால் பண்ணைகளின் முக்கிய பீடை மனிதன் என்பது எமது அவதானங்களிலிருந்து தொியவந்திருக்கின்றது.

75 வீதமான கிராம மக்கள் இறால் பண்ணைகளினால் தோற்றுவிக்கப்படும் வெள்ளப்பெருக்கு தங்களது வீடுகளையும் விவசாய நடவடிக்கைகளையும் பாதிப்பதால் இந்தப் பண்ணகைளுக்கு எதிராக இருக்கிறார்கள். இதன் காரணமாக, வெள்ளப்பெருக்கு சம்பந்தமான பிரச்சினைகளும் பண்ளையாளர்களுக்கும் கிராமத்தவர்களுக்குமிடையே சமூகவியற் பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.

1995ம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மக்களில் 2 வீதமான மக்களுக்கு தோல் நோயும், 92 வீதமான மீனவர்களுக்கு மீன்பிடியில் குறைவும், இறால் பண்ணைக் கழிவுநீர் நீர் நிலைகளில் விடப்பட்டதால் ஏற்பட்டதாக தொிய வந்திருக்கின்றது.

இறால் பண்ணைச் செய்கைக்காக கண்டற் சூழற்றொகுதிகளை (காடுகளை) அழித்ததனால், கண்டற் காடுகளை நம்பிய குடிசைக் கைத்தொழிற் துறையானது பிரச்சினைகளை எதிர் கொள்ளத் தொடங்கியது. இதனால் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்கும் இறால் பண்ணையாளர்களுக்கும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. அத்தோடு குடிசைக் கைத்தொழிலாளர்களின் வருமானமும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு கண்டல் காடுகள் அரச காணிகளில் இருந்தன. எனவே மக்கள் அதனை இலகுவாக பயன்படுத்தினர். இப்போது இவைகள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால் கண்டல் காடுகளை பாவிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. கண்டற் காடுகளிலிருந்து பெறப்படுகின்ற பொருட்களால் மீன்பிடி உபகரணங்கள் செய்ய முடியாமற் போனமையும் மீன்கள் இனப்பெருக்கும் இடங்கள் அழிந்தமையும்; கிராமிய மீனவர்கள் வருமானத்தை இழக்க காரணிகளாகியிருந்தன.

ஆடு மாடுகள் மேயும் மேய்ச்சல் நிலங்களிலும் இறாற் பண்ணைகள் அமைக்கப்பட்டதால், பண்ணையாளர்களுக்கும், கால்நடை வளர்ப்போருக்கமிடைியல் முரண்பாடுகள் தோன்றின. இதே போன்று நெற் செய்கையாளர்களுக்கும், தென்னைச் செய்கையாளர்களுக்கும் பண்ணைச் செய்கைக் காரா;களுக்குமிடையே முரண்பாடுகள் தோன்றின.

எனவே இறாற் பண்ணைகளினால் சூழலில் ஏற்படும் தாக்கமானது, ஒரு கைத்தொழில் என்ற வகையில் இறாற் பண்ணைகளின் நிலைபேறான தன்மைக்கே (sustainability) சவால் விடுகின்றன. தரக்குறைவான நீாியற் பண்புகளாலும் சுற்றுச் சூழல் பாதிப்புக்களாலும் இறால் உற்பத்தியில் ஏற்படும் குறைவானது இறாற் பண்ணைகளினால் வரும் வருமானத்திலும் பாாிய குறைவை ஏற்படுத்துகின்றன. இந்தக் காரணிகளுடன் சமூகவியற் காரணிகளும் சேர்ந்து இறால் பண்ணைகளின் தொடர்ச்சியான இருப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

மக்கள் நலனையும், சுற்றுச் சூழல் நலனையும் முதன்மைப்படுத்திய சூழலுக்கும் சமூகத்திற்கும் சேதத்தை ஏற்படுத்தாத இறால் வளர்ப்புத் திட்டங்கள்தான் இறால் உற்பத்தியைக் கூட்டி அதன் நிலைபேற்றுத்தன்மையையும் மாறாமல் வைத்திருக்கும்.

riyas@gecko.biol.wits.ac.za

Series Navigation

author

ஏ.எம். றியாஸ் அஹமட்

ஏ.எம். றியாஸ் அஹமட்

Similar Posts