குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி – பகுதி 3

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்


‘ இந்த லெளகீகம் கடந்த பாதைக்கு ‘முடிவிலி ‘ எழுதுவதற்கு முன்பாகவே நகர்ந்திருக்கிறீர்கள். கருணாகர குருவின் பாதிப்பினால் இது நிகழ்ந்ததா ? கருணாகர குருவுக்கு நீங்கள் ஒரு புத்தகத்தைச் சமர்ப்பிக்கவும் செய்திருக்கிறீர்கள். ‘முடிவிலி ‘ யில் குஞ்சுண்ணி ஒரு குருவைக் கண்டடைவார் என்று நினைத்தேன், ஆனால் அவர் முக ஆச்சரியமான இடங்களிலேயும், தனக்குள்ளேயும் குருவைக் கண்டடைகிறார். ஒரு நீண்ட தேடலுக்குப் பின் ஓர் இனிய முடிவு அது. ‘

‘ சில அம்சங்களை என்னால் முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை – தேடலில், கடந்து போதலில் (transcendence) பக்தியின் அம்சங்கள் சில உள்ளன. இவை புனைகதையின் கருத்துத் தளத்தை மீறி வெளியாகின்றன. நான் மதத்தைப் பின்பற்றுபவனாய் ஆகிவிட்டேன் என்பதி இதன் பொருளல்ல. என் வாழ்க்கையிலேயே நான் – வேறு வார்த்தைகள் கிடைக்காததால் – மந்திரம் போன்ற சில அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.

‘சில ஆச்சரியம் தரும் கதைகளையும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள், ‘சின்னவர்கள் ‘, கண்ணுக்குப் புலப்படாத உயிரினங்கள்..ஆவி.. ‘

‘நான் கண்ட கனவு ஒன்றின் விளைவு அது. கனவில் பல்லாயிரம் சங்குகள் உள்ளிருந்து ஒளிரக் கண்டேன். நம்மைச் சுற்றிலும் மாயமந்திரங்கள் உள்ளன, நாம் கண் திறந்து காணவேண்டும். ‘

‘மலபார் – அதன் திய்யம் நடனங்களுடனும், ஒடியான்(குட்டிச்சாத்தான்)களுடன் மாய மந்திரம் நிறைந்ததா ? ‘

‘பாலக்காட்டில் திய்யம் இல்லை. ஒடியன்கள் இருந்தனர். அவர்கள் உங்கள் மீது மந்திரம் ஏவிவிடுவார்கள் என்று பலரும் நம்பினார்கள். ‘

‘இதை மிகத் தயங்கித் தான் கேட்கிறேன். லத்தீன் அமெரிக்க மாந்திரீக யதார்த்த பாணி உங்களை பாதித்ததா ? ‘

‘அப்புக் கிளி (கஸாக்கில் வரும் மனப்பிறழ்வு கொண்ட கதாபாத்திரம்) பற்றி , 1958-ல் மார்க்வெஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் படும் முன்பே நான் எழுதியிருக்கிறேன். இது போன்ற, பாதிப்பு பற்றிய, கேள்விகள், எழுத்தாளர்களைச் சங்கடப் படுத்துவது. ‘

‘உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது, ஆங்கிலம் மலையாளத்தைவிட சிறப்பாக இருந்ததாய் எனக்குத் தோன்றியதுண்டு. ‘

‘ ஆங்கில மொழிபெயர்ப்பில் அவை மூலத்தை விட நன்றாக இருந்ததாய்த் தெரியவில்லை. கேரளாவின் கலாசாரப் பின்னணி உங்களுக்குத் தெரியும் ஆதலால் அப்படித் தோன்றியிருக்கலாம். இந்தக் கலாசாரத்திற்கு வெலியே இருப்பவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்காது. ‘

‘உங்கள் கதைகள் திரைப்படம் ஆனதுண்டா ? ‘

‘சில முயற்சிகள் இருந்தன. இயக்குனருடன் நான் உடன்பட்டு செய்ல்பட்டால் , என் கதைகளின் சாராம்சத்தைத் திரைப்படத்தில் பதிய முடியும். ‘

‘அடூர் கோபாலகிருஷ்ணன் அல்லது அரவிந்தன் போன்றவர்களுடன் ? ‘

‘திரைப்பட விழா கமிட்டிகளில் நான் அடூருடன் பணி புரிந்திருக்கிறேன். அவர் மிகப் பெரும் கலைஞர். அவரு தன்னுடைய வெளிப்பாட்டில் முழுக் கட்டுப்பாடு கொண்டிருந்தார். அரவிந்தன் தோழமை கார்ட்டூனிஸ்டாக அறிவேன். ஆனால் அவருடன் திரைப்படப் பணியில் ஈடுபட்டதில்லை. ‘

‘நீங்கள் ஹைதராபாதில் வாழ்வது எனக்கு வியப்பு அளிக்கிறது. தில்லியிலிருந்து ஏன் வெளியேறினீர்கள் ? ஏன் கேரளா செல்லவில்லை ? ‘

‘ என் மனைவிக்கு இங்கே கொஞ்சம் குடும்பச்சொத்து உண்டு. தில்லி வாழ்க்கை அர்த்தமில்லாமல் ஆகிவிட்டது. ஹைதராபாத்தில் நான் அன்னியனாய் உணர்வேன். கேரளா சென்று விடலாமா என்று மிகத் தீவிரமாய் யோசித்து வருகிறேன். கேரளாவில் என்னை மக்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பது பிரசினை தான், ஆனால் அது என் வீடு. தில்லியும் கேரளாவில் என் அந்தரங்கத்தனிமை பிரசினையாகி விட்டது. என்னைப் பலரும் அணுகுவார்கள். கொஞ்சம் புகழ் வந்தால் இப்படித்தான். ஆனால் தில்லியில் இருக்கும்போது கூட, நான் பாலக்காடு பற்றித் தான் எழுதினேன். பாலக்காட்டின் உலர்ந்த பெருங்காற்றும், மலைக்காடுகள் வழியாகச் செல்லும் போது எழும் ஓசையை நினைத்துக்கொண்டே நான் பாலக்காடு பற்றித் தான் எழுதினேன்.எல்லாவிதமான மனிதர்களும் என்னை வந்து பார்த்துப் பேசுகிறார்கள். இது எனக்குத் தன்னடக்கத்தையும் கொடுக்கிறது. புகைவண்டியில்போகும்போது கூட பலதரப்பட்ட மக்களும் விஜயன் சார் என்று என்னை அழைத்து என் புத்தகத்தை அவர்கள் ரசித்ததைக் சொல்கிறார்கள். எல்ல விதமான மக்களும் என்னைப் படிப்பது மகிழ்வாக இருக்கிறது. ‘

‘உங்கள் குடும்பத்தில் சமீபத்தில் ஒரு மரணம்.. ‘

‘ என் சகோதரி சமீபத்தில் இறந்து விட்டார். அவர் இறந்த உடலைப் பார்க்கத் தான் என்னால் போக முடிந்தது. என் சகோதரி என்பதைக் காட்டிலும் என்னுடைய விளையாட்டுத்தோழி அவள். நாங்கள் மிக நெருக்கமாய் இருந்தோம். அவள் மரணம் என்னை வெகுவாக பாதித்தது. ‘

‘கார்ட்டூனிஸ்டாய் எப்படி ? ‘

‘ என்னுடைய பழைய கார்ட்டூன்களை புத்தக வடிவில் வெளியிடலாம் என்று எண்ணியுள்ளே. புதிதாகக் கார்ட்டூன்கள் எதுவும் பண்ணுவதாய் இல்லை. ‘

‘1970-களில் உங்கள் கார்ட்டூன்களையே மீண்டும் போடலாம். சோனியா காந்தி பற்றி நீங்கள் சொன்னது எல்லாமே உண்மையாகி வருகிறது. ‘

‘எனக்கு தீர்க்க தரிசனம் இருந்ததோ என்னவோ ?(சிரிக்கிறார்.) ‘

‘இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் ? ‘

‘தலைமுறைகளுக்கு ஒரு தொடர்ச்சியை எழுதலாம் என்று எண்ணம். ஆங்கில மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டுள்ளேன். பேனா பிடிக்கக் கஷ்டமான நிலையில் நான் என் எழுத்தைச் சொல்லியாக வேண்டியுள்ளது. எனக்கு இப்படிக் கேட்டு எழுதக் கூடிய ஒரு செயலாளர் இருந்தார், ஆனல் அவர் போய் விட்டார். அதனால் மிக மெதுவாகத் தான் எழுத முடிகிறது. பேசப்பேச பதிவு செய்கிர இயந்திரம் வாங்கிக் கொள்ளும்படி ந் மகன் சொல்கிறான், ஆனால் எனக்கு இந்த டெக்னாலஜி அவ்வளவாக இணக்கமாய் இல்லை.

‘கேரளாவில் தலைமுறைகள் எப்படி எதிர்கொள்ளப் பட்டது ? ‘

‘ மிக உயரிய வரவேற்பு அதற்குக் கிடைத்தது. நல்லபடியாக விமரசனங்கள் வந்தது மட்டுமல்லாமல் வாசகர்களிடமும் நல்ல வரவேற்புப் பெற்றது. கொஞ்சம் கடினமானது என்று என்றாலும் நல்ல வரவேற்புத்தான். மார்க்ஸிஸ்டுகளைக் கொஞ்சம் கிண்டல் அடித்ததையும் மார்க்ஸிஸ்டுகள் விரும்பவில்லை. பல தளங்களில் உள்ள அந்தக்கதை அடிப்படையில் எளிமையான கதை தான்.

‘உங்கள் சொந்த வாழ்க்கையும், உங்கள் மூதாதையர் குடும்பமும் எந்த அளவு தலைமுறைகளில் உண்டு ? ‘

‘சுயவரலாற்று அம்சங்கள் சில உள்ளன. என் குடும்பக் கதைகளில் சிலவும் சிறுகதைகளாய் ஆகியுள்ளன. ஆனால் புனைவும், கற்பனையும் மிகுதியாய் உண்டு. பொன்முடி இல்லம் என் மூதாதையர் குடும்பத்தை அடிப்படையாய்க் கொண்டது தான் . நான் குழந்தையாய் இருந்த்போதே என் பூர்விக வீடு எனக்கு அன்னியமாகி விட்டது. அதனாலேயே அது மந்திர வீடு போல் தோன்றியது. ஒரு கடவுள் சிலை, பிரமிடைக் கவிழ்த்தாற்போல் இருந்த ஒன்று, குப்பையில் கிடந்தது எனக்கு ஞாபகம் இருக்கிறது. ‘

‘தலைமுறைகளின் ‘ஒரு முக்கியக் கரு சாதி. ‘

‘ சாதி பற்றியும், சாதி ஏற்படுத்தும் மனச்சிதைவுகளையும் பற்றி எனக்கு , கல்லூரி வாழ்க்கைக்கு முன்னால் எதுவும் தெரியாது. நான் பிற்படுத்தப்பட்ட ஈழவ வகுப்பைச் சார்ந்திருந்தாலும், வசதியுடன், மேல் மத்திய தரவர்க்கத்தின் வாழ்க்கையே கொண்டிருந்தேன். ஆனால் சாதி இப்போதும் நம் வாழ்க்கையின் ஒரு பெரும் அங்கம் தான். அதை நான் உணர்ந்து கொண்டு விட்டேன். நம் முன்னோர்களின் வாழ்க்கையில் நிச்சய்மாக அது ஒரு பெரும் அங்கம் வகித்தது. அதில்லாமல் சாதிகள் தொடரும் என்று தான் எண்ணுகிறேன். சாதியம் என்ற இறுகிப்போன , நெகிழ்ச்சியற்ற அமைப்பு தொடராது. மனிதர்க்கிடையில் உள்ள உள்ளார்ந்த வேறுபாடுகளே சாதியாகத் தொடரும். ‘

‘ சற்று சந்தோஷமான முடிவையே வழங்கியிருக்கிறீர்கள் – அது மிகக் சோகமான கதை என்றாலும். ‘

‘ அந்த சந்தோஷமான முடிவு வலிந்து திணிக்கப் பட்ட ஒன்றல்ல. அது எனக்கு ஒரு நல்ல உணரவி அளித்தது. இனவாதமற்ற, பரிவு நிரம்பிய ஒரு எதிர்காலம் பற்றிய கனவு அது. அது நம்பிக்கையையும், அவநம்பிக்கையையும் ஒருசேர உள்ளடக்கியது. ‘

‘தலைமுறைகள் பற்றி விமர்சனம் எழுதும்போது , உங்களுக்கு ஞானபீடம் அளிக்கப் படவேண்டும் என்று எழுதினேன். ‘

‘(ஒ வி விஜயன் சிரிக்கிறார்) என்னைப் பற்றி நல்லதாய்ச் சொல்லும் எதுவுமே எனக்கு ஒப்புதல் தான். சமீபத்தில் யு ஆர் அனந்த மூர்த்தி சொன்னார்- இலக்கிய உலகம் விஜயனுக்கு நியாயம் செய்யவிலை என்று. ஆக இன்னும் நம்பிக்கை வைக்கலாம். ‘

‘நோபல் பரிசு ? ‘

‘ நான் அதற்கு எந்த முயறிச்யும் செய்யவில்லை.அதற்கு எப்படியெல்லாம் முயற்சி செய்ய வேண்டும் என்று உஙக்ளுக்குத் தெரியுமல்லவா ? (சிரிக்கிறார்) வைக்கம் முகம்மது பஷீர் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது ஒரு முறை. அந்தச் சமயம் அவரைப் பற்றி மோசமான விமர்சனங்களும் வந்தன. ‘

***

விஜயன் பேட்டி போதும் என்று குறிப்பிட்டார். பிரிவுப் பரிசாக கஸாக், மற்று ‘இறைத்தூதர் ‘ புத்தகங்களைக் கையெழுத்திட்டு அளித்தார். ‘ராஜீவிற்கு அன்புடன் ‘ என்று நடுங்கும் கைகளால் குறித்தார். அவர் அன்பு என் மனதைத் தொட்டது. மீண்டும் ஒரு முறை இந்தியப் புனைகதை உலகின் முக்கியமான அவருடன் பேசுவதற்குத் திரும்பவும் ஒரு முறை ஹைதராபாத் வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

(1998)

—முற்றும்—

நன்றி : rediff.com

Series Navigation

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்

குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998 – பகுதி 2

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்


‘ஆனால் இதிகாசம் நிச்சயமாக ஒரு எதிர்ப்புக்குரல் கொண்ட நாவல். தாவரங்களின், காய்கறிகளின் உரிமைகள் காப்பாற்றப்படும் ஒரு எதிர்காலத்தை நோக்கிய, அரசு, போர் போன்ற கருத்துருவங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதல் அது. சில வழிகளில் அது நாகரிகத்துக்கு எதிரானது(anti-civilisation). சில கதைகளில், அதுவும் கனவுலக்ம (dystopia) பற்றிய கதைகளில் அது நிச்சயம் இருக்கிறது. ‘

‘நெருக்கடி நிலைக்கு முன்னரும் பின்னரும் எழுதிய நாவல் அது. சோவியத் இந்திய இடதுசாரிகளுக்கு எதிராகவும், சோசலிஸ கம்யூனிஸ தலைவர்களையும் ஒரு அரசியல் வம்சத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சிகளுக்கு எதிராகவும் எழுதப்பட்டது. என்னுடைய நண்பர் எஸ்.கே. நாயர் இந்த புத்தகத்தை தொடராக வெளியிட சம்மதித்தார். சூலை 1975இல் அது முடியவேண்டும். ஆனால் சூன் 1975இல் நெருக்கடி நிலை அமல் செய்யப்பட்டது. புத்தகம் தலைமறைவாக ஆகிவிட்டது. எவ்வளவு நாள் நெருக்கடி நிலை இருக்கும் என்று தெரியாததால், நான் அந்தக் கதையை நிறைய தொந்தரவு செய்தேன். நெருக்கடி நிலை முடிந்ததும் அந்த புத்தகம் தொடர்ந்து தொடராக வர ஆரம்பித்தது. அது புத்தகமாக வெளிவந்தத்போது, அதில் இருந்த சில அதீதங்களை சரி செய்து அதன் அழகியல் தொழில்நேர்த்தியை சரியமைத்தேன்.கோபத்தில் எழுதப்பட்டது இது. அது ஒரு தீவிர வலியை உணர வைக்கும் தூய்மைப்படுத்தும் உணர்வோடு கூடியது. ‘

‘நெருக்கடி நிலையைப் பற்றி பல சிறுகதைகளில் திரும்பி வந்து சொல்லியிருக்கிறீர்கள். ‘

‘ஆமாம். அதிகாரத்தின் உவமேயங்களில், கரு, மரு, தேர்வும் எண்ணெயும்.. ஆகியவற்றில்… இவை அனைத்தையும் நெருக்கடி நிலை முடியும் வரைக்கும் பெட்டிக்குள் வைத்திருந்தேன். கொடுங்கோலாட்சியை பல்வேறு வடிவங்களில் பார்த்தேன். ஒரு ஜந்துவாக ‘எண்ணெய் ‘யிலும், உவமேயமாக ‘கரு ‘விலுஇம், ‘சொறி ‘யிலும், ஒரு நகைச்சுவையாக ‘தேர்விலும் ‘ பார்த்தேன். ‘

‘உவமேயங்களிலும், ‘மரு ‘யில் வரும் பண்பாடுள்ள கதாநாயகன் என்னை கவர்ந்தான். மிகவும் சக்திவாய்ந்த தீய சக்தி ஒரு சொறி உருவத்தில் அவன் மீது தாக்குதல் நடத்துகிறது. தன் மூதாதையர்களைப் பற்றியும் அவர்களது ஆயுர்வேத அறிவைப்பற்றியும் அவன் ஞாபகம் செல்கிறது என்பதை நான் நினைவில் வைத்திருக்கிறேன். ‘

It was the story of one who could only resist in the spirit and that had a connection to the satvic past, which is what Dhanvantari indicates. Good triumphs over Evil eventually; The Foetus is redeemed with a lot of love; in The Wart, the triumph is more ambiguous.

‘உணர்வுப்பூர்வமாக மட்டுமே எதிர்ப்புக் காட்டக்கூடிய ஒருவனது கதை அது. அதே நேரத்தில் அவனுக்கு சாத்வீகமான இறந்த காலம் இருக்கிறது. அதுதான் தன்வந்திரி கோடிட்டுக் காட்டுகிறார். தீயதை நல்லது இறுதியில் வெல்லுகிறது. ஏராளமான அன்பின் காரணமாக கரு காப்பாற்றப்படுகிறது. ‘மரு ‘யில் வெற்றி அப்படி தெளிவானது அல்ல…. ‘

The Foetus is a thinly veiled story of the excesses of Sanjay Gandhi and his cronies. Is it fair to say that you object to the Nehru dynasty ?

‘ கரு கதை சஞ்சய் காந்தியும் அவரது சகாக்களும் செய்த அத்துமீறல்கள் பற்றிய மிகதெளிவான கதை . நீங்கள் நேரு வம்சத்துக்கு எதிரானவர் என்று கூறலாமா ? ‘

‘இல்லை. அது சரியான விளக்கம் அல்ல. தனிமனித எதிர்ப்பு அளவுக்கு அதனை இறக்கக்கூடாது. மனித தீக்குணத்தை காட்ட, அரசில் இருக்கும் தீக்குணத்தைக் காட்ட, இயற்கையை மறுதலிக்கும் தீக்குணத்தைக் காட்ட நான் எடுத்துகொண்ட ஆரம்பப் புள்ளி மட்டுமே அது. பழி தீர்க்கும் எந்த கோரிக்கையும் அதில் இல்லை. ‘

‘தீக்குணத்தையும், பல கோடி உயிரழிக்கும் ஆயுதங்களையும் பற்றி…. இந்தியா அணு ஆயுத நாடுகள் குழுமத்தில் இணைந்ததை எப்படி பார்க்கிறீர்கள் ? ‘

‘ அது என்னை குழப்படிக்கிறது. நான் அதற்கு ஆதரவாகவும் இருக்க முடியவில்லை எதிராகவும் இருக்க முடியவில்லை. ஹிரோஷிமாவுக்கு ஒருவனால் எந்த விதத்திலும் எதிர்வினை ஆற்ற முடியாது. ஏனெனில் அந்த மாபெரும் தீச்செயல் பற்றி ஒருவன் என்ன சொன்னாலும் அது போலித்தனமாகத்தான் இருக்கும். இந்தியாவின் விஷயத்தில், அணுகுண்டு ஒருவனது விதியின் ஒரு பகுதியை நிறைவேற்ற வந்தது என்று சொல்லவாவது செய்யமுடியும். நம்மால் புரிந்து கொள்ள முடியாத சக்திகளைப் பற்றி ஒருவர் பேசுவதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் வீண். தெய்வீகமான சக்திகள் என்று சொல்லவில்லை. மாபெரும் கண்ணுக்குத்தெரியாத சக்திகள். நான் சிலவேளைகளில், பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்குள் அணு ஆயுத போர் நடத்தி வைக்க விழைகின்றனவா என்றும் சிந்திக்கிறேன். அது மிக வினோதமான இன படுகொலையாகவும், சுத்தமானதாகவும், இறுதியானதாகவும் இந்த அணுகுண்டு மூலம் செய்யப்படும் சுத்திகரிப்பு இருக்கும். ‘

‘ லெளகீகம்கடந்து போதல் (transcendence) சம்பந்தமான சிறுகதைகள் ஏர்போர்ட், முடிவிலி போன்றவை என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. ஏனெனில் இது போன்ற கதைகளை கஸாக் படைப்பாளியிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இது மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தியதா ? ‘

‘பலரை ஆச்சரியப்படித்தவில்லை. (சிரிக்கிறார்). கொள்கை கொள்கை என்று புலம்புபவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். நான் ஒரு காலத்தில் உறுப்பினர் அட்டை வைத்திருந்த மார்க்ஸிஸ்ட், தோழர், காஃபிஹவுஸ் மார்க்ஸிஸ்ட். ‘

‘எந்த காரணத்தால் இடதுசாரியிலிருந்து பிரிந்தீர்கள் ? ‘

‘ அது ஒரு நீண்ட கதை. ஹங்கேரி மற்றும் இம்ரே நாகி அனுபவங்களில் ஆரம்பித்தது. நான் எப்போதுமே ஸ்டாலின் பற்றி அவநம்பிக்கையுடன் இருந்தேன். செக்கோஸ்லேவேகியா என்னுடைய அவநம்பிக்கையை முற்றுப்படுத்தியது. அது எனக்கு கஷ்டமானதும் கூட. ஏனெனில் என் வார்த்தைகள் எப்போதுமே எனது இடதுசாரி சுய பிம்பத்துடனேயே பிணைக்கப்பட்டிருந்தன. ஒரு குறுகிய காலம் உறைந்து இருந்துவிட்டு, பின்னர் ஆன்மாவின் தளத்துக்கு நடக்கவேண்டிய எளிய நடைதான். அது இயற்கையாக நடந்தது. அதிலேயே நான் அதன் பின்னர் எப்போதும் இருக்கிறேன். ‘

(தொடரும்)

நன்றி : rediff.com

Series Navigation

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்

குளிர்காலத்து ஓய்வில் ஒரு சிங்கம்: ஓ வி விஜயனுடன் ஒரு பேட்டி: 1998

This entry is part [part not set] of 28 in the series 20050506_Issue

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்


ஓ வி விஜயனுடன் என் பேட்டி இது. என்ன அற்புதமான மனிதர். கம்யூனிசம் என்ற பம்மாத்தை ஊடுருவிக் காணத் தெரிந்தவர். ஆன்மீக ராஜ்யத்துக்குள் நுழையத் தெரிந்தவர்.

இந்தியாவின் சிறந்த நாவலாசிரியர்களில் ஒருவர் ஓ வி விஜயன் என்பதில்ஐயமில்லை. கவிதையின் அழகும், வெவ்வெறு தளங்களில் அர்த்தமாகும் தன்மையையும் உள்ளடக்கிய படைப்புகள் அவருடையது. ‘கஸாக்கிண்ட இதிகாசம் ‘ என்ற அவருடைய நாவல் மலையாளத்தில் ஒரு பரபரப்பையே உண்டு பண்ணிற்று. நெகிழ்வான கற்பனையுலகிலிருந்து நவீன உலகிற்கு மலையாள இலக்கிய உலகை அழைத்துச் சென்றது இந்த நாவல். கடந்த ஐம்பதாண்டுகளில் ‘கஸாக் ‘ அளவு பாதிப்பை ஏற்படுத்தியதில்லை என்றே சொல்லலாம். எழுத்திற்கு ஒரு விடிதலை அளித்து சோதனை முயற்சிகளை உருவிலும் உள்ளடக்கத்திலும் மேற்கொள்ளக் காரணமாய் இருந்தது அந்த நாவல்.

பின்னர் ‘குருசாகரம் ‘ கேரள சாகித்ய அகாதமியின் பரிசு பெற்றது.1997-ல் அவர் எழுதிய ‘தலைமுறைகள் ‘ மாஸ்டர்பீஸ் என்றே சொல்லலாம். இன்னமும் அது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவில்லை.

‘தர்மபுரி காதை ‘ , ‘கஸாக் ‘ , ‘முடிவிலி ‘, ‘தூக்கிலிடப்பட்ட பிறகு ‘ என்று தலைப்பிட்ட சிறுகதைத் தொகுப்பு – ஆங்கில மொழிபெயர்ப்பில் பென்குவின் வெளியீடாய்க் கிடைக்கின்றன. தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளும் தொகுக்கப்பட்டு வைகிங் பென்குவின் வெளியீடுகளாய்க் கிடைக்கின்றன.

விஜயனை அவருடைய சிகந்தராபாத் இல்லத்தில் சந்தித்தேன். வாசல் ‘தெரெசா ‘ ‘விஜயன் ‘ என்று எளிமையாய் சொல்கிறது. அன்று காலையிலேயே நான் வந்திருக்கவேண்டும், ஆனால் இரவு பத்து மணியாகிவிட்டது. ஆனால் அவர்கள் அதைப் பற்றி முகங்கோணவில்லை.

விஜயன் (அவர் மனைவி அவரை ஓவி என்றழைக்கிறார்) உயரமாக், ஒல்லியாக இருக்கிறார். நீளமான, ஒல்லியான, வெள்ளையான தாடி. பார்கின்சன் நோய் தனக்கிருப்பதாய்த் தெரிவிக்கிறார்.அதனால் குரலும் பாதிக்கப் பட்டுள்ளது. எழுத்தாளரும், கார்ட்டூன் வரைபவருமான விஜயனுக்கு பார்கின்சன் நோய்.

அமெரிக்கா பற்றி விசாரிக்கிறார். அவருடைய மகன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார். அவர் அமெரிக்கா வந்ததுண்டா என்று கேட்கிறேன். கிட்டத்தட்ட டிக்கெட் எல்லாம் எடுத்தபின்பு, கடைசியில் போகவில்லை என்று தெரிவிக்கிறார்.

சான் ஃப்ரான்சிஸ்கோ பற்றியும், சிலிகன் பள்ளத்தாக்கு பற்றியும் தெரிவிக்கிறேன்.

உபசரிப்பில் மிக கருத்துள்ளவராய் இருக்கிறார். அவருடைய அரசியல் கார்ட்டூன்கள் பற்றிக் கேட்கிறேன். 70-களிலும், 90-களிலும் அவர் வரைந்த கார்ட்டூன்களைக் காண்பிக்கிறார். அங்கதமும், கூர்மையான பார்வையும் கொண்டவை. அந்தக் கார்ட்டூன்களை இன்று பிரசுரம் செய்தாலும் பொருத்தமாகத் தான் இருக்கும்.

‘நீங்கள் பல புத்தகங்களை எழுதியிருக்கிறீர்கள். உங்களுக்கு மிகப் பிடித்ததாய் உள்ளது எது ? சாகித்ய அகாதமி பரிசு ‘முடிவிலி ‘க்குக் கிடைத்தது. ஆனால் ‘கஸாக் ‘கிற்குக் கிடைத்திருக்கலாம் என்று உணர்ந்தீர்கள் இல்லையா ? ‘

‘என்னை சரியாக மேற்கோள் காட்டவில்லை போல. நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தப்புத்தகம் வெளிவந்தபோது அத்தோடு உணர்வுப்பூர்வமாக உறவுகொள்ளவில்லை என்றும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும், அகாதமியின் உறுப்பினர்கள் சிலர் சொன்னார்கள். ‘ முடிவிலி ‘ அதனை விட அதிகமாக ஒப்புக்கொள்ளப்பட்டது..

கஸாக் தான் நான் என்னையே அர்ப்பணித்து எழுதிய நாவல் என்று சொல்லவேண்டும். என்னுடைய முதல் நாவல் என்ற வகையில் அதற்கு சிறப்பிடம் உண்டு. நான் ஒரு அத்தியாயம் எழுதி மாத்ருபூமி ஆசிரியரிடம் கொடுத்தேன். ஆனல் அது சிறுகதை என்று பிரசுரிக்கப் பட்டு விட்டது. தலைமுறைகளும் என் மனதிற்கு மிக உவப்பான நாவல், ஏனென்றால், அது இப்போதில்லாத மனிதர்களையும் ,இடங்களையும் பற்றிப் பேசுகிறது. ‘

‘தில்லியில் வசித்தபோது பத்திரிகையாளர் பணியிலும் இருந்தீர்கள், அல்லவா ? ‘

‘கிட்டத்தட்ட 40 வருடங்களாக எழுதி வருகிறேன். தில்லியில் 35 வருடங்கள் அரசியல் நோக்காளனாகவும், கார்ட்டூனிஸ்டாகவும் இருந்தேன். ஸ்டேட்ஸ்மன், தி ஃபார் ஈஸ்டர்ண் எகனாமிக் ரிவ்யூ, போல சில பத்திரிகைகளில் எழுதியுள்ளேன். ‘

‘உங்களது படைப்புக்களைப் பார்க்கும்போது, நீங்கள் ஒரு புரட்சியாளராக ‘கஸாக் ‘க்கில் இருந்து, அனைத்தையும் கடந்தவராக ‘முடிவிலி ‘யில் ஆகி, அதன் பின்னர் ‘தீர்க்கதரிசியின் பாதை ‘யில் ஒரு தேசியவாதியாகவும் ஆகியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். பிறகு நீங்கள் உங்களது மூதாதையரது குடும்பத்தைப் பற்றி தலைமுறைகள் புத்தகத்தில் எழுதினீர்கள். நீங்கள் இப்படி மாற ஏதேனும் காரணமுண்டா ? ‘

‘என்னை மாற்றும் பாதிப்புகள் மாறுகின்றன என்பது நான் மாற மாற அல்லது வளர வளர என்னை பாதிக்கிற விஷயங்களும் மாறிக்கொண்டே போகின்றன என்பதுதான். நான் ஆரம்பிக்கும்போது, நான் எதைப்பற்றி எழுதுகிறேன் என்பதைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருந்தது. என்னுடைய பூர்வீகமான பாலக்காடும் அதன் கிராமப்புறமும் அதன் பரந்த வெளிகளும் என் மனத்தில் எல்லையற்ற ஆனந்தத்தை உருவாக்கின என்பதைத் தவிர வேறொன்றும் உணராதிருந்தேன். அதைக்கூட முழுமையாக உணராமலிருந்தாலும், அது நிச்சயமாக என் மொழியையும் கஸாக்கில் நான் கையாண்ட வார்த்தைகளையும் பாதித்தது. மேற்குதொடர்சி மலையினூடாக விசிலடிக்கும் காற்று பாலக்காட்டை தழுவுவதையும் அதன் காட்சிகளும் ஒலிகளும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருந்தன. நான் கதையில் முழுக்கவனம் செலுத்தினேன், என் மீது அல்ல. அதை நான் மிகவும் ஆராயவில்லை. ‘

‘மலையாளம் வாசகர்களில் இளைய தலைமுறை உங்கள் எழுத்தின் பால் மிக ஈர்ப்புக் கொண்டிருந்தது. காட்சர் இன் த ரை புத்தகத்துக்குப் பிறகு அமெரிக்க முரட்டு இளைஞர்களிடையே இருந்த ஒரு பக்திமயமான பின்பற்றுதல் போல உங்களுக்கு ஏதேனும் குழாம் இருந்ததா ? எப்படி கஸாக் ஒரு குழும செவ்விலக்கியம் -cult work – ஆனது ?

‘பாதிப்பில் இது போன்றதொரு ஒற்றுமை இருந்திருக்கலாம் என்று ஒப்புக்கொள்கிறேன். ஆனால், கேட்சர் போல கஸாக் ஒரு புரட்சி புத்தகமல்ல. இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் இதனைச் சொல்வது ஆபத்தானதாக இருக்கலாம். இருந்தாலும், அது ஒரு ஆழமனத்தின் இந்து கட்டுமானம் கொண்டது. மலபாரின் முஸ்லீம் நாட்டுப்புற வாழ்வியலின் கூறுகளையும் இணைத்து அதன் அனுபவங்களையும் இணைத்து உருவானதுதான் கஸாக். ‘

‘கஸாக் ஒரு கடினமான புத்தகம் ‘

‘அது ஆழமான உணர்வுப்பூர்வமான முறையில் தொடர்ந்த பிரபஞ்ச மர்மத்தைத் தேடி நகர்ந்து செல்கிறது. ‘

‘புனிதமானது-கொச்சையானது ( sacred profane) என்ற பின்னணியில் இன்னொரு புத்தகத்தைப் பற்றி கேட்க விரும்புகிறேன். ‘தீர்க்கதரிசியின் பாதை ‘. சீக்கியர்களுக்கு நடந்த விஷயங்கள், கதார் கட்சியின் கதை, கோமகாடு மாரு…. இதில் அதன் வரலாற்றுப்பூர்வமான் விஷயங்களிலும் உணர்வுப்பூர்வமான விஷயங்களிலும் மிகவும் அற்புதமான புத்தகம். ‘

‘அது ஏறத்தாழ ஒரு மதவியல் கட்டுரையாக ஆகிவிட்டது. ஆனால் அது தெளிவானது. படிக்க எளிதானது. 1984ஆம் வருட கலவரங்களில் டெல்லியில் வசித்துவந்தேன். சீக்கியர்கள் அப்போது தாக்கப்பட்டார்கள். முதல் அப்பாவிக்குழந்தைகளின் கதறல் என்று பெயரிட்டேன். அவர்கள் இந்தியாவுக்காக எவ்வளவோ செய்திருக்கிறார்கள்! மக்கள் புரிந்துகொள்ளவே இல்லை! சீக்கியர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துவதை! ‘

‘அது எதிர்ப்பின் குரலா ? உங்கள் மற்ற புத்தகங்களும் அப்படியா ? ‘

‘அப்படியெல்லாம் இல்லை. கஸாக்கில் கூட, நான் ஒரு அனார்க்கிஸ்ட். ஆனால் அதில் எதிர்ப்புக்குரலில்லை. அதில் ஏதும் இருந்தால் அது மென்மையான வாய்மூடிய அனார்கிஸ்ட். ‘

(அடுத்த வாரம் மீதி)

(ரீடிஃப் இணைய இதழில் வெளிவந்தது. )

Series Navigation

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்

ராஜீவ் ஸ்ரீநிவாஸன்