எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி
வே.சபாநாயகம்
1. சிறுகதை என்ற உடனேயே அதில் ஒரு கதை இருக்க வேண்டும், அது சின்னதாகவுமிருக்க வேண்டும் என்று ஏற்படுகிறது.
கதை என்றால் என்ன? ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தனாம் என்று பாட்டி சொன்ன உடனேயே ‘உம், அப்புறம்’ என்று குழந்தைக்குக் கேட்கத் தோன்றுகிற தல்லவா? இம்மாதிரி ‘அப்புறம் என்ன?’ என்று தெரிந்து கொள்வதில் நமக்கு ஆவலைக் கிளப்பக்கூடிய முறையில், ஏதாவது நடந்த சம்பவத்தையோ அல்லது நடக்காத சம்பவத்தையோ சொன்னால், அதுதான் கதை. சரி, சிறுகதை என்றால் எவ்வளவு சின்னதாக இருக்க வேண்டும்? அது அந்தக் கதையின் போக்கையே பொறுத்தது.
சிறுகதையின் முக்கியமான அம்சம் அதில் ஒரு பிரதான சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்த சம்பவத்தை வெறும் வளத்தல் இல்லாமல் வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக்கொண்டு போனால், அது நாலு வரியிலிருந்தாலும் சிறுகதைதான். நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்.
2. பொழுதுபோக்கிற்காகப் படிப்பதுடன் பயனுக்காகவும் படிக்க வேண்டும். படித்த
பயன் எழுத்தில் தெரியவேண்டும். எதையும் எதிர் பார்த்தால்தான் துல்லியமாக இருக்கும். எழுத எழுதத்தான் சிந்தனை தெளிவடையும்.
3. பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத் துவைத்துக் கொண்டு எழுதினாலும் அந்தக் கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை இலக்கணங்களும் இருக்கலாம்; உள்ளத்தை ஊடுருவித் தைக்கும்படியாக இதயம் ஒன்றிய ஈடுபாடு இருப்பதில்லை.
4. எதை எழுதினாலும் அதை நாலு பேர் போற்றவாவது வேண்டும் அல்லது தூற்றவாவது வேண்டும். இரண்டுமில்லை என்றால் எழுதுவதைவிட எழுதாமல் இருந்து விடலாம்.
(இன்னும் வரும்)
- அண்ணாவின் வாழ்க்கையில் 1962
- தாகூரின் கீதங்கள் – 43 உன்னுடன் மீள் இணைப்பு !
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- பறவை
- ஜிகாதின் சொற்கள்
- வியாபாரிகளாகும் நடிகர்கள்!
- அமர் நாத்: ஜம்மு ஹிந்துக்களின் பிரச்சினை மட்டுமா?
- அடுத்த பக்கம் பார்க்க
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 3 (சுருக்கப் பட்டது)
- வனாந்தரத்தைத் தொலைத்தவள் !
- பிப்ருவரி 14
- குஸ்தி
- பிஜு
- தூவல்..
- காற்றினிலே வரும் கீதங்கள் – 31 காத்திருக்கிறாள் பிரபுவுக்கு !
- தமிழ்ச் சான்றோர் மூவர் -நூற்றாண்டு விழா!
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று,ரெண்டு
- ‘மின்தமிழ்’ உலகில் முதல் தமிழ்சொற்பிழைச்சுட்டி மென்பொருள்
- ‘சித்திர எழுத்து’ என்னும் அமைப்பு தொடங்கப்படுகிறது
- க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி – ஒரு கலாச்சார நிகழ்வு
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 31 பேராசிரியர் கல்கி
- இருப்பை வெளிப்படுத்தாத பயிற்சிப்பட்டறை
- ‘மண்ணில் துலாவும் மனது’ – வஸீம் அக்ரம்
- அலெக்ஸாண்டர் சோல்ஜெனிட்ஸின் – ஒரு கலை அஞ்சலி
- செவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது. (ஆகஸ்டு 1, 2008)
- தமிழர்கள் நாங்கள்! கவிதை சித்திரம
- ஆகஸ்டு 9
- நத்தை!
- நம்பினோர்…..
- வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்
- ஞாநி நடத்தும் பயிற்சிப் பட்டறை