தமிழாக்கம் – ரா.கிரிதரன்.
அந்த சிறு மீனோ சதையைவிட முள்ளாகவே இருந்தது. எலும்பைச் சுற்றிய சதையோ கரைந்துப் போய், தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு துண்டு சதையைக் கூட விட்டுவைக்காமல், சுகாவ் அந்த முட்களை கடித்து முழுவதும் உறிஞ்சிக் கொண்டும், மீந்தவற்றை மேஜையின் மேல் துப்பிக்கொண்டும் இருந்தான். முட்களில் ஒட்டிக்கொண்டிருந்த வால், கண் அனைத்தையும் மென்றுகொண்டிருந்தாலும், சூப்பில் மிதந்துகொண்டிருந்த கண்களை சாப்பிடவில்லை. என்ன ஒரு கண்கள். மீன் கண்கள். இதைப் பார்த்த அவன் குழுவினரோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
அன்று சுகாவ் மிகக் குறைவாகவே சாப்பிட்டான். தன் குடிசைக்குத் திரும்பாததால், அவன் சிற்றுண்டியை ரொட்டியில்லாமலேயே தின்று முடித்தான். ரொட்டியை பிறகு சாப்பிடுவான். அதுவே சரியாக இருக்கக்கூடும்.
சூப்பிற்குப் பிறகு கம்பங்கூழ் முடிக்க வேண்டும். அதுவும் ஆறிப் போய் இறுகியிருந்தது. சுகாவ் அதை சின்னச் சின்னதாய் உடைத்தான். சூடாக இருக்கும்போதும் சுவை இல்லாமல் இருக்கும் அது, வயிற்றை கொஞ்சம் கூட நிரப்பாது. மஞ்ச நிற புல் போல இருந்தது. சீனர்களிடமிருந்து கற்றுக் கொண்டது இது. சூடு செய்யும் போது கொஞ்சம் கனமாக இருந்தாலும், கூழ் அனைத்தும் வற்றிவிடும்.
ஸ்பூனை நக்கிவிட்டு தன் காலணிக்குள் நுழைத்தபடியே சுகாவ் தொப்பி அணிந்தபடி தன் மருத்துவ அறையை நோக்கி நடக்கலானான்.
வானம் இருண்டிருந்தது. முகாமின் விளக்குகள் நட்சத்திரங்களைத் துரத்தியிருந்தது. இரண்டு பெரிய தேடுவிளக்குகள் இன்னும் முகாம் முழுவதும் பெருக்கிக் கொண்டிருந்தது. சண்டைக்குப் பிறகு மீதமிருந்த பல வண்ண எரிதழல்களை இந்த விசேசமான முகாமில் மின் தடை ஏற்படும்போது யுத்தகளம் போல பற்ற வைப்பார்கள். பின்னர் அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டனர். பணத்தை மிச்சம் செய்வதற்க்காக இருக்கலாம்.
கும்மிருட்டென இருந்தாலும், இன்னும் சிறிது நேரத்தில் வேலை செய்ய கட்டளை அறிவிக்கப்படுமென அனுபவசாலிகளுக்குத் தெரியும்.குரமோயின் வேலையாள் ஆறாம் எண் குடிசைக்கு சிற்றுண்டியுடன் சென்றுவிட்டான். இந்த முகாமை விட்டு விலகாத காவலாளி் அவன். வயதான தாடிவைத்த ஓவியன். C.E.D என்ற கழகத்தில் கைதிகளின் உடையில் எண்களை வரைபவன். அங்கே மறுபடியும் டார்டார் வந்துவிட்டான். பொதுவாகவே கம்மியான ஆட்களே இருந்தனர். எல்லோரும் ஏதாவதொரு மூலைக்கு சென்றிருக்கவேண்டும் அல்லது குளிருக்கு கதகதப்பாக எங்காவது ஒதுங்கிருக்கவேண்டும்.
பொதிமூட்டை பின்னால் தந்திரமாக ஒழிந்துகொண்ட சுகாவ் டார்டாரிடம் தப்பித்துக்கொண்டான்.
என்னதான் மெதுவாக சொன்னாலும்,எங்கள் குழுவிலிருந்த அனைவருக்கும் கேட்டது. யாருக்கு அன்றிரவு ரொட்டி குறையப்போவது எனத் தெரியாமல் பயத்துடன் காத்துக்கொண்டிருந்தார்கள்.
மிக்க களைப்பாக இருந்ததால், சுகாவ் மரத்துகள்களான மெத்தையில் படுத்துக்கொண்டிருந்தான். ஒரு முடிவோடிருந்தான்; ஒன்று உண்மையான ஜுரம் வர வேண்டும் இல்லையேல் மூட்டுவலி நீங்க வேண்டும்.
இதற்கிடையே அய்லோஷா தன் இரவு பிரார்த்தனையை தொடங்கியிருந்தான். கழிப்பிடத்திலிருந்து வந்த புய்நோஸ்கி குறிப்பிட்டு யாரிடமும் சொல்லாமல் குசும்பு விசமத்தனத்தோடு – ‘மாலுமிகளே! பற்களை நன்றாக இருக்கிக்கொள்ளுங்கள். வெளியே கண்டிப்பாக முப்பதுக்கும் கம்மியாக இருக்கிறது.’
சுகாவ் ஜுரம் வந்ததென புகல முடிவுசெய்தான்.
அந்நேரத்தில் அவன் போர்வையும்,மேல் சட்டையும் அவனிடமிருந்து பிடிவாதத்துடன் பிடுங்கப்பட்டது. அவன் மேல் அங்கியை தன் முகத்திலிருந்து அகற்றி எழுந்து உட்கார்ந்தான்.அவன் மேல்படுக்கை உயரமிருந்த டார்டார் அவனைப் பார்த்தான்.
தன் முறையில்லாவிட்டாலும் வந்துவிட்டான்.
‘S 854’ சுகாவின் மேல் சட்டையிலிருந்த வெள்ளை கிழிசலில் இருந்ததைப் படித்தான். ‘உனக்கு மூன்று நாட்கள் வேலையுடன் கூடிய தண்டனை’.
அவன் குரலைக் கேட்ட அடுத்த நிமிடம் , அந்த குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த 200 பேர்களும் நிஜ உலகத்திற்கு வந்து வேகவேகமாக உடையணிந்தனர்.
‘எதற்காக பெரிய தலைவரே (1)’ என இளித்துக்கொண்டே சுகாவ் கேட்டான்.
வேலையோடு – அது கூடத் பரவாயில்லை. சூடான சாப்பாடு கொடுத்தவுடன், யோசிக்க நேரமிருக்காது. வேலை முடிந்தாலும் வெளியே செல்லமுடியாததே உண்மையான லாக்-அப்.
‘மணியடித்த பின்னும் எழுந்துகொள்ளாததால். என்னுடன் முகாம் தலைவர் அலுவலகத்திற்கு வா’ என சோம்பேரித்தனத்துடன் டார்டார் கூறினான்.
முகானின் மருத்துவமனையில் கூட இப்போதெல்லாம் படுத்து ஓய்வெடுக்க விடுவதில்லை என்பது இப்போதுதான் நினைவிற்கு வந்தது.ஸ்டீபன் ரிகோரிச் என்ற புது மருத்துவர் வந்துள்ளார். தன் கனத்த எருமைக் குரலை உடைய அவன் தானும் நிம்மதியில்லாமலு அங்கு வரும் நோயாளிகளின் நிம்மதியையும் பறித்து வருகின்றான். தங்கள் காலால் நிற்கக்கூடிய நோயாளிகளுக்கு மருத்துவமனையின் உள்ளும் வெளியேயும் பல புது வேலைகளை உருவாக்கினான். தோட்டத்தை நடுவது, மண் பாதைகள் வகுப்பது, மலர் செடிகளுக்கு கீழே மண் நிரப்புவது என வெய்யில் காலத்திலும், பனி தடுப்பு நடுவதை குளிர் காலத்திலும் கொடுத்தான். எவ்விதமான நோய்க்கும் உழைப்பே முதன்மையான மருந்து எனக் கூறிவந்தான்.
ஒரு குதிரையைக் கூட அதிக வேலைகொடுத்து கொல்ல முடியும். அந்த மருத்துவருக்கு அது புரிய வேண்டும். ரத்தம் சிந்தி கற்களை அடுக்கினால் நிச்சியமாக சத்தம் அடங்கிப் போவான்.
டோவுஷ்கின் எழுதிக்கொண்டேயிருந்தான். தன் வேலையை தவிர வேறேதோஒரு சொந்த வேலை தான் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் அது சுகாவிற்கு தேவையில்லாதது. அதற்குமுன் நாள் மாலை எழுதிய கவிதையின் திருத்தமான பிரதியை எழுதிக்கொண்டிருக்கிறான். இன்றைக்கு வேலையே மருந்து என அறிவுரை செய்த மருத்துவர் ஸ்டீபன் ரிகோரிச்சிடம் காட்டுவதாக வாக்கு அளித்திருந்தான்.
முகாமில் மட்டுமே நடக்கக்கூடியது இந்த ஏமாற்றுத்தனம். டோவுஷ்கின் துணை மருத்துவரே அல்ல. இலக்கியம் படித்துக் கொண்டிருந்த மாணவனான அவனை இரண்டாம் ஆண்டு போது கைது செய்தார்கள். ஸ்டீபன் ரிகோரிச் இவனுக்கு நரம்பினுள் போடும் ஊசி முறையைக் கற்றுத் தந்து, தன்னிடமிருந்த அப்பாவி கைதிகளின் மேல் பரிசோதித்துக்கொண்டிருக்கச் சொல்லியிருந்தார். சுதந்திரமாய் எழுதமுடியாததை இங்கு சிறையில் எழுதி வந்தான்.
இரண்டு தடுப்புகளிருந்த பனி இறுகிய ஜன்னலின் வழியே வேலை செய்வதற்காக வந்த சிமிஞை கேட்கவில்லை.ஒரு பெருமூச்சுடன் சுகாவ் எழுந்து நின்றான். இன்னும் ஜுர சிலிர்ப்பு இருந்தாலும் வேலையை தட்டிக் கழிக்க முடியாது.
டோவுஷ்கின் வெட்பமானியை எடுத்துப் பார்த்தான்.
`ஹும்..இரண்டுகெட்டான் நிலை.முப்பத்து ஏழு புள்ளி இரண்டு. முப்பத்து எட்டு இருந்தால் எல்லோருக்கும் புரிந்திருக்கும். உன்னை விட முடியாது. இங்கு நிற்பது ஆபத்து. மருத்துவர் வந்து உன்னைச் சோதிப்பார். உனக்கு ஜுரமிருக்கிறது என அவர் முடிவு செய்தால் தப்பிப்பாய். இல்லையேல் விடமாட்டார். லாக் அப் அறையில் அடைத்து விடுவார். வேலைக்கு இப்போது செல்வதே உனக்கு நல்லது`
சுகாவ் ஒன்றும் சொல்லவில்லை. தலைக் கூட ஆட்டவில்லை. தன் தலைக்குமேல் தொப்பியை கவிழ்த்துக்கொண்டு வெளியேறினான்.
குளிரில் இருப்பவனை கதகதப்பில் இருப்பவன் எப்படி புரிந்து கொள்ள முடியும்?
குளிர் ஊடுருவியது. கடுமையான பனி மூட்டம் சுகாவைச் சுற்றிக்கொண்டு அவனை கடுமையாக இரும்ப வைத்தது. வெளியில் -27 டிகிரி. சுகாவோ 37 டிகிரி இருந்தான். சண்டை வலுத்தது.
மெதுவாக ஓடிக்கொண்டே தன் குடிசையை அடைந்தான். பயிற்சி தளமும், முகாமும் காலியாக இருந்தது. இந்த நேரத்தில் தான் எல்லோரும் ஒரு போலியான நிம்மதியில் இருப்பார்கள். முகாமின் அணிவகுப்பு அன்று இருக்காது என்ற நிம்மதியே அது. காவலாளிகளோ தங்களின் வெப்பமான அறைக்குள் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களின் தூங்கும் தலை துப்பாக்கியின் மேல் சாய்ந்திருக்கும். அந்த குளிரான கண்காணிப்பு உயரமேடைகளில் அவர்களுக்கு ஒன்றும் பாலும் தேனும் போல் இனிப்பாக இருக்காது. வாசல் கதவின் முன்னேயிருக்கும் காவலாளியோ நெருப்பில் கரியை அள்ளிப் போடுகிறான். முகாமைத் தேடுவதற்குமுன், அதன் காவலாளிகள் கடைசி சிகரெட்டைப் பிடித்தார்கள்.கைதிகளோ தங்களின் வலைகளில், இடுப்பில் கயிறும், தாடைமுதல் கண்வரை மூடிய துணியுமாய் காலணி அணிந்துகொண்டு தங்கள் படுக்கையில் காத்திருப்பார்கள். அவர்கள் காத்திருப்பதோ குழுத் தலைவனிடமிருந்து – ‘வெளியே போங்கள்’ என்ற கத்தலுக்காக.
104ஆம் குழு ஏழாம் குடிசையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது. பாவ்லோ என்ற துணை குழுத்தலைவர் பென்சிலை தன் உதட்டில் பொருத்தியபடியும், சுகாவின் சுத்தமான நண்பனுமான அய்லோஷா ஒரு நோட்டு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபடி முழித்துக்கொண்டிருந்தனர். அந்த நோட்டில் பைபிள் புதிய ஏற்பாட்டை தானே பிரதி எடுத்திருந்தான்.
பாவ்லோவின் படுக்கையை நோக்கி நேராகச் சத்தமேதும் போடாமல் சுகாவ் சென்றான்.
பாவ்லோ தலையைத் தூக்கிப் பார்த்தான்.
‘ஆ! இவான் டெனிசோவிச் , உன்னை லாக் அப் அறையுள் போடவில்லையா? நலமா நண்பா?’ – உக்ரேனிய வட்டார வழக்கில் கேட்டான். அப்படிக் கேட்டது மேற்கு உக்கிரேனியற்கள் சிறையில் கூட இப்படி பேசுவது ஆச்சர்யமாக இருந்தது.
சுகாவின் ரொட்டி அளவை எடுத்து அவனிடம் நீட்டினான். அந்த குவியலின் மேல் ஒரு கரண்டி சக்கரை இருந்தது. நேரமில்லாததால் சுகாவ் ஒழுங்காக பேசினான் (துணைக் குழுத்தலைவர் கூட் இந்த முகாமில் முக்கியமான அதிகாரி தான்). அவசரத்திலிருந்தாலும் சக்கரையை ரொட்டியின் மேலிருந்து நக்கியபடி, தன் படுக்கையில் ஏறி படுத்தான். ஐம்பத்து ஐந்து கிராம் இருக்கிறதாயென பார்த்தவாறு தன் ரொட்டியைச் சாப்பிடத்தொடங்கினான். பல ஆயிரம் முறை இதைப்போல பல சிறைகளிலும், முகாமிலும் எடையை தராசில்லாமல் பார்த்திருந்தாலும், இந்த ரொட்டிகளில் உண்மையான எடை வராதென அவனுக்குத் தெரியும். ஒவ்வொரு ரொட்டியிலும் குறைவாகவே இருக்கும். எவ்வளவு குறைவு என்பதுதான் முக்கியம். உங்கள் ஆதமாவை தேற்றுவாற்கள் என தினமும் நினைப்பீர்கள் – இன்றைக்கு எதுவும் செய்திருக்க மாட்டார்கள்.
ரொட்டியை இரண்டாய் உடைத்தபோதுதான் இருபது கிராம் குறைவாக இருப்பது தெரிந்தது. ஒரு பாதியை தன் காலணியின் மறைவானதொரு இடத்தில் ஒழித்து வைத்தான். சிற்றுண்டியுடன் சாப்பிடாமல் வைத்த மற்றொரு பாதியை அப்போதே சாப்பிட முடிவு செய்தான். வேகவேகமாக முழுங்கும் சாப்பாடு உணவே அல்ல. அது நிறைவைத் தராது. தன் காலணி பைக்குள் அதைத் திணிக்கலாமென நினைத்தான். அந்த நினைப்பை எதிர்த்து சாப்பிடத் தொடங்கினான். இரண்டு காவாலாளிகளை உணவைத் திருடியதற்காக உதைத்தார்கள் என நினைவிற்கு வந்தது.
girigopalan@gmail.com
- கோ.கண்ணனின் கவிதைகள்
- தேவிபாரதியின் “பிறகொரு இரவு” நூல் வெளியீட்டு விழா
- கடித விமர்சனம் – 8 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து) நிறைவு
- நல்லி- திசை எட்டும் – மொழியாக்க விருது விழா
- வார்த்தை ஆகஸ்ட் 2009 இதழில்
- காட்டுமிராண்டி அரபிகளின் இறை வழிபாட்டினைச் செப்பனிட மட்டுமே….
- screening of the documentary film Out of Thin Air
- நன்றி, மலர் மன்னன்
- ஏலாதி சிந்தனைப்பள்ளி தேசிய பல்துறை ஆய்வரங்கம்
- வரவேற்போம், முகம்மது அமீனை.
- BAR1 invites you to attend its first Salon/open studio Bar 1/4 as part of its INDIA- INDIA residency.
- இரண்டு கவிதைகள்
- ஜெயபாரதன் தொடர்கள்
- மூன்று கவிதைகள்
- நிழலின் ஒளி
- மொட்டை மாடி
- தோற்கப் பழகு!
- இறகுப்பந்துவிடு தூது!
- பறவையின் இறப்பு
- இயலாமை
- ஒலி மிகைத்த மழை
- வேத வனம் – விருட்சம் 44
- ” புறத்தில் பெருந்திணை “
- ஆலவாய் – சரித்திரத்தின் ஊடே ஒரு நெடும் பயணம்
- இயக்கம்..
- சாங்கியத் தாயும், சாங்கிய மதமும்.
- கண்டனத்துக்குரிய சில…
- விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்தி ஆறு
- வலியறிதல்
- பூமி என்னும் வண்ணக்கலவை
- சாகசம்
- காணாமல் போனவர்களின் மணல்வெளி
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதிநான்கு
- பெரியார் பதிப்புரிமை வழக்கு – ஒரு குறிப்பு
- இது பின்நவீனத்துமல்ல
- ஊகங்களும் ஊடகங்களும்
- மூன்று கவிதைகள்
- மறு நிர்மாணப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த தேக்கா ஈரச்சந்தை
- ஆகவே சொல்கிறேன்
- மரணத்தைத் தவிர வேறில்லை
- ஆசை
- வெட்கமற்றது
- மிதித்துச் செல்ல ஓர் இலவச ஆல்பம்
- உயிர் தேடும் வண்ணங்கள்
- மெளன கோபுரம்