ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
The Trial of Socrates
“கவிஞர் தமது கவிதையைப் படைக்க ஏதுவாக்குவது அவரது தனித்துவ ஞானமன்று. ஆழ்ந்த போதனைகள் என்ன பொருளைக் கூறுகின்றன என்று சொல்லாமல் சொல்லும் தீர்க்கதரிசிகள் அல்லது தேவ தூதரிடம் காணப்படும் ஒருவகை உள்ளுணர்வு அல்லது உட்கிளர்ச்சி (Instinct or Inspiration) என்பது எனது தீர்மான முடிவு.”
“அரசியல்வாதியாக ஆகத் தகுதியற்று வாழுகின்ற ஓர் நேர்மைவாதி நான்.”
“காயப் பட்டவன் ஒருவன் பதிலுக்குக் காயம் உண்டாக்க மீளக் கூடாது. காரணம் அநியாயமாகத் தீமை செய்வது ஒருபோதும் நேர்மையாகாது. என்ன கெடுதிக்குள்ளாகி நாம் இடர் உற்றாலும் ஒருவனுக்குக் காயத்தை திருப்பி ஏற்படுத்துவது அல்லது பதிலுக்குத் தீங்கு அளிப்பது ஒருபோதும் நியாயமாகாது.”
சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.
******************************
சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
அங்கம் -3 காட்சி -2
காலம் : கி. மு. 399
இடம் : ஏதென்ஸ் நகரத்தில் திறந்த வெளி நீதி மன்றம். வட்ட வளைவான அரங்கின் அடுக்குத் தட்டுகளில் பலர் அமர்ந்திருக்கிறார். முன்புறம் மாஜிஸ்டிரேட்களுக்கு ஆசனங்கள் போடப் பட்டுள்ளன. ஒருபுறம் குற்றம் சாட்டியோர் அமர்வார். மறுபுறம் குற்றவாளி நிற்கும் பீடம். நியமிக்கப் பட்ட 500 ஜூரர்கள் தனியே அமர்ந்துள்ளார்.
நேரம் : பகல் நேரம்.
பங்கெடுப்போர் : நீதி மன்ற மாஜிஸ்டிரேட்டுகள், குற்றம் சாட்டியோர், சாக்ரடிஸ் மற்றும் இராணுவக் காவலர்கள், பொது மக்கள்.
காட்சி அமைப்பு : திறையைத் திறந்ததும் இராணுவக் காவலர் நாற்காலிகளை நேராக நகர்த்துகிறார். அப்போது லைகான் (Lycon)., மெலிடஸ் (Meletus), ஆனிடஸ் (Anytus) நுழைகிறார். அவரது தனிப்பட்ட ஆசனங்களில் அமர்கிறார். அச்சமயம் காவலன் ஒருவன் வேலைத் தரையில் தட்டி அனைவரது கவனத்தையும் கவர்கிறான். மக்கள் அரவம் அடங்குகிறது.
சாக்ரடிஸ்: அப்படியால் இன்று மூன்று குற்றத்தில் ஒன்று நிரூபிக்கப் படவில்லை ! வாலிபரை நான் கெடுத்ததாய்ச் சொன்னது ஆதாரமற்றது ! இதுவரை யாரும் அதற்குச் சான்றுகள் தர வில்லை.
ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! இந்தக் கிழவர் கூறுவது பொய். என் வாலிப மகனைக் கெடுத்தவர் இந்தக் கிழவர். நான் நிரூபித்துக் காட்டுகிறேன்.
மாஜிஸ்டிரேட் ·பிளிப்: சாக்ரடிஸ் ! உங்களுக்கு ஆனிடஸ் மகனைத் தெரியுமா ?
சாக்ரடிஸ்: ஆமாம் தெரியும் எனக்கு. ஒரு சிலநாட்கள் என்னுடன் பழகினான்.
ஆனிடஸ்: அத்துடன் என் மகன் சில நாட்கள் சாக்ரடிஸ் இல்லத்தில் தங்கினான். என் மகனை மயக்கி என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டவர் இந்தக் கிழவர். எங்கள் இல்லத்தை மறக்கும்படி மகன் மீது தனது அறிவுக் கவர்ச்சியை வீசியவர் இந்தக் கிழவர்.
·பிளிப்: சாக்ரடிஸ் ! ஆனிடஸ் மகனை ஏன் அவனது வீட்டுக்கு அனுப்பவில்லை ?
சாக்ரடிஸ்: அவன்தான் தன் வீட்டுக்குப் போவதை விரும்பவில்லை ! நான் போகச் சொன்னாலும் அவன் போக மறுத்தான்.
ஆனிடஸ்: என் மகனைக் கிழவர் ஏன் தன் வீட்டில் தங்க வைத்தார் என்று கேளுங்கள்.
சாக்ரடிஸ்: கனம் நீதிபதி அவர்களே ! போக மறுக்கும் வாலிபன் கழுத்தைப் பிடித்து என்னால் தள்ள முடியாது. அவன்தான் விரும்பி என்னோடு இல்லத்தில் தங்கினான்.
ஆனிடஸ்: கனம் மாஜிஸ்டிரேட் அவர்களே ! (தயங்கிக் கொண்டு) சாக்ரடிஸ் இருபால் (Bisexual) இச்சை உள்ளவர் !
·பிளிப்: சாக்ரடிஸ் ! இது உண்மையா ? நீவீர் இருபால் இச்சை உள்ளவரா ?
சாக்ரடிஸ்: (தயங்கிய வண்ணம்) ஆமாம் நீதிபதி அவர்களே !
·பிளிப்: சாக்ரடிஸ் ! உமக்கும் ஆனிடஸ் மகனுக்கும் முரணான உடற் தொடர்புண்டா ?
சாக்ரடிஸ்: இல்லை நீதிபதி அவர்களே !
·பிளிப்: நீவீர் உண்மையைச் சொல்கிறீரா ?
சாக்ரடிஸ்: உண்மை ! நான் சொல்வது முற்றிலும் உண்மை ! உண்மை தவிர வேறில்லை ! எனக்கும் ஆனிடஸ் மகனுக்கும் உடற் தொடர்பில்லை !
ஆனிடஸ்: கனம் நீதிபதி அவர்களே ! இந்தக் கிழவரை நான் நம்பமாட்டேன் ! இவர் சொல்து அனைத்தும் பொய். என் மகனைக் கெடுத்தவர் இவர் ! இவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் !
இந்தக் கிழவர் மற்ற ஆடவரிடம் உடலுறவு வைத்திருந்ததை நான் அறிவேன்.
·பிளிப்: சாக்ரடிஸ் ! நீவீர் வேறு சில ஆடவரோடு உடற் தொடர்பு கொண்டது உண்மையா ?
சாக்ரடிஸ்: உண்மை. ஆனால் ஆனிடஸ் மகனோடு நான் உடற் தொடர்பு கொள்ளவில்லை !
ஆனிடஸ்: கிழவர் பொய் சொல்லித் தப்பிக் கொள்ள முனைகிறார். நீதிபதி அவர்களே ! நம்பாதீர் இவரை ! என் தொழிலில் ஈடுபடாமல் என் மகனைத் தடுத்தவர் இந்தக் கிழவர் !
·பிளிப்: ஆனிடஸ் ! உன் தொழில் என்ன வென்று சொல் முதலில் !
ஆனிடஸ்: தோல் பதனிடுவது எனது தொழில் கனம் நீதிபதி அவர்களே ! இவரைச் சந்தித்த பிறகு என் மகன் தோலைத் தொடுவதில்லை ! தோல் செப்பணிடும் தொழிலில் ஈடுபடுவதில்லை.
·பிளிப்: சாக்ரடிஸ் ! தந்தை செய்யும் தோல் பதனிடும் தொழிலில் மகன் ஈடுபடக் கூடாது என்று நீவீர் தடுத்தீரா ?
சாக்ரடிஸ்: நான் தடுக்க வில்லை கனம் நீதிபதி அவர்களே ! ஆனிடஸ் மகன் மேற்படிப்புக்கு போக விரும்பினான். நான் அதை ஊக்கிவித்தது உண்மை ! ஆனால் அதற்குத் தந்தையுடன் செய்யும் தொழில் இடையூறாக இருக்குமே என்று எச்சரித்தேன். ஆனால் நான் தோல் பதனிடும் தொழிலை விட்டுவிடச் சொல்லி வற்புறுத்த வில்லை ! மேற்படிப்பு முக்கியமா குடும்பத் தொழில் முக்கியமா என்று முடிவு செய்தவன் ஆனிடஸ் மகன் ! நான் அதற்குப் பொறுப்பாளி அல்லன். தந்தையின் தொழில் முக்கிய மென்றால் மகனைத் திருப்பும் பொறுப்பு தகப்பனைச் சார்ந்தது. தகப்பனால் மகனைத் தன் தொழிலுக்குத் திருப்ப முடியவில்லை என்பது உண்மை.
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Plays :
(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.
(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)
(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)
++++++++++++++
ஆதாரங்கள்
1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)
2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Great Quotations Compiled By : George Seldes (1967)
8.. The Wordsworth Dictionary of Quotations (1997)
9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)
10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)
11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)
12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)
13. The Trial of Socrates By : Douglas Linder (2002)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (October 7, 2009)]
- இது(ரு) வேறு வாழ்க்கை
- 15 வது கவிஞர் சிற்பி இலக்கிய விருது 2010
- மலேசியாவின் கலை இலக்கிய இதழ் ‘வல்லினம்’.
- தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா
- வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்
- பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா
- சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலகப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்
- நினைவுகளின் தடத்தில் – (35)
- பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- அறிவியலும் அரையவியலும் -2
- உயிரின் துடிப்பு
- தனிமையிலிருந்து தப்பித்தல்
- உள்வெளிப்பயணங்கள்
- வேத வனம் விருட்சம் 54
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>
- தொடரும்
- என் வரையில்…
- உன்னைப்போல் ஒருவன்
- நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்
- குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009
- அடைக்கலப் பாம்புகள்
- ஆகு பெயர்
- அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி
- நினைவுகளின் பிடியில் ..
- மழைச்சாரல்…..
- தெய்வம் நீ என்றுணர்
- ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்
- அந்த ஏழுகுண்டுகள்…..(1)
- தினேசுவரி கவிதைகள்
- தொடர்பில்லாதவை
- அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !
- முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)
- பாத்திரத் தேர்வு
- சேரா துணை..
- சாயங்கால அறை
- புரிய இயலாத உனது அந்தரங்கம்
- சுழற்றி போட்ட சோழிகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2
- படம்