மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை
முனைவர்,சி,சேதுராமன்
முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,
மாமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
பத்துப்பாட்டு நூல்களுள் நீண்ட நெடிய அடிவரையறையையும் காஞ்சித்திணையின் நிலையாமைத் தன்மையும் தன்னகத்தே கொண்டு, சங்ககாலப் பாண்டிய மன்னர்;களின் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வது மதுரைக்காஞ்சியாகும். நிலையாமையை எடுத்துக் கூறி வாழ்வின் நிலைபேற்றிற்கு உரிய வாழ்வியற் அறங்களை எடுத்துரைக்கும் பண்பாட்டுப் பெட்டகமாகவும் இந்நூலமைந்துள்ளது.
காஞ்சித்திணை
காஞ்சித் திணையாவது தொல்காப்பியத்தில்,
‘‘காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே“
(தொல்., பொருள்., புறத்., நூ.,76)
என வரையறுக்கப்பட்டுள்ளது. காஞ்சி என்னும் புறத்திணை பெருந்திணைக்குப் புறனாகும். ஒருவற்கு ஒரு துணையாகாமை காரணமாய் அரிய சிறப்பினாற் பல நெறியாயினும் உலகம் நிலையற்ற தன்மையை உடைத்து என்பதை விளக்குவது காஞ்சித்திணை என்பர்; தொல்காப்பிய புறத்திணை உரையில் இளம்பூரணர்;. மேலும், அவர்; தன் உரையில், ‘‘அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், ‘‘ஏறிய மடற்றிறம்’’ (அகத்திணை – 54) முதலாகிய நோந்திறக் காமப் பகுதி அகத்திணை ஐந்தற்கும் புலனாயவாறு போல இது புறத்திணை ஐந்தற்கும் புறனாகலானும் இதுபோல அதுவும் நிலையாமை நோந்திறம் பற்றியும் வருதலானும் அதற்கிது புறனாயிற்று’’ என்பர; (தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப.,127) தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் புறந்திணையியலுக்கு உரைதந்த நச்சினார்;க்கினியர்,
“தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக, அறம்பொருள் இன்பமாகிய பொருட் பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும்; முதலியவற்றானும் நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை யுடைத்துக் காஞ்சி என்றவாறு’’ என்பர்;. மேலும், வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர்; பல்வேறு நிலையாமை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம் என்றார்; ; (தொல்., பொருள்., புறத்., நச்சர்;., உரை., பக்.,235-236).
நிலையாமையாவது, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என மூவகையாகக் கொண்டுள்ளனர்; நம் முன்னோர்;. நிலையாமையை மூவகைப்படுத்தி, ‘‘இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை என இவற்றுள்,
இளமை நிலையாமையாவது,
“பனிபடு சோலைப் பயன்மரம் எல்லாம்
கனிஉதிர;ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்
வேற்கண்ணள் என்றிவளை வெஃகல்மின் மற்றிவளும் கோற்கண்ணள் ஆகுங் குனிந்து“
(நாலடி – இளமை-7)
செல்வம் நிலையாமையாவது
“அறுசுவை உண்டி அமர;ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
சென்றிரப்பர்; ஓரிடத்துக் கூழெனிற் செல்வமொன்
றுண்டாக வைக்கற்பாற் றன்று“
(நாலடி – செல்வம், -1)
யாக்கை நிலையாமையாவது முன்னர்;க் காட்டுதும் என்பர்; இளம்பூரணர். (தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப.,127).
“காஞ்சித்திணையாவது, தனக்கு ஒப்பில்லாத சிறப்பென்னுஞ் செம்பொருளைப் பெறுதல் காரணமாக யாக்கை, இளமை, செல்வம் என்பனவற்றால் நிலைபேறில்லாத இவ்வுலகியலைப் பற்றிக் கொண்டு அதனால் உளவாம் பலவகைத் துன்பங்களையும் பொறுத்து நிற்றலாகிய ஒழுகலாறாம். நில்லாதவற்றால் நிலையுடையதனை அடையும் முயற்சியே காஞ்சித்திணை யென்பது தொல்காப்பியர்; கருத்தாகும்’’ என்பர் க.வௌ;ளைவாரணன். (தொல்காப்பியம், (வரலாறு),ப.,101). திருக்குறள் நிலையாமை அதிகாரத்திற்கு (34) உரை வகுத்த பரிமேலழகர்,
“நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந்தன்மை. மயங்கியவழிப் பேய்த் தேரிற் புனல் போலத் தோன்றி, மெய்யுணர்;ந்தவழிக் கயிற்றில் அரவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலை வேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கு மென்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறுபடாமையுமுடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி கூறுவார்; பல திறத்தராவர்;; எல்லார்;க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின், ஈண்டு அதனையே கூறுகின்றார்;. இஃதுணர;ந்துழியல்லது பொருள்களிற் பற்று விடாதாகலின், இது முன்வைக்கப்பட்டது“ (திருக்குறள், பரி.உரை., ப.,121) என அதிகார விளக்கமுங் கொடுத்துள்ளார்;. மேலும், நிலையாமையடுத்ததாகிய துறவு என்னும் அதிகாரத்திற்கு (35) விளக்கமாக, ‘‘அஃதாவது, புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின் கண்ணும் உளதாம் பற்றினை, அவற்றது நிலையாமை நோக்கி விடுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்“ என்கிறார் (;திருக்குறள், பரி., உரை., ப.,126).
காஞ்சித் திணையாவது, உலகத்து நிலையாமையையும் அவற்றின் கண்ணதாகிய நன்னெறியால் வீடு பேற்றை அடைதலையும் குறித்தனர்; எனலாம்.
காஞ்சித் துறைகள்
காஞ்சித்திணையின் துறைகளாக
“மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையும்
கழிந்தோர்; ஒழிந்தோர்;க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியும் மறத்தி னானும்
ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோன்
பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்
இன்னென்று இரங்கிய மன்னை யானும்
இன்னது பிழைப்பின் இதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்
இன்னகை மனைவி பேஎய் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்
நீத்த கணவற் றீர;த்த வேலின்
பெயர;த்த மனைவி வஞ்சி யானும்
நிகர்;த்து மேல்வந்த வேந்தனோடு முதுகுடி
மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும்
முலையும் முகனுஞ் சேர்;த்திக் கொண்டான்
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ
ஈரைந் தாகும் என்ப பேரிசை
மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்
மாய்ந்த பூசல் மயக்கத் தானுந்
தாமே எய்திய தாங்கரும் பையுளும்
கணவனோடு முடிந்த படர்;ச்சி நோக்கிச்
செல்வோர்; செப்பிய மூதா னந்தமும்
நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்த
தனிமகள் புலம்பிய முதுபா லையும்
கழிந்தோர்; தேஎத்துக் கழிபடர்; உறீஇ
ஒழிந்தோர்; புலம்பிய கையறு நிலையும்
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
நல்லோள் கணவனோடு நனியழல் புகீஇச்
சொல்லிடை இட்ட பாலை நிலையும்
அரும்பெருஞ் சிறப்பிற் புதல்வற் பயந்த
தாய்தப வரூஉந் தலைப்பெயல் நிலையும்
மலர்;தலை உலகத்து மரபுநன்கு அறியப்
பலர்;செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு
நிறையருஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே“
(;தொல்., பொருள்., புறத்., நூ.,77)
எனத் தொல்காப்பியம் கூறுகின்றது.
இதனிடையே,
‘‘நிலையொடு தொகை, ஈரைந்தாகு மென்ப’’ என்றதனாலும் இறுதியில், “நிறையருஞ் சிறப்பின் துறையிரண்டு உடைத்தே“ என்றதனாலும் “முற்கூறிய பத்தும் ஒருவகையென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகையென்பதும் பெறப்பட்டன“ என்கிறார்; இளம்பூரணர். (தொல்., பொருள்., புறத்., இளம்., உரை., ப.,129).
நச்சினார்;க்கினியர்,; தொகைஇ ஈரைந்தாகு மென்ப – தொகை பெற்றுக் காஞ்சி பத்து வகைப்படுமென்று கூறுவர்; ஆசிரியர்;; நிறையஞ்சிறப்பிற்றுறை இரண்டு உடைத்தே – ஆதலான் அக்காஞ்சி நிறுத்தற்கு எதிர்; பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து என்றவாறு எனவே, முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாராயிற்று, நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந் தேவர்;க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப் பகுதிக் கண்ணுள்ள நிலையாமை காஞ்சிச் சிறப்பன்று என்றுணர்;க“ என உரைதந்துள்ளார்; ; (தொல்.. பொருள்., புறத்., நச்சர்., உரை., ப.,251).
காஞ்சித்துறையான இருபது துறைகளை உடையதாய் முற்பத்து ஆண்பாற் கூற்றதாகவும் பிற்பத்து பெண்பாற் கூற்றாகவும் கொண்டுள்ளனர்; எனலாம். மேலும், நிலையாமை கூறும் காஞ்சித் திணையானது அஃறிணைகளுக்குச் சிறப்பின்மை கருதி உயர்;திணையோர்;க்கு மட்டுமே உணர;த்தப்பட்டுள்ளது எனில் பொருந்தும்.
மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணைத் துறைகள்
பத்துப்பாட்டில் ஆறாவதாக விளங்கும் மதுரைக் காஞ்சியென்னும் நூல் மாங்குடி மருதனாரால் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனுக்குப் பாடப்பட்ட நூல். காஞ்சி என்பது நிலையாமையை உணர்;த்தி அறிவுறுத்துவது. மதுரைக் கண்ணிருந்து உலக நிலையாமையை அறிவுறுத்தப் பாடியதாகலின் மதுரைக் காஞ்சியெனப் பெயர்; புனைந்தார்; போலும்.
காஞ்சியென்பது பல்வேறு நிலையாமைகளைப் பொருளாகக் கொண்டு பாடப்பெறுவது. மதுரைக்காஞ்சியில் பாண்டியர்; தலைநகரமாகிய மதுரையைப் பற்றியே பெரிதும் பாடப்பட்டிருத்தலையும் அறிய முடிகிறது. (1. தொடரும்)
- முள்பாதை 54
- பரிமளவல்லி 19. இதாகா நீர்வீழ்ச்சி
- நினைவிழத்தல்
- நம்பிக்கை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இயற்கையும், மனிதனும் கவிதை -36 பாகம் -3
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2
- கானலென்றறியாமல்
- காற்றோடு காற்றாய்…
- ஹிந்துஸ்தானின் இன்றைய நிலைமை:
- தலித் இலக்கிய நிராகரிப்பின் எதிரொலி
- புண்பட்ட பூமி, புண்பட்ட மனங்கள் – மதச்சுதந்திரமும் மதச்சார்பின்மையுமா மருந்து?
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 5 Evolutionary Ethics பரிணாமவியல் ஒழுக்கங்கள்
- முகம்
- வெளிச்சம்..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -3
- தாய்மை
- தண்டனை
- உள்ளொன்று வைத்து…
- பத்திரமும் தைரியமும்
- வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி
- மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை
- இவர்களது எழுத்துமுறை – 14 டாக்டர். மு.வரதராசனார்
- தமிழ நம்பி அவர்கள் எழுதியுள்ள கவிதைக்கு ஓர் பின்னூட்டம்
- பிரான்சு கம்பன் கழக ஒன்பதாம் ஆண்டு விழா
- மரித்தோரின் திருநாளில்
- கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்
- ஐந்தறிவு பார்வை!
- மாடவீதி
- சுவர் சாய்ந்த நிழல்கள் …!
- திரவநீர் கனவுகள்
- எதிர்பார்ப்புகள்
- பிரியாத பிரிவுகள்
- மழை நாள்
- மீட்சியற்ற வனத்தின் கானல்