தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“என் மீது விழுந்த தாக்குதலுக்குப் பதில் தராது படிக்க மட்டும் நேர்ந்தால் இந்தக் கடையை மூடிவிட்டு வேறு பணிக்குப் போய்விடலாம். என்னால் கூடுமான வரை உன்னதப் பணியைச் செய்ய நான் முற்படுவேன். நான் மடிந்து போகும்வரை அப்படியே பணியாற்றி வருவேன். என் பணியின் விளைவுகள் பயனுள்ளதாயின், என் மீது தூற்றியவை புறக்கணிப்படும். ஆனால் அந்த விளைவுகள் தவறாக முடிந்தால், “நான் செய்தவை எல்லாம் ஒப்பற்றவை என்று பத்து தேவதைகள் பாராட்டினாலும் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.”
ஆப்ரஹாம் லிங்கன்
“அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் போது, அவருக்குக் கொடுப்பதிலும் அவர்களைப் பாதுகாப்பதிலும் நேர்மையாக நடந்து உரிமை உள்ளவருக்குச் சுதந்திரத்தை உறுதிப் படுத்துகிறோம். நாமந்த முயற்சியில் நேர்மையைக் காப்பாற்றலாம் அல்லது அவமதிக்கப்பட்டு உலகின் உன்னத நன்னம்பிக்கையை இழந்து போய்விடலாம். வேறு வழிமுறைகளால் வெற்றி அடையலாம். ஆனால் நமது குறிக்கோள் தோல்வி அடையக் கூடாது. நமது பாதை வெளிப்படையானது, அமைதியானது, பரிவு பந்தமுள்ளது. இம்முறையைப் பின்பற்றினால் உலகம் கைதட்டி நம்மை வரவேற்கும். கடவுள் நம்மை நிரந்தரமாய் ஆசீர்வதிப்பார்.”
ஆப்ரஹாம் லிங்கன், (Second Annual Message to Congress, Dec 1, 1862)
“இரு தரப்பாளரும் போர் மீது வெறுப்பைக் காட்டுகிறார். ஆனால் அவர்களில் ஒரு தரப்பாளர் தேசம் துண்டாகாமல் நீடிக்கப் போரிட முற்படுகிறார். அடுத்தவர் தேசம் நாசமாகட்டும் என்று போரை வரவேற்றுக் கொள்கிறார். ஆம் அந்தப் போரும் வந்தது.”
ஆப்ரஹாம் லிங்கன் (Second Inaugural Address, March 4, 1865)
முன்னுரை:
ஆப்ரஹாம் லிங்கன் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்து, சுயமாகக் கல்வி கற்று, வழக்கறிஞராகப் பட்டம் பெற்று மாநில, மத்திய சட்ட சபையில் உறுப்பினராகி இறுதியில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப் பட்டவர். அவரே அமெரிக்காவின் உன்னத ஜனாதிபதியாக வரலாற்று அறிஞர் பலரால் கருதப்படுபவர். அவரது காலத்தில் அமெரிக்காவின் தென்புறத்து மாநிலங்களில் செல்வந்தர் நில புலங்களில் அடிமைகளாய்ப் பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் (நீக்ரோ) நசுக்கப்பட்டுச் சமத்துவ நிலை அடையாது இன்னலுற்று வந்தார். அவரது அடிமை வாழ்வை ஒழித்திடக் கொதித்தெழுந்த அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன். அந்தக் குறிக்கோளை நிறைவேற்ற ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப் போரில் இறங்கி (American Civil War) சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டிய தாயிற்று.
வடபுறத்து மாநிலங்களும் தென்புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் இருபுறத்திலும் அநேகர் காயமுற்றுச் செத்து மடிந்தாலும், முடிவில் ஆப்ரஹாம் லிங்கனின் வடபுறத்து மாந்தரே வெற்றி பெற்றனர். பிரிந்து போன வடக்குத் தெற்கு மாநிலங்களை மீண்டும் ஒன்று சேர்த்து அமெரிக்க ஐக்கியத்தைக் காப்பாற்றிய பெருமை ஆப்ரஹாம் லிங்கனுக்கே சார்ந்தது. அத்துடன் அடிமை வாழ்வொழித்த அத்தகைய மகத்தான போராட்டத்தில் வெற்றி பெற்ற ஐந்து நாட்களில் வாஷிங்டன் தியேட்டரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போது தென்மாநிலத்தைச் சேர்ந்த ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் இரண்டாம் முறை ஜனாதிபதியான ஆப்ரஹாம் லிங்கன் சுடப்பட்டு அமரரானார்.
ஆப்ரஹாம் லிங்கன் 1809 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார். அவரது தாயார் நான்சி ஹாங்க்ஸ், லிங்கன் ஒன்பது வயதாகும் போது காலமாகி விட்டார். தச்சு மரவேலை செய்த தந்தையார் தாமஸ் லிங்கன் இரண்டாம் தாரமாக மணந்த மாற்றாந் தாய் லிங்கனைப் பரிவோடும் கனிவோடும் வளர்த்தார். தனது 23 ஆவது வயதில் முதன்முதல் ஆப்ரஹாம் லிங்கன் “பிளாக் காக் போரில்” (Black Hawk War) கலந்து காப்டனாகப் பணியாற்றியது அவருக்குப் புதியதோர் பாதையைக் காட்டியது.
1834 இல் ஆப்ரஹாம் லிங்கன் இல்லினாய்ஸ் மாநில மக்கள் மன்றத்தில் கீழ் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் அரசாங்கப் பணியில் வேலை செய்தார். லிங்கன் தனது 33 ஆவது வயதில் (1842) மேரி டாட் (Mary Todd) என்னும் மாதை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 1847 -1849 ஆண்டுகளில் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினராக ஒரு தவணைப் பணிபுரிந்தார்.
1860 இல் ரிப்பபிலிகன் நியமிப்பாளியாகி ஜனாதிபதித் தேர்வில் வெற்றி பெற்று 1861 மார்ச்சில் 16 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றார். லிங்கன் பதவி ஏற்புக்குச் சில மாதங்கள் முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து (Union) தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் ஏழு மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றன ! அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி முதல் தேதி ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்கக் கூட்டு மாநிலங்களில் (Confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான “விடுதலைப் பிரகடனம்” (Emancipation Proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென்பகுதி மாநிலங்களுக்கும், வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது !
அடிமைகள் ஒழிப்புப் பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆப்ரஹாம் லிங்கனின் பெரும் பிரச்சனையாகி, நீண்ட போராட்டமாகி விட்டது. 1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் பேருரையில் (Gettysburg Speech) கூறியது : “விடுதலை உணர்ச்சியுள்ள ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப் போர் நடத்தப் படுகிறது. எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப் பட்டவர் என்னும் உன்னத வாசகம் மேற்கொள்ளப் படுகிறது. மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் இந்தப் பூதளத்திலிருந்து அழிந்து போகா.”
1864 ஆம் ஆண்டு நிகழ்ந்த தேர்தலில் 400,000 ஓட்டுகள் மிகையாகப் பெற்று இரண்டாம் தடவைப் போர் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப் பட்டு வெள்ளை மாளிகை வேந்தராக நீடித்தார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டுப் போரில் மகத்தான் வெற்றி பெற்று தென்பகுதி மாநிலங்களின் போர்த் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடப்பகுதி இராணுவத் தளபதி கிரான்ட் (General Grant) முன்பு சரணடைந்த ஐந்தாம் நாள், ஆப்ரஹாம் லிங்கனை வாஷிங்டன் நாடகத் தியேட்டரில் ஜான் வில்கிஸ் பூத் (John Wilkes Booth) சுட்டுக் கொன்றான். பிரிந்து போன வடதென் அமெரிக்க மாநிலங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தன ! தென் பகுதி அமெரிக்க அடிமைக் கறுப்பருக்கு எல்லாம் விடுதலை கிடைத்தது ! ஆனால் வரலாற்று முக்கியத்துவம் உள்ள மகிழ்ச்சிகரமான அந்த வெற்றியைக் கண்டுகளிக்க அவற்றின் ஆக்க மேதை ஆப்ரஹாம் லிங்கன் அப்போது உயிரோடில்லை !
*************************
ஆப்ரஹாம் லிங்கன்
(வரலாற்று நாடகம்)
(பத்து மாதங்களுக்குப் பிறகு)
காட்சி -2 பாகம் -7
பங்கெடுப்போர் :
ஆப்ரஹாம் லிங்கன் – பதவி ஏற்ற அமெரிக்க ஜனாதிபதி
வில்லியம் ஸீவேர்டு : அமெரிக்கப் பொதுச் செயலாளர் (William Seward, Secretary of State)
ஜான்ஸன் வொயிட் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Johnson White, Commissioner of Confederate States)
காலெப் ஜென்னிங்ஸ் : தென்பகுதிக் கூட்டு மாநிலப் பிரதிநிதி (Caleb Jennings, Commissioner of Confederate States)
மற்றும் ரிப்பபிளிக்கன் கட்சி அரசியல்வாதிகள்.
இடம் : வாஷிங்டன் D.C. இல் வில்லியம் ஸீவேர்டின் அறை
(இதுவரை நடந்தது)
ரிப்பபிளிகன் குழுத் தலைவர் வில்லியம் டக்கர் ஆப்ரஹாம் லிங்கனை வரப்போகும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரிப்பபிளிகன் தேர்வாளராய் நிற்பதற்குச் சம்மதம் கேட்க ஆப்ரஹாம் லிங்கன் ஒப்புக் கொள்கிறார். லிங்கன் தேர்தலில் நின்று முதன்முறையாக அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்கிறார்.
இப்போதைய காட்சி: லிங்கனின் ரிப்பபிளிக்கன் கட்சி அரசாங்கப் பொதுச் செயலாளர் (Secratary of State) வில்லியம் ஸீவேர்டு தன் அறையில் அமெரிக்கத் தென்பகுதிக் கூட்டு மாநிலங்களின் கமிஷனர் (Commissioners of Southern Confederate States) ஜான்ஸன் வொயிட், காலெப் ஜென்னிங்ஸ் ஆகியோருடன் அமர்ந்து அடிமைத்தன ஓழிப்பைப் பற்றியும் வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றியும் பேசிக் கொண்டிடுருக்கிறார். திடீரென்று லிங்கன் ஸீவேர்டு அறைக்குள் நுழைகிறார். தென்னகத்தின் பிடிவாதத்தை வெளியிடும் வொயிட், ஜென்னிங்ஸ் உரையாடல்கள் லிங்கனுக்கு வெறுப்பூட்டுகின்றன. வரப் போகும் உள்நாட்டுப் போரைப் பற்றி இருவருக்குள்ளும் தர்க்கம் நடக்கிறது. அப்போது சம்டர் கோட்டை முற்றுகை செய்யும் மேஜர் ஆண்டர்ஸன் அனுப்பிய படைத் தூதுவன் அதிர்ச்சித் தகவலைக் கொண்டு வருகிறான். பிறகு நிதிப் பொறுப்புச் செயலாளர் ஸால்மன் சேஸ், (Treasury Secretary Salmon Chase) அஞ்சல் துறை அதிபர் மாண்ட்கொமரி பிளேர் (Postmaster General Montgomery Blair) இருவரும் நுழைகிறார். மற்றும் அரசாங்க உறுப்பினர் சிமான் காமரான் (Simon Cameron), காலப் ஸ்மித் (Galeb Smith), பர்னெட் ஹ¥க் (Burnet Hook) ஆகியோர் வருகிறார்கள். அவரோடு கலந்து போர் சம்மந்தமாக உரையாடுகிறார் லிங்கன்.
(சென்ற வாரத் தொடர்ச்சி)
பர்னெட் ஹ¥க்: இப்போது நாம் பின்வாங்கினால் தென்னவருக்கு அனுகூலமாய்ப் போய்விடாதா ? தென்னவர் ஆதிக்கம் ஓங்கி விடாதா ? அழுத்தமான பிடியை நாம் தளர்த்தி விட்டால் அவருக்குச் சாதகமாகப் பொதுமக்கள் மனம் மாறிவிடாதா ?
லிங்கன்: என் உள்ளம் தெளிவாக உள்ளது. நமது படை அழுத்தத்தைத் தளர்த்தவே கூடாது. சம்டர் கோட்டை முற்றுகையை நிறுத்திப் பின்வாங்கினால் தேசப் பிளவுக்குத் தென்னக மாநிலங்கள் பாதை வகுக்கும். அடிமைத்தனக் கொடுமை பரம்பரையாய்த் தொடரும். இன்றைக்கு இதை நீக்காவிட்டால் இன்னொரு வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.
பிளேர்: பிரசிடெண்டு கூறுவதுதான் முறை. நானதை வரவேற்கிறேன்.
பர்னெட் ஹ¥க்: (தயக்கமுடன்) நானதை வரவேற்க வில்லை. போரைத் தவிர்க்க முற்றுகையை விட்டு விலகுவது தோல்வியாகாது. நமக்குச் சிந்தைனை செய்யக் காலம் கிடைக்கிறது. நாம் பின்வாங்க வேண்டும். உயிர்ச் சேதம், பொருட் சேதம் இருபுறமும் தவிர்க்கப்படும்.
லிங்கன்: உங்களுக்குத் தெரிய வில்லையா ? நாம் இப்போது பின்வாங்கினால் போர் தாமதப் படும். ஆனால் போர் தவிர்க்கப்படாது. போர் வராமல் போகாது. ஒன்று இப்போது முன்னிற்கும் போர் அல்லது நம்மேல் பின்னால் புகுத்தப்படும் போர் ! தீயில் காய்ந்து இரும்பு செந்நிறத்தில் மென்மையாக உள்ள போது அதை நினைத்தபடி அடித்து நெளிப்பது எளிது ! இந்த நேரத்தைத் தவற விட்டால் இரும்பு மறுபடியும் இறுகிப் போய் உறுதியாகி விடும் ! போரை நாம் தவிர்க்க முடியாது ! நமது பிரச்சனை இப்போது : தற்போது போரா ? அல்லது தள்ளி வைக்கும் போரா ?
காலெப் ஸ்மித்: நாம் உறுதியாக எதிர்த்து நின்றால் போரைத் தவிர்க்க முடியாதல்லவா ?
லிங்கன்: அதைத்தான் நானும் வலியுறுத்துவேன் ! அப்போது நம் காரணத்துக்கு வலு மிகுதியாகும் ! நம் கொள்கைக்குப் பெரு மதிப்பு கிடைக்கிறது ! தளர விட்டால் நமது கொள்கையும் தண்ணீராய்ப் போகும் ! மிஸ்டர் சேஸ் ! உங்கள் கருத்தென்ன ?
ஸால்மன் சேஸ்: மிகவும் சிக்கலான பிரச்சனைதான் ! ஆனால் என் கருத்து இப்போது பின்வாங்காமல் நீங்கள் சொல்வதுபோல் போரைத் தொடர்வது !
லிங்கன்: மிஸ்டர் ஸீவேர்டு ! உங்கள் கருத்தென்ன ?
ஸீவேர்டு: உங்கள் கருத்தை மதிக்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட். ஆனால் அதில் உடன்பாடில்லை எனக்கு !
லிங்கன்: (மிக்க வியப்புடன்) என்ன ? என் கொள்கையில் உமக்கு உடன்பாடில்லையா ? இரட்டைக் குதிரைகள் இழுக்கும் வாகனம் எப்படி நேராகப் போகும், ஒரு குதிரை வலப்புறமும் அடுத்த குதிரை இடப்புறமும் திரும்பினால் ?
(அப்போது கதவு தட்டும் அரவம் கேட்கிறது)
லிங்கன்: உள்ளே வரலாம்.
(ஹே வருகிறார். லிங்கன் கையில் ஒரு கடிதத்தைக் கொடுத்து விட்டுப் போகிறார்)
லிங்கன்: (கடிதத்தைப் படித்து) மேலும் இருபதினாயிரம் படையினர் தேவை என்று கூறுகிறார் நமது ஜெனரல் ஸ்காட்.
ஸீவேர்டு: (உடனே) நம்மிடம் இருபதினாயிரம் படையினர் இல்லை மிஸ்டர் பிரசிடெண்ட் !
லிங்கன்: படையினரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கப் பல மாதங்கள் ஆகலாம் ! ஆயினும் கோட்டை முற்றுகையை நீடிப்போம். முதலில் உணவுப் பண்டங்களை நாம் அனுப்புவோம். உங்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது, இவற்றை எல்லாம் எடைபோட்டுப் பார்க்க ! போரைத் தளர்த்துவது போரை ஒருபோதும் நிறுத்தாது ! கோட்டை முற்றுகை தொடர வேண்டும் நம்மிடம் உள்ள படைகளைக் கொண்டு ! எந்த விதத்திலும் முயன்று படைகளை நாம் வலுப்படுத்த வேண்டும் ! மன உறுதி தளரக் கூடாது ! தேச ஐக்கியத்தை எப்படியாவது நாம் காக்க வேண்டும் ! போரை நினைத்தாலே என் நெஞ்செல்லாம் நடுங்குகிறது ! ஆனால் நமது காரணம் உன்னத மானது ! புனித மானது ! எதிர்காலச் சந்திகளுக்குத் தேவையானது ! நாம் ஆத்திரத்தால் எதையும் ஆக்கிரமிக்கப் போகவில்லை ! தேசப் பிளவைத் தடுக்கப் போரிடுகிறோம். நாம்தான் ஆக்கிரமப் பட்டிருக்கிறோம். நமது பரிவான அறிவுறுத்தல் யாவும் தோற்றுவிட்டன ! எதிர்த்துப் போரைத் தொடர்வதே நமது பிரதான கடமை ! அரசவை உறுப்பினரே ! உமது ஒத்துழைப்பில்தான் நமக்கு வெற்றி கிடைக்கும் ! (சிறிது தாமதித்து) கோட்டைப் படைக்கு உணவுப் பண்டங்கள் அனுப்புவதை ஆதரிப்போர் யார்யார் ?
(லிங்கன், சேஸ், பிளேர் மூவர் கரத்தை உயர்த்துகிறார்)
லிங்கன்: முற்றுகையை நிறுத்திப் பின்வாங்குவதை ஆதரிப்போர் யார்யார் ?
(ஸீவேர்டு, காமரான், ஸ்மித், ஹ¥க் நால்வர் கரத்தைத் தூக்குகிறார்)
லிங்கன்: உங்களில் பெரும்பான்மையோர் முடிவைக் கண்டு நான் வருத்தம் அடைகிறேன். உங்களிடமிருந்து அந்தப் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் வாக்குகளை மீறிச் செல்கிறேன். எனது “மீறல் தடுப்பைப்” (Veto Power) பயன்படுத்துகிறேன். நான் அமெரிக்கக் காங்கிரஸ் மற்றும் பொதுநபர் திருப்திக்குக் கடமைப் பட்டவன். (தயக்கமுடன் ஆனால் கடுமையாக) யாராவது என் முடிவான தீர்மானத்தை வரவேற்கா விட்டால் பதவியை விட்டு விலகிக் கொள்ளலாம் இப்போது ! யார் பதவியை விடுவதற்கு முன்வருகிறார் ?
(மௌனம் நிலவுகிறது. எல்லோரும் பிரமிப்பில் அசையாமல் நிற்கிறார்)
லிங்கன்: நன்றி உங்கள் வரவேற்புக்கு கோமான்களே ! நீங்கள் போகலாம். கலப்புரையாடல் முடிந்தது.
(எல்லாரும் போகிறார்கள். ஸீவேர்டு மட்டும் போகாமல் நிற்கிறார்)
லிங்கன்: (சினத்துடன்) தவறு, தவறு ஸீவேர்டு ! தவறு. உமது மாறான கருத்து தவறானது.
ஸீவேர்டு: உங்களை நம்புகிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் ! உங்கள் தீர்மானத்தை மதிக்கிறேன் ! அதோடு சரி ! ஆனால் நான் உணர்வதைச் சொல்ல வேண்டும். என் நெஞ்சம் உரைப்பதைச் சொல்லத்தான் நினைக்கிறேன்.
லிங்கன்: மிக்க நன்றி ! பார்க்கலாம். வந்த தூதரிடம் நான் தனியாகப் பேச வேண்டும்.
(ஸீவேர்டு வெளியேறுகிறார். நிலையாய் நிற்கும் லிங்கன் அமெரிக்கப் படத்தைப் பார்க்கிறார். பிறகு கதவைத் திறந்து தூதரை அழைக்கிறார்.)
லிங்கன்: உள்ளே வா ! கதவை மூடு. உடனே மேஜர் ஆண்டர்ஸனிடம் தகவல் தரப் போக வேண்டும் நீ !
தூதுவன்: அப்படியே செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !
லிங்கன்: ஆண்டர்ஸனிடம் சொல் ! மேற்கொண்டு வலுப்படுத்த உடனே படைகள் அனுப்ப எம்மால் இப்போது முடியாது. எங்களிடம் இல்லை என்று சொல் !
தூதுவன்: சொல்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !
லிங்கன்: மேலும் சொல் ! தேவைப் பொருட்களின் முதல் வாகனப் பயணம் வாஷிங்டனிலிருந்து அனுப்ப ஏற்பாடு செய்வேன் இன்று மாலையே !
தூதுவன்: அப்படியே சொல்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் !
லிங்கன்: சரி போய்வா ! (தூதன் வெளியேறுகிறான்) (லிங்கன் மணி அடிக்கிறார். பணியாள் வருகிறான்.) மிஸ்டர் ஹேயை வரச் சொல். (பணியாள் ஆமோதித்துப் போகிறான்.)
(மிஸ்டர் ஹே வருகிறார்)
லிங்கன்: ஜெனரல் ஸ்காட்டை உடனே அழைத்து வா ! நான் அவருடன் பேச வேண்டும்.
மஸ்டர் ஹே: செய்கிறேன் மிஸ்டர் பிரசிடெண்ட் (ஹே போகிறார்)
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
Abraham Lincoln – Play By : British Playwright John Drinkwater (1882), School Edition
The Copp Clark Company Ltd, Toronto, Canada (1927)
1. Biography of Abraham Lincoln (www.whitehouse.gov/history/presidents/al16.html
2. Chambers Encyclopedia (1968 Edition)
3. Encyclopaedia Britannica (1973 Edition)
4. The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)
5. Britannica Concise Encyclopedia (2003 Edition)
6. The Oxford Dictionary of Quotations New Edition (1992)
7. The Wordsworth Dictionary of Quotations (1997)
8 The Life of Abraham Lincoln By Stefan Lorant. (1961)
9. Lincoln The Unknown By Dale Carnegie (1959)
10. Great Issues in American History – From the Revolution to the Civil War (1765-1865) By Richard Hofstadter (1958).
11. Abraham Lincoln -The Prairie Years & The War Years By Carl Sandburg -One Volume Edition (1954)
12 The Emergence of Lincoln – Prologue to Civil War (1859-1861) By Allan Nevins (1950)
13. Abraham Lincoln -The Man Behind the Myths By : Stephen B. Oates (1985)
14. The American Civil War – A History By : Mark Saunders (1993)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 14, 2008)]
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பால்வீதி மையத்தில் பூதக் கருந்துளை (கட்டுரை 50 பாகம் -1)
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -19 << அருகில் நீ இல்லாமை !>>
- தாகூரின் கீதங்கள் – 64 வந்தனம் உனக்கு அதிபனே !
- பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்
- அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்
- உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்
- உலகத் தமிழ்ச் சமயக் கோட்பாடுகள் கருத்தரங்கம்
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3
- ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1
- கொற்றவை படைத்த ஜெயமோகன்
- ஈழத்து இலக்கியம் வாழ்வும் வலியும்
- அழகியலும் எதிர் அழகியலும்
- தாய்த்தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக்கு ‘மக்கள் விருது 2008’
- கவிதை நூல் “கருவறைப் பூக்கள்” 26-01-09 ல் வெளியீடு
- தமிழர் திருநாள் (தாயகக் கவிதைகள்) வெளியீட்டு நிகழ்வு
- எஸ்ஸார்சி எழுதிவரும் “வேதவனம்”
- பயணக் கட்டுரைகள் ” திசைகளின் தரிசனம் “
- சென்னை புத்தகக் கண்காட்சி 2009-ல் எனிஇந்தியன்.காம்
- விதி விலக்கான சில ஆச்சரிய நிகழ்வுகள்
- நினைவு மலர்களின் தொகுப்பு வரிசையில்…நின்று நிலைக்கும் நினைவுத் தொகுப்பு
- பொங்கல் வாழ்த்துகள்
- உயிர்ப்பிக்கும் ஏசுநாதர்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865)காட்சி -2 பாகம் -7
- விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்திமூன்று
- தமிழில் தந்தி முறையைக் கண்டுபிடித்த அ. சிவலிங்கனார்
- சூரியன் வருவான்
- கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?
- நினைவில் எம்.ஜி.ஆர்
- தேசபக்தி பற்றி தீராநதியில் அ மார்க்ஸ் எழுதிய கட்டுரை
- யமுனா ராஜேந்திரன் உயிர்மையில் புரிந்த அவதூறுக்கு பதில்
- பெருந்துயரின் பேரலை
- பொம்மை நேசம்
- கொடுமையிது! அறக்கொலையே
- கவிதைகள்
- பிறப்பு…
- வேத வனம் விருட்சம் 19
- ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே
- கஜினி Vs கஜினி
- சூரிய ராகம்