சாமிசுரேஸ்
ஓர் புதர் மூடிய நடுநிசியில்
எல்லாம் முடிந்துபோயிற்று
நிணம் தின்னிப்பேய்கள்
வாய்முழுதும் குருதிமணம்
பற்களின் ஈறுகட்குள் மனிதச்சதைத் துண்டுகள்
முகம் முழுதும் சிரிப்பைப் பூத்தபடி
அரக்கர் குழுவொன்று எரிதணல் மூட்டியது
எம் கூடு நாசமாய்ப்போனது
வாய்க்கால் நிரம்பி குருதி வழிந்தோடியது
வயல் வரம்பெல்லாம் நரவாடை நீவியது
குழந்தைகள் குஞ்சுகள் பிஞ்சுகள் எல்லாம்
குத்திக் குதறி பிச்செறிந்தாயிற்று
வாழவழியின்றி வரலாற்று இனமொன்று
வரலாறின்றி அழியுது
——–
இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை
யாரிடம் கேட்பது
வாழ்வின் சுவடுகளில்லை
ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த
பிரளயம் அரங்கேறி முடிந்து
மௌனமும் கதறலுமே எதிரொலியானது
உயிர் மட்டும் துடித்து எரிகிறது
மயான தேசத்தின் துர்நாற்றம் தீர
இன்னும் எத்தனை ஆண்டுகள் கரையும்.
கேள்விகளைக் கைப்பிடித்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்
நுகங்களால் நிலம் தோண்டிச் சுவாசித்தேன்
ஏமாற்றங்களும் சந்தேகங்களும் கதறிக்கொண்டிருந்தன
எம்மை நாமே புண்ணாக்குவதைத் தவிர யாதறியோம்
——–
காகிதத்தில் இறுகிப்போன பதிவுகளை உள்வாங்கியபடி
காலம் விரைந்துகொண்டிருக்கிறது
இரவும் பகலும் பூமியின் மீது கொட்டிக்கிடக்கிறது
அதன் மேடு பள்ளங்கள் பனியால் நிரம்பி சமதரையானது
இப்பனியின் கீழ் புதையுண்ட ஆன்மாவை எடுத்து முகர்ந்தேன்
கண்களின் ஓரங்களில் இன்னும் ஓர் கனவு மிச்சமிருந்தது
உங்கள் கடைசிப் புன்னகையைத் தாருங்கள்
நாம் அழுகையைத் தொலைக்கவேண்டும்
- கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)
- வலி
- பார்வை: பல நேரங்களில் பல மனிதர்கள்/ பாரதி மணி
- நிகண்டு = எழுத்தின் அரசியல்
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் – காதல் என்பது என்ன ? கவிதை -28 பாகம் -4
- தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை
- பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -15
- நற்றமிழ் வளர்த்த நரசிம்மலு நாயுடு
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்
- கம்பராமாயண முற்றோதல் நிறைவு விழா
- அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப்போட்டி முடிவுகள்
- பாரிசு நகரில் தமிழ் இலக்கிய விழா 12 -ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்
- திரு. மு. சிவலிங்கம் அவர்களின் விழி வேள்வி (விகடன் பிரசுரம்) என்னும் நூல் வெளியீடு விழா
- வேத வனம் விருட்சம் 86
- யாரிடமும் சொல்லாத சோகம்
- கிடை ஆடுகள்
- மலேசியா ஏ.தேவராஜன் கவிதைகள்
- இரண்டாவது முகம்
- களம் ஒன்று – கதை பத்து -முதல் கதை -உதட்டோடு முத்தமிட்டவன்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -18
- அம்மாவின் கடிதம்
- நண்டு
- அன்பாலே தேடிய என்…
- பெறுதல்
- முள்பாதை 30
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபtத்திரெண்டு
- பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி
- A Travel to Grand Canyon (ஃக்ராண்ட் கன்யானுக்குள் ஒரு பயணம்)
- புறத் தோற்றம்
- கால்களின் அசமகுறைவு
- ஜன்னல் பறவை:
- யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு
- முப்பது ஆண்டுகளில் பரிதி மண்டல விளிம்பைக் கடந்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் ! (Voyager 1 & 2 Spaceships)
- நினைவுகளின் சுவட்டில் -(48)
- விநோதநாம வியாசம்