செப்டம்பர் 25, 2003
அக்டோபர் ஆறாம் தேதி திங்கள்கிழமை என் எட்டு நூல்கள் வெளியீடு. [ சென்னை ஃபிலிம்சேம்பர் அரங்கம் ] மெய்ப்பு பார்க்கும் தலைபோகும் அவசரம். ஆகவே திண்ணை [உட்பட செய்தித்தாள்கள் கூட ] படிக்கவில்லை. ஒரு நண்பர் சங்கசித்திரங்கள் பற்றிய கட்டுரையை அனுப்பினார். அவசரமாக சில விஷயங்கள் மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஏற்கனவே பலமுறை சொன்னவைதான்.
அ] சங்கப்பாடல்கள் பொதுவாக திணை/துறைக்கு அடங்கியவை அல்ல. அவ்வடையாளங்கள் பிறகு அளிக்கப்பட்டவையே.
ஆ] திணை துறை என்பவை ஒருவகை வாசிப்புகள் மட்டுமே. ஒரு வாசிப்பு ஒரு கவிதையை கட்டுப்படுத்தாது. இன்று அக்கவிதைகளின் சொற்களைமட்டுமே கருத்தில்கொண்டு அவற்றை புதுக்கவிதையை எப்படி வாசிக்கிறோமோ அப்படி வாசிப்பதே நல்ல வாசிப்பு .சங்கசித்திரங்கள் அதற்கான முயற்சியாகும்
இ] திணைக்குறிப்புகளை நான் உ வே சாமிநாதய்யர் , மு சண்முகம் பிள்ளை நூல்களை ஒட்டி அளித்திருந்தேன் . வேறு நூல்களில் வேறு அடையாளப்படுத்தல்கள் உண்டு.
ஈ] என் பொருள்கோடல் குறித்து மாறுபட்ட கருத்தை எழுத்தில் தெரிவித்தவர் பேராசிரியர் க ரத்னம் மட்டுமே. அதற்கு நான் விரிவான பதில் அளித்தேன். அவர் ஏற்றுக் கொண்டார் [ ஓம்சக்தி இதழில் ] சங்கப்பாடல்களுக்கு உரைகள் எழுதப்பட்டது ஐநூறு வருடம் கழித்து சோழர் காலத்தில். அவை அக்கால விழுமியங்களின் அடிப்படையில் செய்யப்பட்டவை. அவ்வுரைகளுக்கு இடையேகூட பெரிய வேறுபாடுகள் உண்டு. இன்று அவற்றில் ஒன்றே கவிதையின் இறுதிப்பொருள் என்று சொல்ல முடியாது. கவிதையின் பொருள் வாசிப்புக்கு ஏற்ப வளர்வதாகும். இவற்றை நான் அக்கட்டுரைகளிலேயே பல இடங்களில் விரிவாக சொல்லியிருக்கிறேன்
உ] எனக்கு தமிழ்ப் பயிற்சியில் மரபு சார்ந்த ஒரு முறையான பின்புலம் உண்டு. என் பொருள்கோடல் அந்த தளத்தில் இருந்துதான்.
ஜெயமோகன்
பாய்ஸ் படம் பற்றி ஞாநி கட்டுரை சிறப்பாக இருந்தது.
அதை தொடர்ந்து ரோசா எழுதிய கடிதத்துடன் னான் மாறுபாடு கொண்டவனாக உள்ளேன்.
ரோசாவின் பல கடிதஙகளை நான் படித்திருக்கிறேன். அவர் பெரியார்,தலித் குரித்து பல தகவல்களை பற்றி திண்ணையில் எழுதியிருக்கிறார். பல காட்டு கூச்சல்களும் போட்டிருக்கிறார்.
பாய்ஸ் பற்றிய என் நிலைப்பாடு:
75% மிக சிறந்த தொழில்னுட்ப,காட்சியமைப்பு கொணட படம். மிகவும் நன்றாய் ஆரம்பிக்கப்பட்டு, மிக கேவலமாக கதையை சொதப்பியுள்ளது,மற்றும் ஜவ்வு போல இழுக்கப்பட்ட கதை, என்ன இதை விட சிறப்பாக எடுக்க முடியவில்லையா ? இவர்களால் என்ற் நினைக்க தொன்றுகிறது.
சரி இப்போது விவகாரமான கட்சிகளை பற்றி பார்ப்போம்.
ஞாநி எழுதிய காட்சிகள், அவர் ஒன்றும் மிகைபடித்தி எழுதவில்லை என்ற அளவிற்கு நிறைந்துள்ளது.
ஒரு இளம், நகர பெண் ஒரு வாலிபனை பார்ட்த்து ‘போடா ங்கோத்தா ‘ என்ற படி சிறப்பாக படம் ஆரம்பிக்கிறது. மேலும் அடிக்கடி தன் ஆட்காட்டி விரலை ஆண்களின் முகத்துக்கு நேரே காட்டுவது மிகவும் எல்லோருக்கும் பிடித்தமான விஷயமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இப்போது பிரச்சினை பல கேள்விகளை முன் வைக்கிறது.
1.இதுபோல காட்சிகள் தேவைதானா ?
காரணம் கதை, அதை உண்மையாக எடுக்க/சித்தரிக்க முயற்சி செய்தேன் என்ற் சொல்வது சரியெண்று படவில்லை. ஏனெனில் இந்த அளவுக்கு தமிழ் ‘majority ‘ மாணவ சம்தாய செய்வதாக யாரும் ஒப்புகொள்ளமுடியாது. அப்படியெனில் இதில் மிகை உள்ளது. இந்த மிகை சமுதாய ஒழுக்கத்துக்கு தீங்கு விளைக்கும் பட்சத்தில் எதிற்கபட வேண்டியது.
(சும்மா வெட்டி பேச்சு பேசாமல், னாம் நமது மகளை இப்படி பேசும்போது பொறுத்து கொள்வோமா என்று யோசிக்க வேண்டும் , ரோசா.. எனக்கு ஒரு ன்யாயம் சினிமாவுக்கு ஒரு ந்யாயம் ன்னு கதை எழுதினா..ஒன்னும் சொல்வதற்கு இல்லை)
நம் வாழ்வில் நிஜமாக ஒருபெண் (மாணவி), தன் சகமாணவனை பார்த்து ‘போடா ங்கோத்தாா ‘ என்று சொன்னால்,அதை சுஜாதா,ஷங்கர், (ரோசாவசந்த் உட்பட) யாரும் பாரட்டவோ, ஒத்துகொள்ளவோ மாட்டோம் அல்லது,குறைந்த பட்சம் கோபமாவது படுவோம்.
இதற்கு கோபம் வரவில்லை என்றாலும், ஒரு பரத்தை அழைத்து வந்து உடலுறவு கொண்டால்,
நிதானமாக யோசியுங்கள்
2.தமிழக, நகர இளை ஞர்கள்,இளை ஞிகளை குறித்த ஷங்கரின் இந்த சித்தரிப்பு,மற்றும் வசனங்கள் எந்த அளவுக்கு உண்மை நிலையை காட்டுகின்றன ?
3. எல்லாவற்றுக்கும் மேல் இப்படம் இளைய சமுதாயம், மொத்த சமுதாயத்தின் மேது ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?
இதில் என்னை பொறுத்தவரை, நமது சினிமா நமது இளைஞர்களின் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றால், இப்படம் ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. ஆனால் இன்று நிலையோ தலைகீழ், எனவே சினிமாவினால் நாம் ஏற்படுத்து தாக்கத்திற்கு நாமே பொறுப்பாவோம். எனவே அதில் மிகுந்த கவனம் தேவை என்று ஆகிறது.
சினிமா பர்த்து ஒட்டு போட்ட சமுதாயத்திலிருந்து வந்தவன் நான். அதனால் எனது அரசியல் பட்டபாடு,
படும்பாடு எனக்கு நன்றாக தெரியும் என்று யோசிக்க கடமைப்ட்டவானாக உள்ளேன்.
——
மேலும் ஒட்டுமொத்த சமுதாய ஒழுக்கம் பற்றி ஜெயமோகனின் நிலைப்பாட்டை அறிய ஆவல்.
அன்புடன்,
கார்த்திக்
வணக்கம் திண்ணை இணையத்தள ஆசிாியருக்கு
நான் எப்பொழுதும் திண்ணையை வாசிக்க முடிவதில்லையானாலும் வாசிக்கும் நேரம் கிடைக்கிறபோது எப்பவும் திண்ணையைத் தான் முதலில் வாசிப்பேன்.
சுந்தரராமசாமி அவர்களின் பல படைப்புக்களை வாசித்தவள் என்ற வகையிலே அவரது ~படிப்பனுபவமும் படைப்பனுபவமும்~ என்ற கட்டுரையின் கருத்துக்கள் எவ்வளவு நிஜமானவை எனறு பிரமித்து நிற்கின்றேன். அவரது ~குழந்தைகள் பெண்கள் ஆண்கள், காகங்கள் தொகுப்பு, தகழிசிவசங்கரப்பிள்ளை எழுதிய மூலத்தை மொழிபெயர்த்து எழுதிய ~தோட்டியின் மகன் என்ற நாவல்…..என்பவை இன்னும் எனக்குள் இருப்பவை.
ஏனோ நான் வாசித்த அவாின் நாவல்களின் முழுமை இந்தக் கட்டுரையினூடாக மிக நோ;த்தியாக எனக்குள் நிரப்பப்பட்டுவிட்டது போன்று திருப்தியடைகிறேன்.
நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும் ..அவருக்கு மட்டுமல்ல தங்களிற்கும் தான்!
அன்புடன்
சந்ர.ஆகாயி.
23-09-2003
***
அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,
மீண்டும் மதிப்புக்குரிய நண்பர் ‘கல்பாக்கம் ஞாநி ‘ சென்ற வாரக் கட்டுரையில் [செப் 18, 2003] தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அணுமின் நிலையங்கள் மீது கனலற்ற தீப்பொறிகளைக் கக்கி இருக்கிறார்! ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை ‘ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!
50 ஆண்டு நிறைவுப் பொன்விழாவைக் கொண்டாடும் [2003-2004] பாரத அணுசக்தித் துறையகம் இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் மின்சார உற்பத்தியை 2620 MWe மின்னாற்றலிலிருந்து 6800 MWe மின்னாற்றல் மிகுதி நிலைக்கு உயர்த்தப் போவதாக அணுசக்திப் பேரவையின் அதிபதி, டாக்டர் அனில் ககோட்கர் [Dr. Anil Kakodkar, Chairman Atomic Energy Commission] வியன்னா, அகில நாட்டு அணுசக்திப் பேரவையில் [International Atomic Energy Agency, Vienna] 2003 செப்டம்பர் 17 ஆம் தேதி பெருமிதத்துடன் பறைசாற்றி யிருக்கிறார். மேலும் [2002-2003] ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் செவ்விய முறையில் இயங்கி 19,358 மில்லியன் யூனிட் (KWh) மின்சாரத்தை, 90% திறமைத்தகுதியில் [Capacity Factor: 90%] பரிமாறியுள்ளன என்றும் கூறி யிருக்கிறார். அவற்றின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தாக்கள்: அணுமின் உலைகளை ஆழ்ந்து டிசைன் செய்து அமைத்தவர்கள், இராப் பகலாக இயக்கிக் கண்காணித்து வரும் எஞ்சியர்கள், விஞ்ஞானிகள், பணியாளிகள் ஆகியோரே.
நூறு கோடி ஜனத்தொகையை மிஞ்சி விட்ட இந்தியாவுக்குப் பற்றாக்குறை மின்சாரம் மட்டுமா ? உணவு, நீர், உடை, இல்லம், கல்வி, வேலை, போக்குவரத்து, குடிவசதி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளிலும் பற்றாக்குறைகள் உள்ளன! இந்தியாவில் பற்றாக்குறை மின்சார உற்பத்திக்கு வேண்டிய நிலக்கரி கிடைப்பதில்லை! ஈரான், ஈராக்கிலிருந்து எரிஆயில், எரிவாயு ஆகியவற்றை வாங்கிப் பாரதத்தில் மின்சாரம் தயாரித்துப் பெருத்த செலவில் நமது தொழிற்சாலைகளைத் தொடர்ந்து ஓட்ட முடியாது! கோடான கோடி இல்லங்களுக்கும் விளக்கேற்ற இயலாது! நீர்வீழ்ச்சி மின்நிலையங்களை மேலும் பெருக்க நீர்வளச் செழிப்பும் கிடையாது! காற்றிலிருந்தும், கடல் அலைகளிலிருந்தும், மாட்டு சாணத்திலிருந்தும், பரிதியின் வெப்பத்திலிருந்தும், நமக்குத் தேவைப்படும் மாபெரும் 200 MWe, 500 MWe, 1100 MWe மின்சார நிலையங்களைக் கட்ட முடியாது! ஆனால் பாரதத்தில் மிகுந்து கிடக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்தி முதற் கட்டத்தில் 50,380,000 மெகாவாட் அணு மின்னாற்றலும், தோரியத்தைப் பயன்படுத்தி இரண்டாம் கட்டத்தில் 200,000,000 மெகாவாட் அணு மின்னாற்றலும் தயாரிக்க நம்மிடம் மனிதத் திறமையும், மூல உலோகங்களும், யந்திர சாதனங்களும் நிரம்ப உள்ளன.
இன்னும் இருபது அல்லது இருபத்தி ஆண்டுகளுக்கு மின்சாரம் பரிமாறவும், பற்றாக்குறையைத் தீர்க்கவும், அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் [Nuclear Fusion Power Stations] தோன்றுவது வரை, நாம் அணுப்பிளவு மின்சக்தி நிலையங்களின் [Nuclear Fission Power Stations] உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியே இல்லை! கல்பாக்கம் ஞாநி கூறுவது போல் ஓடிக் கொண்டிருக்கும் பதிமூன்று அணுமின் நிலயங்களையும் நிறுத்தி விட்டால், பாரதத்தில் என்ன பாதிப்புகள் நிகழும் என்று எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகளை www.npcil.org, www.igcar.ernet.in, www.dae.gov.in, www.aerb.gov.in, www.barc.ernet.in ஆகிய அகிலவலை முகப்புகளில் யாரும் விளக்கமாகக் காணலாம்.
சி. ஜெயபாரதன், கனடா
I don ‘t really understand how Mr. Badri has come to such a hasty conclusion, without analysing all the facts in relevance. It is a misconception amongst the public that employees are always right, tenants are always right, women are always right. Why ? Don ‘t we all know that both employer and employee could be right or guilty. So are the women-men and tenants-landlords.
Any organisation, irrespective of its business, tends to promote its business by attracting customers. So what ‘s wrong with Air India choosing not to fly overaged women to serve its customers ? The basic eligibility to serve as a air-hostess is her attractive physical appearance and nobody can refute this. So what ‘s wrong in the court ‘s verdict that lets Air India choose its employees ? How can Mr.Badri term it as anti-people ? Is it not height of wrong-thinking ?
Next is the issue with TESMA and Government staff. The learned judges, Mr.Shah and Mr.Lakshman correctly pointed out that the Government employees (they themselves are part of the Government) cannot hold a Government at ransom. And they have no fundamental or equitable right to strike work. Mr.Badri has conveniently forgotten to mention all the troubles that people have to face in the event of strike by the Government servants. So what ‘s wrong in a court coming to the Government ‘s rescue ? How else can a Government handle a strike that would bring the whole administration to a standstill ?
Mr.Badri should think well before blaming any senior judges or the courts of justice.
Regards
Venkat
(VENKATESAN BALASUBRAMANIAN )
Dear Mr Badri
I appreciated your article in thinnai . I, as a NRI, often wondered how the educated people of tamil nadu tolerate the political ‘atrocities ‘
and the odd decisions of the court (ex govt servant ‘s strike and the right to protest). It was incredible to me that even the newspapers or
magazines, (so called large circulation papers) did n ‘t manifest their frank opinions.. When I think of of attitude of news papers or mag
during the emergency time in seventees ( Black inked passages to mean they were censered), I often accept the fact that we, who declare
that India as the largest or greatest republic in the world, are no more better than ‘banaian ‘ republics. Fortunately Internet have given us a
new freedom. Thanks for your brave opinions….
I was of course scandalised by the arrest and humiliation of youngsters in Madras. I read the details of the episode by Anadi ‘s article in
Thinnai. In Vikatan or Kumutham Commissioner VijayaKumar ‘regrets ‘ the incident but doesn ‘t apologize.
Next thing is about Boys. As Shakespeare would have said ‘Too much ado for nothing ‘. As a college student years back I ‘ve heard the
same comments of the ‘boys ‘ by my fellow students.
Excuse me for my ‘ Frenglish ‘ (Frenchifying English)
Ravi
ஆசிரியருக்கு,
திண்ணையில் பல சுவாரஸ்யமான, வித்தியாசமான பார்வைகள் கொண்ட கட்டுரைகள் இடம் பெறுவது குறித்து மகிழ்ச்சி. விரிவாக அவை குறித்து எழுத இயலவில்லை.
ரோசா வசந்த எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து, பதிவுகள் விவாததளத்தில் (http://www.geotamil.com/forum/) அவரது உள்ளிடுக்கைக்கு பதிலாக என் கருத்துக்களை கூறியுள்ளதால் அதை மீண்டும் இங்கு தெரிவிப்பதைத் தவிர்க்கிறேன்.ஜெயமோகன் ஞாநி எழுதியுள்ளதை புரிந்து கொண்டுள்ளாரா என்று சந்தேகம் எழுகிறது.ஜெயமோகன் சுஜாதா குறித்து எழுதியவை (திண்ணையில்) விமர்சனபூர்வமாக இல்லாமல் புகழாரமாகவே பெருமளவிற்க்கு இருந்த்தால அவரிடம் அக்கேள்வி கேட்கப்படுகிறது என்று ஊகிக்கிறேன்.சுஜாதாவின் எழுத்துகளின் ஒரு பகுதியாகத்தான் பாய்ஸ் படத்திற்கு அவர் வசனமெழுதியதைக் காண வேண்டும். ஆபாசம் என்ற விமர்சனம் அவர் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதியவை குறித்து முன்பே எழுப்பட்டுள்ளது. ஒருவர் இரு பெயர்களில் (புஷ்பா தங்கதுரை,ஸ்ரீவேணுகோபாலன்) வெவ்வேறு வகையாக எழுதுவது போல் சுஜாதா செய்வதில்லை.அவர் வாலியுடன் இதில் ஒப்பிடத்தக்கவர். எனவே ஜெயமோகன் மழுப்பாமல் தன் கருத்தினை வெளிப்படுத்தியிருக்க வேண்டும். சுஜாதா அப்படி எழுதுவது அவர் உரிமையென்றாலும் அவர் தன் ஆற்றலை,அறிவை மேம்பட்ட காரியங்களை செய்ய பயன்படுத்தியிருக்கலாம் என்று கூட ஜெயமோகன் எழுதியிருக்கலாம். பாய்ஸ் குறித்த விவாதம் குறித்து எழுதினால் அவர் எழுதியது குறித்த விமரசனத்தை முன்வைக்கிறேன்.
பத்ரி சேஷாத்ரியின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் அதற்கு இட ஒதுக்கீடு தீர்வல்ல.இந்தியாவில் நிர்வாகச் சீர்கேடுகள், அரசுகள் தங்கள் அதிகாரத்தின் எல்லையை உணராமல் செயல்படுவது, பொறுப்பற்ற முடிவுகள் காரணமாக நீதிமன்றங்கள் பல பிரச்சினைகளில் தலையிட வேண்டிய நிலை உள்ளது.ஏர் ஹோஸ்டஸ் வழக்கின் முழு விபரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டமுடியாது. இது அரசியல் சட்டத்திற்கு முரணனாது. மேலும் Convention on Elimination of Discrimination Against Women (CEDAW) என்ற உடன்பாட்டை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
அந்த அடிப்படையிலும் இவ்வாறு பாகுபாடு காட்டமுடியாது.வழக்கின் முழு விபரங்கள் தெரியாமல் தீர்ப்பு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.இதில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன ? பத்ரி Upendra Baxi, S.P.Sathe போன்றோர் எழுதியதை படிக்கலாம்.உச்சநீதி மன்றம் குறித்த நூல்களைப் படிக்கலாம். ஜெத்மலானி போன்றோர் பேச்சின் அடிப்படையில் முடிவுகளுக்கு வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பூக்கோவிற்கும், கனிமொழியின் எழுத்துகளுக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு ரவிக்குமார் எழுதிய முன்னுரையை படித்த பின் விளங்கவில்லை.
‘ஃபூக்கோ உதாரணம் காட்டிய அதே பிரச்சினைகளை – பெண்கள் மீதான ஒடுக்குமுறை, குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை, இன்னபிற – கனிமொழி தேர்வு செய்திருப்பது அவரது சிந்தனையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. ‘
இதனை சிவசங்கரி,மஞ்சுளா ரமேஷ், வாசந்தி உட்பட பலர் எழுதுவதற்கும் குறிப்பிடலாமே ?. ஐன்ஸ்டானும் சோசலிசம் பேசினார், ஐயாசாமியும் சோசலிசம் பேசுகிறார் என்று கூறுவது போல்தான் இதுவும்.கனிமொழியின் எழுத்துகளில் பூக்கோவின் சிந்தனையின் தாக்கம் என்ன, அவர் பூக்கோவின் எழுத்துக்களை எப்படி கையாள்கிறார் என்பது பற்றி எதுவும் கூறாமல் எதற்காக பூக்கோவின் பெயர் இங்கு இடம் பெறுகிறது. பூக்கோவின் கருத்துக்கள் பெண்ணியவாதிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன, சர்ச்சிக்கப்பட்டுள்ளன.
மார்க்சியரும் பூக்கோவின் கருத்துக்களை சர்ச்சித்துள்ளனர். மார்க் போஸ்டர் எழுதிய நூல் Marxism, Foucault and History, முழு நூலும் இணையத்தில் உள்ளது. அதைப் படித்தால் பூக்கோ குறித்து ஒரு வித்தியாசமான புரிதல் கிடைக்கும். இத்தகைய முன்னுரைகள் நூலிற்க்கு சிறப்பு சேர்க்காது. இக்கட்டுரைக்கு எதிர்வினையாக ஒரு கட்டுரைதான் எழுதவேன்டும். எம்.யுவன் முன்னுரை பொருத்தமாக உள்ளது. ஆனால் மொழிபெயர்ப்பு என்பதினை அவ்வளவு எளிதாக இரண்டு பிரிவுகளில் அடக்க முடியாது.
மருந்துகளும்,அறிவு சார் சொத்துரிமைகள் குறித்து திண்ணையில் குறிப்பிட்டிருந்தேன். அது குறித்த என் கட்டுரையை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
Interpreting Para 6: Deal on Patents and Access to Drugs -K Ravi Srinivas Economic & Political Weekly (www.epw.org.in)-Vol 38 No 38 September 20, 2003
K.ரவி ஸ்ரீநிவாஸ்
துக்கமான செய்தி ஒன்று:
திரு. எட்வர்ட் செய்த்(Edward Said) அவர்கள் சற்று முன்னர் இறந்து விட்டதாக அறிகிறேன். இவரது பேட்டிகள் மற்றும் தத்துவார்த்தக் கட்டுரைகள் பல தமிழ் வாசகர் பரப்பில் தெரிந்த விடயமாகவே இருக்கும். குறிப்பாக நிறப்பிரிகையில் பல கட்டுரைகள் ரவிக்குமார் அவர்களால் மொழிபெயர்க்கப் பட்டன. ஒரு தீவிர தத்துவஞானியாய் முகிழ்த்த பாலஸ்தீன அகதி மைந்தனின் இழப்பினை கவலையோடு நண்பர்களுடன் பகிந்து கொள்கிறேன்.
http://www.edwardsaid.org
செங்கள்ளூச் சித்தன்
- ஹே, ஷைத்தான்!
- தராசு
- கேடயங்கள்
- பொய் – என் நண்பன்
- காதல்கள்…
- விண்கோள் செவ்வாயிக்கு 2001 விண்வெளித் தீரப் பயணங்கள் [2001 Mars Odyssey, Mars Express & Mars Rover Flights]
- கசப்பும் கற்பனையும் ( ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை ஸ்பானிஷ் சிறுகதைகள். ஃபெர்னான்டோ ஸோரன்டினா, ஆங்கிலம் வழியாகத் தமிழில் எம
- புரிந்துகொள்ள முடியாத புதிர் -ஜெயந்தனின் ‘அவள் ‘ – (எனக்குப் பிடித்த கதைகள் – 78)
- குமரிஉலா 4
- மக்களை முட்டாளாக்கும் சினிமாக்காரர்கள் – பித்தனின் கோபங்கள்.
- குறிப்புகள் சில செப்டம்பர் 25 2003 மருத்துவ கல்வியும்,மருத்துவ தொழிலும்,-இணையம்,இந்திய அரசு,இறையாண்மை-நகலாக்கம் சர்வதேச தடை முயற
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு நவீன விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை
- சங்கராச்சாரியாரின் தத்துவ ஒழுக்கக்கேடு
- அவன் அவனாக!
- தேரழுந்தூர் கம்பன் அதோ-!
- க்ருஷாங்கினி கவிதைகள்
- இந்தியா
- ஊடல் மொழி.
- தோள்களை நிமிர்த்திடு
- வெங்காயம்! வெடிகடுகு! வெட்கம், சீச்சீ!
- அதிர்ஷ்டம்
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 3 சென்ற இஇதழ் தொடர்ச்சி..
- ஒரு சுமாரான கணவன்
- பிழைப்பு
- அக்கரைப் பச்சை
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தைந்து
- விடியும்! நாவல் – (15)
- காத்தவராயனுக்கு காத்திருப்பது
- மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்!
- கடிதங்கள்
- யாகூ குழுமங்களை இந்திய அரசு தடை செய்துள்ளது.
- தமிழில் குழந்தைப் பாடல்கள்
- பாரதி நினைவும் காந்தி மலர்வும்
- வாரபலன் (குந்தர் கிராஸ், பெண்மொழி, கல்கத்தாவின் சென்னைவாசிகள் பற்றி பாரதி) செப்டம்பர் 20, 2003
- ஈகோவும் வெற்றியும்
- பூட்டு
- இரு கணினிக் கவிதைகள்
- இரு தலைக் கொள்ளி எறும்புகள்!
- சிக்கல்