கடிதம் ஜூன் 24, 2004
கனகசபாபதி,மும்பை
பிறைநதிப்புரத்தானும் இந்திய இசுலாமியரும்
நான் முதலில் ஒரு விசயத்தை சொல்லி விடுகிறேன். நான் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் நண்பர் பிறைநதிப்புரத்தானின் சில கருத்துகள் என்னை குழப்புகின்றன. நண்பர் பிறைநதிப்புரத்தான் தம்மீது குற்ற்ம் சொன்னால் நீ என்ன ஒழுங்கா என்கிறார். முதலில் பிறைநதிப்புரத்தான் அவர்களே, உஙகள் பதிலை சொல்லுங்கள். இந்து மதத்தில் பல மடமைகள் உள்ளன. உண்மை. ஆனால் அதில் சகிப்புதன்மை உள்ளது. அது இசுலாத்தில் இல்லை.
ஒன்று ஒன்றாக பார்ப்போம். முதலில் கிரிக்கெட் ஆட்டம். பாகிஸ்தான் வென்றால் பட்டாசு ஏன் வெடிக்கிறாய் என்றால் விளையாட்டை விளையாட்டாக பார் என்கிறார். இந்தியா வென்றால் பட்டாசு வெடிக்காதவர் ஏன் பாக் வென்றால் மட்டும் வெடிக்கிறார் என்பது தான் கேள்வி. ஏன் இங்கிலாந்து வென்றால் வெடிக்கவில்லை ? எல்லை தாண்டிய விசுவாசம் ஏன் ? இது கேள்வி ஒன்று.
காந்தகார் விமான கடத்தலை தாலிபான் நடத்தியது. அந்த் தாலிபனை பிறைநதிப்புரத்தான் ஆதரிக்கிறாரா ? தாலிபான் அமெரிக்காவினால் வளர்ந்ததா ? ஆப்பிரிக்காவினால் வளர்ந்ததா என்பதல்ல பிரச்சனை.தாலிபான் நமக்கு எதிரியா இல்லையா என்பதுதான் பிரச்சனை. இது இரண்டாவது கேள்வி.
இந்திய சிப்பாய்களை (இசுலாமிய சிப்பாய்கள் உள்பட) கொல்லும் பாகிஸ்தான் , காஷ்மீர் தீிவிரவாதிகளும் போராளிகள்தானா ? அவர்களூக்காக இந்திய இசுலாமியர் கண்ணிர் வடித்தமாதிரி தெரியவில்லை. சில ஆண்டுகளூக்கு முன்பு சென்னை கடற்கரையில் இசுலாமியர் பெருந்திரளாக ஒரு கூட்டத்தில் கார்கில் வீரர்களூக்காக செயலலிதா, வாழ்க கோஷம் போட சொன்ன போது நிலவிய மயான அமைதிதான் நினைவுக்கு வருகிறது. இது மூன்றாவது.
பிறைநதிப்புரத்தான் வாத திறமை உடையவராக இருக்கலாம். ஆனால் மனதில் இருப்பதை மறைக்க முடியாது. இந்தியாவை தவிர வேறு எங்கும் இசுலாமியர் இவ்வளவு சுதந்தரமாக வாழ முடியாது.ஆனால் இசுலாமியரின் எண்ண ஓட்டம் நாட்டிற்கு நன்மை பயக்காது.
இந்திய இசுலாமியர் தங்களை மற்ற மதத்தவரை விட தம்மை உயர்வாக எண்ணுவது தான் பிரச்சனை.சிந்திக்க தெரிந்த அனைவருக்கும் தெரியும் கடவுள் என்ற கருத்து மனிதனை
மேம்படுத்த் தான் என்பது. தவறுதலாக தலாக் சொன்ன கணவனை மனைவியுடன் சேர விடாத அளவு ஒரு மதம் இருக்கிறது என்றால் யாருடைய தவறு ?
இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை நிறைய உள்ளது என்று கூறுவதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது. பெண்களை தெய்வம் என்று மதிக்க வேண்டாம். முதலில் மனுஷீயாக மதிக்கலாமே ? இந்து மதத்தில் விமரிசன உரிமையாவது உள்ளது.
குசராத் கல்வரம் ஏன் வந்தது ? வன்முறையும் குண்டு கலாச்சாரமும் இசுலாமியர்க்கு மட்டும் சொந்தம். தாங்கள் மட்டும் வன்முறை செய்யலாம் என்று இசுலாமியர் நினைத்துவிட கூடாது என்று இந்து மதத்தில் உள்ள சிலர்(காட்டுமிராண்டிகள்) நினைத்துவிட்டார்கள். அந்த கொடுமை நடந்து விட்டது. எந்த மனிதனும் அதை நியாயபடுத்த முடியாது. ஆனால் காரணத்தை யோசிக்கவேண்டும். இன்று மோடி தோற்கலாம். நாளை இன்னொரு மோசமான மோடி வரலாம். மக்கள் பாரதிய சனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். பக்கம் சாயலாம். இந்த தேர்தல் முடிவை வைத்து சங் பரிவார் கூட்டம் அவ்வளவுதான் என்று முடிவு செய்வது மடமை.
பிறைநதிப்புரத்தான் போன்றவர்கள் தமக்குள் இருக்கும் அடிப்படைவாதிகள், வன்முறையாளர்கள் ஆகியவர்களை திருத்தவேண்டும். இல்லையென்றால் மென்மேலும் இசுலாமியர் தனிமைபட்டு வாழ வேண்டிய சூழ்நிலை வரலாம். பிறைநதிப்புரத்தான் அவர்கள் விரும்பினால் இன்னும் விளக்கமாகவும் விவாதிப்போம்.
கனகசபாபதி
மும்பை
- கவிதைகள்
- கோபம்
- இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து-ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி
- நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா ?
- வாரபலன் – ஏமாளித் தமிழ் எழுத்தாளா , கிளிண்டன் கொஞ்சிய கிளி , ரொபீந்திர சங்கீத் ஜார்கள், வாய்க்கால் கடக்காத ஜெயபாரதி
- தென்கிழக்கு ஆசியா: அச்சுறுத்தும் பெண்கள் குழந்தைகள் கடத்தல்
- பொன்னாச்சிம்மா
- பெண்கள்: நான் கணிக்கின்றேன்
- மஸ்னவி கதை — 10.1 : அறிவான அரபியும் ஆசை மனைவியும்
- பட்டமரம்
- தமிழ்நாட்டுக்குப் பொருத்தமான விகிதாச்சார தேர்தல் முறை – என் கருத்துக்கள்
- ஆறுதலில்லா சுகம்
- நல்லகாலம், ஒரே ஒரு சமாரியன்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- ஏ.சிி. யில் இருக்கும் கரையான்கள்
- இப்பொழுதெல்லாம் ….
- அப்பாவின் காத்திருப்பு…!!!
- இறைவனின் காதுகள்
- கவிதை
- தமிழவன் கவிதைகள்-பதினொன்று
- அன்புடன் இதயம் – 22 – தமிழை மறப்பதோ தமிழா
- சூத்திரம்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 8)
- திரைகடலில் மின்சக்தி திரட்டும் உலகின் பலவித மாதிரி நிலையங்கள் [Various Types of World ‘s Ocean Power Stations]
- ஆட்டோகிராஃப் ‘காதல் சிறகை காற்றினில் விரித்து ‘
- கடிதம் ஜூன் 24, 2004
- இந்துத்துவம் ஏற்றம் பெற, அகண்டபாரதம் அரண்டு எழ சங்கியே சங்கூதிப் புறப்படு
- சேலை கட்டும் பெண்ணுக்கு…
- கனடா திரைப்பட விழாவில் செவ்வாய் கிரகம்
- Terminal (2004)
- நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் – நூல் அறிமுகம்
- மெய்மையின் மயக்கம்: தொடர்ச்சி 5
- புலம் பெயர் சூழலில் ஒரு புதிய வரவு ஊசிஇலை
- மனத்துக்கண் மாசிலனாதல் – ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று ‘ நாஞ்சில் நாடன் கட்டுரை நூல் அறிமுகம்
- உடன்பிறப்பே
- கடிதம் -ஜூன் 24, 2004
- நாகூர் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் : வெளியீட்டு விழா
- சொர்க்கம்
- கவிக்கட்டு 12 – கொஞ்சம் ஆசை
- காகித வீடு…
- இல்லம்…
- குழந்தை…
- காலம் கடந்த காதல் கவிதைகள்
- கலைஞன் நிரப்பும் வெளி : சுந்தர ராமசாமி புகைப்படக் கண்காட்சி :ஜூன் 25 முதல் 27 வரை
- கடிதம் ஜூன் 24, 2004
- கல்கியின் பார்த்திபன் கனவு இணையத்தில்
- நீலக்கடல் – (தொடர்) – அத்தியாயம்-25