சி. ஜெயபாரதன், கனடா
“எனக்கு முன்னால் நடக்காதீர்; உங்களை நான் பின்பற்றப் போவதில்லை! என் பின்னால் வர வேண்டாம்; ஏனெனில் உம்மை நான் வழிநடத்தப் போவதில்லை! வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டும்தான் உள்ளது: நேசிப்பதும், நேசிக்கப் படுவதும்!
“கலைப் படைப்பாளியின் குறிநோக்கு, மனித உள்ளத்துக்கு ஒளி பாய்ச்சுவது.”
ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளர் [George Sand (1804-1876)]
ஆண்டனி மீண்டும் என் தேவன் ஆனதால்,
நான் கிளியோபாத்ரா மறுபடியும்!….
வண்ண உடையில் அவர் மாட்டி யிருப்பது,
வாலிப ரோஜா மலர்! … (கிளியோபாத்ரா)
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஆண்டனி & கிளியோபாத்ரா]
குறுகிய பூமியில் அவர் (சீஸர்),
பெருநடை போடுகிறார்! ஓ மனிதா!
கீழான காலாட் படைநாம் அவர் நீள்
காலிடைப் புகுந்து தலை நீட்டுகிறோம்,
சுய மதிப்பினை யிழந்து!
மனிதரே அதிபதி! சில வேளை,
அவரது ஊழ் விதிக்கு!
தவறு வானத்துக் கிரகங்களில் அல்ல,
அருமை புரூட்டஸ்! நம்மிடமே உள்ளது!
வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஜூலியஸ் சீஸர்]
கதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்ந்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரின் உதவியை நாடுகிறாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ளாமல் அவரை வெறுத்தனர்!
முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார். சீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் ஆண்டனி, அக்டேவியன் ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்குக் காண வந்த ஆண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. ஆண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சீற்றத்தையும், வெறுப்பையும் மார்க் ஆண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை ஆண்டனி மீது போர் தொடுத்து வெற்றி அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன ஆண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
அங்கம்: 2 பாகம்: 12
நாடகப் பாத்திரங்கள்:
ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [50 வயது]
தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [45 வயது]
அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [53 வயது]
பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
ரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
லூசியஸ் ஸெப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
அபெல்லோடோரஸ்: ஸிசிலியன் கம்பள வாணிகன்.
மற்றும்:
பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.
ரோமானியப் படையாளிகள்.
கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
எகிப்தின் படையாளிகள்
நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியாவில் எகிப்த் மன்னர் அரண்மனை. ·பாரோ மன்னர் வரலாற்று ஓவியங்கள் உயர்ந்த சுவர்களை அலங்கரிக்கின்றன. பகல் வேளை.
நாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், மெய்க்காப்பாளி, கிளியோபாத்ரா, சேடியர்.
காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா, டாலமியை அகற்றி விட்டுத் தன்னை எகிப்துக்கு ராணியாக்க சீஸரை வேண்டுகிறாள். சீஸர் கிளியோபத்ராவின் அறிவையும், திறமையையும் மெச்சி அவளை ராணியாக்க ஒப்புக் கொள்கிறார். சீஸரின் பகைவனும், மருமகனுமாகிய ரோமாபுரித் தளபதி பாம்ப்பியை டாலமியின் படையினர் இரகசியமாகக் கொன்றதை அறிந்து சீஸர் வேதனைப் பட்டுக் கோபம் அடைகிறார். டாலமியும் அவரது ஆலோசகரும் அதற்குத் தண்டனை அடைகிறார். மனம் மகிழ்ந்து, கிளியோபாத்ரா தன் உடற் கவர்ச்சியால் வசீகரிக்கையில் சீஸர் காக்காவலிப்பு நோயால் தாக்கப்பட்டு, துடிப்புடன் தரையில் விழுகிறார். மருத்துவர் பணிக்குப் பிறகு சீஸர் படுக்கையில் புத்துயிர் பெற்று எழுந்து அமர்கிறார். சீஸர் ரோமுக்கு மீள்வதை நிறுத்தி கிளியோபாத்ரா அவரைத் தன் கவர்ச்சியால் மயக்கி ஆண்மகவு பெற்றுத் தருவாய் உறுதி அளித்து மகிழ்ச்சி ஊட்டுகிறாள்.
(சென்ற வாரத் தொடர்ச்சி)
கிளியோபாத்ரா: [மனம் நெகிழ்ந்து இசையோடு உச்சரித்து] ஆஹா! மார்க் ஆண்டனி! என்ன அழகிய பெயர்! மார்க் ஆண்டனி! உங்களுக்குச் சீடர்! ஆனால் எனக்குத் தேவர்! மார்க் ஆண்டனி! உங்களுக்காக உயிரைக் கொடுப்பவர்! மார்க் ஆண்டனிக்காக நான் உயிரைக் கொடுப்பேன்! எங்கே உள்ளார் மார்க் ஆண்டனி? அழைத்து வாருங்கள் மார்க் ஆண்டனியை! சீஸர், கனல் பற்றி எரியும் நெஞ்சில், பாலை வார்த்தீர்கள்! அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்து மார்க் ஆண்டனி என்னைக் காண ஏற்பாடு செய்வீரா?
ஜூலியஸ் சீஸர்: [சற்று தயக்கமுடன்] மார்க் ஆண்டனி ரோமாபுரியில் உல்லாசமாக இருக்கிறான்! அலெக்ஸாண்டிரியாவுக்கு ஆண்டனியை அழைத்து வருபது எளிய தில்லை! நான் போனால்தான் அவன் வருவான். ரோமாபுரிக்கு நான் போய்த்தான் அவனை அனுப்ப வேண்டும்! நான் ரோமுக்குப் போனால் எகிப்துக்குத் திரும்ப மாட்டேன்! ஆண்டனி எகிப்துக்கு வந்தால், அவன் ரோமுக்கு மீள மாட்டான்! எனக்கு வேலை இருக்கிறது. நான் என் அறைக்குப் போக வேண்டும்.
கிளியோபாத்ரா: [கெஞ்சிக் கொண்டு] என்னருகில் அமர்ந்து, என்னுள்ளம் குளிரக் கொஞ்சம் மார்க் ஆண்டனியைப் பற்றிப் பேசுங்கள்.
ஜூலியஸ் சீஸர்: நான் போகாவிட்டால் டாலமியின் படைக் காவலர் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்திலிருது ரோமானியப் படையை வெட்டிவிடுவார்!
கிளியோபாத்ரா: [விறுவிறுப்புடன் பதறி] டாலமியே செத்த பிறகு அவனுடைய படையாட்கள் எப்படி ரோமானியரைத் தாக்க முடியும்?
ஜூலியஸ் சீஸர்: [சட்டென வெகுண்டு] டாலமி செத்த பிறகு அவரது மெய்க்காப்பாளி போதினஸ், போர்த் தளபதி அக்கிலஸ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டதாக அறிந்தேன். அவர்கள் அலெக்ஸாண்டியாவில் ரோமானிய ஆக்கிரமிப்புப் படையினருக்குத் தொல்லை கொடுத்து வருவதாகக் கேள்விப் படுகிறேன். … [வாயில் புறம் பார்த்து] .. அதோ! என் ரோமானியப் படைவீரன் ஒருவன் நொண்டிக் கொண்டு வருகிறான்! முகத்தைப் பார்த்தால் மகிழ்ச்சி ஊட்டும் செய்தியாகத் தெரிய வில்லை. [சீஸர் பதறிக் கொண்டு காவலனைக் கனிவுடன் நோக்குகிறார்]
படைவீரன்: [காயங்களைக் காட்டி] பிரிட்டானஸ்! பாருங்கள் என்ன நடந்து விட்டதென? இனியென்ன செய்வீர்? [சீஸரைப் பார்த்து] ஜெனரல், பாருங்கள் என் படுகாயத்தை! காயப் பட்டது நான்! தாக்கப் பட்ட படைவீரர் இருவர் மாண்டு போனார் அங்காடி வீதியில்!
ஜூலியஸ் சீஸர்: [கவனமுடன்] ஏன் அவர்கள் தாக்கப் பட்டார்? எப்படி உனக்குக் காயம் உண்டானது?
படைவீரன்: அக்கில்லஸ் தலைமையில் படைக்குழு ஒன்று அலெக்ஸாண்டிரியாவில் நுழைந்தது. உடனே எகிப்திய மக்கள் அவருடன் சேர்ந்து, ரோமானியரைத் தாக்க ஆரம்பித்தனர். ரோமானியர் உதைக்கப் பட்டார். எனக்குக் கிடைத்த உதையில் நான் தப்பினேன். மற்ற இருவர் மாண்டு போனார்.
ஜூலியஸ் சீஸர்: உன்னுயிர் தப்பியதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். … [படைவீரனைப் பார்த்து] உள்ளே சென்று காலுக்கு மருந்து போட்டுக்குள். [படைவீரன் உள்ளே செல்கிறான்.]
[சீஸரின் படைவீரர் லெ·ப்டினென்ட் ரூ·பியோ வேகமாக வருகிறார்]
ரூ·பியோ: [ஆங்காரமாக] சீஸர்! மகா அவமானம் நமக்கு! நமது ஆக்கிரமிப்புப் படையை எகிப்த் படை அடைத்துச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. யாருமிதை எதிர்பார்க்க வில்லை! உயிர்ச் சேதமும், பொருட் சேதமும் உண்டாகும்!
ஜூலியஸ் சீஸர்: ரூ·பியோ! நமது கப்பல்கள் சில மேற்குத் துறைமுகத்தில் உள்ளன. அவற்றில் எல்லாம் தீவைத்து விடுங்கள்!
ரூபியோ: [ஆச்சரியமுடன்] என்ன கப்பல்களை எரித்து விடவா?
ஜூலியஸ் சீஸர்: ஆம் அவற்றை எரித்து விடு! ஆனால் கிழக்குத் துறைமுகத்திலிருக்கும் ஒவ்வொரு கப்பலையும் பயன்படுத்தி ·பரோக்களின் படகுகளைக் கைப்பற்று. அந்த தீவையும் பிடித்து விடு! விடாதே! பாதிப் படையினரை கடற்கரையில் காவல் வை. மீதிப் பேரை வெளியே படகில் நிறுத்து.
ரூ·பியோ: [முழுவதும் உடன்படாமல்] அலெக்ஸாண்டிரியா நகரை விட்டுவிடச் சொல்கிறீரா?
ஜூலியஸ் சீஸர்: நாமின்னும் அதைக் கைப்பற்ற வில்லை, ரூ·பியோ! கைவசப்படாத ஒன்றை எப்படி நாமிழக்க நேரிடும்? இந்த மாளிகை நம்முடையது! அடுத்தது அந்த மாளிகை, என்ன பெயர் அதற்கு?
ரூ·பியோ: நாடக அரங்கம்.
ஜூலியஸ் சீஸர்: ஆமாம், நாடக அரங்கமும் நமதே! மற்ற எகிப்தின் பகுதிகள் எகிப்தியருக்குச் சொந்தம்.
ரூ·பியோ: சீஸர்! உங்களுத்தான் எல்லாம் தெரியும்! சரி நான் விடை பெறுகிறேன்.
ஜூலியஸ் சீஸர்: அந்தக் கப்பல்கள் அனைத்தும் எரிக்கப் பட்டனவா?
ரூ·பியோ: இதோ போகிறேன்! ஆணைப்படி நிறைவேறும்! கால தாமத மாகாது! [வெளியேறுகிறார்]
பிரிட்டானஸ்: சீஸர்! டாலமியின் மெய்க்காப்பாளி போதினஸ், உங்களுடன் பேச விரும்புகிறார். அவருடைய போக்கு சரியில்லை! அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்.
ஜூலியஸ் சீஸர்: போதினஸ், எங்கிருக்கிறார்? அனுமதி அளியுங்கள் அவருக்கு! [போதினஸ் நுழைகிறார்] .. ஹலோ போதினஸ்! உமக்கு என்ன வேண்டும்? நண்பனாக வந்திருக்கிறாயா? அல்லது ரோமானியருக்கு நாச காலனாக வந்துள்ளாயா?
போதினஸ்: உங்களுக்கு முடிவுரை கூற வந்துள்ளேன்! உங்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது!
ஜூலியஸ் சீஸர்: [கோபமாக] எங்களுக்கு முடிவு காலமா? சீஸருக்கு முடிவுரையா? கூறுவது யார்? தலையில்லாத முண்டமா? உங்கள் அரசர் டாலமிக்கு என்ன ஆயிற்று தெரியுமா? … நாங்கள் விரட்டிச் சென்ற போது, நைல் நதியில் குதித்து மூழ்கி விட்டார்! ·பரோ பரம்பரைக்காரி கிளியோபாத்ராவைத் தவிர உமக்கு அரசர் யாருமில்லை! அவர்தான் எகிப்தின் ராணி என்று ஒப்புக் கொள்ளுங்கள். கிளியோபாத்ரா எங்கள் பாதுக்காப்பில் இருக்கிறார். நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ளா விட்டால். உங்களை அரண்மனையில் தடம் வைக்க விட மாட்டார்!
போதினஸ்: [ஆங்காரமாக] நாங்கள் கிளியோபாத்ராவை ராணியாக ஏற்றுக் கொள்ள முடியாது! உங்களையும் எகிப்த் ஆக்கிரமிப்புத் தளபதியாக ஒப்புக் கொள்ள முடியாது! டாலமியின் அடுத்த சகோதரி அரச பீடத்தில் அமரத் தயாராக உள்ளார்! அவர்தான் எங்கள் புது ராணி!
ஜூலியஸ் சீஸர்: [கோபத்துடன்] முதலில் நீவீர் எமது போர்க்கைதி! போரை அறிவிக்காமல் போர் தொடுத்து, ரோமானிய வீரர் இருவரைக் கொன்றது உங்கள் குற்றம். பிரிட்டானஸ்! கைது செய் போதினஸ் போர்க் கைதியை!
(தொடரும்)
*********************
Based on The Plays:
1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]
2. William Shakespeare’s Julius Caesar [Play-2]
3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]
4. Britannica Concise Encyclopedia [2003]
5. Encyclopedia Britannica [1978 & 1981]
6. Life of Antony By: Plutarch
7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.
8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan Aug 1, 2006]
- புது வழித்தோன்றல்!
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -7
- கடந்த திண்ணையிதழில் வெளிவந்த நண்பர் நேசகுமாரின் ‘எண்ணச்சிதறல்கள்’ பற்றி…..
- நேச குமார் மற்றும் ஜெயமோகன் பார்வைகளுக்கு
- மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-12)
- கீதாஞ்சலி (84) – பிரிவுத் துயர்..!
- கல்வெட்டாய்வு: ஸானான் வர்த்தினை
- எண்ணச் சிதறல்கள் – இளைய தலைமுறை, ரீடா கோத்தாரி, தி எகனாமிஸ்ட், அருண் ஷோரி, இஸ்ரேல் ஷங்கர், சின்னக் கருப்பன், அல்லாஹ¥ அக்பர்!
- பெரியபுராணம் – 98 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ஏன் தற்கொலை?
- கவிதைகள்
- கடிதம்
- களையிழந்தக் கச்சேரிகள்
- ஒப்புக்கொண்ட உண்மை
- வடக்கு வாசல் – இசை விழா – நினைத்தாலே இனிக்கும்
- பெண் போனால் . . .
- Screening of ‘a little dream’ a docu-film on Dr.APJ.Abdul Kalam
- கடித இலக்கியம் – 16
- இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பூசி மெழுகும் இப்னு பஷீர்
- கண்களைத் திறக்கும் கலை – (மலரும் மணமும் தேடி – பாவண்ணனின் கட்டுரைத் தொகுப்பு அறிமுகம் )
- அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 32
- கோயில்கள், பெண்கள், மொழி,வழிபாடு : சர்ச்சைகளும், புரிதல்களும் -2
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 7 : தேவ லோக இசை
- 2006 தேர்தல் / சில குறிப்புகள்
- உள்நாட்டு இஸ்லாமிய ஜிகாதி தீவிரவாதத்தின் கோர முகம் தோலுரிக்கப் பட வேண்டும்
- தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி
- இஸ்லாமியருக்கெதிரான இந்துத்துவ சூழ்ச்சிகள்!
- தோழர் யேசுவுடன் பேசாது திருமபிய இரவு
- தாய் வீடு
- அட்லாண்டிக்குக்கு அப்பால்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்