ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
கோட்டை பிரபு
அயல் நாடுகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபல கலைஞர்கள்,தலைவர்கள் அவரவர்தம் பிறந்த நாட்டின் பெருமை பேசவேண்டியவர்கள், அதைச்செய்யாவிட்டாலும் இகழ்ச்சியாக்காமல் இருக்கவேண்டும். அதற்கு மாறாக, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த கண்ணதாசன் முத்து விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் பேசியபோது �இதுபோன்ற விழாக்கள் தமிழகத்தில் நடைபெறுவது இல்லையென்றும், நல்ல தனித்தமிழ்ப் பாடல்களை அவர்கள் இரசிப்பதில்லையென்றும்� மேடையில் அறிவிக்கும்போது, அச்சொற்கள் அங்கு அமர்ந்திருக்கும் உணர்வுள்ளவர்களின் மனங்களை ரணங்களாக்கும் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை? .
ஒரு நிகழ்ச்சி நடத்துவதென்பதும் அதில் பங்கேற்பதென்பதும் பெரிய விசயம்தான். அது எங்கு நிகழ்வினும் பாராட்டப்படவேண்டியதே , ஆனால், தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும், தன்னை அழைத்து உபசரித்த அமைப்பையும் திருப்திப்படுத்துவதற்காக அந்நேரத்தில் அவர்களது � நா � அவ்வாறு பிறழ்கிறதா?
சிங்கையில் பிற இனத்தைக்காட்டிலும் தமிழர்களது மொழிசார்ந்த நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. உண்மையில் பெருமிதம்தான், அதற்காக ஒன்றைத் தாழ்த்தி மற்றதை உயர்த்தவேண்டுமா?.
ஒருநாட்டிலிருந்து சிறப்பு விருந்தினர் அழைக்கப்படும்போது ஏதோ ஒரு வகையில் அவர் அந்நாட்டின் பிரதிநிதியாகவே வந்திருக்கிறோம் என்பதை ஏன் எண்ண மறக்கிறார்கள்? வெறும் கைத்தட்டலுக்காக இதுபோன்ற சிறுமை விளம்பரங்கள் தேவையா?
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்துள்ளதே இன்றைய உலகம் என்பதை உணர்ந்தவர்கள் நாம். நம் நாட்டில் சில தரம் கெட்ட குழப்பவாதிகள் நிகழ்த்தும் சிறுமைச்செயல்களையும், எங்கோ நிகழும் ஒழுங்கீனங்களையும் இப்படித்தான் எங்கள் நாடு என்ற வகையில் மற்றநாடுகளில் போய் மேடையில் அம்பலப்படுத்த வேண்டியதன் அவசியம்தான் என்ன?
இதுபோன்ற அவமதிப்புகள் தேவையற்ற இனப்பூசல்களைத் தோற்றுவிக்கும் என்பதனை தமிழ்மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை சிறப்புற நடத்தும் சிங்கை அமைப்புகள் உணர்ந்துகொண்டு இனிமேல் வருகைதரும் விருந்தினரிடம் இதுபற்றி ஆலோசிப்பது ஒன்றே ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
மனக்குமுறலுடன்,
கோட்டை பிரபு
kottaiprabhu@yahoo.com
- “முகமிழக்கும் தருணம் இரவில்தான்”
- பூகம்பம்
- காதல் நாற்பது -41 நன்றி கூறுவேன் நேசிப்பதற்கு !
- தீபாவளி
- கவிதைகள்
- சொற்களைத்திருடிய வண்ணத்திகள்…
- கவிதை
- நீங்கள் செய்வது என்ன…? ஹெச்.ஜி.ரசூல் எழுத்து -மனுஷ்யபுத்திரன் பதிவு
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 2
- நீரால் அமையும்
- பொற்கொடியும் பார்ப்பாள்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1
- கால நதிக்கரையில்……(நாவல்)-26
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 30
- அவருடைய புகழுக்குப் பின்னால்
- தமிழர் திருமகன் இராமன்
- அணுப் பிணைவுச் சக்தி எப்படி ஆக்கப் படுகிறது ? – 5
- புக்குத்தீமா சமூகமன்றத்தின் பட்டிமன்றம்
- ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்
- 9 கேள்விகளும் – உண்மையின் மையப்புள்ளியும்
- ஹெண்டர்சனின் 20-வது பட்டிமன்றம்
- தைலம்
- சாளரத்துக்கு வெளியே: முத்துலிங்கத்தின் வெளி
- Nfsc announces the Release of Video Documentary “Folklore of the Transgender Community in Tamil Nadu”.
- “படித்ததும் புரிந்ததும்”.. (4) ராமர் சேது-ஆதம்ஸ்பாலம்-பந்த்-உயர்நீதிமன்றம்-உச்சநீதிமன்றம்
- தொல்காப்பியச்செல்வர் முனைவர் கு.சுந்தரமூர்த்தி (14.04.1930)
- அஞ்சலி : சிரிக்கத்தெரிந்த மார்க்ஸியர்:சோதிப்பிரகாசம்
- எழுத்துப் பட்டறை
- எங்கள் தேசப்பிதாவே
- கொழுக்கட்டைச் சாமியார் கதை
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9
- Marappachi Presents Kaalak Kanavu A Docu – Drama on Women in Public Space in Tamil Nadu