கடிதம்
குண்டலகேசி
திண்ணையின் கருத்துரிமை விளக்கம் ?
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
கருத்து – opinion
fact – நிகழ்வு
கருத்துகளை எழுதுவதற்கும், நிகழ்வுகளை எழுதுவதற்கும் ஏகப்பட்ட
வித்தியாசம் உள்ளது.
ஒருவருக்கு தன் கருத்துகளை எழுதுவதற்கு வானளாவிய உரிமை உள்ளது.
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்.
ஆனால் நிகழ்வு, வரலாறு என்று எழுதும்போது ஆதாரத்துடந்தான் எழுத வேண்டும்.
மலர் மன்னர் சிவாஜியையோ, சுந்தர ராமசாமியையோ சந்தித்திருந்தால், அதற்கு அவர்தானே ஆதாரம் வைக்க வேண்டும்! அவர் எழுதியவைக்கு அவரால் ஆதாரம் வைக்க முடியவில்லையென்றால் படிப்பவர்கள் இது பொய்யுரை என்று எண்ணுவதில் என்ன தவறு இருக்க முடியும். ஆதாரம் இருந்தால் வைக்கட்டுமே!
இவர் பெரியாரை சந்தித்ததற்கும் இவர் சாதியை விசாரித்ததற்கும் சாட்சி
உண்டா. ? இல்லை. இவர் எழுதியது அனைத்துமே பெரியார், அண்ணா, சிவாஜி என்று இறந்து போனவர்களை பற்றிதான் இருக்கிறது. இவர் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் கூறுவதற்கு இறந்து போனவர்களுக்கு பதில் கூறும் வாய்ப்பாவது உள்ளதா ? அதுவும் இல்லை. அவர்கள் இருந்த காலத்தில் அல்லவா இந்த வரலாற்றை( ?) எழுதியிருக்க வேண்டும் ?
ஒருவர் எழுதுவதெல்லாம் உண்மை என்று அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ள நாம் என்ன 13 ஆம் நூற்றாண்டிலா இருக்கிறோம் ? புஷ்ஷுக்கு நேஷனல் கார்டில் சலுகை அளிக்கப்பட்டதாக ஒரு கதை விட்டார்கள். சும்மா இல்லை. ஒரு லெட்டர் ஆதாரத்தோடு. இந்த லெட்டர் பொய்யென்று மூன்று மணி நேரத்தில் நிரூபித்தார்கள். இந்த காலகட்டத்தில் அவரவருக்கு தோன்றியதை எல்லாம் வரலாறு என்று எழுத முடியுமா ?
மலர்மன்னன் நிகழ்ந்ததாகச் சொல்லும் விஷயங்களுக்கு அவர்தான் நம்பத்தகுந்த ஆதாரம் வைக்க வேண்டும்.
இந்த கடிதத்தை திண்ணை வெளியிடாவிட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
—-
kundalakesi_s@yahoo.com
- நாணல்
- நிலவுகள் எப்போதும் கறுப்பு
- இ.பா. எனும் கல் விழுந்த குளமாகிறது என் மனம்
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 11
- புலம் பெயர் வாழ்வு (3)
- தேய்பிறைக் கோலம்!
- வாழ்க்கை
- ஐன்ஸ்டைன் புவியீர்ப்பு ஆயும் விண்ணுளவி, நூறாண்டுக்குப் பிறகு நீடிக்கும் ஐன்ஸ்டைன் நியதிகள் -2 [100 Years of Einstein ‘s Theories
- அடுத்த திண்ணை வெளியீடு மார்ச் 17 அன்று வெளிவரும்
- பெரியபுராணம் – 79 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கவிதைகள்
- தோழன் புஸ்பராஜாவுக்கு
- உண்மையின் ஊர்வலங்கள் (3)
- நான் கண்ட சிஷெல்ஸ் – 13. சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை
- அம்பேத்கரின் மதம் குறித்த சிந்தனைகள்
- கடிதம்
- பெண் எழுத்துக்கள் ஆண்களைச் சாடுவதற்கு நியாயங்கள் குறைவுதான் : மொழிபெயர்ப்பாளர் மீனாட்சி புரியுடன் சந்திப்பு
- தாவோ வாழ்வியல் (மூலம் : திரேக் லின்)
- விருதுகளும், விவாதங்களும்,கருத்துச் சுதந்திரமும்
- சாரங்கா குண சீலனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
- கடிதம் – ஆங்கிலம்
- திரும்பவும் திண்ணையில் அமரும் துணிவு பெறுகிறேன்
- வருந்துகிறேன்
- சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் – 5
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
- கடிதம்
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி 5.)