ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Socrates talking to State Guards
“வாழ்வின் குறிக்கோள் முடிவில் கடவுளைப் போல் பூரணத்துவம் அடைவது. கடவுளைப் பின்பற்றிச் செல்லும் ஆத்மா தெய்வத்தைப் போல் இருப்பது.”
“ஆழ்ந்து ஆராய்ந்து வாழாத ஒரு வாழ்க்கை வாழத் தகுதியற்றது.”
“நன்னெறியைப் பின்பற்றாது வெறுமனே மண்ணில் வாழ்ந்து வருவதால் எந்தப் புண்ணியமும் இல்லை.”
சாக்ரெடிஸ் வாய்மொழிகள்.
******************************
சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -2 பாகம் -11
காலம் : கி. மு. 399
இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஆகாத்தான் இல்லம். ஒரு பெரிய அறையில் தாழ்ந்த மெத்தைகளும், சோபாக்களும் காணப்படுகின்றன. இரண்டு தூண்களுக்கிடையில் உள்ள பலகணி வழியே தெரியும் வீட்டுத் தோட்டத்தில் வெண்ணிலவு தென்படுகிறது, எண்ணை விளக்குகளின் வெளிச்சம் மங்கலாய் உள்ளது. நண்பர்கள் சாக்ரடிஸைப் பாதுகாக்க யாருக்கும் தெரியாமல் ஆகாத்தான் இல்லத்தில் ஒளித்து வைத்துள்ளார். வெளியே இருந்து வந்த அல்சிபியாடஸ் இராணுவப் படை சாக்ரடிஸைத் தேடி வருவதாகச் சொல்லி எல்லோருக்கும் அதிர்ச்சி உண்டாக்குகிறான். இராணுவக் காவலர் கதவைத் தட்டுகிறார்.
நேரம் : நள்ளிரவு
பங்கெடுப்போர் : ஆகாத்தான் (Agathon), சாக்ரடிஸ், ஆனிடஸ் (Anytus), அரிஸ்டோ·பானிஸ் (Aristophanes), கிரிடோ (Crito), ·பாய்தோ (Phaedo) ஆகியோர். அல்சிபியாடஸ், இராணுவப் படையினர்.
காட்சி அமைப்பு : இரவில் நண்ப ரெல்லாம் குடித்து விட்டு கூத்தாடிக் கொண்டிருக்கிறார். சிலர் மேஜையில் சிற்றுண்டியைத் தின்று கொண்டிருக்கிறார். வெளியே இருந்த வந்த அல்சிபியாடஸ் ஓர் அதிர்ச்சிச் சேதியைக் கொண்டு வருகிறான். திடீரென இராணுவப் படையினர் ஆகாத்தான் இல்லத்தில் நுழைந்து சாக்ரடிஸைத் தேடுகிறார் ! நண்பர் எல்லோரும் மறைந்து கொள்ள சாக்ரடிஸ் மட்டும் தைரியமாகத் தனியாக வந்து காவலரோடு உரையாடுகிறார்.
முதற் காவலன்: சாக்ரடிஸ் ஒரு வேதாந்த ஞானியாம் ! உயர்ந்த ஞானியாம் ! உலக மேதையாம் ! இது உண்மையா ? என்னால் நம்ப முடியவில்லை !
சாக்ரடிஸ்: அப்படி நான் சொல்ல மாட்டேன் ! ஏதென்ஸ் மாஜிஸ்டிரேட் கூறியது ! அவர் ஒரு சாதாரண மனிதர் ! அவருக்கு எதுவும் தெரியாது. பிறரிடம் கேட்டுத்தான் அவர் உலகைப் பற்றி அறிந்து கொள்கிறார்.
இரண்டாம் காவலன்: மாஜிஸ்டிரேட்டுக்கு எப்படித் தெரியும் சாக்ரடிஸ் உலக ஞானி என்று ?
சாக்ரடிஸ்: தேவதூதர் (Oracles) தீர்ப்பில் அவ்விதம் சொல்லியிருக்கிறார்.
முதற் காவலன்: உமது தீர்ப்பென்ன ? அவர் செய்தவை தவறா ? அவரைத் தண்டிக்க வேண்டுமா ?
சாக்ரடிஸ்: எதுவும் அறியாத மனிதர் அவர் ! சொந்த அறிவு சுத்தமாகக் கிடையாது. பிறர் வாயைக் கிண்டி விட்டு தனக்கேற்ற கருத்தைப் பற்றிக் கொள்கிறார். உண்மை ஞானம் என்பது ஒளிச்சுடர் வீசும் சூரியனைப் போன்றது. ஆனால் மக்கள் நரிகளைப் போல் அடித்தளக் குகைக்குள்ளே வசித்து வருகிறார் !
இரண்டாம் காவலன்: இரவு, பகல் ஏழு நாட்களிலுமா ?
சாக்ரடிஸ்: ஆமாம் எல்லா நேரத்திலும் அங்குதான் வசிக்கிறார். அதை விட்டு வெளியே அவர் வருவதில்லை ! அங்கேதான் அவர் எல்லாம் பிறந்தார் ! அங்கேதான் அவர் எல்லாம் இறப்பார் !
முதல் காவலன்: இது மிருக வாழ்க்கை விடக் கேவலமானது ! விலங்குகள் கூட வெளியேறி உணவு தேட வேட்டையாடச் செல்லும் !
சாக்ரடிஸ்: அது மட்டுமில்லை ! கேள் ! குகையை விட்டு வெளியேற அவருக்கு விடுதலை கிடையாது ! கனமான இரும்புச் சங்கிலியில் அவர் நகர முடியாதபடிக் கட்டப் பட்டிருக்கிறார். இப்போது அந்தக் குகையில் இருட்டாகப் போகிறது ! கணப்பு அடுப்பில் தெரியும் ஒரு மின்மினித் தீயைத் தவிர வேறு வெளிச்சம் கிடையாது அங்கே.
முதற் காவலன்: யாரும் நகர இயலாத குகையில் யார் கணப்பு அடுப்பைக் கண்காணிப்பது ?
சாக்ரடிஸ்: அது ஒரு மாயத் தீ ! யாரும் தீயைப் பார்க்க முடியாது. அவரும் சங்கிலிப் பிணைப்பில் நகர முடியவதில்லை. அவர் காண்ப தெல்லாம் தீயொளியால் சுவரில் விழும் வெறும் நிழல்கள் ! அவரது சிந்தனையில் விளைந்த திரிபான பொருட்கள் ! ஆனால் திரும்பி நோக்கினால் உண்மையான பொருட்களைக் காண முடியும் ! குகைவாசிகள் நிழல்களைப் பார்த்துதான் மூலப் பொருட்களை அறிந்து கொள்கிறார் !
இரண்டாம் காவலன்: நீவீர் சொல்வது புரிந்தும் புரியாமல் இருக்கிறது ! எதற்காகக் குகைவாசிகளைப் பற்றி எம்மிடம் பேசுகிறீர் ? அவர்களைச் சங்கிலில் பிணைத்தது யார் ? அவர் ஏன் அடங்கி முடங்கிக் கிடக்கிறார் ?
சாக்ரடிஸ்: ஒருநாள் அவர்களில் ஒருவன் விலங்கை அறுத்து விட்டு வெளியேறுவான் ! பலநாள் பயணம் செய்து புதுக் காற்றைச் சுவாசித்து ஒளிமயமான பகலவனைக் காண்பான் ! அப்போது வெறும் நிழலை மட்டும் கண்ட விடுதலை மனிதன் நிஜ வடித்தைக் காண்பான் ! ஒளிமயத்தைக் கண்டவன் மீண்டும் அந்த மின்மினி வெளிச்சக் குகைக்குப் போனால் என்ன காண்பான் தெரியுமா ?
முதல் காவலன்: யார் அப்படி மூடத்தனமாக மீண்டும் அந்த குகைக்குப் போவான் ?
சாக்ரடிஸ்: வெளியே தான் கண்ட ஒளிமயத்தையும், சுவாசித்த புதிய காற்றையும் நண்பருக்குச் சொல்லப் போகலாம் அல்லவா ? ஆனால் தான் புதியாகக் கண்டவற்றைக் கூறினால் நண்பர் முதலில் நம்ப மாட்டார். தமது காதை மூடிக் கொள்வார் ! அவனை அறிஞன் என்றா கூறுவர் ? பைத்தியக்காரன் என்று எள்ளி நகையாடுவார் ! யானை வயிற்றுக்குள்ளே இருந்து கொண்டு ஒருவன் யானையை எப்படிக் காண முடியும் ? அதுபோல் பிரபஞ்சத்தில் வசித்துக் கொண்டு ஒருவன் கடவுளைக் காண முடியாது ! ஒளிமயத்தைக் கண்டவன்தான் உண்மையை அறிந்தவன் ! அவன்தான் வேதாந்தி !
(தொடரும்)
***************************
தகவல் :
Based on The Plays :
(A) Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.
(B) Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)
(C) Plato – Drama Euthyphro, Apology, Crito & Phaedo (The Death Scene) By : F.J. Church (1956)
++++++++++++++
ஆதாரங்கள்
1. Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett, The Liberal Arts Press, New York (1956)
2. Plato – Gorgias By : Walter Hamilton (1981)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Great Quotations Compiled By : George Seldes (1967)
8.. The Wordsworth Dictionary of Quotations (1997)
9. Great Dialogues of Plato By : W. H. D. Rouse – A Mentor Book (1984)
10. From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)
11 The Last Days of Socrates By: Plato – Translated By : Hugh Tredennick (1972)
12. The Trial of Socrates in Plato’s Apology By : Reem Regina Tatar (2000)
13. The Trial of Socrates By : Douglas Linder (2002)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 8, 2009)]
- மயான பராமரிப்பாளர்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- Kalima is Mohmedans’ Copyrioght!
- திண்ணை ஆசிரியர்களுக்கு வணக்கம்
- சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை -: மலையாள மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு
- விம்பம் குறுந்திரைப்பட விழா 2009 (லண்டன்)
- சமசுகிருதம் பற்றிய மறுமொழியில்,
- ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் தமிழ் படிப்போம் பகுதி 1 – 2 புத்தக வெளியீட்டு விழா
- பாலம் பதிப்பகம் தொடக்கவிழா, முதல் நூல் வெளியீட்டுவிழா
- பயணம்
- மறுமலர்ச்சி உரைநடை முதல்வர் வ.ரா. என்ற வ.ராமசாமி
- வெங்கட்சாமிநாதனின் ‘இன்னும் சில ஆளுமைகள்’ – ஒரு பார்வை
- “ஓ லாவே” மஹாத்மன் சிறுகதைகள் – தூக்கி வீசப்படுதலும் சூதாட்டம் என்கிற சிதைவின் நகர்வுகளும்
- பிம்பம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- துப்பட்டா
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -4 (மரணத்தில் எஞ்சியவை)
- தேவதைக்குஞ்சே…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 52 << என் நேசம் >>
- தம சோமா.
- மாற்றங்கள்
- தோழி
- ஊசி விற்பவன்
- திருமணமொன்றில்
- வேத வனம் விருடசம் -50
- எங்கேயோ பார்த்த மயக்கம்
- 90களின் கவனிக்கத்தக்க நாவல்கள்
- சொல் ரசனை
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பிரபஞ்சத்தின் துவக்கம் என்ன ? முடிவு என்ன ? (கட்டுரை: 64 பாகம் -1)
- மறுசிந்தனையில் ஸகாத்
- கலாச்சார மாற்றங்களும், கேலிச்சிந்தனைகளும்
- பாலைவனமும் ஒரு பட்டிதொட்டி தான் !
- ‘ஆட்சித் தமிழ் வரலாறும் செயல்பாடும்’ என்னும் ஆராய்ச்சி
- பெட்டிக்குள் வயலின்
- சாம், நீ ஒரு விசித்திரமான பெண்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -11
- சிரிக்கிற ரொபோவையும் நம்பக்கூடாது
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – இருபதாவது அத்தியாயம்
- திருநெவேலி மாமாவும் அல்வாவும்
- பழிக்குப் பழி – 2
- அரிதார அரசியல்
- காஞ்சீவரம்: கசப்பான அனுபவம்
- பார்வைகள்
- ப.மதியழகன் கவிதைகள்
- :நகைப்பாக்கள்:
- கே.பாலமுருகன் கவிதைகள்
- எல்லோரும் இந்நாட்டு மன்னர்…
- தெளிவுறவே அறிந்திடுதல்
- சிதைந்த நாட்களோடு ஓய்தல்
- அமைதி
- நோன்பு
- சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !
- உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
- பழிக்குப் பழி