ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“குற்றமற்ற ஓர் அப்பாவி மங்கையை கத்தோலிய ஆலயமும் அதன் மதச் சட்டமும் நசுக்குவதைக் காண்பது ஒரு பயங்கரமான காட்சி.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Play: Saint Joan)
“எனக்கு அடி உதை எதுவும் வேண்டாம். பேசாமல் என்னைப் போலீஸிடமே ஒப்படைத்து விடுங்கள். அதுதான் நியாயம். அதுதான் நேர்மை. எனது கையைக் காலை முறித்து விட வேண்டாம்.”
ஜார்ஜ் பெர்னாட் ஷா (Burglar in The Heartbreak House)
++++++++++++++++
இந்த நாடகத்தைப் பற்றி :
ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் இந்த மோக இன்பியல் நாடகம் (Lusty Comedy) இங்கிலாந்து தேசத்தின் தென் கோடியில் உள்ள ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடல் பகுதியில் (Sussex Area) நிகழ்வதாக எழுதப் பட்டுள்ளது. அங்கே காப்டன் ஷோடோவர் (Captain Shotover) தன்னிரு புதல்வி யருக்கும் மற்றும் சம்பிரதாயம் பேணாத அவரது நண்பருக்கும் தன் இல்லத்தில் (Nautical Sussex Home) விருந்து வைக்கிறார். வாலிப மாது ஒருத்தி விரும்பி மணந்து கொள்வது செல்வத்துக்கா அல்லது காதலுக்கா என்பதுதான் நாடகத்தின் முக்கியக் கேள்வி ! காப்டனின் இல்லம் வாலிப இதயத்தை முறிக்கும் வாழ்வு மர்மங்கள் நிரம்பி மரணச் சாபத்தில் கட்டப் பட்டது ! அந்தக் கொந்தளிப்பு நிலையைக் காட்ட பெர்னாட் ஷா பிரிட்டீஷ் நாட்டுப்புற வீட்டை (Country Home) ஒரு கப்பலாக உருவகப் படுத்திக் கொள்கிறார். அவரது இல்லக் கப்பல் வக்கிரக் காதலர் (Loopy Lovers), போலிப் போதகர் (False Prophets), முதுமையுற்ற தீர்க்க தரிசிகள் (Aging Visionaries), வாலிப ரோமியோக்கள் (Aging Romeos), கவைக்குதவா பூரணவாதிகள் (Ineffectual Idealists), வஞ்சகச் செல்வந்தர் (Mangy Capitalists) பலர் கூடுகின்ற ஒரு விலங்குக் காட்சி சாலை (Menagerie /Zoo). நாடகக் கதைக் கரு (Plot) முன்னாள் கப்பல் காப்டன் ஷோடோவர், புதல்வியர் ஹேஸியோன், ஏரியட்னி, எழில் மாது மிஸ் எல்லி நால்வரை மையமாகக் கொண்டு விரிந்து உச்சக் கட்டத்தைத் தொடுகிறது.
1917 இல் முதல் உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஜார்ஜ் பெர்னாட் ஷா எழுத ஆரம்பித்து 1919 இல் முடித்த நாடகமிது. “நெஞ்சை முறிக்கும் இல்லம்” நாடகம் 1920 ஆண்டில் நியூ யார்க் நகரில் முதன்முதலில் அரங்கேறியது. பெர்னாட் ஷா எழுதிய நாடகங்களிலே இது முற்றிலும் வேறுபாடானது. இந்த நாடகத்தைப் படிக்கும் அல்லது பார்த்துச் சுவைக்கும் வாசகர் பெர்னாட் ஷாவின் நீண்ட பிரச்சாரம் நகைச்சுவை இரண்டையும் ஒருங்கே சம அளவில் அனுபவிப்பர். நாடக ஆசிரியர் வாயிலிருந்து மளமள வென்று கொட்டும் வார்த்தைகளின் நீர்வீழ்ச்சியில் வாசகர் உள்ளம் நனைந்து ஷாவின் உன்னத தீர்க்க தரிசச் சிந்தனை களோடு பந்தயக் குதிரைபோல் ஓடும். இந்த நாடகம் மிகத் துணிச்சலான ஓர் அழிவுத் தலைப்பை (Subversive Topic) நம் கண்முன் நிறுத்துகிறது. அவை உலகப் போரால் விளையும் தீங்குகள் மட்டுமல்ல ! நமது தன்னிறைவு பெறாத அதிகார ஆற்றலால் (Destruction Power of our Complacency) இல்லத்திலும், சமூகத்திலும் உண்டாக்கப் படும் மிகையான அழிவுக் கோரம் !
நாடகத்தில் வருபவை அனைத்தும் தையலற்ற ஒரு முழுமை அணியாய் ஒருங்கு சேர்கின்றன ! இரண்டரை மணிநேரம் நடக்கும் இந்த நாடகம் குழப்பத்தை உண்டாக்காமல் நகர்ந்து சென்று முடிகிறது. இது காட்டும் நிகழ்ச்சிகள் யாவும் இங்கிலாந்து இல்லம் ஒன்றிலும், கப்பலிலும் நேர்கின்றன. நாடக முக்கியக் கதா பாத்திரம் காப்டன் ஷொடோவர் (Captain Shotover) செழித்த சிந்தனையோடு பேசுகிறார். அரங்க மேடையில் அவர் மனித இனத்தைத் தூக்கி எறிவதை ஒருவர் காணாமலே போய் விடலாம். இந்த நாடகத்தில் பிரிட்டீஷ் மேற்குடிக் கோமகனார் இடையே முதல் உலக யுத்தத்துக்கு முன்னிருந்த மூடத்தனங்கள் காட்டப் பட்டு மக்கள் துயர்க் கொடுமை ஷாவின் கலைத்துவச் செழிப்போடு காட்டப் பட்டுள்ளன.
நெஞ்சை முறிக்கும் இல்லத்தை ஒரு கப்பலாக உருவகம் செய்கிறார் பெர்னாட் ஷா. ஷா இந்த நாடகத்தில் சிரிப்பு வெடி கிளப்பும் வசன வரிகளை இடையிடையே நிரப்பி முடிவில் பெரு வெடிப்பு நிகழ்ச்சியாய்த் தோன்றி உச்சக் கட்டம் வருகிறது. வசன வரிகள் நாடகத்தில் நீண்ட போதிப்பாகத் தெரிந்தாலும் பெர்னாட் ஷாவின் கருத்துக்கள் கேட்கத் தகுந்தவை. சிரிக்க வைப்பவை ! சிந்திக்க வைப்பவை. தற்போதைய நமது சமூகப் பிரச்சனைகளையும் ஆங்காங்கே எதிரொலிப்பவை.
++++++++++++++++++++++
நாடக உறுப்பினர்:
1. காப்டன் ஷொடோவர் (Captain Shotover) : (88 வயது)
(மிஸ். ஹெஸியோன், மிஸ். எரியட்னி இருவரின் தந்தை)
2. மிஸ் எல்லி டன் (Ellie Dunn) : இள வயது மங்கை
3. மிஸ்டர் மாஜினி டன் (Mazzini Dunn) : மிஸ் எல்லியின் தந்தை
4. மிஸிஸ் ஹெஸியோன் குசபி (Hesione Hushabye) காப்டனின் மூத்த புதல்வி (45 வயது)
5. எரியட்னி அட்டர்வுட் (Ariadne Utterword) : காப்டனின் இளைய புதல்வி
6. ஸர் ஹேஸ்டிங்ஸ் அட்டர்வோர்டு : (Sir Hastings Utterword) எரியட்னியின் கணவர்.
7. ரான்டல் அட்டர்வோர்டு (Randal Utterword) (40+) ஹேஸ்டிங்ஸின் சகோதரன்
8. மிஸ்டர் ஹெக்டர் குசபி (Hector Hushabye) : ஹெஸியோனின் கணவர் (50 வயது)
9. வில்லியம் மங்கன் (Bill Mangan, Business Boss) : செல்வந்தர். வயது 55.
10. மிஸ்டர் காரத் ஸாக்ஸி (Gareth Saxe) செல்வீகக் கோமகன்
11. ஆல்•பிரெட் மாங்கன் (Alfred Mangan) – மாஜினியின் வேலை அதிகாரி.
12 தாதி கின்னஸ் (Nurse Guinness) : காப்டன் இல்லத்து முதிய பணிமாது. (60 வயது)
13 மிஸ் ஜென்னி ஸ்டர்லின் (Jenny Sterlin) : வேலைக்காரி.
***************************
(இரண்டாம் காட்சி)
இடம் : இங்கிலாந்தில் ஸஸ்ஸெக்ஸ் குன்றுக் கடற் பகுதியில் இருக்கும் நாட்டுப்புற இல்லம் (A Country Home in North End of Sussex, UK). அதே இல்லம். விளக்குகள் மந்த வெளிச்சத்தில் எரிகின்றன.
நேரம் : இரவு
அரங்க அமைப்பு : திரை தூக்கியதும் மிஸ் எல்லி முன்னே வர, கோமான் மாங்கன் பின்னே வருகிறார். இரவு விருத்துக்கு எடுப்பான ஆடை அணிந்துள்ளார். எல்லி மணக்கப் போவதில்லை என்று மாங்கன் சொல்லாமல் சொல்கிறார். எல்லியும் தான் வேறு ஒருவரை நேசிப்பதாகச் சொல்லும்போது மாங்கன் அதிர்ச்சி அடைந்து நாற்காலில் சாய்கிறார். மிஸ் எல்லி மாங்கன் நெற்றியைத் தடவித் தூங்க வைத்து வெளியேறுகிறாள். வேலைக்காரி மாஜினி, ஹெஸியோன் மூவரும் மாங்கன் மரித்து விட்டதாகக் கருதுகிறார். மயக்க முற்றது போல் பாசாங்கு செய்யும் மாங்கன் எழுந்ததும் தன்னை இகழ்ந்தோரை வெறுத்து வெளியேற விரும்புகிறார். அப்போது காப்டன் வீட்டில் ஒரு திருடன் நுழைகிறான்.
+++++++++++++++++++++
அங்கம் -2 பாகம் -11
(மூவங்க நாடகம்)
(சென்ற வாரத் தொடர்ச்சி)
ஹெஸியோன்: வேண்டாம். ஒரு சில வைரங்களைக் களவாடத் தொட்டதற்கு ஒருவனைப் பத்தாண்டுகள் நாம் உயிரோடு புதைக்கக் கூடாது. அது நியாயமில்லை !
திருடன்: நான் கையில் எடுத்ததை மெத்தை மீது வைத்துவிட்டேன். தீண்டியது திருடாகாது. என்மீது குற்றம் சுமத்தாதீர்.
ஏரியட்னி: எங்கள் நிலையை நினைத்துப்பார். உன்னைப் புகார் செய்வதால் எமது குடும்பத்தின் பெயரும் குற்ற மன்றத்தில் புரட்டி எடுக்கப்பட்டுச் சந்திக்கு வரும். செய்தித் தாளில் வெளிவரும். என் கணவர் உன்னை நன்றாக உதைத்து வெளியே தள்ள வேண்டும். நானதைத் தடுக்க மாட்டேன். ஆனால் இங்கு இங்கிலாந்தில் மதிப்போடு வாழ்வோர்க்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை.
திருடன்: எனக்கு அடி உதை எதுவும் வேண்டாம். பேசாமல் என்னைப் போலீஸிடமே ஒப்படைத்து விடுங்கள். அதுதான் நியாயம். அதுதான் நேர்மை. கையைக் காலை முறித்து விட வேண்டாம்.
ரான்டல்: எது நியாயம், எது அநியாயம் என்பதை நீ எமக்குச் சொல்லாதே ! நீ திருட வந்தவன் ! திருடி அகப்பட்டுக் கொண்டவன் ! பொருளை இழந்தவர் நாங்கள். ஓடிப் போய்விடு எங்கள் மனம் மாறுவதற்குள் !
திருடன்: நான் செய்த பாவத்தை முறையாகக் கழுவ வேண்டும் என் மனச்சாட்சியின்படி. எனக்குப் புத்தி வரும்வரை நான் இருட்சிறையில் வாட வேண்டும்.
மாங்கன்: திருடன் கூட இந்த வீட்டில் இயற்கையாகப் பேசுவதில்லை.
ஹெக்டர்: (திருடனைப் பார்த்து) உமக்குப் பாப மன்னிப்பு எம்மால் கிடைக்காது. இந்த இல்லத்தில் யாரும் உம்மீது புகார் செய்யப் போவதில்லை. போ வெளியே !
திருடன்: ஓ அப்படியா ? யாரும் இன்றென்னைப் புகார் செய்யப் போவதில்லையா ? நன்றி ஐயா, நன்றி மேடம். நான் இந்த இல்லத்தில் களவாடப் புகுந்ததற்கு மிகவும் வருந்துகிறேன்.
ஹெக்டர்: உம்மீது நாங்கள் பரிவு காட்டுவதற்கு நீ மனம் வருந்தாதே ! தயவு செய்து போகிறாயா இல்லையா ?
திருடன்: நீங்கள் என்னைப் புகார் செய்யா விட்டால், நானே போய்ச் சரண் அடைகிறேன் போலீஸ் நிலையத்தில். (அவன் போக முனையும் போது ஹெக்டர் அவனைத் தடுக்கிறான்)
ஹெக்டர்: வேண்டாம் ! அப்படி நீ சரணடையக் கூடாது.
ரான்டல்: (திருடனைப் பார்த்து) முட்டாளாய் நடந்து கொள்ளாதே !
ஹெஸியோன்: அறிவு கெட்டவனே ! எண்ணிப் பார் ! போலீஸிடம் மாட்டிக் கொள்ளாது உன் வீட்டுக்குள் பாப மன்னிப்பைத் தேடு !
எரியட்னி: சொன்னபடி செய் !
திருடன்: அது தவறல்லவா ?
ஹெஸியோன்: கோமாளித்தனமாக உள்ளது ! நமக்கு விருப்ப மில்லாத போது, இவன் மீது குற்றம் சாட்டி இவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைப்பதா ?
திருடன்: நீதி மன்றத்தில் ஒருநாள் நீங்கள் நிற்பதை நான் தடுக்கும் உரிமையை நீங்கள் பறிப்பதா ? அது நியாயமா ? நேர்மையா ? எனக்குச் சாதகமாய் இருக்குமா ? என்னை மிரட்டாதீர்.
மாஜினி: நீ எப்படி உன் திருட்டுக் குற்றங்களை எல்லாம் கணக்குக்குக் கொண்டு வருகிறாய் என்று சொல்கிறேன். வீட்டின் பூட்டுக்களைப் பற்றி நீ அறிந்துள்ளது போல் யாரும் அறிந்திருக்க முடியுமா ? நீ இரும்புப் பூட்டு பட்டறை வைத்துப் பிழைக்கலாம். ஏனிப்படித் திருடிப் பிழைக்க வேண்டும் ?
திருடன்: என்னிடம் இருக்கும் 20 பவுண்டுக்குக் குன்றிய நாணயத்தில் இரும்புப் பட்டறை ஏற்படுத்த முடியாது.
ரான்டல்: பக்கத்தில் உள்ள பாங்கில் 20 பவுண்டு நாணயத்தைத் திருடிக் கொள்.
ஹெஸியோன்: (ஹெக்டரிடம் வெறுப்பாக) இந்த மாதிரிப் புத்திமதி வேண்டாம். அவனுக்கு ஏதாவது பணத்தைக் கொடுத்து வெளியே அனுப்பு.
ஹெக்டர்: (ஒரு பவுண்டு நாணயம் அளித்து) இதோ இதை வைத்துக் கொள். போ வெளியே !
திருடன்: சரி போகிறேன். நன்றி உமக்கெல்லாம்.
(திருடன் போகும் வழியில் காப்டனைச் சந்திக்கிறான்)
காப்டன்: (திருடனைக் கூர்ந்து நோக்கி) என்ன ? நீங்கள் இரண்டு பேரா ? நீ வில்லியம் டன் இல்லையா ?
திருடன்: (திடீரென்று மண்டியிட்டு) அட கடவுளே ! நான் காப்டன் ஷொடோவர் இல்லத்திலா களவு செய்ய முனைந்தேன் ? மன்னிக்க வேண்டும் என்னை காப்டன் !
காப்டன்: (கோபத்துடன் திருடன் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு போய் எல்லியின் அருகில் நிறுத்தி) சொல் ! இவள் உன் மகளா ?
திருடன்: எனக்கு எப்படித் தெரியும் காப்டன் ? நீங்களும் நானும் எந்த மாதிரி சூழ்நிலையில் வாழ்ந்தோம் என்று உமக்குத் தெரியும். அந்த மாதிரி இளமங்கை என் மகளாகப் பரந்த உலகில் எங்கிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியாது.
காப்டன்: (மாஜினியைப் பார்த்து) வில்லியம் டன் நீவீர் இல்லை. இதோ இவன் தான் வில்லியம் டன் ! (திருடனைப் பார்த்து) என் இல்லத்தில் ஏன் களவு செய்தாய் ?
திருடன்: தெரியாமல் நடந்த களவு இது காப்டன் ! (மாஜினியைப் பார்த்து) என்ன வேடம் இது ? என் பேருடன் நீ உலவி வருகிறாயா ? என்னை ஏன் சுட்டுத் தள்ளினாய் ? உன் பெயரைக் கொண்ட என்னையா ? அல்லது உன் பெயரை அழிக்கவா ?
மாஜினி: காப்டன் ஸார் ! நானும் இங்கு வந்த நேரத்திலிருந்து உமக்குச் சொல்லி வருகிறேன், நான் வில்லியம் டன் இல்லை, மாஜினி டன் என்று ! நான் வேறு மனிதன் ! உங்களுக்குத்தான் இந்தப் பெயர்க் குழப்பம் !
(தொடரும்)
*******************************
தகவல் :
Based on The Play : Heartbreak House By : George Bernard Shaw (1919)
(A) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)
(B) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)
(C) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)
(D) Heartbreak House By : Elyse Sommer.
(E) Heartbreak House By : Charles Isherwood (October 12, 2006)
(F) Theater Review ‘A Heartening Heartbrek House’ By : Bill Marx (Aug 24, 2009)
(g) BBC DVD Video Classics – Bernard Shaw’s Heartbreak House (1977) (2 Hours)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 29, 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11
- ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்
- ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..
- கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு
- வியாபாரம்
- இவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்
- சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா
- காலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு
- பிரதீபா கவிதைகள்
- சாயல்கள்
- யாசகம்
- கொடுமைக்குக்குறைவில்லை!
- ஓயாத காற்று
- அது எது..!
- எப்படியும்… ப்ரியம் எனக்கு!
- வலியதுகள் வாழ்கின்றன
- சில மழை இரவுகள்…
- தோற்றம் எங்கே
- தருணங்கள்
- தமிழினம் போற்றும் தமிழ்மனம்
- ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”
- ஒப்பந்த மரணம்
- அர்ச்சனை
- கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்
- அவரவர் பார்வையில்
- நினைவுகளின் சுவட்டில் – (59)
- தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)
- M.ராஜா கவிதைகள்
- திரை கடல்
- இன்னொருவன்
- போதனை…
- அன்புக்கவி
- கோநா கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்