இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள்
பாரதி மகேந்திரன்
1 கத்தரிக்காய்க் கறி (சாதாரண வகை)
தேவையானவை
கத்தரிக்காய் – பிஞ்சானவை – அரை கிலோ
புளி – சிறிய எலுமிச்சை அளவு
உப்பு – ஒன்றேகால் மே.க.
மஞ்சள் பொடி – கால் தே. க.
கடுகு – 1 தே.க.
உளுத்தம் பருப்பு – 1 மே. க.
பெருங்காயப்பொடி – 1 தே.க.
மிளகாய் வற்றல் – 4
கத்தரிக்காய்களை குறுக்கும் நெடுக்குமாகவோ அல்லது நெடுக்கு வாக்கிலோ ஒவ்வொன்றையும் நான்காக அரிந்துகொள்ளவும். பிறகு அத் துண்டங்களைத் தண்ணீரில் கழுவி வடிகட்டவும். கடா¡யில் புளியைக் கரைத்து ஏனத்தில் ஊற்றி, அதில் கொதி வரத் தொடங்கிய பிறகு கத்தரிக்காய்த் துண்டங்கள், உப்பு, மஞ்சள்பொடி ஆகியவற்றைப் போடவும். காய்கள் வெந்ததும் அவற்றை சல்லடக்கண் தட்டு ஒன்றில் வடிகட்டவும். (வடிகட்டிய நீரை வீணாக்காமல், அதை ரசத்திலோ, சாம்பாரிலோ சேர்க்கலாம்) பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய்யை ஊற்றி, அது காயும்போது கடுகு, மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்து, வடிகட்டிய கத்தரிக்காய்த் துண்டங்களை அதில் போட்டு, சல்லடைத்தட்டால் மூடி வைக்கவும். (கண்கள் இல்லாத தட்டை மூடினால், நீர் சொட்டிக் கத்தரிக்காய்க் கூட்டுப் போல் ஆகிவிடும். கண்கள் உள்ள தட்டாக இருந்தால் ஆவி வெளியே போய்விடும்.) சிறிது நேரத்துக்கு ஒரு முறை கிளறி விட்டுப் பெருங்காயப் பொடியை அதில் போடவும். கண்தட்டால் மூடிய பிறகும் காயில் நீர் சொட்டி யிருப்பின், அதில் சிறிதளவு அரிசிமாவு, கடலை மாவு ஆகியவற்றைத் தூவிக் கலந்து ஒரிரு நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
2. கத்தரிக்காய் எண்ணெய்க் கறி
சாதாரணக் கத்தரிக்காய்க் கறிக்குச் சொன்ன அதே பொருள்கள்தான். ஆனால் மிளகாய் வற்றலுக்குப் பதில் மிளகாய்ப் பொடி போட்டால் நன்றாக இருக்கும். எண்ணெய்யும் கூடுதலாக விட வேண்டும். (சுமார் இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்.)
இந்தக் கறி செய்வதற்குக் கடாயில் முதலில் கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றைத் தாளித்து அதில் கத்தரிக்காயப் போட்டு அடிக்கடி திருப்பி வதக்க வேண்டும். கத்தரிக்காயைப் போட்ட உடனேயே கூழான புளிக்கரைசலையும் அதில் ஊற்றவும். முக்கால் வாசி வதங்கியதன் பிறகு பெருங்காயப்பொடி, மிளகாய்ப் பொடி, மஞ்சள்பொடி ஆகியவற்றை அதில் கொட்டிக் கலந்து முழுவதுமாக வதங்குகிறவரையில் கிளறவும். பிறகு சாப்பிடவும். (மிகவும் துவர்க்கும் காயாக இருந்தால், அரைத் தேக்கரண்டி போல் சர்க்கரையோ, வெல்லமோ சேர்க்கலாம். வேகும் போது போட்டுவிட வேண்டும்.)
mahendranbhaarathi@yahoo.com
பாரதி மகேந்திரன்
- அம்பேத்கரின் கண்டனம் சமயத்திற்கா, சமூகத்திற்கா?
- காவிரி தீர்ப்பில் கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்
- புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்
- பேராசிரியர் சுபவீயின் நேர்க்காணலை முன்வைத்து சில நேரங்களில் சில மனிதர்கள்……
- சிறப்பு பொருளாதார மண்டலங்கள்- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா?
- இலை போட்டாச்சு! – 14. கறி வகைகள்
- மடியில் நெருப்பு – 24
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:4)
- பெரியபுராணம் -122 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- கள்ளுக்கொட்டில்
- கைத் தொலைபேசி
- நீர்வலை (10)
- சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற தைப்பூசத்திருவிழா
- புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு
- காதல் நாற்பது (8) உன் காதலில் சிக்கினேன் !
- ஹெச்.ஜி.ரசூல் கவிதைகள்
- அமானுஷ்ய புத்ரனின் கவிதைகள்
- கடித இலக்கியம் – 44
- 1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து !
- காலனியத்தின் குழந்தை மானிடவியல்: பக்தவத்சல பாரதியின் ‘மானிடவியல் கோட்பாடுகள்’ அறிமுகப்படுத்தும் கோட்பாடுகள்
- பெருஞ்சுவருக்குப் பின்னே (சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும்) – முன்னுரை
- சிலம்பில் உரைநடை
- சாகித்திய அகாதமி – எம் கவிதைகள்-கதைகள்-கருத்துக்கள்
- ரியாத் வாழ் தமிழர் விழா
- மகாத்மா காந்தி செய்யாதது !
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-1 (IPCC)
- தீபச்சுடரும், நெருப்பும்; விரோதியும், நண்பனும்
- 30.12.2006 ல் சிங்கப்பூரகத்தில் நடைபெற்ற திரவியதேசம் புத்தக வெளியீடு ஓர் அலசல்
- உரையாடும் சித்திரங்கள் – பெருமாள் முருகனின் “நீர் மிதக்கும் கண்கள்” -(கவிதைத்தொகுப்பு அறிமுகம்)
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 7
- நித்தம் நடையும் நடைப்பழக்கம்
- எனது முதல் ‘ஈபுக்’ – சிறுகதைத் தொகுதி
- “சுப்ரபாரதிமணியன் : படைப்பும், பகிர்வும்” – தொகுப்பு கே பி கே செல்வராஜ்
- புனைவின் கோடுகள் – ராணி திலக்கின் “காகத்தின் சொற்கள்” – ( கவிதைத்தொகுப்பு அறிமுகம் )
- கவிமாலையின் 80வது (மாதாந்திர) நிகழ்வு
- அலாஸ்கா கடற் பயணம் – இரண்டாம் பாகம்
- புரட்சி செய்த சில பதிவுகள்