அலெக்ஸாந்தர் சோல்சனிட்சன் – தமிழில்: ரா.கிரிதரன்
சுகாவுக்கு இந்த விஷயம் சரியாகப் புரியவில்லை. ‘கிராமத்தில் வாழ்ந்துகொண்டே, நகரத்தில் வேலை செய்ய முடியுமா?’ அவன் கிராமத்தில் பல தலைமுறைகளாய் விவசாயம் செய்து வந்துள்ளனர் – ஆனாலும் தங்களுக்காக அவர்கள் வேலை செய்யவில்லை. வருடா வருடன் அறுவடை செய்வதை விட்டுவிட்டனர் என அவன் மனைவி கூறியிருந்தாள்.
தச்சு வேலைகளும் செய்வதை நிறுத்தியிருந்தனர். அவர்கள் ஊரிலேயே மிகவும் செல்வாக்கானவர்கள் செய்யும் வேலை தச்சுத் தொழில். கூடைகள் பிண்ணுவதும் நல்ல வருமானமுள்ள தொழில் தான். அதையும் அவர்கள் செய்வதில்லை. இதையெல்லாம் மீறி தரைவிரிப்புகளுக்கு வண்ணம் பூசும் வேலையை ஒத்துக்கொண்டனர். யுத்தத்திலிருந்து கரித்துண்டுகளையும், வண்ண குப்பிக்களையும் கொண்டுவந்திருந்தனர்.சீக்கிரமாக அந்த வேலை மிகப் பிரபலமானது. தரைவிரிப்புகளுக்கு வண்ணம் பூசுவோர் அதிகமானார்கள்.
நிரந்தர வருமானம் வரும் வேலையில்லை. ஆனாலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோல்கோஸாவது வருமானம் வரும். இதன் மூலம் அந்த நாடு முழுவதும் சுற்றி வேலைப் பார்க்கத் தொடங்கினார்கள். நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் நாடு முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார்கள். வருடமுழுவதும் இப்படி வேலைப் பார்த்து பல்லாயிரம் ரூபிள்களை ஈட்டத் தொடங்கினர். பழைய விரிப்பிலிருந்து ஒரு தரைவிரிப்பை செய்து வண்ணம் தீட்டினால், ஐம்பது ரூபிள் கிடைக்கும். ஒரு மணிநேரத்தில் இந்த வேலையை முடித்து விடுவார்கள்.
சுகாவ் ஊருக்குத் திரும்பியவுடன் இந்த வேலையை எடுத்து நடத்துவானென அவன் மனைவி திடமாக நம்பினாள். தற்போதிருக்கும் ஏழ்மை நிலையிலிருந்து விலகி, பிள்ளைகளை நல்ல பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவார்கள். பழைய வீட்டை இடித்து நல்ல புதிய வீட்டைக் கட்டவும் காத்திருந்தாள். எல்லா தரைவிரிப்பு வண்ணம் பூசும் குடும்பமும் புது வீடுகளைக் கட்டிக் கொண்டிருந்தன. ரயில் நிலையத்தருகே இருக்கும் வீடுகள் ஐந்தாயிரம் ரூபிளிலிருந்து இருபத்தைந்து ஆயிரம் ரூபிள் ஏறிவிட்டது.
இதுவரை வாழ்வில் ஒரு முறைக் கூட வண்ணம் தீட்டத் தெரியாத தன்னால் எப்படி திடீரென வண்ணம் தீட்ட முடியுமென சுகாவ் தன் மனைவியிடம் கேட்டான். அந்த அழகிய தரைவிரிப்புகள் எங்கிருந்து வந்தன? அதன் கலவையை எப்படி உருவாக்குவது? சுத்த முட்டாளால் மட்டுமே அந்த வடிவங்களான வண்ணத்தை அடிக்க முடியாதென அவன் மனைவி பதிலலித்தாள். சின்ன சின்ன ஓட்டைவழியே வரைந்து, அதில் வண்ணத்தை நிரப்ப வேண்டியது மட்டுமே அந்த வேலை என அவள் குறிப்பிட்டாள். அவள் எழுதிய கடிதத்தில், மொத்தம் மூன்று விதமான தரை விரிப்புகள் இருப்பதாய் விவரித்தாள்.
1. `ட்ரோய்க்கா` – சில மேலதிகாரிகள் குதிரை ஓட்டுவது போல் இருக்கும் படங்கள்
2. `ரியிண்டீர்` – சில மிருகங்கள், குறிப்பாக நான்கு கால் உடையவை
3. பெர்ஷியன் கம்பளங்கள் போன்ற வண்ணங்கள்.
வேறுவிதமான வடிவங்கள் இல்லை. இந்த நாட்டில் உள்ள அனைவரும் மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமாக இருப்பதாய் அவள் தெரிவித்தாள். ஏனென்றால், நல்ல தரமான தரைவிரிப்புகள் பல ஆயிரம் ரூபிள்கள் இருக்கும்; இவை ஐம்பது ரூபிள் மட்டுமே.
அப்படிப்பட்ட தரை விரிப்புகளை எப்போது காண்போம் என் சுகாவ் இருப்பில்லாமல் தவித்தான்!!
சிறையிலும், முகாமிலும் அடுத்த நாட்களை திட்டமிடுவதைக் கூட கைவிட்டிருந்தான். அவன் குடும்ப திட்டங்களையும், அடுத்த வருட திட்டங்களையும் கூட அவன் சிந்திப்பதில்லை. அந்த முகாமின் அதிகாரிகள் அவனுக்காக அதைச் செய்கின்றனரே – மிகச் சுலபமான வழியில்லையா?
இன்னும் இரு வெயில் காலங்களும், இரு குளிர் காலங்களும் அவனுக்கு தண்டனை மிச்சமிருந்தது. ஆனாலும் அந்த தரைவிரிப்புகளே அவன் மூளையை அரித்துக்கொண்டிருந்தது….
பாருங்கள், சுலபமாகவும், வேகமாகவும் பணம் செய்ய வழியிருக்கிறதே. அவன் கிராமத்து மக்களை விட பின் தங்கிப் போய்விட்டதில் அவன் மேலேயே அவனுக்கு இரக்கம் வந்தது.. ஆனாலும், சத்தியமாக அவன் ஒரு தரைவிரிப்புகள் தயாரிப்பவனாக மாற விருப்பமில்லை. மக்களுடன் நல்லபடியாகப் பழக வேண்டும், கொஞ்சம் சோப்பு போடவேண்டும்.ஜால்ரா தட்டி வாழ வேண்டுமே.
இந்த உலகத்தில் நாற்பது ஆண்டுகள் உழண்டாலும், பாதி பற்கள் காணாமல் போயிருந்தாலும், முன் வழுக்கை விழுந்திருந்தாலும், இதுவரை லஞ்சம் வாங்கியது கிடையாது- கொடுத்ததும் கிடையாது. முகாமில் கூட இந்த நல்ல விஷயங்களை அவன் கற்றுக் கொள்ளவில்லை.
சுலபமாக சம்பாதித்த பணம் கைகளில் இருப்பதே தெரியாது; நாம் சம்பாதித்தது போல வராது. பழைய பஞ்சாங்க பழமொழி ஞாபகத்திற்கு வந்தது – குறைவு பணம் , குறைவான தேவை. நல்ல திடகாத்தமான உடலும், ஆரோக்கியமான இரு கைகளும் இருக்கிறது. வெளியே போனவுடன் தச்சு வேலையோ, பாத்திரங்களை சரி செய்யும் வேலையோ கண்டிப்பாகக் கிடைக்கும்.
அவன் ஜீவாதார உரிமையை பறித்து எங்குமே வேலை செய்ய முடியாதபடி போனாலோ அல்லது இங்கிருந்து வெளியே போக முடியாவிட்டால் மட்டுமே தரைவிரிப்புகள் வேலையை எடுத்துக் கொள்வான்.
இதற்கிடையே மின்னிலையத்திலிருந்து சுவர் ஒன்று தரையோடு பிளந்துவிட்டதாக செய்தி வந்தது. அந்த சுவர் பாதி இருக்கும்போது அதில் வேலைப் பார்த்த இருவர் அங்கிருந்து கண்காணிப்பு கோபுரத்திற்கு சென்று விட்டனர். அந்த கோபுரத்தை கண்காணிக்காமல் விட்டால், மின்னிலையம் யாருக்கும் தேவைப்படாமல் இருக்கும்.
தலைமைக் காவலாளி, ஒரு பெரிய துப்பாக்கியைத் தன் தோளில் சாய்த்தபடி, கண்காணிப்பு கோட்டையை நெருங்கினான். அதன் புகைக் கூண்டிலிருந்து புகை அளவுக்கதிகமாக வந்துகொண்டிருந்தது. சுகாவைப் போன்ற ஒரு கைதி கண்காணிப்பாளன் போல் இரவு முழுவதும் சிமெண்டி திருட்டைத் த்டுக்க அங்கே காவலுக்கு இருப்பான்.
தூரத்தில், பெரிய சிகப்புச் சூரியன் வேகவேகமாக மேலே எழும்பிக்கொண்டிருந்தது. அதன் கதிர்கள் முகாமின் பல அடுக்குகளையும், கட்டிடங்களிலும் பட்டு தகதகத்துக்கொண்டிருந்தன. சுகாவுக்கு பக்கத்தில் நின்றிருந்த அய்லோஷா சூரியனைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.
இப்போது சிரித்து மகிழ்வோடிருக்க என்ன நடந்தது?
அவன் கன்னங்கள் உள்வாங்கியிருந்தது, வேலை ஏதும் செய்து சம்பாதிக்காமல் முகாமின் ரேஷனையே நம்பி வாழ்பவன்.
மற்ற பாப்டிஸ்களுடன் பகல் முழுவதும் செலவு செய்வான்.ஒரு பறவையின் முதுகில் இருக்கும் தண்ணீரைத் தள்ளுவதுபோல், முகாமின் கொடுமைகளைக் கையால் தள்ளிவிடுவார்கள்.
அணிவகுப்பின் போது, சுகாவின் முகத் துணி நன்றாக ஈரமாகியிருந்தது.சில இடங்களில் பனி படர்ந்து போயிருந்தன.அதை முகத்திலிருந்து கழுத்துக்கு கீழிறக்கி காற்றிற்கு எதிர் திசையில் முதுகைக் காட்டி நின்றான்.குளிர் தெரியாமல் பல இடங்களை மறைத்து விட்டாலும், அவன் கைகள் மரத்துப் போயிருந்தன.
இடது கால் விரல்களும் மரத்து விட்டன; சரியாக காலுறை அணியாத அதே இடது கால் தான் அது.ஏற்கனவே இரு முறை காலணியின் கீழ்பகுதியைத் தைத்துவிட்டான்.
தலையின் பின்பக்கமும், உடம்பு முழுவதும் தோள்பட்டை வரை அவனுக்கு வலித்தது. இன்று அவன் எப்படி வேலை செய்வான்?
girigopalan@gmail.com
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -8
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது -1
- மோனாலிசாவின் புன்னகையின் புகழ் முடிவதற்கான நேரம் வந்துவிட்டது – 2
- தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- அந்த காலத்தில் நடந்த கொலை – மானிஃபெஸ்டோ – 2
- “காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”
- முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை
- அன்புள்ள ஆசிரியருக்கு
- ஏலாதி இலக்கிய விருது 2009 முனைவர் பொ.நா.கமலா மற்றும் விஸ்வாமித்திரன் திறனாய்வு நூல்களுக்கு பரிசு.
- இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – நிகழ்ச்சி நிரல்
- கருத்துப் பரிமாற்றம் கதவுகளைத் திறக்கும்
- உன்னதம் – ஆகஸ்டு 2009 இதழ்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- சமஸ்க்ருதம் பற்றி அறிய முயற்சிக்கவேண்டும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 49 << கடற் புதிர்கள் >>
- என். விநாயக முருகன் கவிதைகள்
- வேத வனம் –விருட்சம் 47
- ஒலிகளாலான உலகு (நல்லி-திசையெட்டும் இலக்கிய விருது 2009ல் வாசிக்கப்பட்ட உரை)
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! கடுகு விண்மீன்கள், பிரியான் விண்மீன்கள்(Compact Stars&Preon Stars) (கட்டுரை:62 பாகம்-1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -1 (மரணம் விடும் அழைப்பு)
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினேழாவது அத்தியாயம்
- ஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..
- முதல் முதலாய்த் தோற்ற நாள்
- மழை
- அதிர்ஷ்டம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஒன்பது
- நினைவுகளின் தடத்தில் – (34)
- Portnoy’s Complaint – அடையாளமழித்தற் கலை – புத்தக விமர்சனம்
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- நெஞ்சு பொறுக்குதில்லையே…
- மனப் பொழிவு
- குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..
- நட்சத்திரவாசி
- ஊழிக் காலம்
- போதிமரங்கள்
- கார்காலம்
- www.மனிதம்.com
- குப்பைப் பூக்கள்..!