தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
“காதல் மன்னன் தாஞ் சுவான் நாடகம் (Don Juan Play) காமக் கவர்ச்சியைப் பற்றியது. சத்துள்ள உணவைப் பற்றியதில்லை. தீவிரப் பிரச்சனையான காம உணர்வை ஆடவர் விலக்கி அதை மாதருக்கு விட்டுவிட்ட சமூகத்தைப் பற்றியது அந்த நாடகம். அதே போல் சத்துள்ள உணவை மாதர் விலக்கி விட்டு அதை ஆடவருக்கு விட்டு விட்டார்.”
“ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் மாதரே காதல் வேட்டைக்கு துவக்கப் பாதை இடுகிறார். பிரச்சனை நாடகங்களிலும், பொதுமோக நாடகங்களிலும், ஷேக்ஸ்பியர் பெண்டிரே ஆணை விரட்டிச் சென்று வேட்டையில் வீழ்த்தும் காதற் கவர்ச்சியைக் காட்டுகிறார்.”
“காதற் தேடலைப் பெண்டிர் துவக்குவதில்லை என்று கூறுவது ஒரு போலித்தன கருத்து ! ஆடவரைப் பிடிக்கப் பெண்டிர் கவர்ச்சி வலை வீசுவதும், சிக்க வைக்க புதைக்குழி தோண்டுவதும், மீன் பிடிக்கத் தூண்டிலை விடுவதும் உலக வரலாறுகளில் காணக் கூடிய நிகழ்ச்சிகளே. மாதர்கள் நிரம்ப ஓட்டுகள் பெற்று, ஆட்சிப் பீடத்தைப் பெற்றால் ஐந்து ஆண்டுக்குள் அவர்கள் ஒதுங்கிய பிரமச்சாரிகளுக்குக் கனத்த வரியைப் போட்டு சிரமம் கொடுக்க முயல்வார். அடுத்த பக்கம் ஆடவர் பெண்ணுக்கு உகந்த சொத்துரிமை, நடப்புரிமைகளை நீக்கிப் பெண் விடுதலைக்குத் தடையாய்த் திருமண வாழ்க்கைக்குத் தண்டனை கொடுக்கிறார்.”
“மெய்யாகக் கவனத்தைக் கவரும் நூல்களையும், மற்ற கலைப் படைப்புகளையும் ஆக்கும் சாதாரண மனிதர், மாய அழகில் மயங்கி ஆடவரைத் தேடும் காதல் மாதருக்கு அஞ்சுவார்கள். சாதாரண மனிதர்கள் உன்னதக் கலைப் படைப்புகளை ஆக்க முடியா ! இயல்பாகத் தோன்றி தம் உள்ளொளி மூலம் ஞானச்சுடர் பெற்ற உன்னத மனிதரே அத்தகைய உயர்ந்த கலை நூல்களைப் படைக்க முடியும்.”
பெர்னாட் ஷா (உன்னத மனிதன் முன்னுரை)
Fig. 1
John Tanner
(Image 1212)
உன்னத மனிதன் நாடகத்தைப் பற்றி:
1903 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் பெர்னாட் ஷா காதல் மன்னன் “தாஞ் சுவான்” ஆய்வுக்கருவை (Don Juan Theme) உட்கருவாக வைத்து “மனிதன் & உன்னத மனிதன்” என்னும் நான்கு அங்க நாடகமாக எழுதினார். அந்த நாடகத்தை ஓர் நடிப்பு நாடகம் என்று சொல்வதைவிடப் படிப்பு நாடகம் என்று குறிப்பிடுவதே பொருத்தமானது. ஏனெனில் பெர்னாட் ஷா மரபான நாடக நடப்பை விட்டுவிட்டு தனது புரட்சிக் கருத்துக்களை ஓங்கி முரசடித்திருக்கிறார். அவரது கருத்துக்களை அவ்விதம் நாடக மூலம் பறைசாற்றுவது சிலருக்குப் பிடிப்பதில்லை. ஆயினும் அங்கே பெர்னாட் ஷாவை நாம் முழுமையாகக் காண முடிகிறது. உன்னத மனிதன் நாடகம் 1905 இல் லண்டன் ராயல் கோர்ட் நாடக அரங்கில் முதன்முதல் மூன்றாவது அங்கமின்றி அரங்கேறியது. காரணம் அந்தப் பகுதியில் பெர்னாட் ஷா தனது புரட்சிகரமான பொதுவுடைமைக் கருத்துக்களைக் கொட்டியிருக்கிறார். உன்னத மனிதன் முழுநாடகமும் 1915 இல்தான் அரங்கேறியதாக அறியப்படுகிறது.
உன்னத மனிதன் நாடகம் எளிய முறை நளினத்தில் இன்பியல் நாடகமாக மேடை ஏறினாலும் பெர்னாட் ஷா அந்த நாடகத்தின் ஆழக் கருத்துக்களை மட்டும் வெளிப்படுத்த ஓர் உரைநடை நாடகமாக ஆக்கியுள்ளார். “உன்னத மனிதன்” என்ற தலைப்பைப் பெர்னாட் ஷா ·பிரடெரிக் நியட்ஸேயின் (Friedrich Nietzsche’s
நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி:
ஜியார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜியார்க் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத் துறையாளர். வறுமையிலிருந்து குடும்பத்தை விடுவிக்க முடியாத பெருங் குடிகாரர். இருபது வயதில் பெர்னாட் ஷா அன்னையுடன் லண்டனுக்குச் சென்றார். அங்கே தாயார் இசைத்தொழில் மூலம் ஊதியம் பெற்றுக் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார். நிரம்ப இலக்கியப் படைப்புகளைப் படித்து வந்த பெர்னாட் ஷா, முதலில் ஐந்து தோல்வி நாடகங்களை எழுதினார். பிறகு நாடக மேடை உலகில் புகுந்து மற்றவர் நாடகங்களைக் கண்டு 1894 இல் “சனிக்கிழமை கருத்திதழில்” (Saturday Review) நாடகங்களைப் பற்றித் திறனாய்வு செய்து எழுதி வந்தார். அப்போது பொதுவுடைமைக் கோட்பாடில் ஈடுபாடு மிகுந்து பிரதம மேடைப் பேச்சாளாராக உரைமொழி ஆற்றினார்.
அவர் எழுதிய சிறப்பான நாடகங்கள்: பிக்மாலியன் (Pygmalion), ஜோன் ஆ·ப் ஆர்க் (Saint Joan), மனிதன் & உன்னத மனிதன் (Man & Superman), ஆப்பிள் வண்டி (The Apple Cart), டாக்டரின் தடுமாற்றம் (The Doctor’s Dilemma), மெதுசேலாவுக்கு மீட்சி (Back to Methuselah), மேஜர் பார்பரா (Major Barbara), கோடீஸ்வரி (Millionairess), ஆனந்த நாடகங்கள் (Plays Pleasant), தூயவருக்கு மூன்று நாடகங்கள் (Three Plays for Puritans), நெஞ்சத்தைப் பிளக்கும் இல்லம் (Heartbreak House) போன்றவை.
****************
Fig. 2
Annie & Octavius
(Image 1234)
உன்னத மனிதன்
(பெர்னாட் ஷா)
அங்கம் : 1 பாகம் : 3
நடிகர்கள்:
1. ரோபக் ராம்ஸ்டன் (Roebuck Ramsden) – மேயர், முதியவர் 60 வயது.
2. மிஸ் ராம்ஸ்டன் (Miss Ramsden) – ரோபக்கின் புதல்வி.
3. அக்டேவியஸ் ராபின்ஸன் (Octavious Robinson) – கவர்ச்சி முகத்தான்.. 25 வயது வாலிபன்.
4. ஜான் டான்னர் – பொதுவுடைமைத் தீவிரவாதி (John Tanner)
5. ஹென்றி ஸ்டிராகெர் (Henry Straker)
6. ஹெக்டர் மலோன் (Hector Malone)
7. மிஸ்டர் மலோன் (Mr. Malone) – ஹெக்டரின் தந்தை
8. ஆன்னி வொயிட்·பீல்டு (Annie Whitefield) – ஜான் டான்னரைக் காதலிப்பவள்
9. மிஸிஸ் ஆங்கஸ் வொயிட்·பீல்டு (Mrs. Whitefield) – ஆன்னியின் அன்னை.
10. வயலொட் ராபர்ட்ஸன் (Violet Robertson)
11 வேலைக்காரி மேரி (Parlormaid)
**************
(அங்கம் : 1 பாகம் : 3)
கதா பாத்திரங்கள்: ரோபக் ராம்ஸ்டன், அக்டேவியஸ் ராபின்ஸன்.
காலம்: காலை வேளை
இடம்: மேயர் ரோபக் ராம்ஸ்டன் மாளிகை.
(காட்சி அமைப்பு : கோட்டு, சூட்டு அணிந்து ரோபக் ராம்ஸ்டன் தனது நூலக அறையில் படித்துக் கொண்டிருக்கிறார். நகரில் பேரும் புகழும் பெற்ற செல்வந்தர் அவர். மாளிகையில் மூன்று வேலைக்காரிகள் உள்ளார். அறையின் சுவர்களில் அழகிய ஓவியங்கள் தொங்குகின்றன. அறை பளிச்செனத் தூய்மையாக உள்ளது. நூல்கள் நேராகச் சீராக அடுக்கப்பட்டு நூலகம் காட்சி தருகிறது. நூலகத்தில் ராம்ஸ்டனும், அக்டேவியசும் உரையாடி வரும்போது, வேலைக்காரி மேரி ஜான் டான்னர், ஆன்னி வொயிட்·பீல்டு ஆகியோர் வந்திருப்பதை அறிவிக்கும் போது ராம்ஸ்டன் வெகுண்டு எழுகிறார்..
ரோபக் ராம்ஸ்டன்: (ஆவெனக் கத்தமிட்டு ஆங்காரமாக) இந்த படைகளை யார் அழைத்தது ? முன்னறிவிப்பின்றி இத்தனை பேர் வந்து, வயதான எனக்கு மயக்கம் அளிப்பது எதற்காக ? ஜான் டான்னர் முகத்தில் விழிக்கக் கூடாது என்று சபதமிட்டேன் ! வீட்டுக்குள் நுழைந்து கொண்டு உள்ளே வரலாமா என்று கேட்பது அடாத செயல் ! நான் வரவேற்க மாட்டேன் என்று டான்னருக்குத் தெரியும் அல்லவா ? எதற்காக இங்கு வந்திருக்கிறார் ? காலஞ் சென்ற மிஸ்டர் வொயிட்·பீல்டு உயிலில் பொறுப்பாளியாக நான் இருப்பதலா ? அல்லது ஆன்னியைத் தான் மணமுடித்துக் கொள்ளவா ? நானதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை !
(அப்போது ஜான் டான்னர் கதவைத் திறந்து கொண்டு புன்முறுவலுடன் நூலகத்தினுள் நுழைகிறார். வாலிப வயது. கூர்மையான பார்வை. கம்பீரமான தோற்றம். ஆறடி உயரம். கொடி உடல், தாடி மீசை முகத்தில். பேச்சுத் திறமை உடையவர். கவனமாக உடை அணிந்துள்ளார். உணர்ச்சி வசப்படுபவர். எதையும் உயர்வு நவிற்சியில் உரைப்பவர். ஒரு கட்டுக் காகிதத்தைப் பையிலிருந்து கையில் எடுத்து நேராகச் சென்று ரோபக் ராம்ஸ்டனிடம் கொடுக்கிறார்.)
ஜான் டான்னர்: இது என்ன தெரியுமா மிஸ்டர் ராம்ஸ்டன் ?
ரோபக் ராம்ஸ்டன்: (சற்று வெறுப்புடன்) உள்ளே வரலாமா என்று கேட்காமல் எந்த நாகரீக மனிதரும் என் வீட்டினுள்ளே நுழைய மாட்டார்.
ஜான் டான்னர்: (ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு) நான் நாகரீக மனிதன் அல்லன் ! உங்களிடம் உத்தரவு பெறாமல் உங்கள் நாற்காலியில் உட்கார்க் கூடாது என்று அடுத்துச் சொல்லாதீர் ! நான் வெளியே போக வேண்டும் அடுத்து கட்டளை இடாதீர் ! சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு மெல்லத்தான் செல்வேன் மிஸ்டர் ராம்ஸ்டன் !
ரோபக் ராம்ஸ்டன்: (கோபத்துடன்) உள்ளே நுழைந்த ஒருவரை வெளியே போவென்று விரட்டும் துணிவு எனக்கில்லை ! ஏனெனில் நான் நாகரீக மனிதன் ! அநாகரீக மனிதனையும் நாகரீகமாக நடத்துபவன் நான் ! இந்தக் காகிதக் கட்டில் என்ன உள்ளது ? அதை விரிக்கக் கூட நேரமில்லை எனக்கு ! படிக்கப் பலநாட்கள் ஆகும் !
Fig. 3
Annie Whitefield
(Image 1233)
ஜான் டான்னர்: நன்றி மிஸ்டர் ராம்ஸ்டன். நான் கையில் கொடுத்த நகல் என்ன தெரியுமா ? காலஞ்சென்ற மிஸ்டர் வொயிட்·பீல்டு அவர்களின் உயில் பத்திரம் ! ஆன்னி தனக்குக் காலையில் கிடைத்த தென்று என்னிடம் கூறினாள்.
ரோபக் ராம்ஸ்டன்: ஆன்னி என்றால் மிஸ்டர் வொயிட்·பீல்டின் வாலிபப் புதல்வி தானே ?
ஜான் டான்னர்: ஆம் ! ஆமாம் ! நான் சொல்வது நமது ஆன்னியைத்தான் ! உங்கள் பொறுப்பில் இருக்கும் ஆன்னி ! அக்டேவியஸின் ஆசைக் காதலி ! இப்போது என் பொறுப்பில் வந்து விட்ட ஆன்னி !
அக்டேவியஸ்: (சினத்துடன் எழுந்து) ஆன்னி உன் பொறுப்பில் உள்ளவளா ? ஒருபோது மிருக்க முடியாது ! அவள் என்னைச் சேர்ந்தவள்.
ஜான் டான்னர்: கோபப் படாதே ! உன்னுடைய ஆன்னிக்கு யார் பொறுப்பாளி என்று உயில் சொல்லுது தெரியுமா ?
அக்டேவியஸ்: தெரியும், மிஸ்டர் ராம்ஸ்டன்தான் பொறுப்பாளி !
ரோபக் ராம்ஸ்டன்: இறப்பதற்கு முன் அவர் சொன்னது. நான்தான் ஆன்னிக்குப் பொறுப்பாளி என்று ! இதை ஏன் கேட்கிறாய் நீ ?
ஜான் டான்னர்: அதுதான் இல்லை ! நீங்கள் இருவர் சொல்வதும் தவறு ! மிஸ்டர் ராம்ஸ்டன் ! உங்களுடன் என் பெயரும் எழுதப் பட்டுள்ளது ! உயிலைப் படித்துப் பாருங்கள்.
ரோபக் ராம்ஸ்டன்: (அதிர்ச்சியுடன்) என்ன ? இரட்டைப் பொறுப்பாளிகளா ? எனக்கு மட்டும் தனியாகப் பொறுப்பைத் தராது இருவர் பெயருக்கு ஏன் எழுதி வைத்தார் ? நான்தான் அனுபவம் முதிர்ந்த வயோதிகன் ! நீயோ உலக அனுபவ மில்லாத இளைஞன் !
ஜான் டான்னர்: அதுதான் மிஸ்டர் வொயிட்·பீல்டின் சாமர்த்தியம் ! பொறுப்பாளி தனியாக முதியவராக இருந்தால் ஆன்னிக்கு வயதான கணவனைத் தேர்ந்தெடுப்பார் ! என்னைப் போலொரு வாலிபனும் பொறுப்பாக இருந்தால், அந்தக் கிழவர் குமரி திருமணத்தை உடனே நிறுத்துவான். அக்டேவியஸைப் போலொரு வாலிபனை ஆன்னிக்கு நிச்சயம் செய்ய இச்சைப் படுவான் !
ரோபக் ராம்ஸ்டன்: நானும் ஆன்னிக்கு அக்டேவியஸைத்தான் மணமகனாய்த் தேர்ந்திருக்கிறேன் மிஸ்டர் டான்னர் ! இந்த முடிவில் உம்முடன் எனக்கும் உடன்பாடுதான் !
ஜான் டான்னர்: நான் சொல்ல வருவது அதுவல்ல மிஸ்டர் ராம்ஸ்டன் ! முதியவருடன் வாலிபரும் சேர்ந்திருப்பது ஆன்னி திருப்தி அளிப்பது. வயோதிகர் ஆன்னியை ஒரு மகளாகக் கருதுவார். வாலிபரோ அவளுடைய உணர்ச்சிகளை மதித்து நல்ல எதிர்காலத்தைக் காட்டுவார். ஆன்னி தன் தந்தை இறந்த பிறகு தானொரு அனாதையாய் ஆகிவிட்டதாக என்று என்னிடம் சொல்லி அழுகிறாள் ! ஆம் அவளொரு அனாதைதான் !
அக்டேவியஸ்: அனாதை என்றா சொல்கிறீர் ? நானிருக்கும் வரை அவள் தன்னை அனாதை என்று சொல்லக் கூடாது. நீ சொல்வதை நான் நம்பவில்லை ! நீ அவளுக்கு என்ன சொல்லித் தேற்றினாய் ? நீ அவளுக்கு ஒரு தூணாய், ஒரு துணையாய் நிற்க மாட்டாயா ?
ஜான் டான்னர்: நானா ? ஆன்னிக்குத் தூணா ? நான் அவள் சாயும் தூணு மில்லை ! நான் அவளுக்குத் துணையு மில்லை ! அவளுக்கு நானொரு பொறுப்பாளி ! அவ்வளவுதான் ! அவளை ஒருவன் மணந்த பிறகு என் பொறுப்பு முடிந்தது ! அவளுக்கு என்ன ஆபத்து எதிராக வருகிறது ? சட்டம் அவள் பக்கம் உள்ளது ! சமூகத்தின் அனுதாபம் அவள் மீது உள்ளது ! அவளுக்கு என்ன ஆசை தெரியுமா ? அவளது ஒழுக்க நெறிக் கட்டுப்பாட்டுப் பொறுப்பு என் மீது விழுந்திருக்கிறது ! என் பெயரைச் சொல்லி அவள் பெயரை உயர்த்திக் கொள்கிறாள் ! ஆனால் நானவளைக் கட்டுப்படுத்த முடியாது ! பொறுப்பாளி இடத்தில் நிற்கும் நான் ஒரு வாலிபப் பெண்ணைக் கண்காணிக்க முடியாது ! நானவள் கணவனாக ஆனால்தான் அவளைக் கட்டுப் படுத்த முடியும் ! ஆன்னியை எனக்குகந்த மனைவியாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ! அவள் இச்சைக்கு நான் சம்பாதிக்க முடியாது ! ஊர் ஊராய் நான் ஓட முடியாது !
ரோபக் ராம்ஸ்டன்: அப்படியானால் நீ பொறுப்பாளிக் கடமையை நிராகரிப்பாயா ? எனக்கும் உன்னுடன் இணைந்து தீர்மானம் செய்ய விருப்பமில்லை !
ஜான் டான்னர்: பொறுப்பை மகிழ்ச்சியாக விடுக்கத் தயார் ! ஆனால் ஆன்னி என்ன நினைப்பாள் என்று தெரியாது ! பொறுப்பை நான் ஏற்றாலும் சரி, ஏற்கா விட்டாலும் சரி, ஆன்னி எப்போதும் என்னைத் தேடித்தான் வருகிறாள் ! அவளை நான் கைவிட மாட்டேன் ! மலைப்பாம்பு என் கழுத்தைச் சுற்றிக் கொண்ட பிறகு எப்படி அதை அவிழ்த்து விடுவது ?
அக்டேவியஸ்: இந்த மாதிரி கூசாமல் பேசுவது எனது மனதைப் புண்படுத்துகிறது ! மலரைப் போன்ற ஆன்னியை மலைப்பாம்பு என்பது உனது கடுமையான உள்ளத்தைக் காட்டுகிறது.
ஜான் டான்னர்: அக்டேவியசுக்குத் தங்க மனது ! வாலிபனைத் தேடிய மிஸ்டர் வொயிட்·பீல்டுக்கு ஏன் அக்டேவியஸைத் தெரியாமல் போனது ! என்னை ஏன் உயிலில் மாட்டி விட்டார் ?
அக்டேவியஸ்: நான் சொல்கிறேன். சாவதற்கு முன்பு ஒருமுறை அவர் என்னிடம் மறைவாகச் சொல்ல முயன்றார். நான் பொறுப்பேற்க மறுத்தேன். காரணம் நான் ஆன்னியை மனதார நேசிக்கிறேன். ஆன்னியை அவர் கேட்ட போதும் அந்த ஆலோசனையை அவள் வெறுத்தாள். மிஸ்டர் ராம்ஸ்டன் ! நான் ஆன்னியை நேசிக்கிறேன். டான்னருக்கும் தெரியும் அது ! ஆன்னியை மலைப்பாம்பு என்று அவர் குறிப்பிடுவது எனக்கு நடுக்கத்தைக் கொடுக்கிறது !
ஜான் டான்னர்: (ராம்ஸ்டன் கையிலிருந்து உயிலைப் பற்றி) மிஸ்டர் வொயிட்·பீல்டு எழுதிய உயிலைப் படிக்கிறேன். பொறுப்பாளிப் பணியைச் செய்ய மிஸ்டர் ராம்ஸ்டனுக்கு 2500 பவுன் ! அக்டேவியஸ் சகோதரிக்கு மணமுடிக்க ஓரளவு வரதட்சணைப் பணம். அக்டேவியசுக்கு 5000 பவுன் திருமணச் செலவுக்கு. ஆனால் எனக்கு உயிலில் ஒன்றும் எழுதி வைக்க வில்லை ! வெறும் பொறுப்பாளி என்று ஒரு பட்டத்தைத் தந்துவிட்டுப் போய் விட்டார்.
அக்டேவியஸ்: (கண்ணீர் வழிய) நான் அந்தப் பணத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறேன். மிஸ்டர் வொயிட்·பீல்டு கருணையே உருவானவர் ! அவரது பணமெல்லாம் ஆன்னிக்குத்தான் சேர வேண்டும். எனக்கெதுவும் வேண்டாம். என்ன தகுதி உள்ளது எனக்கு ? ஜான் நீ எடுத்துக்கொள் எனக்கு எழுதி வைத்த தொகையை ! நீ மேன்மை யானவன்; நேர்மையானவன்.
ஜான் டான்னர்: அப்படிச் சொல்லாதே அக்டேவியஸ் ! நான் மேன்மையானவன் அல்லன் ! நீ சொல்வது போல் நேர்மையானவன் அல்லன் ! ஆனாலும் உனக்கு வரும் அதிர்ஷ்டத்தை நான் அபகரிக்க மாட்டேன். செத்தவர் கையால் அடிபட்டவன் நான் ! அக்டேவியஸ் நீ ஆன்னியை மணந்து என் பாரத்தை நீக்கிவிடு ! என் தோள் மீது அமர்ந்துள்ள ஆன்னியை உன் தோள் மீது ஏற்றிக் கொள் !
ரோபக் ராம்ஸ்டன்: இதென்ன விளையாட்டு ? கேலிக் கூத்தாய் இருக்கிறது ! ஆன்னியின் விருபத்தை அறியாமல் அவளை இங்குமங்கும் பந்தாடுகிறீர் இருவரும் ! மிஸ்டர் டான்னர் ! உமது நூலிலும் நீவீர் இப்படிப் பல இடங்களில் பந்தாட்டம் நடத்துகிறீர் ! உம்மைப் பற்றி நூலைத் திறனாய்வு செய்வோர் குறிப்பிட்டுள்ளார் !
ஜான் டான்னர்: (புன்னகையுடன் ராஸ்டன் அருகில் சென்று) ஓ ! என்னுடைய நூல் உம்மிடம் உள்ளதா ? அதை நீங்கள் படித்திருக்கிறீரா ? அந்த நூலைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன ?
ரோபக் ராம்ஸ்டன்: (எரிச்சலுடன்) அது ஒரு நூலா ? அதை நானும் படிப்பேனா ? வாங்கி வைத்திருக்கிறேன் ! இதுவரைத் தூசி படிந்து கிடந்தது ! அக்டேவியசுக்குப் படிக்க ஆசை ! கொடுக்கப் போகிறேன் ! . . . . அக்டேவியஸ் ! நூலைப் பிடித்துக் கொள் ! (நூலைத் தூக்கி எறிகிறார். அது தவறிப் போய் குப்பைத் தொட்டியில் விழுகிறது) பார்த்தீரா மிஸ்டர் டான்னர் ! படிக்கக் கொடுத்தாலும் அது தொடுவது குப்பைத் தொட்டியைத்தான் ! இந்த நூல் ஒரு புரட்சி நூலா ? என்ன புரட்சி செய்ய இதை எழுதினீர் ? லெனின் ஒரு புரட்சிவாதி ! ஒப்புக் கொள்கிறேன். நெப்போலியன் ஒரு புரட்சிவாதி ! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மதாதிபதி மார்டின் லூதர் ஒரு புரட்சிவாதியா ? என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை ! எப்படி என்று சற்று விளக்கம் கொடுப்பீரா ?
***************************
(தொடரும்)
*********
தகவல்
Based on The Play
“Man & Superman” By: Bernard Shaw (1856-1950)
1. Penguin Plays “Man & Superman” Drama (A Comedy & A Philosophy) By Bernard Shaw (1967)
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan January 16, 2008)]
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 12)
- தர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்
- புத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்
- தாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு !
- இந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து
- தைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது? (உப்புத் தண்ணீர்)
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3
- தமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு
- ஏழரைப்பக்க நாளேடு!
- எந்த ரகம்?
- திரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You
- எழுத்துக்கு அடையாளம்
- ஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்
- மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு….
- கீதாஞ்சலி பிரியதர்சினி கவிதைகள்
- கடவுள்களின் மடிகள்
- கவிதைகள்
- ஞாபகம்
- பொங்கல் வாழ்த்துக்கள்
- வாய்ப்பளிக்கும் வஹ்ஹாபிக்கு வந்தனம்
- ஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்
- வா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு
- ‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்
- பூஜ்ஜியம்
- நூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்
- மாத்தா- ஹரி அத்தியாயம் -45
- சாத்தானாகிவிடும் சாத்தானின் வழக்குரைஞர்
- படிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்
- சந்திப்பின் சங்கதிகள்
- தடுத்தாலும் தாலாட்டு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே !
- வரித்துக்கொள்வோம் மரணத்தை
- யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்
- இவை பேசினால்….
- பிரியம்
- “இலக்கிய விருதுகளும் இழுபறிப்பாடுகளும்”
- “பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)
- சூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்
- ஹும்