பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
கரு.திருவரசு
எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்கள் இயற் பெயர்களிலேயே எழுதாமல், எழுதுவதற்காகவே வேறொரு பெயர் வைத்துக் கொள்வதுண்டு.
முத்தையா எனும் பெயர் கொண்டவர் கண்ணதாசன் எனப் பெயர் வைத்துக்கொண்டார். கருப்பையா எனும் பெயர் கொண்டவர் காரைக்கிழார் எனப் பெயர் வைத்துக்கொண்டார்.
இப்படி வேறு பெயர் வைத்துக்கொள்வதைப் ‘புனைபெயர்’ என்றும் ‘புனைப்பெயர்’ என்றும் எழுதுவதைக் காண்கிறோம். இரண்டில் எது சரி?
“புனை” என்பது பொலிவு, அழகு, சீலை, மூங்கில் எனப் பல பொருள்களைத் தரும் சொல்.
‘புனை’ என்பதை வினைச் சொல்லாகக் கொண்டு பொருள் சொன்னால், இயற்று, அழகுசெய், புனைந்துகொள் என்றெல்லாம் பொருள்படும்.
‘பெயர்’ச்சொல் என்றால் ஒரு பொருளுக்கு அல்லது ஒரு குழந்தைக்கு அதைக் குறிப்பிட்டுச் சொல்வதற்காக அல்லது அழைப்பதற்காக வைக்கப்படும் குறிப்புச்சொல்.
“புனை” என்பது “பெயர்” என்பதோடு சேரும் சொற்புணர்ச்சியால் மாறும் பொருள் மாற்றத்தைத் தெரிந்துகொள்வதே நம் நோக்கமாதலால் புனைதல், அல்லது புனைந்துகொள்ளுதல் என்னும் பொருளை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
ஒருவர் தான் புனைந்துகொண்ட பெயரைப் “புனைப்பெயர்” என்று எழுதுவதோ, பேசுவதோ தவறு. புனைப்பெயர் என்றால் புனையின் பெயர், புனையாகிய பெயர் என்று பொருள். புனைந்துகொண்ட பெயர் ஆகாது.
ஒருவர் புனைந்துகொண்ட பெயரை, புனையும் பெயரை, புனைந்துகொள்ளப் போகும் பெயரை “புனைபெயர்” என்றுதான் எழுதவேண்டும், சொல்லவேண்டும்.
புனைபெயர் = புனைந்த பெயர்
புனைப்பெயர் = புனையின் பெயர்
thiruv36@yahoo.com
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 2
- போதி
- கால நதிக்கரையில்……(நாவல்)-18
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 22
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -3 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்
- நீயும் இந்நிலைக்கு ஆளாவது நிலைமாறா உண்மை
- உணர்வுகள்
- ஆகஸ்டு – 15 (மொழிச் சித்திரம்)
- அழகிய சிங்கரின் கவிதைகள்
- கம்பளி பூச்சி
- காதல் நாற்பது – 33 செல்லப் பெயரில் அழைத்திடு !
- மௌனம்
- இலை போட்டாச்சு – 32 ரவா கேசரி
- சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
- சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்தியிரண்டு: சுதந்திரதேவிக்கொரு விண்ணப்பம்!
- பெண்கள்
- ப.ஜீவானந்தம் – பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழா இலக்கியப் பரிசுகள் – 2007
- ”காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு” – (பாபு-நாற்றம் பிடித்தவன் என்று பொருளல்ல)
- வாசிப்பின் எல்லைகள்
- அக்காவின் சங்கீத சிட்சை
- செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ·பீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி (ஆகஸ்டு 9, 2007)
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 11 புனைபெயரா? – புனைப்பெயரா?
- அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு
- கடிதம்
- கவிஞர் ரசூல் மீது பத்வா வன்முறை
- தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி
- கடிதம்
- மலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை தொகுக்கும் பணி
- மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை
- பொதுவாய் சில கேள்விகள்
- உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் – ஆகஸ்ட் 11, 12
- சிங்கையில் பாரதச் சுதந்திர தின விழா!
- திலகபாமா புத்தக வெளியீட்டிற்கான அழைப்பிதழ்
- மதுரை புத்தகக் கண்காட்சியில் எனி இந்தியன் புத்தகங்கள்