கடிதம் ஜூலை 15,2004
இப்னு பஷீர்
எங்கெல்லாமோ தேடிப்பிடித்து நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் ஒரு பொதுவான அம்சத்தை கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் இஸ்லாத்தை குறை கூறுவதாகவே அமைந்துள்ளன. ஒருவேளை அதுவே உங்கள் கருத்தாகவும் இருக்கலாம். என்ன காரணத்தினாலோ அதை நேரடியாக சொல்லாமல் ஒத்த கருத்துடைய மற்றவர்களின் கட்டுரைகளை முகமூடியாக அணிந்து கொண்டு வருகிறீர்கள் என்று தோன்றுகிறது.
பழங்கள் நிறைந்த மரத்தின் மீதுதான் கல்லடி விழும். இஸ்லாம் அதைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் அதற்கு ஒரு சான்று. இந்த ‘கல்லடி’ வீரர்கள் எழுதும் கட்டுரைகளில் உண்மை இருப்பது போல உங்களுக்கு தோன்றலாம். குருடர்கள் யானையை தடவிப் பார்த்த கதை உங்களுக்கு தெரியும் அல்லவா ? அந்த குருடர்களின் கண்ணோட்டத்தில் அவர்கள் சொல்வது எல்லாம் உண்மைதான். பாவம், அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்! ஆனால் அது யானையின் குற்றமல்ல. இது யானையப்பற்றி முழுதாக விளங்கிக் கொண்டவர்களுக்கு தெரியும்.
உங்களின் இத்தகைய மொழிபெயர்ப்பு ‘சேவை’க்கு கீழ்க்கண்ட ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்:
1. இஸ்லாத்தில் காணப்படும் குறைபாடுகளை எடுத்துக்காட்டுவது – பதில்: இஸ்லாத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை. அவ்வாறு எதுவும் இருப்பதாக தெரிந்தால் அது இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளாகத்தான் இருக்கும். ஒரு நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்றால் அது அந்நாட்டின் சட்டங்களின் தவறு அல்ல, அவற்றை முறையாக பின்பற்றாத குடிமக்களின் தவறே!
2. இஸ்லாத்தின் கொள்கைகளை விமரிசனம் செய்வது – பதில்: இஸ்லாத்தை பற்றி முழுதாக தெரிந்து கொண்டு பிறகு முயற்சி செய்யவும்.
3. இஸ்லாத்தை முழுதாக தெரிந்து கொள்ள முயற்சிப்பது – பதில்: இஸ்லாத்தை பற்றி நன்கு அறிந்தவர்களை அணுகவும். இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்கள் எழுதிய புத்தகங்களை படிக்கவும். உங்கள் அபிமான கட்டுரையாளர்கள் போன்ற அரைகுறை ‘ஞானி’களிடமிருந்து நீங்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ளவே முடியாது.
உங்கள் மொழிபெயர்ப்பு திறமையை பயன்படுத்தி வேற்று மொழியிலுள்ள நல்ல இலக்கியங்களை தமிழுக்கு கொண்டு வந்தாலாவது, தாய் மொழிக்கு நல்ல தொண்டு செய்த பலன் கிடைக்கும். இந்த ஆலோசனையை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இப்னு பஷீர்
ibunubasheer@yahoo.com.sg
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது – 2004
- நிஜங்களாக்கு….
- In a different league : ஹிண்டுவைப் பற்றிய ஒரு முன் எச்சரிக்கை
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் -11 : AIMSIndia இசைக் கச்சேரி
- காங்கிரஸின் இன்னொரு கரிபி ஹடாவ் பட்ஜெட்
- சீனா : கம்யூனிஸத்திலிருந்து பாஸிஸத்துக்கு
- வாரபலன் – ஜூலை 15 , 2004 : பொன்குன்னம் வர்க்கி , மரணத்திற்குப் பின்னும் மதம் விடாது , அடி உதவுமா , சிவகுமாரின் ‘கொங்குதேர் வாழ்
- குண்டுமணிமாலை
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம் -28
- நாகூர் ஹந்திரி
- உள் சாரல்
- எங்கள் தாயே
- தீருமா சென்னையின் தாகம் ?
- வெங்கடேஷின் ‘நேசமுடன் ‘- அறிவுப்பூர்வமான தளம்: அக்கறையான தேடல்.
- வெந்தயக் கோழிக்கறி
- பரிதியின் ஒளிக்கனலில் மின்சக்தி உற்பத்தி [Electrical Energy from Solar Power]
- கணவனைக் கொல்லும் காரிகை
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- காற்றுக்கிளி
- சாவோடு வாழ்தல்
- கருவறை சொர்க்கம்
- சத்தியின் கவிக்கட்டு 15
- கழுகுக்குத்தெரியுமா கற்பூர வாசனை ?
- பாஸ்டன்வாசியின் செல்லாத வோட்டு
- புரட்சி வருகுது – பாரன்ஹீட் 911
- கடிதம் ஜூலை 15,2004
- கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள்
- கடிதம் ஜூலை 15,2004
- உலகத் தமிழ் சிறுகதைப் போட்டி முடிவுகள்
- மனவெளி 11-வது வருட நாடக நடன விழா- ஜூலை 18 , 2004
- ஆட்டோகிராஃப் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ‘
- எத்தனை நூற்றாண்டு வந்தாலும்
- அரசியலும் ஆங்கில மொழியும்
- பாப்லோ நெருடா
- Capturing the Freidmans (2003)
- பாரென்ஹீட் 9/11
- சிம்ஃபனியில் திருவாசகம்
- கடிதம் ஜூலை 15, 2004
- மெய்மையின் மயக்கம்-8
- உணர்வு
- சமாதானமே!
- நிஜங்களாக்கு….
- அதே கனவு
- கழிவுகள்
- மழை வருது
- வேடத்தைக் கிழிப்போம் – 2
- விழிப்பு
- இந்தப் புத்தகத்தின் மீதென் காதல்
- கேள்விகளின் புத்தகத்திலிருந்து
- துணைநலம்