K.ரவி ஸ்ரீநிவாஸ்
இணைய நூலகம் என்று தமிழில் வெளியாகும் நூல்களை, பத்திரிகைகளை இணையத்தில் இடம் பெறச் செய்வது ஒரு தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றம் என்று மட்டுமே கூற முடியும்.உள்ளடக்க ரீதியாக
செய்யப்பட வேண்டியது ஏராளம்.லிட்டில் மாகசின்(1) தரத்தில் தமிழில் எத்தனை சிற்றிதழ்கள் உள்ளன.
அறிவியல், சமூக அறிவியலில் எத்தனை கட்டுரைகள் சிறப்பானவை என்று சொல்லத்தக்க அளவில் வெளிவருகின்றன.ஏற்கனவே அச்சில் வந்த/வெளிவருகிற இரண்டாம் தர நூல்களை ebook வடிவத்தில் கொடுப்பது தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றம் மட்டும்தான்.
இணையத்தில் நூல்களை ‘ஏற்றுவதால் ‘ மட்டும் பெரிய பயன் ஏதுமில்லை.இணையத்தில் உள்ள நூல் தொடர்புடையவற்றிற்கு இணைப்பு கொடுப்பது,கணினி தொழில்நுட்பம் தரும் வசதிகளை பயன்படுத்திக் கொள்வது ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இணைய நூல் பதிப்பு முறை, வாசகரின் தேவை,
இணையத்தில் உள்ள பிரதி அச்சுப் பிரதியிலிருந்து வேறுபடும் இடங்கள், எப்படி இணையப்பிரதி அமைய வேண்டும் என்பது குறித்த தெளிவு இவை குறித்தும் அக்கறை செலுத்த வேண்டும்.எனவே வெறுமனே நூல்களை இணையத்தில் போடுவது என்பது இணைய நூலக முயற்சியின் முதல்கட்டம்தான். இப்போது பல நூல்கள் கணினியில் உள்ளிடப்படுவதால் பிரதியை குறுந்தகட்டில் எழுதி/மறுபிரதி செய்து இணையத்தில் இடம் பெறச்செய்வது எளிது. இந்த ஒன்றே போதும் என்று திருப்தி அடைவோர் இணையம் தரும் சாத்தியப்பாடுகளை பயன்படுத்தத் தவறுகிறார்கள் அல்லது அதில் அக்கறை காட்டுவதில்லை என்றுதான் கூற வேண்டும்.
சமீபத்தில் மானுடவியல் பேராசிரியர் ஒருவர் எழுதிய, இந்த ஆண்டு வெளிவந்த நூல் ஒன்றை வாசித்தேன்.பின்னர் அவர் அந்த நூல் தொடர்புடையவற்றிற்காக ஒரு இணைய தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார் என்பதையும் அறிந்தேன். நூலில் இடம் பெற்றிருந்த குறிப்புகளில் உள்ள இணைய இணைப்புகள் இதில் இருந்தன.இது தவிர மேலும் பல தகவல்கள்,இணைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. நூலில் ஒரு வழக்கினைப் பற்றி அவர் எழுதியிருந்தார். தீர்ப்பு மிக சமீபத்தில் அக்டோபர் 2003ல் வெளியானது. இந்தத் தளத்தில் தீர்ப்பினை இணையத்தில் தரும் இணையத் தொடர்பு தரப்பட்டிருந்தது. நூலை படிக்கும் வாசகர்கள், ஆய்வாளரகளுக்கு இவை மிகவும் உதவியாக இருக்கும்.இங்கு நூல் என்பது ஒரு அச்சுப்பிரதியாகவும்,இணைய தளம் அச்சுப் பிரதியையும், புதிய தகவல்களையும் சேர்த்துப் படிக்க உதவுவதாகவும் உள்ளது. இங்கு நூல் என்பது இணையத்தில் வெறொரு பொருளில் நம் முன் வைக்கப்படுகிறது.பிரதி வெளியான பின்னும் அது குறித்த வாசிப்பு ஒரு தொடர் வாசிப்பாக இதனால் சாத்தியமாகிறது.இது போன்ற முன் மாதிரிகளை தமிழில் இணைய நூலகம் என்று பேசும் போது நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அறிவு என்பது
ஒரு பிரதியுடன் முற்றுப் பெற்ற ஒன்றாக,தேங்கி நிற்பதாக இல்லை.நூல் என்பது ஒரு துவக்கப் புள்ளிதான்,ஒரு தொடர்ச்சியின் ஆரம்பக் கண்ணி.இணைய யுகத்தில் ஆசிரியர்,பிரதி குறித்த நம் புரிதல்களில் மாறுதல் தேவை.இது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில்.
தமிழில் சங்கப்பாடல்கள், கம்ப ராமயணம் போன்ற காவியங்கள் இணையத்தில் தரப்படும் போது பாட பேதங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்க முடியாது. அச்சில் உள்ள பிரதியை இணையத்தில் தரும் போதும் இது குறித்த குறிப்புகள், அச்சுப் பதிப்பின் மூலம் குறித்த தகவல்கள் தருவது அவசியம்.
சங்கப்பாடல்களை அப்படியே இணையத்தில் ஒரு பொழிப்புரையுடன் தரலாம்.ஆனால் இது அச்சுப்பிரதி சாத்தியமாக்கியதைக் கூட செய்யத்தவறியதாகும்.இணையத்தில் ஒரு பாடல் பொழிப்புரை தவிர, பதம் பிரித்து படிக்கப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும்.இது தவிர இப்பாடல் தொடர்புடைய குறிப்புகள், இது குறித்த இலக்கிய விவாதங்கள், குறிப்பாக பிற படைப்புகளில் இது சுட்டப்பட்டுள்ள விதம்,இதன் சிறப்பு போன்றவையும் தரப்பட வேண்டும்.இவை போன்றவையே வாசகருக்கு பயன் தரும்.இப்பாடலை எழுதியவருடைய பிற பாடல்களுக்கு/படைப்புகளுக்கு இணைப்பு போன்றவையும் முக்கியம்.இங்கு audio visual அம்சங்கள் தரும் பயனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.இணையத்தில் தரப்படும் நூல்களில் பிழை இல்லாமல் பார்த்துக் கொள்வதில் மிக முக்கியம்.அது போல் அறிவியல்,சமூக அறிவியல் நூல்களில் சான்று நூல்/கட்டுரைப் பட்டியல்,index கட்டாயம் தேவை, கலைச் சொற்களின் ஆங்கில மூலமும் அவசியம்.
ஓளவையின் பாடல்கள் இணைய நூலகத்தில் தரப்படும் போது அதில் முடிந்த வரை நிகழ் காலத் தகவல்களையும் தருவது நல்லது.உதாரணமாக ஒளவையின் ஒரு பாடலை அல்லது ஆத்திச்சூடியை இணைய நூலகத்தில் தந்தால் அது இன்குலாப்பின் ஒளவை குறித்த ஒரு குறிப்பினையும் கூட வாசகர் கவனத்திற்கு தர வேண்டும்.முடியுமெனில் இன்குலாப்பின் நாடகப்பிரதிக்கு இணைப்பினையும் (அ) அதிலிருந்து சில பகுதிகளையும் கூட இணைய நூலகம் தர வேண்டும்.அது போல் ஜெமினியின் ஒளவையார் குறித்த குறிப்பினையும், அதிலிருந்து சில பகுதிகளையும் தரலாம். இதன் மூலம் ஒளவையார் குறித்த பன்முகச் சித்திரம் வாசகருக்கு கிட்டும். audio/video clippings தருவது அச்சுப்பிரதி மூலம் பெற முடியாத அனுபவத்தை வாசகர் பெற உதவும்.தமிழில் எழுதப்படிக்க்த் தெரியாத ஆனால் கேட்டால் புரிந்துக் கொள்ளக்கூடியோர் இதனால் பெரும் பயன் பெறுவர்.அவர்கள் ஆர்வத்தையும் இது தூண்டும்.இனிவரும் தலைமுறை இணையத்தினை அதிகம் பயன்படுத்தும் என்பதால் அவர்கள் தேவைகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.எனவே ஒளவையார் குறித்து இணைய நூலகத்தில் ஆங்கிலம்,பிரெஞ்ச் போன்ற மொழிகளில் ஒரு அறிமுகமேனும் தரப்படுவது அவசியம்.
காவியங்களை இணைய நூலகத்தில் தரும் போது வேறு சில அம்சங்களையும் கணக்கில் கொள்ள் வேண்டும். நூலகம் தரும் பிரதியின் மூலம், பாட பேதங்கள் தவிர காவிய ரசனையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். உதாரணமாக கம்ப ராமாயணம் இணைய நூலகத்தில் இடம் பெறும் போது அதை வால்மீகி, துளசிதாசரின் ராமயணங்களுடன் ஒப்பிடும் ஒரு கட்டுரையாவது அதில் இடம் பெற வேண்டும்.சில காட்சிகளை கம்பர் சித்தரித்துள்ளது பிற மொழி ராமயணப் பிரதிகளுடன் ஒரு ஒப்பீட்டு நோக்கில் தரப்பட வேண்டும்.இது போல் பலவற்றை சாத்தியமாக்குவது குறித்து யோசிக்க வேண்டும்.உதாரணமாக இன்று எளிதில் கிடைக்காத சித்திர ராமாயணம் இணையத்தில் இடம் பெறுமானால், அதற்கு பிற நூல்களிலிருந்து இணைப்புத்தர முடியுமெனில் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்..இதற்கு பிற மொழகளில் உள்ள இணைய நூலகங்கள் எவற்றைத்தருகின்றன, எப்படித் தருகின்றன என்பதை குறித்து நாம் ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும்.அச்சில் உள்ள பலவற்றை நாம் இணையத்தில் மிக ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.கம்ப ராமாயணம் குறித்த இணைய நூலகம் தமிழக் கோவில்களில் உள்ள சிற்பங்கள்,விக்கிரகங்கள், ராமேஸ்வரம் போன்ற புனிதத்தலங்கள் குறித்தும் தகவல் அல்லது இணைப்பு தர வேண்டும்.தமிழ்ப்பண்பாட்டில் ராமாயணத்தின் தாக்கம் குறித்து ஒரு அறிமுகக்கட்டுரையும் தேவை.இவற்றைத்தரும் போது கம்பரசம் குறித்தும் பேச வேண்டும்.பெரியார் குறித்தும் பேச வேண்டும்.கம்பர் முதல் பாலா ரிச்மன் வரையான ஒரு அறிதலை இணைய நூலகம் மூலம் வாசகர் பெறமுடியும்.இப்படி யோசித்தால்தான் இணைய நூலகத்தின் பல சாத்தியப்பாடுகளை நாம் நிறைவேற்ற முடியும்.இங்கு கூறப்பட்டுள்ள அனைத்தையும் ஆரம்ப கட்டத்திலேயே செய்வது சிரமம் என்றாலும் நமது
இலக்கு ஒரு சிறப்பான இணைய நூலகத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். மேலும் கம்ப ராமயணம் குறித்து ஒரு குறுகிய கண்ணோட்டத்தை மட்டுமே முன்னிறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
மாறாக இலக்கியப் பிரதியினை ஒரு பரந்த தளத்தில் புரிந்து கொள்ளவும் அதே சமயம் ஒரு காவியத்தின்
சிறப்புகளை அறிந்து கொள்ளவும் உதவ வேண்டும்.
இதற்கு அச்சில் உள்ளவற்றை குறித்த அறிவும், இணையத்தில் எவை சாத்தியம் என்ற தெளிவும், கற்பனைவளமும் தேவை.இவை அனைத்தும் ஒருவரிடத்தில் இருப்பது அபூர்வம். எனவே இணைய நூலகம் என்பது ஒரு கூட்டுமுயற்சியாக இருந்தால் மட்டுமே அது வெற்றி அடையும். இணையப் பிரதி குறித்து
நாம் அக்கறை செலுத்த வேண்டும்.வாசகர் எளிதில் பயன்படுத்தும் வகையில், தகவல் செறிவுடன், தேவைப்படும் போது புதிய தகவல்களை,ஆய்வுகளை இணையப் பிரதியில் சேர்க்கும் வகையில் அது
இருக்க வேண்டும்.எனவே இணைய பிரதி ஒன்று வாசகர் முன் வைக்கப்படும் முன் அது பலரின் வாசிப்பிற்கு உள்ளாகி பல கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்பட்டு மாற்றப்பட்டு ஒரு சிறப்பான இணையப்பிரதியாக இருந்தால் நல்லது.beta versions சோதனைக்கும், ஆய்விற்கும் உட்படுத்தப்பட்டு பின் இணையத்தில் வைக்கப்படுவது பயன் தரும்.இந்த beta versions வாசகர்,அறிஞர் குழாம் ஒன்றால பரிசோதிக்கப்படுவது இன்று சாத்தியம்.உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழறிந்த அறிஞர்கள் இத்தகைய குழாம்களில் பங்கு பெறுவதும் அவசியம்.
(1) www.littlemag.com
(தொடரும்)
ravisrinivas@rediffmail.com
- எழுதாதக் கவிதை
- பிதாமகனும் .. தமிழ் மக்களும்
- மாயக்கவிதை
- எனக்குப் பிடித்த கதைகள் – 83- செய்யாத தவறும் தியாகமும்-தி.சா.ராஜூவின் ‘பட்டாளக்காரன் ‘
- Recipe: Fried Rice With Peas and Chicken
- அணுத்துறை நெறிப்பாடுக்கு முழுப்பூரண ஆணைக்குழுவை நாடும் சூழ்மண்டலவாதிகள்!
- புனிதமாகிப்போனது!
- வெளிநடப்பு!
- மனித வெடி
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மிலன் குந்தெரா (Milan Kundera)
- ஜெயகாந்தனின் விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -3
- வைரமுத்துக்களின் வானம்- 7
- ஊர்க்குருவி
- அயர்ன்பாக்ஸ் எறும்புகள்
- கவிதைகளே ஆசான்கள்
- கொடி — மரம்
- ‘தி ஹிண்டு ‘ வின் மதச்சார்பற்ற ஒப்பாரியும் தெரசாவின் கருணையும்
- இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை
- வேண்டாமா இந்தியா ?
- திறவி.
- ஞானி ஹகீம் ஸனாயின் ஹதீகா
- தண்டனை போதும்!
- கடிதங்கள் – அக்டோபர் , 30, 2003
- தழும்புகள்
- கலர்க் கண்ணாடி
- மொரீஷியஸ் கண்ணகி
- நீங்கள் கேட்க இருக்கும் அடுத்த குரல்…(The Next Voice You Hear…)
- வெளிச்சம்
- விடியும்! (நாவல்) – (20)
- மொழிவன சில
- கல்லூரிக் காலம் – 5 – வணக்கம்
- பேரறிஞரும், புரியாத விஷயங்களும்.
- மேற்குலகில் கடத்தப்பட்ட புறாக்கள்
- சூரியக்கனல்
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- தெப்பக்குளத்தில்கிரிக்கெட் மேச்
- தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 1
- குறிப்புகள் சில 30 அக்டோபர் 2003
- அனாஅரந்த் – பாசிசம் – ஸ்டாலினியம்
- இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பது