K.ரவி ஸ்ரீநிவாஸ்
இந்த சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு உருவானது.பல் எதிப்பியக்கங்கள் உருவாயின. ஆனால் அரசு அவற்றை அடக்கியது. தொடர்ந்து காடுகளை ஏகாதிப்பத்தியத்தின் நலனுக்காக பயன்படுத்தியது. இதனால் விவசாயிகள்,காடுகளை சார்ந்து வாழ்வோர் பாதிக்கப்பட்டனர். மேலும் காடுகள் மூலம் அரசிற்கு கிடைக்கும் வருவாய் பெருகியது. ஒரு புறம் பாரம்பரிய வேட்டைக் குழுக்கள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டது.ஆனால் ஆங்கிலேயர், சமஸ்தான ராஜாக்கள் தடையின்றி வேட்டையாடினர். காடுகளை அழித்து பயிரிடுவது, பின் அப்பகுதியை அப்படியே விட்டுவிட்டு வேறோரு பகுதியை அழித்து பயிரிடுவது போன்ற பாரம்பரிய முறைகள் தடை செய்யப்பட்டன. கைவினைஞர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் கிடைப்பதும் அரசின் விதிமுறைகளால் தடைப்பட்டன.இவ்வாறு காலனிய ஏகாதிபத்தியம் இந்தியக்காடுகளுக்கும், மக்களுக்கும் நிலவிய உறவினை மாற்றி அமைத்து, காடுகள் அரசின் முழுச் சொத்து என்பதை நடைமுறைப்படுத்தியது.
காடுகள் குறித்த அன்றைய விவாதங்க்ள், போராட்டங்களை சுட்டிக்காட்டும் காட்கில், குஹா, 1947 க்குப் பின்னரும் கூட காடுகள் குறித்த் கொள்கை அரசுமைய வாதமாகவே உள்ளது.இதனால் அரசும்,அரசின் தொழில் கொள்கையால் பயன்பெரும் தொழிற்ச்சாலை முதலாளிகளுமே பயன் பெறுகின்றனர் என்பதினை ஆதாரங்களுடன் காட்டுகின்றனர். உதாரணமாக மூங்கில் கைவினைஞர்களுக்கு மிக அதிக விலையுலும், தொழிற்சாலைகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் விற்கப்படுகிறது. மூலவளங்களை பயன்படுத்தும் தொழிற்துறைக்கு பல சலுகைகள், தங்கள் சிறு தேவைகளுக்காக காடுகளை பயன்படுத்துவோருக்கு சலுகைக்கள் இல்லை.மாறாக அவர்கள் காட்டு நிர்வாகத்தினால் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
இந்த இரு நூல்களிலும் காட்கில்,குஹா இவ்வாறு சூழல் பிரச்சினைகளை சமூக அமைப்பு,அரசு, தொழில்மயமாதல் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தியே ஆராய்ந்துள்ளனர். 1947 க்குப்பின் அரசின் கொள்கைகள் மூலம் பாரம்பரியத் தொழில் முனைவோர், பழங்குடியினர் வாழ்வுரிமைகளுக்கு எதிராக உள்ளது என்பதையும் இவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
பசுமைப்பார்வை என்பது நீதி,சமத்துவம்,மனித உரிமைகள் என்பனவற்றையும் உள்ளக்கிய ஒன்றாக இருக்க வேண்டும்.காடுகளின் அழிவை வெறும் இயற்கை சார்ந்த பிரச்சினையாகக் காணக்கூடாது. காடுகளின் நிர்வாகத்தில் மக்கள் பங்கேற்ப்பு அவசியம்.தொழில்மயமாதல் என்பது மூலவளங்களை மானியமாத் தருவது என்ற அடிப்டையில் இருக்ககூடாது- இது போன்ற பல கருத்துகளுடன், தீர்வுகளையும் இவர்கள் முன்வைக்கின்றனர். அஷிஸ் கோத்தாரி, (அமரர்) அனில் அகர்வால், சரத குல்கர்னி போன்ற பலரின் கருத்துக்கள் இவர்களின் கருத்துக்களுடன் ஒத்தவை. காந்திய சிந்தனையின் தாக்கத்தினை இவற்றில் காணலாம். இந்தியாவில் மக்களின் வாழ்வுரிமை என்பதை தேசிய நலன் என்ற பெயரில் பலியிட முடியாது என்பதே இவர்களின் நிலைப்பாடு.
அடுத்த பகுதியுடன் நிறைவுறும்
ravisrinivas@rediffmail.com
- கூடு விட்டு கூடு…
- கலையும் படைப்பு மனமும்
- விமரிசன விபரீதங்கள்
- தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘
- தமிழாக்கம் 1
- தவிக்கிறாள் தமிழ் அன்னை !
- அகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன ?
- அறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)
- வாழ்க்கையும் கனவுகளும்
- கஷ்டமான பத்து கட்டளைகள்.
- உணர்வும் உப்பும்
- குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்
- கம்பனும் கட்டுத்தறியும்
- ஹைக்கூ
- அந்த(காந்தி) -நாளும் வந்திடாதோ.. ?
- மொய்
- உழவன்
- ஒரு தலைப்பு இரு கவிதை
- நெஞ்சினிலே….
- குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி!
- விசுவரூப தரிசனம்.
- ஒற்றுப்பிழை
- வாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)
- புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள்
- கடிதங்கள்
- கேட்டுக்கிட்டே இருங்க!
- கோயில் விளையாட்டு
- விடியும்! நாவல் – (7)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு
- 39.1டிகிரி செல்ஸியஸ்
- வேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்
- இறையியல் பன்மையும் உயிரிப்பன்மையும்-3
- பிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘
- சந்தோஷமான முட்டாளாய்…
- முற்றுமென்றொரு ஆசை
- மனமா ? மத்தளமா ?
- வாழ்க்கை
- ஊனம்
- அன்னை
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11
- கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?
- நேற்று இல்லாத மாற்றம்….