கடிதம் பிப்ரவரி 25,2005
கவிமதி
தமிழ்கூறும் நல்லுலகில் தமிழுக்கும், தமிழனுக்கும் ஏற்பட்டிருக்கும் நிலைதான் கவலைக்கிடமானது. இராமதாசும்,திருமாவளவனும் தமிழுக்கென்று சேர்ந்தது வரதன்களுக்கு ஏன் வெறுப்பாகிறது என விளங்கவில்லை. உலகளவில் பரந்துகிடக்கும் தமிழர்கள் திருமாவளவனை அழைப்பது அவர் சார்ந்த சாதியை வளர்ப்பதற்கன்று என்பது வரதன்களுக்கும் தெரிந்தாலும் நம் பங்கிற்கு நாமும் தமிழ் எதிர்ப்பை வெளிபடுத்தணுமே என்று எழுதியிருப்பதுதான் எரிச்சலூட்டுகிறது.
இப்படிப்பட்ட திண்ணைத் தூங்கிகளால் தான் இன்று தமிழன் போட்ட பிச்சை சோத்தை திண்றுகொண்டிருப்பவனெல்லாம் தமிழ் எதிர்ப்புபற்றி தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு பேசுகிறான். இதில் தேவையில்லாமல் அறிவுமதியை வேறு வம்புக்கிழுத்திருக்கிறார். சன் டாவியின் பெயரை தமிழ்படுத்துவாரா என்று திருமாவளவனிடம் கேட்ட இவர் அது சம்மந்தமான தமிழறிஞர்களிடம் கேட்பாரா ? அறிவாலயத்திற்கு அறிவில்லையென்றால் அதற்கு திருமாவளவனா பொறுப்பு! அறிவுமதி போல அறிஞர் ஒருவரின் சொந்த விஷயங்கள் பற்றி பேசுவதற்கு முன் அவரைப்பற்றின ஆழ்ந்த, தெளிவான சிந்தனைவேண்டுமென்பது வரதனுக்கு தெரிய வில்லையெனில் இனியாவது கற்றுக்கொள்ளவும்.
இன்றைய சூழலில் பெரும் பெரும் அரசியல் கட்சிகளெல்லாம் நடிகன்,நடிகைகளை வைத்தே ஓட்டுப்பிச்சை எடுத்து அரசியல் நடத்திக்கொண்டிருந்தாலும் அதே கோடம்பாக்கத்தில் இருந்துக்கொண்டு தமிழுக்காக எதையும் விடுவேன் என வாய்சவடால் அறிக்கை விட்டுக்கொண்டிராமல் சொல்வதை செய்துகாட்டும் திறனும்,தைரியமும்,ஆற்றலும் அறிவுமதியைத்தவிர திரைப்படப்பாடல் என்ற பெயரில் தமிழையும்,தமிழச்சிகளையும் கொச்சைபடுத்தி பிழைப்பு நடத்தும் கவிஞர்களில் வாலி தொடங்கி நாளை வரப்போகும் எந்த கவிஞனுக்கும் அருகதையில்லை என்றேகூறுவேன்.
இவருக்கு தமிழ் வளர்க்க வக்கில்லை அல்லது பொருப்பில்லை அடுத்தவர்கள் செய்வதை குறைகூற ,வரதன் தனது தமிழ் எதிர்ப்பு பற்றி நேர்ிடையாக சொல்லாமல் திருமாவளவன்,இராமதாசு இணைப்ப்ின் அவசியம் பற்றியும், தமிழ்,தமிழன் என்றுமட்டுமே வாழும் அறிவுமதி பற்றியும் பேசி மறைமுகமாக தனது தமிழ் புறக்கணிப்பை வெள்ிப்படுதியிருக்கிறார் என்பது அவர்ின் கட்டுரையில் உடைக்ிறது. ரெட்டைமலை சீனிவாசன் அவர்களை ஒதுக்கிவைத்து விட்டு திருமாவளவன் என்றுமே தமிழியம் பேசுவதுகிடையாது. அம்பேத்கருக்கும்,ரெட்டைமலை சீனிவாசனுக்கும் இடையே உள்ள மொழிகுறித்த சிந்தனைய்ில் அவர் தெள்ிவாக இருக்கிறார்.
இரண்டு பெரும் சமுதாயத் தலைமையின் இணைப்பென்பது அவ்விரண்டு சமுதாயத்தின் பரவலான ஒற்றுமையே என்பது தெரியாதா ? கடலூர் மாவட்டத்தினர் பற்றி இவர் ஏன் கவலைகொள்கிறார் என்று வ்ிளங்கவில்லை. இனிமேலும் பாகுபாடுகள் வேண்டாம் தமிழன் தனக்குத்தானே அடித்துக்கொண்டு அடுத்தவனுக்கு இடமளிக்க வேண்டாம் என்பதே இவ்விணைப்ப்ின் கருத்து இது வேண்டாம் காலகாலமாக பிரிந்துகிடக்கும் சமுதாயம் அடித்துக்கொண்டேயிருக்கட்டும் அதைவைத்தே அரசியல் பிழைப்பு நடத்தலாம், என்று நினைக்கும் பெரும் கட்சிகளின் நினைப்பில் தான் மண்விழுந்ததென்றால் வரதனுக்கு என்ன வாய்க்கு கிட்டாமல் போய்விட்டதென்று விளங்கவ்ில்லை.
திண்ணைகிடைத்து விட்டது என்பதற்காக தூங்கபடுத்துவ்ிட்டால் பார்ப்பவர்கள் பர்ிதாபபடுவார்கள் இந்நிலையில் தான் வரதன்னகளை பார்க்கமுடிகிறது. எங்கோ கண்ணுக்கு தெர்ியாமல் இருந்துக்கொண்டு எழுதும் வரதன் கொஞ்சம் கவனமாக எழுத்ினால் நல்லது. எழுத்தாளனுக்கு பாச்ிசம் கூடாது இருந்தால் பகைமையினை வளர்க்கும். பரபரப்பிற்காக எழுதிபழகும் வரதன் இனிவருங்காலத்திலாவது பக்குவமாகவும் எழுதுவார் என்று நம்புவோம்.
உரிமையுடன்
கவிமதி
துபாய்
kavimathy@yahoo.com
- ஐூலியாவின் பார்வையில்….
- து ை ண :4 ( குறுநாவல்)
- பறவைகளும் துப்பாக்கிரவைகளும்
- கலைஞன்.
- தமிழ் சூழலுக்குள் ஆய்வு முறைமைகளும் கருத்துக்கட்டுமானமும்.
- பேஜர்
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)
- தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்
- தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்
- மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்
- தண்டனை.
- சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!
- சுகிர்தங்கள் புலரும் கனவு
- சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்
- சூடான்: தொடரும் இனப் படுகொலை
- கனவுகள் கொல்லும் காதல்
- அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)
- புறாக்களுடன்.
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)
- பார்க்கிறார்கள்
- நம்பிக்கை
- நவீனத்தின் அளவு
- கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம்- 30
- அச்சமும் அவலமும் அவரவர்க்கு வந்தால்…
- பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]
- யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)
- எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி
- சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்
- வருத்தமுடன் ஓர் கடிதம்
- பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –
- கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா
- கடிதம் பிப்ரவரி 25,2005
- பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை
- ஓவியப் பக்கம் – பதினைந்து – பில் வயோலா – மனிதவாதையும் அதன் கலை வெளிப்பாடுகளும்
- கோட்டல் ருவண்டா
- கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா
- சக்தி
- கடிதம் பிப்ரவரி 25,2005
- கடிதம் பிப்ரவரி 25,2005
- ஞானவாணி விரூது 2004
- கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?
- கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு
- ரெங்கராஜன் நூல் விமரிசனக் கூட்டம் – பிப்ரவரி 27,2005
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்
- சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்
- குறும்படப்போட்டி
- நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா