தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
Fig. 1
Abraham Lincoln’s Second
Inauguration at Washington D.C.
எண்பத்தி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையத் தந்தையர் இந்தக் கண்டத்திலே ஒரு புதிய தேசத்தை நிலைநாட்டிச் சுதந்திர வாழ்வைச் சிந்தித்து எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்னும் முன்மொழி வாசகத்தை நமக்கு ஒப்படைத்தார்கள். இப்போது நாம் அத்தேசம் அல்லது அவ்விதம் உருவாகிப் வலுப்பெற்ற ஒரு தேசம் நெடுங்காலம் பொறுத்துக் கொள்ளும் ஒரு பெரும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருக்கிறோம். அப்போரின் பெருங்களத்தில் நாமெல்லாரும் போராடச் சந்தித்தோம். அக்களத்தின் ஒரு பகுதியைப் போரில் உயிர் கொடுத்தோருக்கு ஓய்விடமாய் அர்ப்பணித்து நம் தேசம் நீடித்திருக்க முற்படுகிறோம். நாம் ஒருங்கே கூடி இதைச் செய்து முடிக்க வேண்டும் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்ளளும் தகுதி உடையது.
நாம் செய்ய வேண்டி எஞ்சியுள்ள உன்னத பணிகளை முடித்து விட நம்மை நாம் இங்கே அர்ப்பணித்துக் கொள்வோம். மேன்மையான தேச நேசமுடன் உயிர் கொடுத்தோர் மூலமாக எதற்குப் போராடித் தம்மை முழுமையாகக் கொடுத்தாரோ அக்கொடை வீணாகாமல் அதே காரணத்துக்காக நாமும் மிகுந்த நேசமுடன் தீர்மானம் செய்வோம். இந்த தேசம் கடவுளுக்குக் கீழ்ப் படிந்து குடிமக்களுடைய அரசாங்கம், குடிமக்களுக்காக அரசங்கம், குடிமக்கள் ஆளும் அரசாங்கம் என்பவை பூமியிலிருந்து அழியாது புதியதோர் சுதந்திரத்தைப் பிறப்பிக்கும்.
ஆப்ரஹாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் பேருரை (நவம்பர் 19, 1863)
Fig. 2
William Scott,
“The Sleeping Sentinel”
“யார் மீதும் தீய எண்ணமின்றி, எல்லோருக்கும் நியாய நெறியோடு, கடவுள் நமக்குப் புலப்படும்படி அளித்திருக்கும் நேர்மையைக் கடைப்பிடித்து நாம் மேற்கொண்ட பணியை முடிக்க முயற்சி செய்வோம். அப்போதுதான் தேசத்தின் காயங்களுக்கு நாம் கட்டுப்போட முடியும். உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர் விதவைகளுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் நாம் கவனமாய்க் கண்காணிப்பு செய்வோம். நமக்குள்ளேயும் மற்றும் அனைத்து தேசங்களுக் குள்ளேயும் நியாயமான நிரந்தர அமைதியை நிலைநாட்ட அது ஏதுவாகும்.”
ஆப்ரஹாம் லிங்கன் (இரண்டாம் முறை ஜனாதிபதி பதவி ஏற்பு உரை) (1865)
உள்நாட்டுப் போர் முடியும் தருணம்.
(ஏப்ரல் மாதம் 1865)
காட்சி -5 பாகம் -2
பங்கெடுப்போர் :
ஆப்ரஹாம் லிங்கன், ஆப்ரஹாம் லிங்கன் கீழ்ப்பணி செய்து வடபுறத்தில் போர் புரிந்து வரும் ஜெனரல் யுலிஸிஸ் கிரான்ட், காப்டன் மாலின்ஸ், படைவீரன் டென்னிஸ் மற்றும் படைவீரன் வில்லியம் ஸ்காட்.
இடம் : போர்க்களத்தின் வெளியே ஜெனரல் தங்கியிருக்கும் ஒரு வேளாண்மைக் குடிசை.
இப்போதைய காட்சி: உள்நாட்டுப் போர் முடியும் தருணம். ஜெனரல் கிரான்ட் மேஜை முன்பாக அமர்ந்து காப்டன் மாலின்ஸோடு உரையாடுகிறார். கிரான்ட் வாயில் சுருட்டை ஊதிக் கொண்டு கையில் விஸ்கி பாட்டிலை வைத்திருக்கிறார். படைவீரன் டென்னிஸ் மேஜை ஓரத்தில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறான். மரண தண்டனை விதிக்கப்பட்ட படைவீரன் வில்லியம் ஸ்காட்டை விலங்கிட்டு லிங்கன் முன்பாக இழுத்து வருகிறார் படைக் காவவர் இருவர்.
நேரம்: மாலை வேளை.
Fig. 3
A Deserted Soldier Shot Dead
At the Battlefield
ஜெனரல் கிராண்ட்: மாலின்ஸ் ! அழைத்து வாருங்கள் துரோகி வில்லியம் ஸ்காட்டை !
(காப்டன் மாலின்ஸ் விரைவாகப் போகிறார்)
ஆப்ரஹாம் லிங்கன்: அவன் செய்த குற்றம்தான் என்ன ?
ஜெனரல் கிரான்ட்: மிஸ்டர் பிரசிடென்ட் ! மன்னிக்க முடியாத குற்றம் ! மரண தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது அவனுக்கு ! நாளைக் காலை உதயத்தில் சுட்டுத் தள்ளும் பட்டாளம் அவனைச் சுட்டுக் கொல்லும்.
ஆப்ரஹாம் லிங்கன்: தண்டனை கொடியதாகத் தெரிகிறது ! குற்றமென்ன செய்தான் கூறுவீர் ?
ஜெனரல் கிரான்ட்: நேற்றுச் செய்த காவல் காப்பில் அவன் தூங்கிப் போய்விட்டான் ! கடமை உணராத கயவன் அந்தப் படைவீரன் ! அவனுக்கு மன்னிக்கத் தகுதியில்லாதவன் மிஸ்டர் பிரசிடென்ட் ! அத்தகைய மாந்தர் மன்னிக்கப் படுவதால் இராணுவத்தின் ஒழுக்க விதிகள் கறைபட்டு விடுகின்றன. அந்தச் சமயத்தில் பகைவர் யாராவது நமது இராணுவப் படை முகாமுக்குள் நுழைந்திருந்தால் என்னவாகும் ?
ஆப்ரஹாம் லிங்கன்: ஏன் தூங்கிப் போனான் என்று விசாரித்தீரா ?
ஜெனரல் கிரான்ட்: விசாரணையில் நானும் கலந்து கொண்டேன், மிஸ்டர் பிரிசிடென்ட் வில்லியம் ஸ்காட் இரட்டை வேளைப் பணி புரிய (Double Guard Duty) ஒப்புக் கொண்டான். காரணம் நோயில் விழுந்த அவன் தோழனுக்கு உதவி செய்ய ! அவன் காவற் கூண்டில் தூங்கிக் கிடந்ததைப் படைவீரர் சிலர் கண்டுபிடித்துப் புகார் செய்தனர் !
ஆப்ராஹாம் லிங்கன்: மிஸ்டர் கிரான்ட் ! உமது நியாயத் தீர்ப்பு என்ன ? சுட்டுக் கொல்வதைத் தவிர வேறு தண்டனை கொடுக்க முடியாதா ?
ஜெனரல் கிரான்ட்: மரண தண்டனையைத் தவிர்த்து வெறும் தண்டனை விதிக்கத்தான் நானும் முதலில் நினைத்தேன். இராணுவச் சட்டப்படிச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற விதியை முறிக்க விருப்பமில்லை எனக்கு ! போர் மும்முரத்தில் மிகச் சிக்கலான தருணம் ! நானே நமது இராணுவச் சட்டத்தை முறிக்கத் தயங்கினேன் ! நாளை காலை உதயத்திற்குள் கயவன் சுடப்பட வேண்டும். அதுதான் என் முடிவும் தீர்ப்பும் !
ஆப்ரஹாம் லிங்கன்: போர் முடியும் தருவாயில் இன்னும் ஓர் உயிர் போக வேண்டுமா ? இனிமேல் யாரையும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை ! எங்கே அவன் ?
காப்டன் மாலின்ஸ்: ஈதோ ! ஸ்காட்டை அழைத்து வருகிறார்.
(கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்ட வில்லியம் ஸ்காட்டை இரு படைக் காவலர் இழுத்து வருகிறார். மரண நிழல் அவன் முகத்தில் தெரிகிறது. இருபது வயதுப் படை வாலிபன் லிங்கனைக் கண்டதும் விழிக்கிறான்.)
Fig. 4
Ulysses Grant Promoted to
Lt. General
ஆப்ரஹாம் லிங்கன்: உன் பெயர் என்ன ?
படைவீரன்: வில்லியம் ஸ்காட் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: நான் யாரென்று தெரியுமா ?
வில்லியம் ஸ்டாட்: தெரியும் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: உன் வயதென்ன ? எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் நீ ?
வில்லியம் ஸ்காட்: இருபது ஸார் ! வெர்மான்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: உன்னை இராணுவக் குற்றவாளியாய்ச் சிறை செய்திருப்பதாக ஜெனரல் சொல்கிறார்.
வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: காவல் காக்கும் கூடத்தில் நீ தூங்கினாயா ?
வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: கடமைப் பணியில் தூங்கிப் போவது தீவிரக் குற்றம் தெரியுமா ?
வில்லியம் ஸ்காட்: அதை நான் அறிவேன் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: நின்று கொண்டு காவல் புரியும் போது எப்படித் தூக்கம் வந்தது ?
வில்லியம் ஸ்காட்: கண்விழிக்க முடியவில்லை ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: என்ன நீண்ட தூரம் கால்நடைக் காவல் புரிந்தாயா ?
வில்லியம் ஸ்காட்: இருபத்தி மூன்று மைல்கள் நடந்தேன் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: நீ இரட்டை வேளைக் காவல் வேறு செய்தாயா ?
வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் !
Fig. 5
The Battle at Arkansas
ஆப்ரஹாம் லிங்கன்: யார் உனக்கு இரட்டை வேளைப் பணி கொடுத்தது ?
வில்லியம் ஸ்காட்: யாரும் ஆணையிடவில்லை ஸார் ! நானே முன்வந்து செய்தேன் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: ஏன் அப்படிச் செய்தாய் ?
வில்லியம் ஸ்காட்: வேலை செய்ய வேண்டிய என் தோழன் ஏனாக் ஒயிட் (Enoch White) நோயில் படுத்து விட்டான் ஸார். கடும் காய்ச்சல் அவனுக்கு ! நான் அவனுக்காக அவன் வேலையை எடுத்துக் கொண்டேன் ஸார். நாங்கள் இருவரும் வெர்மான்டைச் சேர்ந்தவர்கள் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: வெர்மான்டிலா நீ வசிக்கிறாய் ?
வில்லியம் ஸ்காட்: ஆமாம் ஸார் ! எங்களுடைய வயல் அங்கேதான் இருக்குது ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: இப்போது யாரந்த வயலை மேற்பார்வை செய்வது ?
வில்லியம் ஸ்டாட்: என் தாயார் ஸார் ! என்னிடம் தாயின் படம் உள்ளது ஸார். (பையிலிருந்து ஒரு படத்தை எடுக்கிறான்.)
ஆப்ரஹாம் லிங்கன்: உன் தாயிக்கு நீ செய்த குற்றம் தெரியுமா ? நீ நாளைக் காலையில் சுடப் பட்டுச் சாகப் போவது உன் தாயிக்குத் தெரியமா ?
வில்லியம் ஸ்காட்: தாயிக்குத் தெரியாது ஸார் ! தாயிக்குச் சொல்லக் கூடாது ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: தாயிக்கு ஏன் தெரியக் கூடாது என்று சொல்கிறாய் ?
Fig. 6
The Beginning of the End
வில்லியம் ஸ்காட்: நான்தான் சாகப் போகிறேன் நாளைக்கு ! அந்தச் செய்தியைக் கேட்டு என் தாய் சாகக் கூடாது ஸார் ! நான் உயிரோடு இருக்கிறேன் என்பது என் தாயுக்கு ஆயுளை நீடிக்கும் ஸார் !
ஆப்ரஹாம் லிங்கன்: அப்படியா ? உன் தாய் சாக வேண்டியதில்லை ஸ்காட் ! . . . நீயும் சாக வேண்டியதில்லை ! ஒருவரைச் சுடுவதால் இருவர் ஏன் சாக வேண்டும் ?
வில்லியம் ஸ்காட்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஸார் ? நான் குற்றவாளி. . . . ?
ஆப்ரஹாம் லிங்கன்: யாரும் உன்னைச் சுடப் போவதில்லை நாளை !
வில்லியம் ஸ்காட்: யாரும் என்னைச் சுடப் போவதில்லையா ஸார் ?
ஆப்ரஹாம் லிங்கன்: இல்லை ! இல்லை ! விடுதலை உனக்கு ! போ நீ சுதந்திர மனிதன் !
வில்லியம் ஸ்காட்: (குப்பென அழுகையுடன்) நன்றி ஸார் ! நன்றி ஸார் ! (தரையில் மண்டியிட்டு அழுகிறான். மேலே கைகளைக் கூப்பி வணங்கிக் கண்களை மூடிக் கொள்கிறான்.)
Fig. 7
Lincoln’s Gettysburg Speech
ஆப்ரஹாம் லிங்கன்: (காவலரை பார்த்து) அவிழ்த்து விடுங்கள் விலங்குச் சங்கிலியை ! அவனுக்கு விடுதலை ! அவன் பேச்சில் உண்மையைக் கண்டேன் ! அவன் கண் விழிக்க முடியாமல் போன காரணத்தை நம்புகிறேன் ! (ஜெனரல் கிரான்டைப் பார்த்து) அவன் குற்றத்தை நான் மன்னித்து விட்டதாக எழுதி நீக்கி விடுங்கள் ! ஸ்காட் ஒரு கடமை வீரன் ! அந்த நிலையில் எந்தப் படைக் காவலனும் தூங்கித்தான் போவான் ! இரட்டை வேளைக் காவல் புரியக் காப்டன் முதலில் அனுமதித்தது தவறு ! (காவலரைப் பார்த்து) ஸ்காட்டை ஜெனரல் மீடு இருக்கும் போர்க்களத்துக்குக் கூட்டிச் செல்வீர் ! சங்கிலியை நீக்குவீர் முதலில் ! ஸ்காட் சுதந்திர மனிதன் !
(விலங்குச் சங்கிலிகளை நீக்கி விட்டுக் காவலர் வில்லியம் ஸ்காட்டை கௌரமாக அழைத்துச் செல்கிறார்)
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play :
Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)
1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html
2. Chambers Encyclopedia (1968 Edition)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
6 (a) The Great Quotations Compiled By : George Seldes (1967)
7. The Wordsworth Dictionary of Quotations (1997)
8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)
9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)
10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).
11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)
12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)
13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)
14. The American Civil War – A History By : Mark Saunders (1993)
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (March 25, 2009)]
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு !
- என் மகள் N. மாலதி – (19-ஜூன் 1950—27 மார்ச் 2007) – 1
- சுப்ரபாரதிமணியனின் ” திரைவெளி “
- கம்ப இயக்கம் கம்பனடிப்பொடி (நூறாண்டு காணும் தமிழறிஞர்)
- காரைக்குடி கம்பன் அடிப்பொடி நூற்றாண்டு விழாவும் கம்பன் திருநாள் விழாக்களும் (ஏப்ரல் 5 முதல் 9 வரை)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -29 << காயப் படுத்தாதே ! >>
- கலில் கிப்ரான் கவிதைகள் << மரணமே கவிஞன் வாழ்வு >> கவிதை -4
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -5 பாகம் -2
- தலை குனியும் சமூகத்தில் சில நிமிர்ந்த தலைகள் – (3)
- மரணத்தை மையமாகக் கொண்ட வாழ்வின் வட்டப்பாதை மலர்ச்செல்வனின் “தனித்துத் திரிதல்”
- நட்சத்திரங்களை பொறுக்கிக் கொள்ளும் தவம்
- இன்னொரு சைக்கிள் ஒட்டியும் பின்னொரு சிறுவனும்…
- விடிவைத்தேடி இரவெல்லாம் ஓடி …
- சுயமில்லாதவன்
- சங்கச் சுரங்கம் — 7 : மையணல் காளை
- புதுமைப்பித்தனை முன்வைத்து வெ.சா.வின் வில்லங்கம்
- தமிழ் கற்பித்தல் திட்டம்
- தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)
- வறுமை தின்ற கவிஞன் – சாரணபாஸ்கரன்
- நேசத்துடன் காதலுக்கு
- மன்னிப்பு
- திரிசங்கு சொர்க்கம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- “ மனித நகர்வும் இரண்டாவது பிளவும் ”
- சேன் நதி – 1
- சேன் நதி – 2
- காங்கிரசின் பிரதமர் வேட்பாளருக்கு ஒரு கடிதம்
- மறுசிந்தனையில் இஸ்லாமிய கருத்தாடல்கள்
- வார்த்தை மார்ச் 2009 இதழில்
- உலகத் தீரே! உலகத் தீரே!
- நிலவற்ற மழை இரவில்
- மனதின் கையில்… .. ..
- வேத வனம் விருட்சம் 29
- அந்த இரவு