கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா
சலாஹுத்தீன்
====
பர்தா பற்றிய விளக்கத்திற்கு போகுமுன் நேசகுமாரின் கவனத்திற்கு சில
விஷயங்களை வைக்க விரும்புகிறேன்.
நாகூர்ரூமியின் ‘இஸ்லாம் ஒரு எளிய அறிமுகம் ‘ என்ற நூலில் அவர் ‘முஹம்மது
(ஸல்) அவர்கள் இறுதித்தூதர் ‘ என்று குறிப்பிட்டதற்காக, அதற்கான
ஆதாரங்கள், இறைவசனங்கள், அவை இறங்கிய பிண்ணனி, அது குறித்து நிகழ்ந்த
சர்ச்சைகள், அது பற்றிய மற்றவர்களின் மாறுபட்ட கருத்துக்கள் ஆகியவற்றை
தெளிவாக குறிப்பிடவில்லை என்று ரூமியின் நேர்மையை சந்தேகப்பட்டார்கள்.
ஒரு அறிமுக நூலில் இவற்றையெல்லாம் எதிர்பார்ப்பது கொஞ்சம் அல்ல
ரொம்பவே அதிகம். அதே சமயத்தில் நீங்கள் கேட்ட அவ்வளவு விளக்கங்களும்
அததற்குறிய நூற்களில் மிகத்தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பது
இஸ்லாத்தை ஆராய்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அறியாததல்ல.
இஸ்லாமிய வரலாற்றில், குறிப்பாக நபிகளாரின் வாழ்வு எந்தவித
ஒளிவுமறைவுமின்றி தெள்ளத்தெளிவாக பதியப்பட்டிருக்கிறது. அண்ணலாரின்
மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட அவதூறுகளை கூட,
அவற்றிற்குறிய விளக்கங்களுடன் வரலாற்றில் பதிவு செய்யும் நேர்மை
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் இருக்கிறது. உதாரணமாக நீங்கள் உங்கள்
கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் அன்னை ஜைனப் அவர்களை நபிகளார் மணமுடித்தது
தொடர்பாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட அவதூறு, அன்னை ஆயிஷா அவர்களின்
மீது சுமத்தப்பட்ட களங்கப்பழி ஆகியவையும் அவற்றை இறைவன்
துடைத்தொழித்தான் என்ற விபரமும் மெளலானா மெளதூதி அவர்களின்
திருக்குர்ஆன் விளக்கநூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அன்னை ஜைனப் அவர்களின் திருமணத்தையொட்டி எழுந்த சர்ச்சையை குறிப்பிட்ட
நீங்கள், நபிகளார் அன்னை அவர்களை ஆடை விலகிய நிலையில் பார்த்ததாக
உங்கள் கட்டுரையில் மூன்று இடங்களில் எழுதி இருக்கிறீர்கள். இதை நீங்கள்
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினீர்கள் என்று தெரிவிக்க முடியுமா ?
மெளலானா மெளதூதி அவர்களின் திருக்குர்ஆன் விளக்கநூலில் ‘அவதூறு ‘ என்றே
குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்தை திரித்து கண்ணியக்குறைவான முறையில்
எழுதி இருப்பது எந்த வகை நேர்மை நேசகுமார் ?
நபிகள் நாயகம் அவர்கள் கோடிக்கணக்கான உலக முஸ்லிம்களின் அன்பிற்கும்,
மரியாதைக்கும் உரிய அப்பழுக்கற்ற தலைவர். அவர்களது துணைவியார்
முஸ்லிம்கள் அனைவருக்கும் தாய்மார்கள். இவர்களைப்பற்றி குறிப்பிடும்போது,
நீங்கள் உங்கள் தாய் தந்தையரை, நீங்கள் மதிக்கும் தலைவர்களை பிறர்
எவ்வாறு கண்ணியமாக நடத்த வேண்டும் என்று விரும்புவீர்களோ (அப்படி நீங்கள்
விரும்புவீர்கள் என்றால்) அதே அளவு கண்ணியத்துடன் குறிப்பிடுங்கள். இன்று
இஸ்லாத்தைப்பற்றி ஆனா ஆவன்னா கூட தெரியாத பலர் மெத்தப்படித்த
மேதாவிகள் போல பிதற்றிக்கொண்டிருக்கையில், நீங்கள் ஆதாரங்களுடன் (அது
சரியா தவறா என்பது வேறு விஷயம்) இஸ்லாத்தைப்பற்றி கேள்விகள்
எழுப்புகிறீர்கள் என்பதால்தான், அந்த கேள்விகளுக்கு மதிப்பளித்து பதில்
சொல்லிக்கொண்டிருக்கிறோம். கண்ணியக்குறைவான, ஆதாரமற்ற
விஷயங்களைப்பற்றி எழுதுவதன் மூலம் நீங்கள் உங்களையே அந்த
மற்றவர்களைப்போல தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள்.
பர்தாவைப்பற்றிய தங்கள் கட்டுரையின் சாராம்சமாக நான் விளங்கிக்கொண்டது
என்னவெனில், குர்ஆனில் பர்தாவைப்பற்றிய வசனங்கள் அனைத்துமே நபிகளாரின்
துணைவியார் மற்றும் நபிகளாரின் காலத்தின் வாழ்ந்த பெண்களுக்கு மட்டுமே
பொருந்தும், அவை ஓட்டு மொத்த மனித குலத்திற்கோ அல்லது எல்லா
முஸ்லிம்களுக்குமான இறைவனின் கட்டளைகளோ அல்ல என்ற உங்களின் வாதம்.
இது எப்படி தவறு என்பதைப்பார்ப்போம்.
இறைவன் நபிகளாரின் துணைவிகளுக்கு மட்டும் என்று கட்டளைகளை பிறப்பிக்க
நாடினால் வசனம் 33:32ல் உள்ளவாறு ‘நபியின் மனைவிகளே! ‘ என்று
நேரடியாக அழைத்திருப்பான். மாறாக ‘மூஃமின்களே ‘ என்று அழைத்தால் அது
ஒட்டுமொத்த முஸ்லிம்களைத்தான் குறிக்கும். ‘மூஃமின் ‘ என்ற சொல்லின்
பொருள் நம்பிக்கையாளர் என்பதாகும். அதாவது இஸ்லாத்தின்
கொள்கைகளின்மீது மனதாற நம்பிக்கைகொண்ட அனைவரையும் இந்த சொல்
குறிக்கும். நீங்கள் சொல்வதுபோல் இந்த சொல் அப்போது நபிகளாரின் கூட
இருந்த கூட்டத்தாருக்கு மட்டுமே பொருந்தும் என்றால், குர்ஆனில் எண்ணற்ற
இடங்களில் ‘மூஃமின்களே! ‘ என்று நம்பிக்கையாளர்களை அழைத்து இறைவன்
சொல்லும் கட்டளைகளை என்னவென்று சொல்வீர்கள் ?
பர்தா விஷயமாக ஹதீதுகளில் முரண்பாடுகளும், மார்க்க அறிஞர்களிடையே
கருத்து வேறுபாடுகளும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஹதீதுகளில்
முரண்பாடு என்பதை, சம்பந்தப்பட்ட ஹதீதுகளின் காலத்தை ஆராய்ந்தபிறகே ஒரு
முடிவுக்கு வரமுடியும். உதாரணமாக பர்தா சம்பந்தமான இறைகட்டளை வருவதற்கு
முன்பான ஹதீதுகளுக்கும், அதற்கு பின்பான ஹதீதுகளுக்கும் வித்தியாசம்
இருக்கலாம். மார்க்க அறிஞர்களின் கருத்து வேறுபாட்டிற்கு போகுமுன்
பர்தாவைப்பற்றிய சில அடிப்படைகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இஸ்லாத்தின் பார்வையில் பர்தா எனப்படும் ஆடைக்கு சில குறைந்தபட்ச
தகுதிகள் உண்டு. அவை, 1. பெண்களின் ஆடை அவர்களின் முகம், கை
ஆகியவற்றைத்தவிர பிற பாகங்களை மூடியதாக இருக்க வேண்டும் 2. உடல்
அமைப்புகள் தெரியும் வண்ணம் இறுக்கமாக இருக்கக்கூடாது 3. மிக மெல்லியதாக
(see-through) இருக்கக்கூடாது ஆகியவையே. சாதாரணமாக பெண்கள்
அணியும் ஆடைக்குஇந்த தகுதிகள் இருந்தால், அந்த சாதாரண ஆடையே
பர்தாதான். இதற்கென தனியாக ஒரு ஆடை அணிய வேண்டும் என்ற அவசியம்
இல்லை. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர் ஏழை
எளியவர்கள். அன்றைய பெண்கள் தங்கள் வழக்கமான ஆடைக்கு மேலதிகமாக ஒரு
கறுப்பு பர்தா அணிந்திருப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதே சமயம் நாட்டிற்கு
நாடு, ஊருக்கு ஊர் அங்குள்ள சூழ்நிலை, பழக்க வழக்கங்களை கருத்தில் கொண்டு
மேலே குறிப்பிட்ட குறைந்தபட்ச தகுதிகளுக்கு அதிக அளவிலான பர்தாவை
அணிவதில் எந்த தவறும் இல்லை.
பர்தா அவசியமா என்ற கேள்விக்கு, ஒரு மாறுதலுக்காக திண்ணையிலிருந்தே
சில குறிப்புகளை காட்ட விரும்புகிறேன்.
எஸ் கே அவர்களின் ‘மக்கள் மெய் தீண்டல் ‘ என்ற கட்டுரையில், நம்
குழந்தைகளின் பாதுகாப்புக்காக பெற்றோர்கள் மெற்கொள்ள வேண்டிய சில
வழிமுறைகளை சொல்லி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்று ‘ஆடை விஷயத்தில்
எப்போதும் கவனமாக இருக்கப் பழக்க வேண்டும். தூங்கும்போது கூட விலகாமல்
பார்த்துக்கொள்வது எப்படி என்று விளக்க வேண்டும் ‘ என்பதாகும். இஸ்லாம் இந்த
பாதுகாப்பைத்தான் பெண்களுக்கு கட்டயமாக்கி இருக்கிறது.
ஜோதிர்லதாகிரிஜா அவர்களின் ‘கவர்ச்சி, அடக்கம் X மரியாதை ‘ என்ற
கட்டுரையில் உடை விஷயத்தில் பெண்களில் சிலர்
சீரழியத்தொடங்கியிருப்பது கண்கூடான உண்மைதான் என்பதோடு, அவர்கள்
அவ்வாறு அலங்கோலப்படுத்திக்கொள்ள முனைவதற்கு ஆணே காரணம் என்றும்,
பெண்களின் அங்க அவயங்களை விகாரமாக பார்க்கும் சுபாவம்
படைத்தவர்களாகவே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள் என்றும்
குறிப்பிடுகிறார். பாரம்பரிய பண்பாடுகள் பெண்களுக்கு
போதிக்கப்பட்டதுபோல் ஆண்கள் விஷயத்திலும் கடைபிடிக்கப்பட்டிருப்பின்
பாலியல் குற்றங்கள் இன்றிருப்பதுபோல் மோசமாக அளவுக்கு வந்திருக்காது
என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். கற்பு நிலையை ஆண்களுக்கும்
பெண்களுக்கும் பொதுவில் வைத்த இஸ்லாம், பெண்களை பர்தா அணிம்படி
சொன்னதோடு ஆண்களையும் தங்கள் பார்வைகளை தாழ்த்திக்கொள்ளும்படி
கட்டளையிடுகிறது. ஏராளமான புள்ளிவிபரங்களை தரும் நேசகுமார்,
இஸ்லாமிய சட்டங்கள் அமுலில் இருக்கும் சவூதி அரேபியா போன்ற நாடுகளில்
பாலியல் குற்றங்கள் எந்த அளவுக்கு நடைபெறுகிறது என்ற புள்ளிவிபரத்தையும்
தெரிவித்தால், அதை அமெரிக்கா போன்ற ‘வளர்ந்த ‘ நாட்டின்
புள்ளிவிபரங்களுடன் ஒப்பிட்டு உண்மை நிலையை அறியலாம்.
பர்தா முறையில் அமைந்த உடை பெண்களுக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையுமே
அளிக்கிறது. பாகிஸ்தானின் சில பிரதேசங்களில் பர்தா அணியாத
பிறமத பெண்கள் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்ற புள்ளிவிபரம்
எந்த அளவுக்கு உண்மை என்பது நமக்கு தெரியாது. இந்த கூற்றில்
ஓரளவிற்காவது உண்மை இருக்கக்கூடும் என்று எடுத்துக்கொண்டால், முதல்
காரியமாக இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் கயவர்களை கடுமையாக
தண்டிக்க வேண்டும் ( ‘இஸ்லாமியச் சட்டங்கள் கடுமையானவை ‘ என்று நீங்கள்
அடுத்த கட்டுரை எழுதலாம்) அடுத்ததாக, பர்தா அணிவதால் அந்த பெண்களுக்கு
பாதுகாப்பு கிடைக்குமென்றால் அவர்கள் பர்தா அணிவதில் என்ன தவறு ?
‘முஸ்லிம்களும்கூட பர்தா அணிவதை கைவிட வேண்டும் ‘ என்ற உங்கள் கூற்று இந்த
பிரச்னைக்கு எந்த விதத்தில் தீர்வாகும் ? ஒரு ஊரில் ஒரு சிலர் மட்டும்
உணவுக்கே வழியில்லாமல் இருந்தால், அவர்களுக்கும் உணவு கிடைக்க ஏற்பாடு
செய்வதற்கு பதிலாக அந்த ஊரில் அனைவருமே பட்டினி கிடக்க வேண்டும் என்று
சொல்வது போலல்லவா இருக்கிறது ?
– சலாஹுத்தீன்
salahudn@yahoo.co.uk
- ஞானப் பெண்ணே
- செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்
- இளித்ததாம் பித்தளை! – துக்ளக் இதழில் குருமூர்த்தி எழுதிய கட்டுரையின் தாக்கம்
- ஆளுநர் பதவியும், ஒரு கேலிக்கூத்தும்
- காஞ்சி சங்கராச்சாரியார் கைது
- சங்கடமடமான சங்கரமடம்
- சகுந்தலா சொல்லப் போகிறாள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -46
- வெகுண்டு
- செக்கென்ன ? சிவலிங்கமென்ன ?
- அறிவியல் புனைகதை வரிசை 1 : ஐந்தாவது மருந்து
- போரும் இஸ்லாமும்
- நெஞ்சுக்குள்ளே ஆசை
- பேரணைகள் அனைத்தும் வேதனைகள் அளிப்பவையா ? இந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (9)
- ஒப்புமை சைகையும், இலக்கமுறை சைகையும்
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்
- இந்தமுறை
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு
- கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்
- நன்றி, சங்கரா! நன்றி!!
- எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்
- மீரா – அருண் கொலட்கர்
- ஜெயேந்திரர் கைது – ஜெயலலிதா அரசின் தொடரும் அராஜகம்
- மெய்மையின் மயக்கம்-26
- கடிதம் நவம்பர் 18,2004
- ஒடுக்குமுறைக்கு எதிரான அரங்கு – நவம்பர் 21, 2004
- அவளோட ராவுகள் -3
- ஆசாரகீனனின் ஏக்கம் தீர்ந்ததென்றால்
- ஃபோட்டோ செய்தி: தைரியலஷ்மியின் பக்தர் நேரியல் கட்டி…. கைகட்டி பணிவாக…
- பார்த்திபனின் அமெரிக்கத் தமிழர் பற்றிய பேச்சு
- மக்கள் தெய்வங்களின் கதை – 10
- ஓவியப் பக்கம் ஏழு – இஸாமு நகூச்சி – வெளியை உணர்த்தும் ச்ிற்ப உடல்
- தமிழின் மறுமலர்ச்சி – 6
- வையாபுரிப் பிள்ளை – செய்ய வேண்டியவை
- தமிழர்களின் அணு அறிவு
- கடிதம் நவம்பர் 18,2004
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 1. இறுதி நபி
- காணாமல் போன கடிதங்கள்
- கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்
- தீ தந்த மனசு
- கவிதைகள்
- நகரில் தொலைந்த நட்சத்திரங்கள்
- பெண்சிசுக்கொலைகளும் பிரிட்டிஷ் அரசாங்கமும்
- பயங்கரவாதமும், பலதார மணமும்
- ஜெயேந்திரர் கைது பற்றி அறிக்கை
- அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன்
- கடிதம் நவம்பர் 18,2004 – இயக்குனர் வான் கோவின் குறும்படம்
- கடிதம் நவம்பர் 18,2004 – நேசகுமாருக்கு விளக்கம் 2. பர்தா
- புரூட்டஸ்