ஜூலை 10, 2003
இது எங்கள் கடிதம்:
அன்புள்ள வாசகர்களுக்கு,
ஒரு சில காரணங்களால், இந்த இதழ் சற்று முன் கூட்டியே செவ்வாய்க் கிழமையில் வெளிவருகிறது. அதனால், பல கடிதங்களை இந்த இதழில் போட முடியவில்லை. அடுத்த இதழ் அடுத்த வியாழக்கிழமையில் (17 ஆம் தேதி, ஜூலை 2003) வெளிவரும்.
நன்றி
திண்ணைக்குழு
இனி உங்கள் கடிதங்கள்
தமிழோவியம் இணையதளத்தில் திண்ணை ஆசிரியர் குழுவில் இருக்கும் கோபால் ராஜாராம் பற்றிய குறிப்புகள் வந்திருக்கின்றன.
http://www.tamiloviam.com/html/America37.Asp கோபால் ராஜாராம் பற்றிய குறிப்புகள் உண்மையா ?
நரேஷ்
அன்புள்ள ஆசிரியருக்கு
வடக்கு முகம் நாடகம் குறித்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்தன. நீங்கள் இரு கடிதங்கள் மட்டுமே பிரசுரித்துள்ளதை கண்டேன். உங்களுக்கு அவை அனுப்படவில்லையா என்ன ?
ஜெயமோகன்
***
திண்ணைக்குழு: வடக்கு முகம் பற்றி திண்ணைக்கு வந்த கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டுவிட்டன
***
ஆசிரியருக்கு
சில வருடங்களுக்குமுன்னர் நந்தன் இதழில் பிரபஞ்சன் எழுதிய கட்டுரை ஒன்றின் தலைப்பு ‘அசோக மித்திரனா சோரபுத்திரனா ? ‘ அந்த பிரபஞ்சன் தான் படைப்பாளிகளை இழிவுசெய்ததை கடுமையாக கண்டித்து கையெழுத்து போட்டவரா , இல்லை அது வேறு யாராவதா ?கேட்டு தெளிவுசெய்ய காலச்சுவடு குழு தயாராகவேண்டும் என கோருகிறேன்
விக்னேஸ்வரன் சென்னை14
ஆசிரியருக்கு,
கணேஷ் எழுதிய கட்டுரை ஒரு புதிய கோணத்தைக் காட்டியது. சிறுபத்திறிக்கை உலகுக்குள் இவர்கள் இதுவரை ‘நாய்ச்சண்டை ‘தான் போட்டிருக்கிறார்கள் . அதை அமர இல்க்கியம் என்று பம்மாத்து காட்டியிருக்கிறார்கள். சுராவுக்கு பதிலாக நகுலன் நாய்கள் என்று ஒரு கதை எழுதியுள்ளதாக சொல்கிறார்கள். சுட்டிக்காட்டிய கட்டுரைக்கு நன்றி. சுந்தர ராமசாமியை ஒரு புனிதபசுவாக காட்டவே இந்த சர்ச்சையை காலச்சுவடு கட்டியெழுப்பியது எறு தோன்றுகிறது.
சிவராம் கெ.எம். சென்னை
ஆசிரியருக்கு,
திண்ணையின் வாசகன் என்ற முறையில், சுஜாதாவை பற்றிய கட்டுரை ஒரு தனி மனித துதிபாடுதளாக உள்ளது. இப்படிபட்டகட்டுரைகளை வெளியிட்டு உஙகள் வாசகர்களை துன்புறுத்தாதீர்கள். சுஜாதாவின் புகழ் பாட திண்ணை ஒரு களமாக இடம் கொடுக்க வேண்டாமே. கணபதி சுப்புவுக்கும் சுஜாதாவிற்க்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை.
ராஜா
அன்புள்ள ஆசிரியருக்கு:
வார்த்தைகளுக்கு இடையே போதுமான இடைவெளி தேவைதா. திண்ணையின் கதை, கட்டுரைகளில் எழுத்துகளுக்கு இடையேயும் தேவையற்ற ஒரு இடைவெளி இருக்கிறது. (எ-டு: அவளைப் பார்த்தான் என்பதற்கு பதிலாக அ வ ளைப் பா ர்த் தா ன் என்பது போல் வருகிறது) இது சரளமாக படிக்க தடையாக இருக்கிறது. இதைச் சரிசெய்ய இயலுமா ?
என். சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
திண்ணைக்குழு:
பல கணினிகளில் இது சரியாகத்தான் தெரிகிறது என்று எழுதியிருக்கிறார்கள். உங்கள் கணினியில் இருக்கும் டாப்டைம்ஸ் ஃபோண்ட் ஒருவேளை பழையதாக இருக்கலாம்.. அதனை ஃபோண்ட் டைரக்டரியிலிருந்து நீக்கிவிட்டு மீண்டும் திண்ணையை பார்க்க முயற்சி செய்யலாம். உங்கள் கணினியில் இருக்கும் ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் மற்றும் புரொவ்ஸர் என்ன என்பதை கடிதத்தில் தெரிவியுங்கள். பரிசோதித்துப் பார்க்கிறோம்.
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- மூன்று கவிதைகள்
- செந்தாமரையே
- சொல் தேடி பயணம்…
- நேற்றான நீ
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- என் கவிதையும் நானும்
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- தமிழினி வெளியீடாக
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- சீதாயணம்!
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- அம்மா எனக்கொரு சிநேகிதி.
- மூன்றாவது தோல்வி
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- விடியும்! நாவல – (4)
- உலக நடை மாறும்
- வீட்டுக் குறிப்புகள் சில
- கடிதங்கள்
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- பணமே உன் விலை என்ன ?
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- மறக்கமுடியவில்லை
- மூன்று கவிதைகள்