தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
இந்துக்களுக்கு நான் காட்டும் எனது வழிமுறை இதுதான். அவர் எதையும் விட்டுக் கொடுக்க வேண்டி தில்லை. நமது வேத ஞானிகள் வகுத்த பாதையைப் பின்பற்றினால் போதுமானது. அடிமைத் தொழில் உண்டாக்கும் முடக்கத்தை (Inertia, the Result of Servitude) விட்டொழிப்பீர். நம் பாதையில் நமக்கு வகுத்த பாதையில் நாமெல்லாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாட்டுக்கும் உலக நடப்பில் முக்கியமாக ஒரு புத்துணர்ச்சி ஓட்டம் (A Main Current) உருவாகியுள்ளது ! இந்தியாவில் அது மதமாக உருவாகி உள்ளது. அதை உறுதி ஆக்குவீர் ! இருபுறத்திலும் ஓடும் நீர் வெள்ளம் அதன் போக்குடன் ஒன்றிச் செல்ல வேண்டும்.
இந்தியனாக இருப்பதில் பெருமைப்படு. “நானொரு இந்தியன். ஒவ்வோர் இந்தியனும் என் சகோதரன் என்று பீடுடன் பறைசாற்று.” உனது உச்சக்குரலில் முழக்கமிடு பெருமையாக, “இந்தியன் என் சகோதரன். இந்திய வாழ்க்கை என் வாழ்க்கை. இந்தியத் தெய்வங்கள் எனது கடவுள். இந்தியச் சமூகம் குழந்தையாய் என்னைத் தாலாட்டி வளர்த்தது. இதுவே என் இளமை வாழ்வின் ஆனந்தத் தோட்டம். முதிய வாழ்க்கையின் எனது புனித சொர்க்கம்.” சகோதரா ! சொல் நீ, “இந்திய மண்ணே என் உன்னத மேலோகம். இந்தியாவின் நற்காலம் எனது நற்காலம்” என்று. இரவும் பகலும் திரும்பத் திரும்ப உச்சரி: “பிரபஞ்சத் தாயே ! பரம்பொருள் சக்தியே ! மனிதப் பண்பை (Manliness) எனக்குள் திணிப்பாய் ! சக்தி அன்னையே ! எனது பலவீனத்தை நீக்கிடு ! எனது மனிதக் கொடூரத்தை அழித்திடு. என்னை மனிதனாக ஆக்கிடு.”
கர்மயோகி விவேகானந்தா (1863-1902)
உன்னத மனிதரை உருவாக்க . . . .
ஆரோக்கிய மற்றோருக்கு மலட்டுத்தனம் உண்டாக்குவதை (Sterilization of the Unhealthy) விட மிகச் செலவாவது ஆரோக்கியமுள்ளவரை ஆரோக்கியமற்றவரிடம் உடலுறவு கொள்ள வைக்கும் முறை. அவ்விதம் ஆரோக்கியமுள்ள மனித நலப்பாடு, ஆரோக்கியமற்ற நலப்பாடுத் தன்மைகளைத் தெளிவாக அறிவதில் தவறுகள் நேரலாம். அத்தகைய தவறுகளை மனித அனுபவம் திருத்திச் செம்மைப்படுத்த முடியும். உன்னத குடிமக்கள் இன்பத் திருமணத்திலிருந்து பிறக்கும் பிள்ளைகளாய் எழுவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ! உணர்ச்சி முறிவு (Conflict of Temperament) இடையிடையே தோன்றும் திருமண வாழ்க்கையில் உன்னத மாந்தர் உதிப்பதற்கு வாய்ப்பில்லை என்பதற்கும் ஆதாரமில்லை ! அந்தக் கருத்துக்கு முரணாக பொருத்தமற்ற இரண்டு திருமணத் தம்பதிகள் கூடிப் பிறக்கும் குழந்தைகள் மேம்பட்டவராய்த் திகழ்வது நிகழக் கூடிய ஒன்றே. அவ்விதம் எதிர்பாராது நடக்கும் இல்வாழ்வு போல் இப்போது கருத்துக்கு முரணான தம்பதிகள் இணைந்து சோதனை புரிவதை நேரடியாக செய்து பார்க்கலாம். அப்படிச் செய்யும் சோதனையில் தம்பதிகள் உடலுறவை மட்டும் அனுமதித்துத் திருமணத்தைக் கட்டாயப் படுத்தாமல் இருப்பது நல்லது !
உடலுறவில் பங்கு கொள்ளும் பூர்த்தித் தம்பதிகள் இருவர் (இல்லாததில் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்யும் இரட்டைத் தம்பதிகள் -Two Complementary Couples) ஒருவர் குறைபாட்டை மற்றவர் நிறைவு செய்து பூரண மாக்கலாம். ஆனால் திருமண வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பூர்த்தித் தம்பதிகள் தம்முள் இருக்கும் வேறுபாடுகளைத் தெரிந்து கொண்டாலும், அவற்றால் அவர் இருவரும் வேதனைப் படுவதையே காண்கிறோம். உருண்டு திரண்டு புன்னகையோடு இருக்கும் பிரிட்டீஷ் கோமகனாரின் புதல்வனும், அதே சுவைப் பண்புள்ள வகுப்பு நிலை உயர்ந்த நாகரீக அறிவாளி யுதப் பெண்ணும் தமது பெற்றோரை விடவும் உன்னத புத்திசாலிகளாய் இருப்பர். ஆயினும் அந்த யூதப் பெண் பிரிட்டீஷ் கோமகனார் புதல்வனைத் தனக்குகந்த துணைவனாகக் கருதமாட்டாள். அவனுடைய பழக்க வழக்கங்கள், நண்பர்கள், வாழுமிடம், வாழ்வின் போக்கு எதுவும் யூதப் பெண்ணுக்கு இனிதாகத் தோன்றாது ! ஆதலால் மணவாழ்வு என்பது உடலுறவுக்கு நிபந்தனையாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் உன்னத மனிதன் படைப்புக்கு அது முட்டுக்கட்டை போடுவதாகும் !
பெர்னார்ட் ஷா (புரட்சிவாதியின் கோட்பாடுகள்)
மனித இன அழிவுக்கு நான் திட்டமிட வில்லை. நான் முழுவதும் கூறி முடிப்பதற்குள் தடைசெய்யப் பட்டேன். நான் விளக்கிய மனித மலடாக்கம் தவிர்க்க முடியாத வருங்காலத் தேவையானால் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பும் என்று அறிவேன். இனப்பெருக்கத்தின் குறிக்கோள் உன்னத மனிதரைப் படைப்பது ! அப்படி உன்னத மாக்குவது மனித முயற்சிக்கு அப்பாற் பட்டதோர் மேம்பாட்டுப் பணியாக உள்ளது !
ஆண்-பெண் தம்பதிகள் உடலுறவு கொள்வது அவரது தனியுரிமைச் செயலுமில்லை ! நட்புரிமைச் செயலுமில்லை ! அந்த உடலுறவு புனித உறவு என்று சொல் ! தூய உறவு என்று சொல் ! ஒப்புக் கொள்கிறேன் ! ஆனால் அது தனி உறவு இல்லை ! நட்புறவு இல்லை ! கடவுளிடம் நீ கொண்டுள்ள ஆன்மீக உறவு தூயது ! மேலும் புனிதமானது ! அதைத் தனி உறவு, நட்புறவு என்று தைரியமாய்ச் சொல்வாயா ? தம்பதிகள் கவர்ச்சியாலும், தனிமைத் தவிப்பாலும், உடலுறவு கொள்ளத் தூண்டுவது “உலகளாவிய இனவிருத்திப் படைப்புச் சக்தி” (Universal Creative Energy) ! அது ஒரு திசைப்பாதை ! அதனுள் வீழ்ந்த தம்பதிகள் தவிர்க்க இயலாத நிலையில் மீள முடியாது தத்தளிப்பவர் ! காப்பாற்ற முடியாமல் அந்தக் கணத்தில் அவர் இருவரும் தூக்கிச் செல்லப் படுகிறார் ! அப்போது அவரது சிந்தனா சக்தியும் இழக்கப் படுகிறது !
தம்பதிகள் முற்றிலும் அன்னியராக இருக்கலாம் ! வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவராய் இருக்கலாம் ! வேறு மொழிகள் பேசலாம் ! மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கலாம் ! மதம், இனம், நிறம், வயது எல்லாம் வேறாக இருக்கலாம் ! கண நேரத்தில் கட்டுப்பாடு களைந்து ஒட்டிக் கொண்டோர் அடுத்த கணம் தவறு செய்து விட்டோம் என்று கண்ணீர் வடிக்கலாம் !
பெர்னார்ட் ஷா (உன்னத மனிதன் நாடகம்)
****************
உன்னத மனிதன்
(பெர்னார்ட் ஷா)
அங்கம் : 3 பாகம் : 13
(சுருக்கப் பட்டது)
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் சூசன் ராம்ஸ்டன் (Miss Susan Ramsden) – ரோபக் ராம்ஸ்டனின் சகோதரி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker) – ஜான் டான்னரின் காரோட்டி
6. ஹெக்டர் மலோன் (Hector Malone) –
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை – அமெரிக்கக் கோமகன்
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Angus Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson) அக்டேவியஸின் தங்கை. (18 வயது)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 3 பாகம் : 13)
(சுருக்கப் பட்டது)
கதா பாத்திரங்கள்: காதல் மன்னன் தாஞ் சுவான் (Don Juan), ஒரு வாலிப மாது, ஸ்பானியர் மென்டோஸா, ஜான் டான்னர், சாத்தான் (பெர்னாட் ஷாவின் கற்பனை வில்லன்)
காலம்: காலை வேளை
இடம்: நரகம் (பெர்னாட் ஷாவின் கற்பனைத் தீய உலகம்)
(காட்சி அமைப்பு): காதல் மன்னன் தாஞ் சுவான் நரகத்தில் ஒரு வாலிப மங்கையைச் (ஆன்னி வொயிட்·பீல்டு) சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். புதல்வியைக் காண தந்தை மிஸ்டர் வொயிட்·பீல்டு சொர்க்கத்திலிருந்து வயோதிகராக வருகிறார். சாத்தான் மூவரையும் சந்திக்கிறான்.
தாஞ் சுவான்: இளம்மாதே கேள் ! மனமிருந்தால் மார்க்கம் உண்டு ! மனிதன் தான் விரும்புவதைத் தேடிப் பிடிக்க ஒரு வழியை அமைத்துக் கொள்வான். உன்னைப் போன்ற நேர்மையான பெண்டிர் தம்மால் இயன்றதைத் சாதித்திருக்கிறார் ! ஆடவரின் மனத்தை வளைத்து பெருமைக்குரிய காதலே உயர்ந்த தென்று காட்டி வருகிறீர். பெண்டிருக்குத் தமது இளமை, உடல்நலம், வனப்பு, வடிவாக்கம், எல்லாவற்றையும் விட நாகரீக நடத்தை ஆகியவை மதிப்பளிப்பவை என்று எடுத்துச் சொல்கிறீர் ! மனிதரின் வேண்டுதல் என்ன ? தனக்கெனக் காதல், வனப்பு, காதற் களியாடல் (Romance), மனக்கிளர்ச்சி (Emotion), வெறியாசை (Passion) போன்றவை எழுப்பும் ஒரு முறையைக் கண்டுபிடிப்பது ! பண ஆசை பிடித்தோர், கற்பனைக் கவிஞர், வெற்றி வீரர், கலைஞர், காதல் மன்னர் யாவரும் இனப்பெருக்கு உந்துசக்தியை (Force of Life) எதிர்ப்பார். அந்த உந்துசக்தியே மனித மலட்டுத் தன்மைக்குப் படைப்புச் சாதனம் !
முதியவர்: மிக்க ஆழமான கருத்து நண்பரே ! நான் ஆன்னியின் தாயை மணந்தது உமக்குத் தெரியாமல் இருக்கலாம். எப்படி நான் அவளை மணந்தேன் என்று இப்போது சிந்திக்கிறேன் ! என்னைக் கண்டுபிடித்து எனக்குக் கால்விலங்கு போட்டவள் என் மனைவிதான் ! திருமணம் முடிந்தபின் நான் என் தலையணையில் முட்களை நட்டதாக உணர்ந்தேன் ! எனது மணவாழ்கை ஒரு தோல்விக் கேலிக்கூத்து ! நான் கற்றுக் கொண்டது என்ன ? திருமணம் புரியாமல் காலம் கடந்தி யிருக்கலாம் என்பது !
இளம்மாது: அப்பா என்ன சொல்கிறீர் ? இப்படி நமது குடும்ப வாழ்வை நீங்கள் இகழ்ந்து பேசலாமா ? எனக்கு அவமானம் ! அன்னைக்கும் அவமதிப்பு ! தலை நிமிர்ந்து எப்படி நீங்கள் தெருவில் நடப்பீர் ? தலையணை முட்கள் என்றால் நானும் அந்த முட்களில் ஒன்றா ?
முதியவர்: இல்லை ஆன்னி ! நீ என் வாசனை ரோஜா ! நீ கொடுத்த துன்ப மெல்லாம் உன் தாயிடம் இருந்தன ! நான் வெறுப்பது உன் தாயை ! அவளுடைய நாக்கு ஒரு தேள் நாக்கு ! அதன் தாக்குதலில் நான் தவித்ததுண்டு ! வலி தாங்காமல் நான் துடித்ததுண்டு ! உனது நாக்கில் முட்களில்லை !
சாத்தான்: ஆரோக்கியமற்ற தம்பதிகளை மலடாக்கும் உமது தத்துவம் என்னை முள்ளாய்க் குத்துகிறது ! அது மனித நேயமற்ற முறை ! மனித உரிமையைப் பறிக்கும் பயங்கர நெறி ! ஒரு சிலரை மட்டும் மலடாக்கும் உமது மனித ஈனச்செயல் மடத்தனமான வழி ! மனித இனத்தை அழிக்கும் திட்டம் ! அந்தக் கடுஞ்செயல் நியாய மற்றது ! நீவீர் போற்றும் கலைஞரும், கவிஞரும் கூட அந்தக் கோட்பாடை ஏற்றுக் கொள்ள மாட்டார் !
தாஞ் சுவான்: மனித இன அழிவுக்கு நான் திட்டமிட வில்லை. நான் முழுவதும் கூறி முடிப்பதற்குள் தடைசெய்யப் பட்டேன். நான் விளக்கிய மனித மலடாக்கம் தவிர்க்க முடியாத வருங்காலத் தேவை யானால் பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பும் என்று அறிவேன். இனப் பெருக்கத்தின் குறிக்கோள் உன்னத மனிதரைப் படைப்பது ! அப்படி உன்னத மாக்குவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதோர் மேம்பாட்டுப் பணியாக உள்ளது ! ஆண்-பெண் தம்பதிகள் உடலுறவு கொள்வது அவரது தனியுரிமைச் செயலுமில்லை ! நட்புரிமைச் செயலுமில்லை !
இளம்மாது: என்ன வேடிக்கைப் பேச்சு இது ? ஆண்-பெண் உடலுறவு தனியுரிமைச் செயலில்லையா ? நட்புரிமைச் செயலுமில்லையா ? இது இல்லாவிட்டால் வேறு எந்த உறவு தனி உறவு ? புனித உறவு ? தூய உறவு ?
தாஞ் சுவான்: அந்த உடலுறவு புனித உறவு என்று சொல் ! தூய உறவு என்று சொல் ! ஒப்புக் கொள்கிறேன் ! ஆனால் அது தனி உறவு இல்லை ! நட்புறவு இல்லை ! கடவுளிடம் நீ கொண்டுள்ள ஆன்மீக உறவு தூயது ! மேலும் புனிதமானது ! அதைத் தனி உறவு, நட்புறவு என்று தைரியமாய்ச் சொல்வாயா ? தம்பதிகள் கவர்ச்சியாலும், தனிமைத் தவிப்பாலும், உடலுறவு கொள்ளத் தூண்டுவது “உலகளாவிய இனவிருத்திப் படைப்புச் சக்தி” (Universal Creative Energy) ! அது ஒரு திசைப்பாதை ! அதனுள் வீழ்ந்த தம்பதிகள் தவிர்க்க இயலாத நிலையில் மீள முடியாது தத்தளிப்பவர் ! காப்பாற்ற முடியாமல் அந்தக் கணத்தில் அவர் இருவரும் தூக்கிச் செல்லப் படுகிறார் ! அப்போது அவரது சிந்தனா சக்தியும் இழக்கப் படுகிறது ! தம்பதிகள் முற்றிலும் அன்னியராக இருக்கலாம் ! வெவ்வேறு நாட்டைச் சேர்ந்தவராய் இருக்கலாம் ! வேறு மொழிகள் பேசலாம் ! மாறுபட்ட கலாச்சாரத்தில் வளர்ந்திருக்கலாம் ! மதம், இனம், நிறம், வயது எல்லாம் வேறாக இருக்கலாம் ! கண நேரத்தில் கட்டுப்பாடு களைந்து ஒட்டிக் கொண்டோர் அடுத்த கணம் தவறு செய்து விட்டோம் என்று கண்ணீர் வடிக்கலாம் !
(தொடரும்)
***************************
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
2. The Teachings of Reverence for Life By : Albert Schweitzer (1965)
3. The Religious Significance of Art By : Leo Tolstoy, Book on Philosophy -A Modern Encounter (Basic Edition) By : Robert Paul Wolff (1973
4. Vivekananda Speaks to You – Sri Ramakrishna Math, Chennai (1977)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 24, 2008)]
- துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !
- தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)
- திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அகில நாண்கள் (Cosmic Strings) (கட்டுரை: 32)
- மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!
- அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!
- கவிதைகள்
- Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்
- உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா
- Launching of Creative Foundation
- சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை
- பைரவர்களின் ராஜ்ஜியம்!
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்
- தழல் ததும்பும் கோப்பை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)
- மானுடத்தைக் கவிபாடி…
- தூக்கத்தோடு சண்டை
- தன்னுடலை பிளந்து தந்தவள்
- நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்