கடிதம் ஜூலை 15,2004

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

சமய மோகன்


மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,

சென்ற வாரம் மதிப்பிற்குரிய ஞாநி அவர்களின் இன்னொரு ரஜினிகாந்த் ? என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையை படித்தேன். அக்கட்டுரையில் அவரது பார்வையை தெளiவாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் திண்ணையின் வாசகனாகிய என்னுடைய பார்வையினை கீழே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.

விஜயகாந்த் அவர்கள் சொந்தமாக பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். அதனைப்பற்றி இதுவரை பெரிய புகார்கள் எதுவும் எழவில்லை என்று ஞாநி அவர்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாக அவர் மக்கள் தொண்டாற்றுபவராகவோ, இல்லை திறமைசாலியாகவோ கருதமுடியாது. அவர் ஒன்றும் ஏழை மக்கள் படிப்பதற்காக துவக்கப்பள்ளி நடத்தவில்லை. இன்றைய சூழலில் பணம் காய்க்கும் பெரும் நிறுவனமாக கருதப்படும் பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். அவர் ஆளுங்கட்சி எதுவாயினும் அதற்கு துதிபாடுவார், காரணம் அவர் நடத்தி வரும் கல்லூரி. ஆளுங்கட்சியை பகைத்துக் கொண்டால் பொறியியல் கல்லூரியில் எப்படி பணம் தேடுவது. தேடிய பணத்தை மக்களுக்காக செலவு செய்வது போல வேஷம் போடுவது. இவர் செய்யும் நல உதவி சிலகாலங்களாக தானே ? (அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டவை தானே ?

விஜயகாந்த் அவர்கள் கலைஞர் கருணாநிதிக்கு கலைவிழா எடுத்தபோது திமுக ஆளுங்கட்சி என்பதை மறந்துவிட வேண்டாம். இன்று பா.ம.க. மற்றும் திமுகவை விமர்சிக்கும் எண்ணம் உள்ளவருக்கு ஏன் அதிமுகவை விமர்சிக்கும் எண்ணம் வரவில்லை ?. இந்த மூன்றாண்டுகளில் அதிமுகவை விமர்சிக்காதது ஏன் ?, அவர் நடத்தும் பொறியியல் கல்லூரி தானே|.

இன்று சினிமாதுறையினரை பாதிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வந்துள்ளதே, அதனை விமர்சிக்கும் எண்ணம் ஏன் இவருக்கு வரவில்லை ?. தமிழகத்தில் படப்பிடிப்பை நடத்தவேண்டுமென்றால் வரிக்கட்டணம் அதிகம் என்பதனால் தானே இன்று பாண்டிச்சேரியில் நடத்துகிறார்கள் சினிமாக்காரர்கள். இதற்காக என்ன செய்தார் இவர் ?.

காவிரி பிரச்சினைப் போராட்டத் தகராறுகளைப் பற்றி :

மைசூரிலும் மாண்டியாவிலும் நடந்து வந்த தமிழ்நாட்டுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகளில் இராஜ்குமார் ரசிகர்கள் முக்கிய பங்கினை வகித்தார்கள். செப்- 24 2002 அன்று தமிழகத்துக்கு காவிரி நீரை தரக்கூடாது என வலியுறுததி அடுத்த நாள் நடக்கவிருக்கும் ஊர்வலத்தைப்பற்றி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதுவரை தமிழக நலன் மிது அக்கறையுள்ளதாக கூறிக்கொள்ளும எந்தவொரு நடிகரும் இதனை தடுக்கும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இராஜ்குமார், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் ஊர்வலம் நடத்தியபொழுது எந்தவொரு கண்டனக்குரலும் உடனே தமிழகத்திலிருந்த நடிகர் மத்தியில் வரவில்லை.

முதலில் பாரதிராஜா செப் 27 2002 அன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத் தலைவர் கே.சி. கவுடா கர்நாடகத்தில் நடந்த நிகழ்வுகளில் பங்குபெற்றதை கண்டித்தும், மெத்தனமாக இருக்கின்ற தமிழ் திரைப்பட கலைஞர்கள் என்ன செய்ய போகின்றார்கள் ?. என்று வினவியும் அறிக்கை வெளiயிட்டார். இதன் பின்னரே நடிகர் சங்கத்தின் சார்பாக ஒரு கூட்டறிக்கை வந்தது.

அக்டோபர் 2 2002 அன்று தமிழகத்திரையுலகின் சார்பில் அனைத்து பிரிவினரின் கூட்டத்தை தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் பாரதிராஜா கூட்டினார். தமிழர் பாதுகாப்பு அணி என்ற பெயரில் புதிய அமைப்பை தமிழ் திரையுலகின் பல்வேறு சங்கங்களும் இணைந்து உருவாக்கின. அக்கூட்டத்தில் தான் 12 ம் தேதி நெய்வேலியில் மிகப் பெரிய பேரணி நடத்த முடிவெடுத்தனர். முதலில் போராட்டம் எதுவும் நடத்த விருப்பம் தெரிவிக்காத நடிகர் சங்கம் பின்னர் பாரதிராஜாவை ஆதரித்து போராட்டத்தில் தாங்களும் பங்களிப்பதாக அறிவித்தது.

அக்டோபர் 6 2002 அன்று பாரதிராஜா தலைமையிலான குழுவினர் நெய்வேலி காவல் துணை கண்காணிப்பாளர் முருகையாவை சந்தித்து அனுமதி மற்றும் பாதுகாப்பு தர வேண்டுமென்று கோரினார்கள். அனுமதியும் அளிக்கப்பட்டது.

முதலில் பாரதிராஜாவின் தலைமையிலான நெய்வேலி போராட்டத்திற்கு திமுக ஆதரவு தந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் நடந்த நிகழ்வுகளினால் அதிமுக இப்பேராட்டத்தை தங்களுக்கு ஆதரவான போராட்டம் என்று கூறிக்கொள்ளும் என்பதற்காகவும், திமுகவின் தலைவர் கலைஞரை பாரதிராஜா கண்டுகொள்ளவில்லை என்பதற்காகவும் இதிலிருந்து பின்வாங்கியது . பிறகு விஜயகாந்தை முன்னிறுத்தி பாரதிராஜாவை பின்னுக்கு தள்ளும் செயலில் இறங்கியது .விஜயகாந்த் தலைமையில் நடிகர் சங்கம் முழுப்பொறுப்பேற்று அறவழியில் போராட்டம் நடத்தினால் தான்திமுக கலந்து கொள்ளும் என்று அறிவித்தது.

முதலில் இப்பிரச்சனையின் போது வெளiநாட்டில் விஜயகாந்த் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். பாரதிராஜா தான் போராட்டத்திற்கு வித்திட்டவர். அதற்கான நடவடிக்கையிலும் :டுபட்டவர் பின்னால் நடந்த நிகழ்வுகளில் அரசியல் ஆதாயத்திற்காக விஜயகாந்த் முன்னிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் தமிழுணர்வுடையவராக விஜயகாந்த் இருந்திருந்தால் இராஜ்குமாருடைய தமிழக எதிர்ப்பு

நடவடிக்கைகளை சினிமாத்துறை நண்பர்கள் மூலமாக தடுக்கும் வகையில் தனக்கு இயன்றதை செய்திருக்க வேண்டாமா ?. இல்லையெனில் நெய்வேலி போராட்டத்திற்கு இவரல்லவா விதை போட்டு செயலாற்றிருக்க வேண்டும் ?

சண்டியர் திரைப்படத்தின் பெயரை மாற்றக்கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருட்டிணசாமியின் ஆதரவாளர்கள் தேனியில் படப்பிடிப்பை நிறுத்தும் அளவுக்கு வன்முறையை நிகழ்த்திய போது நடிகர் சங்கத் தலைவராக என்ன செய்தார் இவர் ?.

ஒரு சமுகம் மேம்பட எத்தனையோ விதத்தில் பாடுபடலாம். மக்களுக்கு நன்மை செய்ய எத்தனையோ வழிகளுண்டு. அரசியல் முலமாகத்தான் செய்யவேண்டும் என்பதல்ல. ஒரு நடிகராக இருந்துகொண்டே சமுதாயம் மேம்பட பல தரமான திரைப்படங்களை தர முயலலாம். திரைப்பட நடிகர் சங்கத் தலைவராக இருந்துகொண்டு திரைப்பட துறை வளர்சிக்காக முயற்சிகள் மேற்கொள்ளலாம். நடிப்பின் சிகரமாக திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி அவர்களுக்கு மணி மண்டபம் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்து இரண்டாண்டுகளாகிறது. ஆனால் முடிந்தபாடில்லை. அதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் :டுபடலாம். இதுபோன்ற செயல்கள் திரைப்படத்துறையை மேன்மை அடையச் செய்யும். இதனை விட்டுவிட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிக்கொண்டு பதவிக்காகவும், புகழுக்காகவும் இன்றைய அரசியலுக்கு வர நினைப்பது மேலும் தமிழகத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்லும்.

பாமக இன்று வன்முறையை அதிகமாக கையாளுகின்றது என்பதே அதன் மேல் வைக்கப்படும் விமர்சனம். இதற்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல எனக்காட்டி கொள்ளும் வன்முறையாளராகவே இவர்கள் இருக்கிறார்கள். அதைவிட சிறப்பாக வன்முறை கலாச்சாரத்தை வளர்த்துவிடும் இவரை எப்படி அரசியலுக்கு அழைப்பது ?.

ரஜினிக்கு ஆதரவாக சினிமா துறையிலிருந்து எழுந்து குரல்களை விட அதிகமாக ஆதரவு குரல் விஜயகாந்த்க்கு எழுந்துள்ளதாக குறிப்பிட்டிருந்திர்கள். ரஜினிகாந்த் தன்னை ஒரு ஆன்மிகவாதியாக அடையாளங்காட்ட சிலக்காலங்களாக முனைந்தார். விளைவு அவர் சினிமாவை விட்டு விலகியே இருந்தார். சினிமாதுறையினர் தங்களுக்கு இலாபம்

தரும் எந்த நபரையும் ஆதரிப்பர் என்பது கடந்த கால வரலாறு. இதுவே ரஜினிக்கும் நடந்தது. ஆரம்ப காலத்தில் அனைவரும் ரஜினியின் துதிபாடினார் (அப்பொழுது ரஜினியின் படம் தயாரிப்பாளருக்கு பணம் காய்க்கும் மரம்). இன்றைய நிலைமை வேறு, ஆகவே துதிபாடுதல் விஜயகாந்த் பக்கம் சாய்ந்துள்ளது. விஜயகாந்த் வகிக்கும் இன்றைய நடிகர் சங்கத்தலைவர் என்ற பதவியே அவருக்கு இவ்வளவு ஆதரவு குரல்கள் தோன்றக் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

பாமக , திமுக, அதிமுக போன்ற கட்சிகளை எதிர்ப்பதற்காக விஜயகாந்த் போன்ற நபரை வளர்க்க நினைப்பது இடத்துக்காக மரத்தை வெட்டிய கதையாகிவிடும். மேலும் தமிழகத்தை இழிவு நிலைக்குக்கொண்டுபோய் விடும். இனி வரும் அரசியல் தலைவர்கள் தொலை நோக்கு பொருளாதார சிந்தனை, அரசியல் , சமூக மேம்பாட்டு சிந்தனையுடையவர்களாக, விஞ்ஞான வளர்ச்சி பற்றி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் சிந்தனையாக இருக்கிறது. எனவே விஜயகாந்த் இன்றைய சூழலில் நல்ல மாற்றாக விளங்குவார் என்று அவரை ஆதரிப்பது என்பதெல்லாம் நீந்ததெரியாதவன் முத்தெடுக்க கடலுக்கு சென்றதுபோல ஆகிவிடும்.

நன்றி.

வாழ்த்துகளுடன்.

கி. சமயமோகன்.

samayamohan@yahoo.co.in

Series Navigation

சமய மோகன்

சமய மோகன்

கடிதம் ஜூலை 15,2004

This entry is part [part not set] of 50 in the series 20040715_Issue

இப்னு பஷீர்


எங்கெல்லாமோ தேடிப்பிடித்து நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் ஒரு பொதுவான அம்சத்தை கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் இஸ்லாத்தை குறை கூறுவதாகவே அமைந்துள்ளன. ஒருவேளை அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கலாம். என்ன காரணத்தினாலோ அதை நேரடியாக சொல்லாமல் ஒத்த கருத்துடைய மற்றவர்களின் கட்டுரைகளை முகமூடியாக அணிந்து கொண்டு வருகிறீர்கள் என்று தோன்றுகிறது.

பழங்கள் நிறைந்த மரத்தின் மீதுதான் கல்லடி விழும். இஸ்லாம் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் அதற்கு ஒரு சான்று. இந்த ‘கல்லடி’ வீரர்கள் எழுதும் கட்டுரைகளில் உண்மை இருப்பது போல உங்களுக்கு தோன்றலாம். குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதை உங்களுக்கு தெரியும் அல்லவா ? அந்த குருடர்களின் கண்ணோட்டத்தில் அவர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். பாவம், அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்! ஆனால் அது யானையின் குற்றமல்ல. இது யானையப்பற்றி முழுதாக விளங்கிக் கொண்டவர்களுக்கு தெரியும்.

உங்களின் இத்தகைய மொழிபெயர்ப்பு ‘சேவை’க்கு கீழ்க்கண்ட ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்:

1. இஸ்லாத்தில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவது – பதில்: இஸ்லாத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை. அவ்வாறு எதுவும் இருப்பதாக தெரிந்தால் அது இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளாகத்தான் இருக்கும். ஒரு நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்றால் அது அந்நாட்டின் சட்டங்களின் தவறு அல்ல, அவற்றை முறையாக பின்பற்றாத குடிமக்களின் தவறே!

2. இஸ்லாத்தின் கொள்கைகளை விமரிசனம் செய்வது – பதில்: இஸ்லாத்தை பற்றி முழுதாக தெரிந்து கொண்டு பிறகு முயற்சி செய்யவும்.

3. இஸ்லாத்தை முழுதாக தெரிந்து கொள்ள முயற்சிப்பது – பதில்: இஸ்லாத்தை பற்றி நன்கு அறிந்தவர்களை அணுகவும். இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கவும். உங்கள் அபிமான கட்டுரையாளர்கள் போன்ற அரைகுறை ‘ஞானி’களிடமிருந்து நீங்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவே முடியாது.

உங்கள் மொழிபெயர்ப்பு திறமையை பயன்படுத்தி வேற்று மொழியிலுள்ள நல்ல இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வந்தாலாவது, தாய் மொழிக்கு நல்ல தொண்டு செய்த பலன் கிடைக்கும். இந்த ஆலோசனையை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்