நாகரத்தினம் கிருஷ்ணா
ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊத்தைச் சடலம் விட்டே என் கண்ணம்மா உன் பாதஞ்சேரேனோ!
– அழுகுணிச் சித்தர்
—-
நண்பா!.. பிறப்பும் அதனால் வரும் இறப்பும் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பிறப்பும் இறப்பும் இல்லாத ஆன்மா தன் உண்மை இயல்பை அறியும்போது மரண பயம் அற்றுப்போகும். இதனைத்தான் ஆன்ம விடுதலையென வேதங்கள் கூறுகின்றன. ஆன்மாவான நான் அழிவில்லாதவன். ஐம்பூத சேர்க்கையாலான உன் பருவுடல் மட்டுமே அழிகிறது. உன் வினைப்பயனுக்கேற்ப நான் வேறோர் உடலைத் தேடவேண்டியிருக்கிறது. நின் ஆசைகளும், அவற்றின் விளைவுகளான வினைகளும் அற்றுவிடுமாயின் உடல் விட்டு உடல் என்று நான் ஓடத்தேவையில்லை
—-
இருபதாம் நூற்றாண்டு…
இந்தமுறை பெர்னார் கனவில் போர்க்களம் வந்தது. அவனைச் சுற்றிலும் அமளி துமளி. மனித உயிர்களின் அவலக்குரல்கள். ஆனைகளின் பிளிறல். குதிரைகளின் கனைப்பு. களமெங்கும் முனைமுறிந்த வேல்கள், உடைந்த வாள்கள். மனித உடல்கள். இவனும் இவனைச் சார்ந்தவர்களும் உக்கிரம் கொண்டவர்களாய் முன்னேறுகிறார்கள். இவனது கூரிய வாள் எதிர்ப்பட்ட மனிதர்களின் மார்பிலும், தோளிலும் ஆழப்பதிந்து, எழுந்து ஆவேசத்துடன் சுழலுகிறது. பூமியெங்கும் புதிய இரத்தம். இவனைப்போலவே, இவனது போர்வாளுக்கும் உன்மத்தம் பிடித்திருக்கவேண்டும். உடல்களை வீழ்த்திய வேகத்தில், நிணமும் ரத்தமுமாக வெளிப்படுகின்றது. எதிரிகள் பீதியில் இறைந்து ஓடுகிறார்கள். இவன் தரப்பு மனிதர்கள் வெற்றி, வெற்றியென முழக்கமிடுகிறார்கள். இவனுடல் முழுக்க, வெட்டுண்டதால் ஏற்பட்டக் காயங்கள், அவற்றிலிருந்து பீறிடும் ரத்தம். இதுவரையில் இல்லாத அயற்சி உடலில் பரவுகிறது. தனது குதிரையைத் தேடிய கண்களில் பூச்சிகள் மின்னுகின்றன. எஞ்சியிருந்த இவனது படைவீரர்களைப் பார்க்கிறான். இவனைப் புரிந்து கொண்டிருக்கவேண்டும். யானையொன்றினைக் கொண்டு வருகிறார்கள். பாகன் தனது கையிலுள்ள அங்குசத்தால் காதருகே குத்துகிறான். யானை தனது முன்னங்காலை உயர்த்தி வளைத்து இவன் ஏறுவதற்கு ஒத்தாசை புரிகிறது. இடது காலைப் பதித்து பாய்ந்து, பாகன் ஒதுங்கி வழிவிட கழுத்து பின்னர் முதுகென்று இருக்கை கிடைக்கிறது. குதிரைகள் சூழ ஆனை புறப்படுகின்றது. இவன் மனதுக்குள் முன் எப்போதும் காணாத உற்சாகம்.
விழித்துக்கொண்டவன், சன்னலருகே நின்று கிழக்கு திசையில் கடற்கரையைப் பார்க்கிறான். பொழுது பலபலவென்று விடிந்துக்கொண்டிருந்தது. சாம்பலும் வெண்மையும் கலந்த அடிவானம். அதில் முதுகைத் தேய்த்துக் கொண்டு இரண்டொரு பறவைகள். வங்காள விரிகுடா ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாகத் தனது நீலச்சேலையின் மடியில் கட்டிவைத்திருந்த மல்லிகைப் பூக்களை, நில அரிப்பைத் தடுக்கவென்று கரையில் போட்டிருந்த கருங்கற்களில் கொட்ட அவை சிதறி விழுகின்றன. தலையை இருசடைகளாகப் பின்னி மஸ்லின் தலைபாகைக்குள் பத்திரப்டுத்தியும், மார்புப் புறாக்களை காட்டன் சட்டையில் பதுக்கியும், தொடைதெரிய காட்டன் கால்சட்டையும், நேரிட்ட பார்வையுமாய் சைக்கிளில் செல்லும் துலக்கிய பித்தளைபாத்திரமொத்த அரவிந்தர் ஆஸ்ரமப் பெண்கள். மருத்துவர் ஆலோசனைக்காக, மரணத்திற்குப் பயந்து, நடை பழகும் தொப்பை ஆசாமிகள். சற்று இடவெளிவிட்டு, மூச்சிறைக்க நடக்கும் அவர்களது இரட்டைநாடி மனைவிமார்கள். எப்போதும்போல எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துகொண்டு பிணி, மூப்பு, மரணபயமற்ற காந்தி சிலை.
இரவு முழுக்க பெர்னார் தூங்கவில்லை. போதாதற்கு வழக்கம்போல, இவனுக்கென்று வருகின்ற கனவுகள் வேறு. மனிதன் தூங்காமலிருக்க காரணங்களுக்கா பஞ்சம். காதல்,கடன்,பசி,பணம்,மூப்பு,நோய்,பயம்,பேரிழப்பு,பெருமகிழ்ச்சி என வரிசையாயிருக்கின்றன. இவற்றுள் எது, இரவு தான் தூங்காமல் விழித்திருந்ததற்குப் பொருத்தமாயிருக்குமென பெர்னார் யோசித்துக் கொண்டிருக்கிறான்.
முதற்காரணமாக: வெகு நாட்களுக்குப் பிறகு வேலுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருந்ததைச் சொல்லவேண்டும். வேம்புலி நாயக்கரைத் தேடி அலைந்தற்கான பலன் நேற்றுத்தான் கைகூடிற்று என்றான். கிடைத்த செய்தியினால் மனம் பரபரப்பு அடைந்திருந்தது. உடனே வரமுடியுமா ? என்று ஆர்வமாய்க் கேட்டான். மன்னிப்புக் கேட்டுக்கொண்ட வேலு, இன்றைக்கு பெர்னாரைச் சந்திப்பதாக உறுதி அளித்துள்ளான். தன் மூதாதையருள் ஒருவனான பெர்னார் குளோதனின் முடிவினை அறிய ஏதேனும் ஒரு முனைகிடைத்தால் கூட போதும், சிக்கல் அவிழ்ந்துவிடும். அந்தச் சிக்கலின் மறுமுனையில் நிற்பது அவனாகக்கூட இருக்கலாம்.
இரண்டாவது காரணத்தினை, முக்கியத்துவம் பெற்றதில்லையென்றுதான் சொல்ல வேண்டும். இருந்தபோதிலும் அவன் மனதில், சந்தோஷத்துடன் கூடிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. பிரான்சிலிருந்து அவனது பள்ளி நண்பன் ரிஷார் ழான்-தெனி, புதுச்சேரிக்கு வருகிறேன் என்பதாக இன்றைய தினத்தைக் குறிப்பிட்டு, சில நாட்களுக்கு முன்பாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். பெர்னாரோடு லிசே(Lycee – உயர்நிலைப்பள்ளி)வரை ஒன்றாகப் படித்தவன். பிறகு மருத்துவம் படித்து, பிரச்சினைகளுள்ள நாடுகளில் மருத்துவசேவையில் ஈடுபட்டிருக்கும் பிரெஞ்சு நாட்டின் உலக அமைப்பொன்றில் இணைந்து ஆசிய ஆப்ரிக்க நாடுகளெனச் சுற்றிக்கொண்டிருப்பவன். இறுதியாக ஆப்கானிஸ்தானில் இருந்தவன், கடந்த சிலமாதங்களாகத் தாய்நாட்டில் இருந்துவிட்டு மீண்டும் ஆப்கானிஸ்தானம் திரும்புகிறான். இதற்கிடையில் தென்னிந்தியாவைச் சுற்றிப் பார்க்க விருப்பப்பட்டு இந்தியா வருகிறான்.
இரவுகளில் தூக்கமின்றி, விடிந்தபிறகு மீண்டும் கட்டிலில் விழுந்து தூங்குவதென்கின்ற தனது சமீபகால வழக்கபடி, பெர்னார் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு மறுபடியும் விழித்திருந்தபோது, திறந்திருந்த சன்னல்வழியே சூரியனின்பிரகாசமான கதிர்கள் நீண்டு இவனைச் சீண்டிக்கொண்டிருந்தன. அவற்றில் அடர்த்தியாய் குதித்தும், பறந்தும், சுழலுகின்ற தூசிப்படலம். கண்களில் வளையம் விழுந்து, இரப்பைமடல்கள் கீழே இறங்கியிருந்தன. தலை விண்விண்னென்று வலித்தது. டாய்லட்டுக்குள் நுழைந்து கண்ணாடியைப் பார்த்தான். கண்களிரண்டும் நன்கு சிவந்திருந்தன. வைத்திருந்த பன்னீரில் இரண்டிரண்டு சொட்டுகள் விட்டான். மெளத் வாஷ்கொண்டு வாயைக் கொப்பளித்தான். முகத்தைக் குளிர்ந்த நீரில் நனைத்துக் கழுவினான். துவாலையால் அழுந்தத் முகத்தைத் துடைத்துக் கொள்ள, முகம் தெளிவுக்கு வந்தது. சமயலறைக்குள் நுழைந்து பால் கலவாத கறுப்புக் காப்பியை, சர்க்கரை சேர்க்காமல் கோப்பையை நிரப்பிக்கொண்டு திரும்பினான். மெல்ல உறிஞ்ச, சூடு நாக்கைப் பதம் பார்த்துவிட்டது. காத்திருந்து சற்றே ஆறியபதத்தில் குடித்து முடிக்க உடலுக்குத் தெம்பு கிடைத்தது. காட்டனில் அரைக்கால் சட்டையும், மேற் சட்டையும் அவசரமாக அணிந்து தெற்குத் திசையில் இருந்த பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் திசையில் நடக்க தலைக்கு மேலே இந்தியச் சூரியன் காலையிலேயே உக்கிரமாகக் காய்ந்தது.
இன்ஸ்டிடாயூட்டில் நுழைந்தவன் நேராக இந்தியவியற் பகுதிக்குச் சென்றான். அங்கிருந்தவர்களிடம் எவரேனும் தேடிவந்தால் நூலகத்திற்கு அனுப்பிவைக்கவும் எனக்கூறிவிட்டு நூலகத்தில் நுழைந்தபோது மணி காலை ஒன்பதரை ஆகியிருந்தது. பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, புதுச்சேரியிலிருந்து வெளிவரும் த்ரே-யூனியோன்(Trait -d ‘Union) என்கிற மாத இதழை கையில் எடுத்துக்கொண்டு படிப்பகப்பகுதியில் வந்தமர்ந்தான். வாசிப்பில் கவனம் செல்லவில்லை. நான்கு இந்தியர்களும், இரு ஐரோப்பியப் பெண்களும் தங்கள் மேசையில் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள். கண்ணாடிவழியே கடலையும், கடற்கரையையும் பார்த்தான். நீலக்கடல் வெள்ளிக்காசுகளை பரப்பிக்கொண்டு ஜொலிக்கிறது. இரண்டொரு இயந்திரப்படகுகள் வேகமாய்ச் செல்ல, ஒரு சில கட்டுமரங்கள் காட்சிக்குட்பட்டதைபோல அலையின் தாலாட்டில் மெல்ல அசைகின்றன.
‘சார் உங்களைத்தேடிக்கொண்டு ஒருவர் வந்திருக்கிறார். ‘- நூலகர் இவன் காதருகே முனுமுனுக்கிறார்.
‘வேலுவாக இருக்குமோ ? ‘ என்று பெர்னார் திரும்பினான். வந்திருந்தவன் ரிஷார். அவனது நண்பன். எழுந்துசென்று நட்புமுறையில் அணைத்துக்கொள்ள, பிரெஞ்சு முறைப்படி இருவரும் கன்னங்களில் முத்தமிட்டுக்கொண்டார்கள்.
‘ச வா (Ca Va -எப்படி இருக்கிறாய்) ? ‘ – பெர்னார்
‘உய்.. ழெ வே பியன் ஏ துவா ?(Oui.. Je vais bien, et toi ? – ம்.. நல்லா இருக்கேன். நீ ? ‘)- ரிஷார்
‘கொம் துய் பெ லெ கோன்ஸ்தாத்தெ, சே லாந்து. ஒன் நெ பெ பா ஃபேர் ஓத்ர்மான் (Comme tu peux le constater, c ‘est l ‘Inde. On ne peut pas faire autrement. ‘ – எப்படித் தெரியுது ? இது இந்தியா. இங்கே வேறமாதிரி இருக்க முடியாது.) -பெர்னார்
‘ஆ! தூழூர் லெ மேம், தெசிதாம்மான் துய் ந பா சான்ழே..(Ah! toujours le meme, decidement tu n ‘as pas change- ஆ! அப்படியே இருக்கிற. நீ மாறவே இல்லை)-ரிஷார்
நெ ராக்கோந்த் பா தெ சொத்தீஸ். அலோன்சீ.(Ne racontes pas de sottises. Allons -y) எதையாவது உளறிக்கொண்டிறாதே. போகலாம்) – பெர்னார்.
பெர்னார் இன்ஸ்டிடியூட்டில், தன் சக நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சென்-லூயி (Saint-Louis) வாயில் வழியாகத் தன் நண்பனை அழைத்துக்கொண்டு சாலையில் இறங்கி நடந்தான். சிறிது தூரம் நடந்திருப்பார்கள். இளநீர் விற்கும் பெண்ணொருத்தி, ‘இள நீர் வேண்டுமா ? ‘ என்று கேட்டு ஓடிவந்தாள். ‘சரி. இரண்டு வெட்டும்மா.. ‘ என்ற பெர்னார் ஃபோந்த்தனின் தமிழைக்கேட்ட சந்தோஷத்தில், ஆளுக்கொரு இளநீரைச்சீவி ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தாள். இருவரும் குடித்து முடிக்க, பத்துரூபாய் நோட்டுக் கைமாறியது. அவள் சந்தோஷமாக வாங்கிக்கொண்டாள். இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.
நண்பர்கள் இருவரும், குடியிருப்புக்குத் திரும்பியபொழுது காலை மணி பதினொன்று. ரிஷார் அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, மாற்றாடை அணிந்துகொண்டு வந்தமர்ந்தான். நல்ல பசியோடு இருந்திருக்கவேண்டும், பெர்னார் தயாரித்த ஆம்லெட்டை அவசர அவசரமாகத் தக்காளி சாஸ், ரொட்டியுடன் சாப்பிட்டு முடித்தான்.
இருவரும் அருகிலிருந்த சோபாவில் பேச உட்கார்ந்தார்கள்.
‘பிரயாணமெல்லாம் எப்படி இருந்தது ? ‘
‘பிரச்சினைகள் இல்லை. செளகரியமாக இருந்தது ‘
‘என்ன திட்டங்கள் வச்ச்சிருக்க.. எங்கெங்கே போகப் போற. ? ‘
‘இன்றைக்கு, பயணக்களைப்பு தீர நன்றாகத் தூங்கணும். நாளைக்கும் ஓய்வுதான். நேரமிருந்தால், அரவிந்தர் சமாதியை பார்க்கலாம். நாளை மறு நாள் கிளம்பறேன். தமிழ்நாடு டூரீஸத்தில் ஏற்பாடு செஞ்சிருக்கேன். முதலில் சென்னை அங்கிருந்து காஞ்சீபுரம், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி. பிறகு கேரளாவில் ஒரு வாரம். திருச்சூர்ல ஆயூர்வேத வைத்தியம் குறித்த சில தகவல்கள் தெரிஞ்சுக்கணும். அங்கிருந்து மறுபடி புதுச்சேரி பிறகு சென்னை, நியூடில்லி, கராச்சி, ஆப்கானிஸ்தான். ‘
பணியாள் மணி, மார்க்கெட்டிலிருந்து திரும்பியிருந்தான்.
‘என்ன மணி, என்ன வாங்கி வந்த ? ‘
‘ஆட்டிறைச்சி, தக்காளி, உருளைக்கிழங்கு, முட்டை ‘
‘சரி.. சரி.. உள்ளே கொண்டுபோய் வச்சுட்டு, கொஞ்சம் வெளியே போய்ப் பார். வேலு வந்தால், உடனே அழைத்துவா. ‘
‘சரி சார்.. ‘ என்று வெளியே போனவன், போனவேகத்தில் திரும்பிவந்தான்.
‘சார்.. வேலு வறார்.. ‘
‘அவரை உள்ளே அனுப்பு. நீ தெருக்கதவை சாத்திவிட்டு, உள்ளேவந்து சமையல் வேலையைச் சீக்கிரம் பார். வேண்டுமானால் ஹாட் -பிரெட் கடைக்குச் சென்று, ரொட்டிகள் வாங்கிவா. ‘
‘போன் ழூர் ‘ வேலு உள்ளே வந்தான்.
‘வா வேலு. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். இப்படி உட்கார். அப்படியே என் பள்ளித் தோழனை அறிமுகப்படுத்துகிறேன், பேரு ரிஷார், பிரான்சிலிருந்து வந்திருக்கான், டாக்டர். தென்னிந்தியாவைப் பார்க்கணுமாம். உன்னை ரிஷாருக்கு அறிமுகபடுத்த வேண்டாமா ? ரிஷார், இவன் என்னுடைய இந்திய நண்பன், பேரு வேலு. ‘
வேலுவும், ரிஷாரும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
‘எங்கே ? வேலு கொண்டுவந்தாயா ? ‘
வேலு தான் கொண்டுவந்த துணிப்பையிலிருந்து மூன்று ஓலைச்சுவடிக் கட்டுகளை எடுத்து, எதிரே இருந்த மேசைமீது வைத்தான்.
/தொடரும்/
Na.Krishna@wanadoo.fr
- கடிதம் அக்டோபர்,7 2004
- கடிதம்- அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004
- பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ஆதரவுடன் நடாத்தும் சிறுகதைப் போட்டி!
- அப்புசாமியும் சனிப் பெயர்ச்சியும்
- ஆட்டோகிராஃப்-21 : “நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் மறைவதில்லை!”
- சொன்னார்கள்
- ‘சொல்லப்படுகிறது ‘ கொஞ்சம், ‘நம்பப்படுகிறது ‘ கொஞ்சம்.
- நான் பாடகன் ஆனது
- உரத்த சிந்தனைகள்- 2
- மெய்மையின் மயக்கம்-20
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் காட்டும் சமத்துவம்!
- புகலிட பெண்கள் சந்திப்பு. 23 வது தொடர்
- கடிதம் ஹா ஜின்: காத்திருக்கும் மாப்பிள்ளை கதைகள்
- அ.முத்துலிங்கம் பரம்பரை-3
- கீதையை எப்படிப் படிப்பது ? ஏன் ? – பகுதி 1
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 3
- எஸ் வையாபுரிப் பிள்ளையின் ‘தமிழின் மறுமலர்ச்சி ‘ – 2
- எஸ். வையாபுரிப் பிள்ளை – ஓர் அறிமுகம்-1
- ஓவியப் பக்கம் : ஓன்று :லீ போந்தேகோ (Lee Bontecou)- வன்முறை மறுக்கும் உலோகப் படிமம்
- தங்கமான என் வங்காளம் (Amar Sonar Bangla) : கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- கடிதம் அக்டோபர் 7,2004
- கடிதம் அக்டோபர் 7,2004 – இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்த சொல்கிறதா ?
- கடிதம் அக்டோபர் 7, 2004 -சிந்தனையை சிதறடிக்கும் கருத்து திரிபுகள்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 4. உச்சிமாகாளி கதை
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்: பிரான்சுவாஸ் சகன் (Francoise Sagan)
- ‘போரோடு ‘ ஒரு போர். ( ‘Bohr ‘s Model and Theoretical Warfare on Quantum Mechanics)
- சென்ற வாரங்களில் அப்படி – அக்டோபர் 7, 2004 (பெட்ரோல் விலை, சிறுபான்மை இட ஒதுக்கீடு, பகவத் கீதை, புஷ்-கெர்ரி, ஷியா-ஷூனி)
- யாரிந்த Dick Cheney ?
- அல்லி-மல்லி அலசல்- பாகம் 5
- பாகிஸ்தானில் ஷியா- சூனி கலவரங்கள்: வகுப்புவாத பயங்கரவாதம் என்ற சாபக்கேடு
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- உறவெனும் விலங்கு
- காட்டு வழிக் காற்று
- சாகா வரம்
- வாலிபத்தின் வாசலில்
- விவாகரத்து
- கவிதைகள்
- அவள்
- பெரியபுராணம் — 12 (இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்ட புராணம்)
- மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ?
- இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (3)
- யுனிக்கோடு இட ஒதுக்கீட்டில் தமிழுக்கு அநீதி! – துரைப்பாண்டியுடன் ஓர் நேர்காணல்
- தனியார் ராக்கெட்டிற்கு 10 மில்லியன் டாலர் பரிசு
- ‘பேப்லோ நெருதாவின் கவிதைகள் (2) சிதிலங்கள்
- சாமிக்குத்தம்
- உன்னைச் சுற்றி உலகம்
- காற்றுப் பை…
- வேலிகள் உயரும்
- பழைய வேட்டி
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் 40