ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா
“ஒரு மனிதன் தன்னை நோக்கி ‘நான் ஏன் வாழ்கிறேன்’ என்று புரியாமல் கேட்கும் போது, ‘எல்லோரைக் காட்டிலும் அவனொரு கீழான பிறவி’ என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கும். அவனது உடலின் யந்திர சாதனம் முறிந்து, மனிதனுக்குத் தேவையான இயக்கு சக்தியை அவன் இதயம் இழந்திருக்கிறது.”
நெப்போலியன்
“(நெப்போலியன்) எப்போதும் தன்வசம் உள்ள எல்லாவற்றையும் பயன்படுத்துவார். தன் வேலைகளுக்கு அனைத்துத் துறைகளையும் (Faculties) உதவிடச் செய்வார். உரையாடல் எதனிலும் தன் முழுக் கவனத்தைச் செலுத்துவார். ஒவ்வொன்றிலும் தன் உள்ளார்வ வேட்கையோடு (Passion) ஈடுபடுவார். ஆதலால் அவருக்கு அவரது எதிரிகளை விட மேலான சிறப்பு அம்சங்கள் இருந்தன. ஒரு குறிக்கோளில் முழு மனதை ஊன்றி, அந்த ஒரு கணத்தில் அந்த வினையை மட்டும் செய்பவர் மிகச் சிலரே.”
“மெய்வருத்தம் பாராமல் எல்லையற்ற வல்லமையுடன் முனைவது, உள்ளொளி ஞானத்தோடு (Intuitive Sense) துணிவது, ஆளுமை ஆற்றலில் அசையாத உறுதி கொள்வது, குறிக்கோளில் மன அழுத்தம் உள்ளது – இந்தப் பண்பாடுகள்தான் நெப்போலியன் யாரென்று காட்டுபவை.”
கௌலெயின்கோர்ட், நெப்போலியனின் நம்பிக்கைத் துணையாளி (Caulaincourt) (Napoleon’s Trusted Aide)
Fig. 1
Furious Napoleon
ஆயுத மனிதன் நாடகத்தைப் பற்றித் துவக்க அறிவிப்பு :
1796 மே மாதத்தில் வட இத்தாலியில் லோதிக்கும் மிலானுக்கும் இடையே உள்ள தஸ்ஸானோ என்னும் இடத்தில் பிரென்ச் இராணுவப் படைக்கும், ஆஸ்டிரியன் இராணுவத்துக்கும் நடந்த போரில் நெப்போலியன் தனது அசுரப் பீரங்கிகளைப் பயன்படுத்தி ஆஸ்டிரியப் படைகளைத் தோற்கடித்தான். அப்போது நெப்போலியனுக்கு வயது 27. அந்த வாலிப வயதில் பீரங்கிகளை முதலில் ஆயுதமாக ஏந்திப் பராக்கிரம பீரங்கி யுத்தம் செய்து இத்தாலியை விடுதலை நாடாய் ஆக்கியவன் பிரெஞ்ச் சக்ரவர்த்தி நெப்போலியன் ! நாடக ஆரம்பத்தில் பிரான்ஸிலிருந்து வரும் அரசாங்கத் தகவல் கடிதங்களை எதிர்நோக்கி நெப்போலியன் அவனது பிரதம படைத் தளபதிகளுடன் தஸ்ஸானோவில் பழையப் பயண விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறான். அவனது லெ·ப்டினென்ட் அந்தக் கடிதங்களைக் அன்றைக்குக் கொண்டு வர வேண்டும். ஆனால் வரும் வழியில் சந்தித்த ஓர் இளைஞன் குதிரையையும், கடிதங்களையும் லெ·ப்டினென்டிடமிருந்து தந்திரமாய்க் களவாடிச் சென்று விட்டான் !
அன்று காலையில் மர்மாக ஓரிளம் பெண் அந்த விடுதிக்கு வந்து தங்குகிறாள்.
நாடகத்தில் பங்கெடுப்பாளர் :
1. நெப்போலியன் (Napolean Bonaparte) : பிரான்சின் போர் ஜெனரல் (27 வயது)
2. கியூஸெப் கிராண்டி (Guiseppe Grandi) : இத்தாலிய பயண விடுதி அதிபர் (Innkeeper) (40 வயது)
3. பிரென்ச் லெ·ப்டினென்ட் : (24 வயது)
4. ஹெலினா : ஓர் ஆஸ்டிரியப் பெண் (30 வயது)
காலம் / நேரம் : மே மாதம் 12, 1796 காலை நேரம்.
இடம் : வட இத்தாலியில் தவஸ்ஸானோ (Tavazzano on the Road od from Lodi to Milan) ஊரில் உள்ள ஒரு உணவுச் சாவடி (பயண விடுதி)
ஆரம்பக் காட்சி :
(விடுதி அதிபர் கியூஸெப் கிராண்டி பரவசமோடு பரப்பரபாக அங்குமிங்கும் ஓடி நெப்போலியனையும், அவனது படைத் தளபதிகளையும் உபசரிக்கிறான். அவர்கள் விடுதி மேஜைகளில் உள்ள உணவுப் பண்டங்களைத் தின்றுக் கொண்டிருக்கிறார். ஒரு மேஜைக்கு முன் நெப்போலியன் அமர்ந்திருக்கிறான். மேஜையில் ஐரோப்பிய வரைப்படம் ஒன்று விரிக்கப் பட்டுள்ளது. எதிர்ப்புறம் தூரத்தில் ஓர் இளம் பெண் முதல் முறையாக நெப்போலியனை நோக்குகிறாள். படத்தைப் பார்த்த வண்ணம் பசி பொறுக்காமல் மேஜை உண்டிகளை வேகமாய் எடுத்து விழுகிறான் நெப்போலியன். மேஜையில் அறுசுவை உணவுத் தட்டுகள் பல பரப்பிக் காணப் படுகின்றன. பழத் தட்டுகளில் கருந் திராட்சைக் கொத்துக்கள் சிறப்பு விருந்தினருக்கு வைக்கப் பட்டுள்ளன. இடையிடையே நெப்போலியன் திராட்சைக் கொத்துக்களை வாயில் தள்ளுகிறான். நெப்போலியன் தொப்பியும், உடைவாளும் மேஜை மீது தெரிகின்றன. கையில் ஒரு கரித் துண்டை வைத்துக் கொண்டு நெப்போலியன் வரைப்படத்தில் அங்குமிங்கும் வட்டமிடுகிறான். வாயிலிருந்து திராட்சைத் தோலை எடுத்துப் படத்தில் ஒட்டுகிறான். நெப்போலியன் எதிர்பார்த்த இராணுவப் படையாளி (லெ·ப்டினென்ட்) பாதையில் தகவல் கடிதங்களைப் பறிகொடுத்துத் தாமதமாக வந்து அவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறான்.
உள்ளே நுழைந்த இராணுவ அதிகாரி நெப்போலியனைத் தேடி அருகில் வருகிறான். வயது 24 உள்ள வாலிபன். இராணுவ உடையில் இருக்கிறான். பரபரப்பாகத் தடுமாறிய நிலையில் தயங்கிக் கொண்டு குற்ற உணர்வுடன் முன் வருகிறான். வரும் வழியில் ஒர் வஞ்சகனிடம் தன் குதிரை, கடிதங்களைப் பறிகொடுத்து நெப்போலியன் கோபத்துக்கு ஆளாகிறான். ஒற்று வேலை செய்யும் வாலிப மங்கையிடமிருந்து அரசாங்கக் கடிதங்களைப் பெற நெப்போலியன் முயற்சி செய்கிறான்.)
(முன் வாரத் தொடர்ச்சி)
நெப்போலியன்: இல்லை ! நான் பிரான்ஸ் நாட்டில் பிறக்கவில்லை.
ஹெலினா: நான் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை. அப்படியானல் ஏன் உங்களுக்குப் பிரான்ஸ் நாட்டின் மீது அத்தனை அக்கறை, பற்று, மோகம், நேசம் ?
நெப்போலியன்: நமக்கு மட்டும் நாம் வாழக் கூடாது சின்னப் பெண்ணே ! பிறருக்காக எப்போதும் நாம் சிந்திக்க வேண்டும் ! பிறருக்காக நாம் உழைக்க வேண்டும் ! அவருக்கு வழிகாட்டி அவரது நலனுக்காக நாம் அவரை ஆட்சி செய்ய வேண்டும். சுயப் பூர்த்தி தேடாமல், சுயநலம் கருதாமல் வாழ்வதே ஒருவரின் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும்.
ஹெலினா: (ஏளனமாக) சொல்வதைப் பார்த்தால் ஏட்டு நெறி போல் தெரிகிறது. இது வெறும் உபதேசம். செய்து பார்க்காதவரை இவையெல்லாம் சுலபம்தான். நான் சின்னப் பெண்ணில்லை ஜெனரல் !
நெப்போலியன்: (கோபத்தோடு) அப்படிச் சொன்னதின் அர்த்தம் என்ன ? உன்னைப் பெரிய மாதே என்று நான் விளிக்க மாட்டேன் ! நீ எனக்குச் சின்னப் பெண்தான் !
ஹெலினா: ஆமாம் நீங்கள் ஒரு பெரிய சக்ரவர்த்தி அல்லவா ? ஆனால் நீங்கள் இளமையாக இருப்பதால் மற்றவரும் சின்னவராக இருக்க வேண்டுமா ? ஆயினும் நான் உங்களைச் சின்னவர் என்று சொல்ல மாட்டேன் ! சின்னவராகத் தெரிந்தாலும் நீங்கள் பெரிய தளபதிதான் !
நெப்போலியன்: சின்னப் பெண்ணாயினும் நீ பெரிய சாமர்த்தியசாலி !
ஹெலினா: (சிரித்துக் கொண்டு) பெரிய சக்ரவர்த்தியானாலும் நீங்கள் பெண்ணிடம் பணிவாக நடந்து கொள்கிறீர் ! மெய்ம்மை, தூய்மை, சுயநலமின்மை இம்மூன்றையும் எல்லோரும் உயர்வு நவிற்சியில் பேசுகிறார். ஏனென்றால் அவற்றைக் கடைப்பிடிப்பது அத்தனைச் சுலபமில்லை ! மேலும் அவற்றில் அனுபவம் இல்லை அவருக்கு !
நெப்போலியன்: (சிரித்துக் கொண்டு கேலியாக) உனக்கு அனுபவம் உள்ளதா அவற்றில் ?
ஹெலினா: ஆம் அனுபவம் உண்டு எனக்கு. நேர்மையான வழியில் வளர்ந்த துர்பாக்கியவதி நான் ! (நெப்போலியனைப் பக்கமாகப் பார்த்துக் கொண்டு) ஜெனரல் ! நான் சொல்கிறேன், அது ஒரு துர்பாக்கியம் ! நான் சத்திய வாணி ! தூய மாது ! சுயநலத்தை வெறுப்பவள் ! ஆனால் அவை எல்லாம் வெறும் கோழைத்தனமே தவிர வேறல்ல ! பண்பாடு இல்லாமை, சுயத் தன்மை இழப்பு, மெய்யாக வாழாமை, உறுதியாக இல்லாமை ஆகியவற்றைத்தான் அவை காட்டுகின்றன !
Fig. 2
Spy Woman
நெப்போலியன்: (முகஞ் சுழித்து) மறுபடியும் புதிராகப் பேசுகிறாயே ! எது பாக்கியம், எது துர்பாக்கியம் என்பதைத் தலைகீழாகச் சொல்லிக் குழப்புகிறாயே ! நான் கற்றவற்றைச் சவால் விட்டு ஏளனம் செய்கிறாயே !
ஹெலினா: (கூர்ந்து நோக்கி) சொல்லுங்கள் ! உங்கள் வல்லமைத் திறமையின் ரகசியம் என்ன ? என் ஊகிப்பு இது : உங்கள் மீது அசையாத நம்பிக்கை ! யுத்தம் செய்து வெற்றி பெறுவது நாட்டுக்கு ! உமக்கில்லை ! உமது ஊழ்விதி மேல் உங்களுக்கு எந்த அச்சமுமில்லை ! எமது ஊழ்விதியை மாற்றி அச்சம் ஊட்டுபவர் நீங்கள் ! எமக்கு உறுதி ஊட்டி, நல்வழிக்குப் பாதை காட்டி எமது எதிர்காலத்தைத் திறப்பவர் நீங்கள் ! (சட்டென மண்டியிட்டுக் கனிவோடு) நன்றி சொல்லக் கடமைப் பட்டவர் நாங்கள் ! வரவேற்று, வழிபட்டு, வந்தனம் செய்ய வேண்டும் நாங்கள் ! (நெப்போலியன் கையைப் பற்றி முத்தமிடுகிறாள்.)
நெப்போலியன்: (நாணத்துடன் தடுமாறி உடல் கோணி) போதும், போதும் ! எழுந்திடு சின்னப் பெண்ணே ! வேண்டாம் இந்த விக்கிரக வழிபாடு !
ஹெலினா: (எழாமல் மண்டியிட்டு) மறுக்காதீர் சக்ரவர்த்தி ! எங்கள் ஊழ்விதியை மாற்றுவது உங்கள் உரிமை ! அதை ஏற்றுக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை ! தோற்றவர் துதிபாடுவதும், வென்றவர் வெகுமதி பெறுவதும் தொன்று தொட்ட வழக்கம் ! உலகச் சம்பிரதாயம் பிரபு ! பிரான்ஸின் சக்ரவர்த்தி ஆவீர் நீங்கள் ! பெருமை உமக்குத்தான் எமக்கும்தான் !
நெப்போலியன்: (அழுத்தமாக) பேச்சில் கவனம் வை ! இது துரோகச் செயல் பெண்ணே !
ஹெலினா: ஆமாம் ! நீங்கள் பிரென்ச் சக்ரவர்த்திதான் ! நிச்சயம் அது ! அடுத்து ஐரோப்பாவுக்கு ! அப்புறம் இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு ! ஏன் உலகுக்கே வரப் போகும் ஒப்பிலாச் சக்ரவர்த்தி ! உங்களை ஏற்றுக் கொண்டு உத்திரவாதம் செய்யும் முதல் குடிமகள் நான்தான் ! (மறுபடியும் கையில் முத்தமிடுகிறாள்.) எனது சக்ரவர்த்தி ! பேராயுதச் சக்ரவர்த்தி ! வீராயுதச் சக்ரவர்த்தி ! ஊழ்விதி மனிதர் !
நெப்போலியன்: (தடுமாற்றமுடன்) இல்லை, இல்லை ! இது சரியில்லை, தப்பு ! அறியாமை ! (சற்று சிந்தித்து) இல்லை மேலான அறிவுடைமை பெண்ணே ! மெச்சுகிறேன் உன்னை !
ஹெலினா: (கண்ணீரைத் துடைத்துக் கொண்டு) இது என்னிடமுள்ள வீம்புத்தனம் ஜெனரல் ! இப்படித் திமிராக நானொரு சக்ரவர்த்தியிடம் ஞானமாகப் பேசக் கூடாது ! (தயங்கியபடி) என் மீது கோபமா உங்களுக்கு ?
நெப்போலியன்: (கனிவாகக் குழைந்து) கோபமா ? இல்லை இல்லை ! நீ நல்ல மாது பொய் பேசினாலும் ! நீயொரு ஞானப் பெண் ! இனிப்பாகப் பேசிக் கல்லையும் கரைத்து விடுகிறாய் ! உன்னோடு நான் உரையாடுவதில் பேரானந்தம் அடைகிறேன் ! நேரம் போவதே தெரியவில்லை ! (மனம் நெகிழ்ந்து) நாம் நண்பராக இருக்கலாமா ?
ஹெலினா: (பூரித்துப் போய்) உங்களோடு நண்பராகவா ? என்னை உங்கள் தோழியாக ஏற்றுக் கொள்வீரா ? நம்ப முடிய வில்லையே ! ஓ ஜெனரல் ! (எழுந்து நின்று தன்னிரு கரங்களையும் நீட்டுகிறாள். நெப்போலியன் மண்டியிட்டு அவள் கைகளை முத்தமிடுகிறான்.) பார்த்தீரா ? என் மீது உங்களுக்கு நன்னம்பிக்கை பிறந்திருக்கிறது.
நெப்போலியன்: (தெளிவு பெற்று எழுந்து நின்று உரத்த குரலில்) என்ன சொல்கிறாய் ? உன் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படுகிறதா ? இல்லை ! நீ என் தோழி இல்லை, ஓர் அடிமை !மறந்து விடாதே அதை !
ஹெலினா: ஜெனரல் ! யார் யாருக்கு அடிமை ? ஆணும் பெண்ணும் நண்பராய் வாழ முடியுமா ? ஆணை விடப் பெண்ணுக்கே ஆயுதங்கள் மிகுதி ! ஆதலால் ஆணைப் பெண் வெகு சுலமாக அடிமை ஆக்குவாள் ! கிளியோபாத்ராவுக்கு கோணல் மூக்குதான் ! ஆனாலும் ரோமாபுரித் தளபதி ஜூலியஸ் சீஸரும், அவரது போர் வீரன் மார்க் அண்டோனியும் அவள் காலடியிலே விழுந்து கிடந்தார் ! என்னை போல் அவளும் ஓர் சின்னப் பெண்தான் !
நெப்போலியன்: (ஆத்திரம் அடைந்து) போதும் வழிபாட்டு நாடகம். சாமர்த்திய மாக என்னை நீ ஏமாற்றப் பார்க்கிறாய் சின்னப் பெண்ணே ! என்னிடம் செல்லாது உன் குறும்புத்தனம் ! என் ரகசியக் கடிதங்கள் எங்கே ? சொல் ! அவற்றை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ?
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Play :
(A) The Man of Destiny – Plays Pleasant By : Bernard Shaw, Penguin Plays (1966)
(B) The Life & Times of Napoleon -Curtis Books (1967)
(C) The Horizon Book of The Age of Napoleon (1963)
(D) The Age of Napoleon By : Alistair Horne (2004)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 18, 2010)
- ஹாங்காங்கில் இந்தியப் பண்பாட்டு விழா
- இந்திய வரலாற்றை மாற்றிய 27 வருட போர் – பகுதி 1
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -9
- பாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா
- கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள்
- புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்
- திரை விமர்சனம் கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -6
- .பன்முகத்தமிழியல் (ஆய்வுக்கட்டுரைகள்) – நூல் விமர்சனம்
- இணையமும் இனியதமிழும் முனைவர் க. துரையரசன், – நூல் விமர்சனம்
- கராமாத்துகள் என்னும் அதிசயக் கதையாடல்கள் (முடிவு பகுதி)
- சூஃபிக்களும் இஸ்லாமிஸ்டுகளும்
- இரவுகள் பனித்துளிகளை விழிநீராய்க் கொட்டுகிறது…!!
- வேத வனம் விருட்சம் 77
- கனவுகள் பலிக்கவேண்டும்
- உள்ளே வெளியே
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -4
- ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை
- சிநேகிதன் எடுத்த சினிமா
- நடப்பதெல்லாம் நன்மைக்கே
- எறும்புடன் ஒரு சனிக்கிழமை
- முள்பாதை 21
- மொழிவது சுகம்: நாமார்க்கும் குடியல்லோம்
- முற்றுப் பெறாதவையாய்
- பெண்ணின் பங்கு
- கதவைத் திறந்து வைத்து…
- பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தோல்வி !
- பழகிய துருவங்கள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -2
- சப்தம்
- எஞ்சியவை