ஏலங்குழலி
ஃபோன் அடித்தது. எடுத்தேன். அவள்தான்.
“சுஜிதா ? எப்புடி இருக்கே ?” அவளது உற்சாகக் குரல் துல்லியமாக ஒலித்தது. “எவ்வளவு நாளாச்சுடா உன் குரல் கேட்டு ? ஏண்டி இப்பல்லாம் ஃபோன் பண்ணுறதேயில்ல ?”
“அதில்லை ஜெயா-“ நான் முடிப்பதற்குள் அவள் தொடர்ந்தாள்.
“எப்பப் பாத்தாலும் வெட்டிச் சாக்கு. காலேஜ்லே நாம எப்புடி இருந்தோம் ? நீயும் நானும் எவ்வளவு க்ளோஸ் ? கல்யாணம் ஆகிட்டா, எல்லாத்தையும் மறந்துறலாமா ? என்ன ஃப்ரெண்டு நீ ?”
“தப்புதான், ஒப்புக்கறேன்.” நான் சமாளித்தேன். “அப்புறம் ? எப்புடி இருக்கே ?”
“ம்…எனக்கென்ன ? ஜாலியா ஓடிட்டிருக்கு. ஆமா, கல்யாணத்தன்னிக்கு முகூர்த்தம் முடிஞ்ச பிறகு உன்னை வெயிட் பண்ண சொன்னேனில்லை ? நீ ஏன் மத்தவங்களோட போயிட்ட ? நா எவ்வளவு தேடினேன் தெரியுமா ?”
“ஸாரி ஜெயா. ஆபீஸுலே பர்மிஷன்-“
“என்னத்த ஆஃபீஸோ…என்ன பர்மிஷனோ. என் பெஸ்ட் ஃப்ரெண்டே என் கல்யாணத்தன்னிக்கு என்கூட இல்ல…ப்ச். அவர்கிட்ட கூட சொல்லி வருத்தப்பட்டேன்…”
“ஸாரி, ஸாரி, ஸாரி. வீட்டுக்காரர் உன்னை எப்புடி கவனிச்சுக்கிறாரு ?”
“அவருக்கென்ன ?” அவளது குரலில் வெட்கம் எட்டிப் பார்த்தது. “நல்லாத்தான் கவனிச்சுக்கறாரு. நேத்து கூட ‘க்ராண்ட் டேஸ் ‘லே டின்னர் சாப்பிட்டு தான் வந்தோம். பர்த்டேக்கு வாட்ச் வாங்கிக் குடுத்தாரு…”
“உன் காட்டுலே மழைதான்!”
“சேச்சே. ‘வாலென்டைன்ஸ் டே ‘ வருதில்ல ? அதுக்குக் கூட என்னமோ ப்ளான் வச்சிருக்காரு. என்னன்னு கேட்டா, சஸ்பென்ஸாம். என்ன சஸ்பென்ஸோ…”
“எஞ்சாய் பண்ணு.”
“நான் எஞ்சாய் பண்ணுறது இருக்கட்டும். உன் லைஃப் எப்புடிப் போயிட்டிருக்கு ? அதைச் சொல்லவேயில்லியே ?”
“ம், போயிட்டிருக்கு.”
“என்ன அப்புடிச் சொல்லிட்டே ? லைஃபை நல்லா அனுபவிக்கணும், சுஜி. இப்ப விட்டா, மறுபடியும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையாது. நல்லா கரியரை இம்ப்ரூவ் பண்ணு. வாழ்க்கைல எதையாவது சாதிக்கணும், சுஜி. நாம காலேஜ்ல பேசிக்கிட்டதெல்லாம் நெனைவு இருக்கா ?”
“ம், இருக்கு.”
“எவ்வளவு கனவு கண்டோம் ? ஏதாவது ஒரு துறைலே உழைச்சு முன்னேறி சாதிக்கணும்னு நெனச்சமே ? வெறும் கல்யாணம், குழந்தைன்னு முடங்கிடாமே, நாம் தேர்ந்தெடுத்த துறையிலே ஜெயிக்கணும்னு நெனைச்சமே ?”
“நல்லா நெனைவிருக்கு.”
“சுஜி, நான் முடிவு பண்ணிட்டேன். கல்யாணத்துக்கு முந்தியே எல்லா ப்ளானையும் போட்டு வச்சிட்டேன். நான் கவிதை எழுதுவேன்னு ஒனக்குத் தெரியும்ல ? நெறைய கவிதைல்லாம் எழுதி வச்சிருக்கேன். இவருகூட படிச்சிட்டு ‘நல்லாருக்கு ‘ன்னாரு. பத்திரிகைக்கு அனுப்பப்போறேன். கொஞ்சம் கொஞ்சமா முன்னேறப் போறேன். எப்படி ?”
“ப்ளான் நல்ல இருக்கு, வாழ்த்துகள்.”
“என் ப்ளான் இருக்கட்டும். உன்னைப் பத்தி நீ சொல்லவேயில்லியே ? உன் சாதனையெல்லாம் எவ்வளவு தூரம் ? கதையெல்லாம் எழுத ட்ரை பண்ணுவியே ? அப்பல்லாம் உன்னை அடிக்கடி எழுத வைக்க நான் இருந்தேன்…இப்பவும் எழுதறியா ?”
தயக்கம். “ம்.“
“பத்திரிகைக்கு அனுப்ப முயற்சி பண்ணியா ? உனக்குத்தான் நல்லா எழுத வருமே ?”
“அனுப்பினேன். பிரசுரம் ஆயிருச்சு.”
மெளனம்.
“சொல்லவேயில்லை ? சரியான அமுக்குப் பிள்ளையாருடி நீ.“
“அதெல்லாம் இல்லை. ஜெயா. அப்ப நீ உன் கல்யாண வேலைலே பிஸியா இருந்தியா…”
“ம். சரி, ஒரு கதையோட நிறுத்திறாமே, தொடந்து எழுது, என்ன ? அப்புறம், எதுலே பிரசுரம் ஆச்சு ?”
“ம்ம்…” நான் ஒரு பிரபல தமிழ் வார இதழைக் குறிப்பிட்டேன்.
“உன் பேரை நான் பாக்கவேயில்லியே ?” சந்தேகம்.
“புனைப்பெயர்ல எழுதறேன்.” புனைப்பெயரைக் குறிப்பிட்டேன்.
“ஸ்ஸ்ஸ்…அது நீதானா ? அந்தப் பெயர்லே நாலஞ்சு கதை பாத்திருக்கேனே ? “*******” பத்திரிகைலே ஒரு தொடர்கதை கூட வருதே… ?”
“அதுவும் நான் தான்.”
மீண்டும் மெளனம்.
“அது சரி…வெறும் பிரசுரம் மட்டும்தானா, இல்ல… ?”
“சன்மானமும் உண்டு.“
“இதுக்கு பணமெல்லாம் கூட தருவாங்களா ? பரவாயில்லியே. வெரல் அசைக்காமே உக்காந்த இடத்துலே பணம் வருது… ? நைஸ்.”
“இலக்கியக் கூட்டத்துக்கெல்லாம் கூட போயிட்டிருக்கேன். ஜாலியா இருக்கு. பல எழுத்தாளர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து-“
“எப்ப கல்யாணம் பண்ணிக்கிறதா இருக்கே, சுஜி ?”
“அதுகேல்லாம் காலம் இருக்கு, ஜெயா. எழுத்துலே நான் இன்னும் நெறைய சாதிச்சு-“
“சாதனை இருக்கட்டும். கல்யாணம் ரொம்ப முக்கியம், சுஜி. ஆயிரம்தான்னாலும், நமக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா ? கரியர் எல்லாம் சரிதான்…ஆனா அதுக்காக ?”
“பாத்துக்கலாம், ஜெயா. நீ ஏன் இவ்வளவு டென்ஷனாகிற ?”
“எல்லாம் அக்கறையினாலதான். நாம எவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், சுஜி. உன் விஷயத்துலே நான் அக்கறை எடுத்துக்காம வேற யார் எடுத்துப்பாங்க ? ஏன் இப்புடி ஒட்டாமே பேசறே ?”
“இல்லப்பா, அதெல்லாம் இல்லை-“
“ ‘சட்டுபுட்டு ‘ன்னு கல்யாணம் பண்ணிக்க. அதுலே கெடைக்கிற திருப்தியே தனி…அப்ப வெச்சிறவா ? அடிக்கடி ஃபோன் பண்ணு. எங்கே…அம்மணி இப்ப பெரிய எழுத்தாளராகிட்டாங்க. எங்களுக்கெல்லாம் பண்ணுவீங்களோ, என்னமோ ?”
அதெல்லாம் இல்லை ஜெயா- என்று சொல்லப்போனவள், தயங்கினேன்.
“எனக்கும் டைமே இல்லை, ஜெயா. எல்லாப்பக்கமும் டெட்லைன் இருக்கு. இன்னிக்கு சாயங்காலம் ஒரு புத்தக வெளியீட்டு விழா வேற…முடிஞ்சப்ப ட்ரை பண்றேன்.”
“ம்”.
‘லொட் ‘டென்று அந்தப்பக்கம் ரிசீவர் வைக்கும் சப்தம் கெட்க, புன்னகையுடன் என் வேலையில் கவனத்தைச் செலுத்தினேன்.
—————————————
elankhuzhali@yahoo.com
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- மனித நல்லிணக்கம்.
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- யானை பிழைத்த வேல்
- பாரதி நினைவு நாள்
- பாரதி, மகாகவி: வரலாறு
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- கபிலர் பாறை
- ஆதாரம்
- ஏ ! பாரதி
- காகம்.
- அரவம்.
- கவிதைகள்
- கவிதைகள்
- புதசுக்கிரயோகம்
- கங்கைகொண்டசோழபுரம்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- தேர்க்கவிதை
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வைர வியாபாரமும் வன்முறையும்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- நட்பு
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- காதல் மாயம்
- அம்மண தேசம்
- மேல் நாட்டு மோகம்
- வினைத்தொகை
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- விடியும்! – (26)
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- என்ன உலகமோ
- கால் கொலுசு
- உள்வீடு
- யெளவனம்
- காபியிலும் ஆணாதிக்கம்
- இணையம்
- என் புத்திக்குள்
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- முரசொலி மாறன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு