கடிதம்
பரி
தமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி> என்ற தலைப்பில் திண்ணையில் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது. “தமிழிசை என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் வெறும் போலி” என்பதுதான் கட்டுரையின் அடிநாதம். அதற்கு அதன் ஆசிரியர் வைக்கும் வாதங்கள், தமிழர்களின் இசையறிவு பற்றிய அவரின் கண்டுபிடிப்பு கொஞ்சம் நெளிய வைக்கிறது.
இந்தப் பத்தியைப் படிக்கும் எவருக்குமே முதல் வாக்கியத்துக்கும் அடுத்த வாக்கியத்துக்கும் இருக்கும் முரணை எளிதில் கண்டுகொள்ளலாம்.
மேற்கோள்:
“முதலில் தமிழ் இசை என்பதே ஒரு தவறான வார்த்தைப் பிரயோகம். தமிழ் இசை என்று எதுவுமே இல்லை. ஆமாம், தமிழ்ப் பாடல்கள் இருக்கின்றன. தமிழர்கள் பாவிக்கும் இசை இருக்கிறது. தமிழர்கள் தோற்றுவித்த, பேணி வளர்த்த இசை
மரபு இருக்கிறது.”
தமிழர்கள் தோற்றுவித்த, பேணி வளர்த்த இசை மரபு இருக்கிறது, ஆனால் தமிழிசை என்று ஒன்று தனியாக இல்லை. “மரபு” என்ற ஒரு வார்த்தையை வைத்து அடுத்த வாக்கியம். நான் ஒரு இசை ஞானசூனியம். எனவே இந்த வார்த்தை விளையாட்டு
புரியவில்லை.
மேற்கத்திய இசை நாடகங்கள்(Opera), பாகிஸ்தான் இந்துஸ்தானி என்று ஒரு சுற்று போய்விட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்குள் நுழைகிறார். பிரச்சினை என்னவென்றால், அவர் கிளம்பியது டிசம்பர் மாத கச்சேரி மேடையிலிருந்து. திரும்ப நுழைவது கோடம்பாக்கத்தில்.
என்னையும் சேர்த்து பெரும்பாலான தமிழர்களுக்கு இசை என்றால் அது திரை இசைதான். திரை இசைய ரசிக்க அறிவுக்கூர்மையும் நுண்ணுணர்வும் அவசியம் இல்லை.
“தமிழ்ப் பாடலைப் பாடாதே என்று யார் கையைப் பிடித்துத் தடுத்தார்கள்?” என்று கேட்கிறார். “தமிழர்கள்” பேணி வளர்த்த டிசம்பர் மாத “மரபு”க் கச்சேரிகளில் எத்தனை சதவீதம் தமிழ் இடம்பெறுகிறது என்று அவருக்கே தெரியும்.
பிரபல இசை(pop)க்கும் மரபிசைக்கும் தனித்தனி இரசிகர்கள் உண்டு. இது உலகம் முழுவதும் பொதுதான். மரபிசையை இரசிக்க அதுபற்றிய அறிவு கொஞ்சமாவது வேண்டும். அது கர்நாடக இசையாக இருந்தாலும் சரி, சிம்ஃபொனி இசையாக இருந்தாலும் சரி. பெரும்பாலான தமிழர்கள் இரசிப்பது பிரபல இசையைத்தான். இதைக் கண்டுபிடிக்க ஆசிரியர் உலகம் சுற்றியிருக்கத் தேவையில்லை.
கொசுறு: Nothing but wind-க்கு “காற்றைத் தவிர வேறில்லை” என்பது நல்ல தமிழாக்கம்.
-பரி (parimels (at) gmail.com )
- காகம்
- சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்
- வாசிப்பவருக்கு நெருக்கமான கவிதைகள்
- ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- திருமுகப்பில்…..
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)
- வண்ணச்சீரடி
- நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1
- கடிதம்
- வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்
- பிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு
- விழித்தெழும் பாரதத்தை நோக்கி..
- என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்
- பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- ‘வினாடிக் கணக்கு’
- மாரியம்மன் கதை
- கடிதம்
- டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை
- சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்
- அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்
- புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை
- பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்
- கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!
- புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்
- சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8
- ஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்
- கலை இலக்கிய ஒன்றுகூடல்
- இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?
- சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்
- கடித இலக்கியம் – 17
- வகாபிய புரோகிதர்களுக்கு
- திரு நேசகுமாருக்கு பதில்
- தேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு
- லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு
- தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )