ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“இந்த ஆண்டுப் போர் நினைத்துப் பார்க்க முடியாதபடி முற்றிலும் மாறி விட்டது. போதிய அளவு இறைச்சி, ரொட்டித் துண்டுகள், குதிரைகளுக்குத் தீவனம் ஆகியவை எனக்குக் கிடைத்தன. நான் அவற்றைப் பகிர்ந்து அளித்தேன். எனது இராணுவப் படையினர் என் மீது சொல்ல முடியாத அளவுக்கு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளார். ஆனால் நீ ஒருத்தி மட்டுமே என்மேல் மன எரிச்சல் கொண்டிருக்கிறாய் ! நீ மட்டுமே எனக்கு மகிழ்ச்சி ஊட்டுபவளாகவும், என்னைச் சித்திரவதை செய்பவளாகவும் இருந்து வருகிறாய்.”
நெப்போலியன் (தன் மனைவி ஜோஸ·பினைப் பற்றி)
ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :
1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸி லிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !
அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.
நாடகத்தில் பங்கெடுப்பாளர் :
1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)
2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)
3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)
4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)
காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.
இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)
ஆரம்பக் காட்சி :
(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.
உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான். அந்த முயற்சியில் இறுதியில் வெற்றி பெற்றுக் கடிதங்களை வாசிக்கிறான்.)
(முன் வாரத் தொடர்ச்சி)
நெப்போலியன்: (மிகக் கோபத்துடன்) யார் ? யார் ? யாரந்தக் கபட மாது ? சொல் சின்னப் பெண்ணே ! சொல் !
ஹெலினா: முதலில் அந்தப் பெண்ணின் கடிதத்தை எனக்குத் தந்துவிட்டுக் கேட்பீரா ?
நெப்போலியன்: நீ என்னைப் பைத்திய மாக்குகிறாய் பெண்ணே ! என் பொறுமையைக் கிண்டுகிறாய் ! போ வெளியே ! போ !
ஹெலினா: (பிடிவாதமாய்) முதலில் அந்தக் கடிதம் இந்தக் கையிக்கு மாற வேண்டும் ! அதற்குப் பிறகுதான் நான் வெளியேறுவேன்.
நெப்போலியன்: உனக்கு அந்தக் கடிதத்தை நான் தரப் போவதில்லை ! நான் உன்னை வெறுக்கிறேன். ஒற்றுப் பெண்ணான நீ என்னைப் பேதலிக்க வைக்கிறாய் ! அழகியானாலும் நீ அகத்தில் ஓர் அவலட்சண மாது ! ஒரு மூடப் பெண் தொல்லை எனக்கு வேண்டாம். போய்த் தொலை ! என் கண்முன் நில்லாதே ! (முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.) (திரும்பிக் பார்க்கிறான்). ஏன் குறும்புடன் சிரிக்கிறாய் ? யாரைப் பார்த்துச் சிரிக்கிறாய் ?
ஹெலினா: (பெரிதாகச் சிரித்து) உம்மைப் பார்த்துதான் ஜெனரல் ! வல்லமை பெற்ற பெரிய தளபதி திடீரெனச் சிறிய பையனாக மாறிவிடுகிறார் ! எப்படிச் சிரிக்காமல் இருப்பது ? இப்படிப் பட்ட பெரிய வீரரை இப்போதுதான் நான் நேரே சந்திக்கிறேன் !
நெப்போலியன்: (கோபத்துடன்) உன் வாயிலிருந்து வருவதெல்லாம் வசை மொழிகள்தான் ! ஒற்று வேலை செய்ய வந்திருக்கும் நீ என்னை அவமானப் படுத்த முனைகிறாய் ! முகத்துதி செய்வது போல் பாசாங்கு பண்ணி என் முகத்தில் கரியைப் பூசுகிறாய் !
ஹெலினா: (ஏளனமாக) அந்தக் கடிதம் எனக்குத் தேவையில்லை ! நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உம்மை அவமதித்து அந்தக் கடிதத்தில் எழுதி யுள்ளதைப் படித்து நீங்களே மன வேதனை அடைய வேண்டும் ! அந்தக் கடிதத்தின் குறிக்கோளும் அதுதான் ! அதன் வேலையாவது நிறைவேறட்டும் ! விடை பெறுகிறேன் ஜெனரல் ! (கோபத்துடன் கதவருகில் விரைந்து போகிறாள்.)
நெப்போலியன்: (கையை நீட்டி) நில் போகாதே ! எங்கே போகிறாய் ? நிற்கிறாயா இல்லையா ? ஆணை இடுகிறேன் ! நில் இங்கே வா ! பிடிவாதக்காரியே நில் ! என்னருகே வா ! (வேகமாய்ச் சென்று ஹெலினாவின் கையைப் பற்றி நிறுத்துகிறான்) கேட்ட கேள்விக்குப் பதில் சொல் !
ஹெலினா: (சினத்துடன்) கையைத் தொடாதீர் ! நான் உமது பணிப்பெண் இல்லை ! நீவீர் எனது மேலதிகாரியும் அல்லர் ! ஏனிப்படிக் கேட்கிறீர் ? போகும் என்னை ஏன் தடுக்கிறீர் ? நான்தான் காரணத்தை விளக்கிச் சொல்லி விட்டேனே !
நெப்போலியன்: எப்போது விளக்கிச் சொன்னாய் ?
ஹெலினா: (சினத்துடன்) முதலில் அந்தக் கடிதத்தைப் படித்துப் பாருங்கள் ஜெனரல் ! நான் சொல்லியது மெய்யா பொய்யா வென்று ?
நெப்போலியன்: (கடிதக் கட்டுகளைத் தாவி எடுத்துத் தயக்கமோடு பார்த்து தூக்கி எறிகிறான்) நான் ஏன் பிறருக்கு வந்த கடிதத்தைப் படிக்க வேண்டும் ?
ஹெலினா: அந்தக் கடிதத்தில் உமக்கினிய தகவல் உள்ளது ஜெனரல் ! அஞ்சாமல் படித்துப் பாருங்கள். உமக்குரிய கடிதம் அது !
நெப்போலியன்: ஆகவே நான் அந்தக் கடிதத்தைப் படிக்க வேண்டும் என்று நீ எனக்கு ஆணை இடுகிறாயா ? வேடிக்கையாக உள்ளது மேடம் !
ஹெலினா: சின்னப் பெண்ணிலிருந்து இப்போது எனக்கு மேடம் என்னும் மேல்நிலை மதிப்பு ! மகிழ்ச்சி உண்டாகுது எனக்கு !
நெப்போலியன்: அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் உள்ளது ?
ஹெலினா: ஜெனரல் ! அந்தப் பெண்ணுக்குத் தன் கணவனைப் புரிந்து கொள்ளும் அறிவில்லை.
நெப்போலியன்: (உடன்பாடுடன் தலை அசைத்து) அப்படியானால் நான் அந்தக் கடிதத்தைப் படிக்கிறேன். (கடிதக் கட்டை எடுத்துப் பிரித்துப் பார்க்கிறான்.)
ஹெலினா: (ஆச்சரியமாக) எப்படிப் படிக்காமல் இருப்பது ? உதாரணமாக அது ஒரு வீட்டுச் சண்டை ! பர்ராஸோடு புரியும் வாள் சண்டை ! பிளவு பட்ட இல்வாழ்வு ! பொது மக்களின் அவதூறு ! உளவப்படும் ஓர் பதவிப் பீடம் ! இந்த மாதிரித் தவறுகள் அந்தக் கடிதத்தில் காணப் பட்டுள்ளன.
நெப்போலியன்: (மனமுடைந்து, இங்குமங்கும் நடைபுரிந்து தயக்கமோடும், தடுமாற்றமோடும், தலை குனிந்து) தந்து விடுகிறேன் அந்தக் கடிதத்தை மேடம் ! நீதான் ஜெயித்தாய் ! நீ போராடிக் கேட்ட கடிதத்தை வாங்கிக் கொண்டு போய்த் தொலை ! கார்ஸிகன் தோற்றான் ஒரு காரிகைக்கு ! எடுத்துச் செல் உன் கடிதத்தை ! (கடிதக் கட்டுகளைக் ஹெலினாவிடம் கொடுக்கிறான்.)
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Play :
(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)
(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)
(C) The Horizon Book of The Age of Napoleon (1963)
(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 14, 2010)
- முள்பாதை 25
- நினைவில் நின்றவள்
- சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !
- மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு
- கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக
- முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10
- அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா
- உள்ளங்கையில் உலக இலக்கியம்= அறிமுகம்
- ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)
- 11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2
- முன் முடிவுகளற்று இருப்பது
- வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்
- வீட்டோடு
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13
- இவர்களும் சுவர்களும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு
- குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்
- 9/11 – விடையறாக் கேள்விகள்
- சு.மு.அகமது கவிதை
- காதல் வரம் பெற்றிடாத ஞானிகள்
- மரணத்தின் வாசல்..
- சதையானவள் .
- தொட்டி மீன்
- கவன குறிப்பெடுத்தல்..!
- வேத வனம் விருட்சம் 81