கரு.திருவரசு
காட்சி- 11
காட்சி நிகழும் இடம்: அழகிய மலைச்சாரல்.
காட்சியில் வருவோர். கவிஞர், புலவர் பக்குடுக்கை நன்கணியார்.
காட்சி நிலை. இருவரும் ஒரு குன்றின்மேல் அமர்ந்திருக்கின்றனர்.
கவிஞர்-
புலவரே! ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் தாங்கள் மற்றவரோடு கொள்ளும் நட்பில், உறவில் தேராமல் ஒரு தெளிவுக்கு வரக்கூடாது. தெளிவுக்கு வந்தபிறகு சந்தேகப்படக்கூடாது.
புலவர்-
மெய்தான் கவிஞரே! பெண்கள் ஆண்களைச் சார்ந்துதான் வாழவேண்டும் என்ற நமது சமுதாய அமைப்பிலே, ஆண்கள் விடுதலைப் பறவைகளாக எதுவும் செய்யலாம், பெண்கள் அவர்களை ஐயப்படக் கூடாதென்றால் எப்படி?
கவிஞ- காலம் மாறிவருகிறது புலவரே! பெண்களும் விடுதலைப் பறவைகளாகப் பறக்கச் சிறகு விரித்துவிட்டார்கள். பெண் விடுதலையை ஆண்கள் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ கூடாது, அது முடியாது!
புல- அப்படியா, நல்ல செய்திதான்! கோவலன் மாதவி, உதயணன் வாசவதத்தை, நீங்கள் விளக்காமல் விட்ட இராமன் சீதை, இவர்களின் வாழ்க்கை நடப்பைப் பாருங்கள். ஆண்களுக்கு எவ்வளவு தன்னுரிமை! நினைத்ததைச் செய்கிறார்கள்! இந்த உலகத்தில் துரியோதனன், சீநக்கர் போல் எத்தனைபேர் இருக்கிறார்கள்?
கவிஞ- நாம் பார்த்தது பண்பு பற்றிய நிலை. இதில் கணக்கெடுப்பு, புள்ளி விவரம் எல்லாம் சரியாக வருமா புலவரே!
புல- உங்கள் ஐயம் சரிதான் கவிஞரே! வாழ்க்கை என்பது வாணிகம் அல்ல. அதைப் புள்ளிபோட்டுக் கணக்கெடுக்க முடியாது, கூடாது. ஆண் பெண் ஐயப்பாடும் அப்படித்தான்!
கவிஞ- புலவரே, என்ன சொல்லுகிறீர்கள்? இதில் என்னதான் உங்கள் நிலைப்பாடு!
புல- இதில் துலாக்கோல் போட்டு முடிவுக்கு வர முடியாது என்பதுதான் என் கருத்து. நீங்கள் தொடக்கத்தில் பாடினீர்களே திரைப்படப் பாட்டு அதுவே நல்ல தராசுதான்!
கவிஞ- எந்தப் பாட்டைச் சொல்லுகிறீர்கள்! நான் மூன்று பாடல்களின் பல்லவிகளைப் பாடினேனே!
புல- ஆமாம், அந்த மூன்றில் இரண்டைப் பாடுங்கள் போதும்! ஐயம், சந்தேகம், அயிர்ப்பு எனப் பலவாறு நாம் குறிப்பிடும் அந்தக் குணம் அறிவை அசைத்துப் பார்க்கும். சில நிலைகளில் அது தன்னைத் தானேகூட ஐயப்படும். நீங்கள் பாடுங்கள் கவிஞரே!
கவிஞ-
சந்தேகம் தீராத வியாதி- அது
வந்தாலே தடுமாறும் அறிவென்னும் சோதி – சந்தேகம்
(வேறு இசை)
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் – அதற்கு
சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும் – தன்னைத்
(காட்சி நிறைவு – நாடகமும் நிறைவு)
thiru36@streamyx.com
- நவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்
- எடின்பரோ குறிப்புகள் – 17
- குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 5
- வாசகரும் எழுத்தாளரும்
- முன்னோட்டம்
- விந்தையான யாத்திரிகர்கள்
- துரோபதி திருக்கலியாணம்
- மெட்டாபிலிம் (Metafilm)
- நவீன விவசாயம் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- கல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி
- கடித இலக்கியம் – 7
- பேந்தா !
- பகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்
- கண்ணகிக்குச் சிலை தேவையா?
- காக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க
- நாளை நாடக அரங்கப்பட்டறை
- எது மோசடி?
- மிக்குயர்ந்த டிக்’ஷனரியிலிருந்து …
- கடிதம்
- திருக்குரானின் எதிர் கொள்ளல்கள்
- கடிதம் ( ஆங்கிலம் )
- ‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’
- செர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது? -6
- கீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்!
- டாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி !
- குவேரா வழங்கிய அருங்கொடை
- பழைய பாண்டம் – புதிய பண்டம்
- புலம்பெயர் வாழ்வு 13
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23
- பெற்ற கடன்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்
- இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?
- சிறுவரை பள்ளிக்கு அனுப்புவோம்
- நிலா மட்டும்…
- பெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- விரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்
- புறப்படு
- வெவ்வேறு
- கறிவேம்பில் நிலவு
- கலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்
- இ ன் னி சை வி ரு ந் து