அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:6 சாண எரி வாயு தொழில்நுட்பத்துக்கான சந்தையை உருவாக்குதல்

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இன்றைய பாரத குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பாரதத்தை வளர்ச்சி பெற்ற நாடாக்குவது பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள இரு நூல்கள் ‘இந்தியா 2020 ‘ மற்றும் ‘எழுச்சி தீபங்கள் ‘. இவ்விரு நூல்களிலும் சரி அண்மையில் நடத்தப்பட்ட ‘இந்தியா டு டே ‘ கருத்தரங்கிலும் சரி, அவர்கள் கிராமங்கள் சார்ந்த ஓர் மேம்பாட்டிற்கான வழிகாட்டி மாதிரி ஒன்றினை முன்வைத்துள்ளார்கள். ‘புரா ‘ என சுருக்கமாக அழைக்கப்படும் ‘Providing Urban facilities in Rural Area ‘ என்பதே அது. சரி. இதற்கும் சாண எரிவாயு தொழில்நுட்பத்துக்கும் என்ன தொடர்பு ?

சாண எரி வாயு போன்றதோர் முழுமைத்தன்மை கொண்ட தொழில்நுட்பம், நம் மண்ணிற்கு உகந்ததோர் தொழில்நுட்பம் ஏன் இங்கு இன்னமும் அரசின் (குறைந்து வரும்) மானியத் தொகையையும் தன்னார்வ அமைப்புகளின் செயல்திறனையும் நம்பி மட்டுமே செயல்பட வேண்டி உள்ளது ? ஏன் அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட இடங்களில் கூட அத்தொழில்நுட்பம் வேர் பிடித்து வாழ்வுடன் இயையவில்லை ? இதனை ஆராய்கையில் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. சாண எரிவாயுவால் கிட்டும் நலன்கள் பொருளாதார வெளிப்படைத்தன்மை கொண்டவை அல்ல எனவே அதற்கு ஒரு பெரும் தொகை முடக்கி வாங்க கிராம இந்தியர்கள் தயாராக இல்லை என்பது முதல் நிகர பொருளாதார இலாபமே இத்தொழில் நுட்பத்தால் இல்லை என்பது வரையிலாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆனால் இரு கிராமங்களில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு தெரிவிக்கும் உண்மை என்ன ? 15 வருட பயன்பாடு கொண்ட 40 சாண எரிவாயு கலன்கள் ஆண்டொன்றிற்கு வாங்கும் விறகில் (சேகரிக்கப்படும் விறகின் அல்ல) மிச்சப்படுத்திய செலவுத்தொகை மட்டும் வீட்டிற்கு ரூபாய் 2497, முழு கிராமங்களுக்கும் ரூபாய் 99,877/-. இது வெளிப்படையான பொருளாதார நன்மைதான் எனினும் இது அத்தொழில்நுட்ப பரவலுக்கு துணை செய்யவில்லை. அதாவது ஒரு LPG ஏஜென்சியை வர்த்தக ரீதியில் நடத்த முன்வரும் பேர்கள் அதை விட கூடுதல் விலை போகும் பாரத சமுதாயத்துக்கு இலாபம் ஏற்படுத்தும் சாணஎரிவாயு தொழில்நுட்ப வர்த்தக ஏஜென்சி நடத்த முன்வரமாட்டார்கள் என்பதே உண்மை. அதாவது இன்னமும் மானிய துணையின்றி விலைபோகும் சரக்காக இத்தொழில்நுட்பம் தன் முப்பதாண்டு வரலாற்றில் வடிவமைத்துக் கொள்ளவில்லை. ஏன் ?

இது குறித்து அறிய நம் தேசத்தின் சந்தை முழுக்க முழுக்க நகர மையம் கொண்டதாகவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை அறிய வேண்டும். நம் கிராமங்கள் சார்ந்த ‘நமது சந்தையை ‘ நம் தேச சந்தையை நாம் உருவாக்க வேண்டும். அது சாத்தியமா ? அத்தகைய கிராமங்கள் சார்ந்த சந்தைகள் இலாபமாக இயங்க முடியுமா ? அதனால் நம் தேச முன்னேற்றத்துக்கு எவ்வளவு இலாபம் ? என்ன இலாபம் ? இவை குறித்து கலாம் கூறும் பதில் இதுதான், ‘நூறு கோடி இந்தியர்களான நம் அனைவரிடமும் இருக்கும் மொத்தப்பணமும் ஒரு பெரும் வணிகச் சந்தை நிறுவப் போதுமானது. இவர்களில் 25 கோடி நடுத்தர வகுப்பு இந்தியர்கள் வேண்டுமானால் வெளிநாட்டுப் பொருள்கள் மீது மோகம் கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் இந்தியர்களோ இந்தியப் பொருள்களால் மிகுந்த திருப்தி அடைபவர்கள். உண்மையில் இந்திய தொழில் நிபுணர்களிடையே பெரிய அளவில் ஏற்றுமதிப்பேராசை அற்றவர்களும் இருக்கக் கூடும். அவர்கள் ஏனைய 77 கோடி ஜனங்களையும் புதியதோர் உள்நாட்டுச் சந்தைக் கலாச்சாரத்திற்கு உருமாற்ற முன் வர வேண்டும். இத்தகைய முன்னொடி இயக்கம் சக்தியுடன் அணி திரண்டுவிட்டால் மொத்த நூறுகோடிக்கும் மேற்பட்ட நுகர்வோர் கொண்டதோர் பிரம்மாண்ட வணிகத் தளமாக இந்தியா விசுவரூபம் எடுக்கும் ‘ (இந்தியா 2020 பக்.348)

(கலாம் உபநிஷதம் மீண்டும் மீண்டும் நமக்கு தரும் செய்தி இதுதான் நம் உள்ளார்ந்த வலிமைகளை நாம் மீள் உறுதி செய்து ஆக்கபூர்வமாக வெளிப்படுத்துவதே.ஒரு விதத்தில் இது ஸ்வாமி விவேகானந்தர் பாரத சமுதாயத்துக்கு விடுத்த அறைகூவலின் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு எனலாம்.) இச்சந்தை தன்னியல்பிலேயே குவிமையமற்றதாக மேலும் மண் சார்ந்ததாக இருக்கும் என்பது தெளிவு. இச்சந்தையின் உதயம் சாண எரிவாயு தொழில் நுட்பத்தின் முழுபலனையும் நம் தேசம் அனுபவிக்க இன்றியமையாததாகும். இச்சந்தை இன்று பல இலட்சக்கணக்கான சுய உதவிக்குழுக்கள் மூலம் உருவாகத் தொடங்கியுள்ளது. சிறந்த சுரண்டலற்ற கடனுதவி என்பதையும் மீறி இந்த குவிமையமற்ற மக்கள் முதலாளித்துவ இயக்கம் குறிப்பாக மகளிர் மேம்பாட்டில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆனால் கலாமின் கனவுச்சந்தை உருவாக முதல் மாத்திரம் போதாது. தகவல் சுழற்சியும் வேண்டும். நாம் விரும்பியோ விரும்பாமலோ இன்று நம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள் நகரங்களிலேயே குவிக்கப்பட்டுள்ளன. கிராம மேம்பாட்டிற்கான தொழில்நுட்பம் கூட நகர மையங்களிலேயே நகர சந்தை கலாச்சாரத்தில் பழகியவர்களால் உருவாக்கப்படுகின்றன. சாண எரிவாயு தொழில் நுட்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. பின் அரசின் அல்லது தன்னார்வ அமைப்புகளின் விரிவாக்க மையங்கள் மூலம் அவை கிராம சமுதாயங்களுக்கு எடுத்துச்செல்லப் படுகின்றன. முழுக்க முழுக்க மேலிருந்து கீழ் என நிலை கொண்டதோர் முறைமை இது. தொழில்நுட்ப பரவலில் மாற்றாதிக்கச் சக்திகளுக்கு இலாபம் இருந்தால் ஒழிய இம்முறை தொழில்நுட்ப பரவலுக்கு உகந்ததல்ல. இந்நிலையில் தொழில்நுட்ப தகவல் பரவு மையங்களாக மட்டுமின்றி கிராம பயன்பாட்டாளர்கள் , பாரம்பரிய தொழில்நுட்ப அறிஞர்கள் மற்றும் நவீன பொறியியலாளர்கள் இணைந்தியங்கும் மையங்களாக புராவினை காண்கிறார் கலாம். இன்றைய தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் நமக்கு இதை இன்றைய சந்தை அமைப்பிலேயே கூட இலாபகர சாத்தியமாக்க கூடும். கலிபோர்னிய பல்கலைக்கழக பொருளாதார ஆராய்ச்சி மாணவரான அதாணு தேய் பாரத கிராமங்களில் புரா போன்றதோர் அமைப்பின் சாத்தியங்களை சந்தை பொருளாதார சமன்பாடுகளில் ஆராய்கிறார். கலாமின் சிந்தனையுடன் ஒத்த அலைநீளத்தில் சுயமாக சிந்தித்துள்ள அவர் இந்த அமைப்பினை RISC (Rural Infrastructures and Services Common) என அழைக்கிறார். பின்வருமாறு அதனை விவரிக்கிறார். ‘RISC இரு தளங்கள் கொண்டது. ஒன்று உள்கட்டமைப்பு மற்றது பயன்படுத்துவோர் சேவை தளம். ‘ இத்தகைய மையங்கள் 100,000 பேருக்கு ஒன்று எனும் விகிதத்தில் சாத்தியம் என அனுமானிக்கும் அதாணு இதற்கான சந்தை சாத்தியக்கூறினை பின்வரும் வகையில் விளக்குகிறார், ‘கிராமப்புற பாரதத்தின் ஆண்டுற்பத்தி அளவு அமெரிக்க டாலர்களில் 120 பில்லியன். மிக எளிதாக சாதிக்க முடிந்த 10% கூடுதல் வளர்ச்சி அப்போது 12 பில்லியன் அதிகமாக அளிக்கும். இது ரிஸ்க் மையங்களில் இலாபகரமாக மீள் முதலீடு செய்யப்பட்டால் பின் வளரும் வளமை வட்டம் ஒன்றை உருவாக்குதல் முடியாத ஒன்றல்ல. ‘

தொழில்முனைவோர் மற்றும் பாரத தனியார் துறைகளும் தைரியமாக இதில் இறங்கலாம். பாரத மரபு சார்ந்த காத்தல் தன்மை கொண்ட அறிவமைப்புகள் கிராமங்கள் தோறும் மலிந்து கிடக்கின்றன. நம் நகர்மைய நலமற்ற வளர்ச்சியால் நலிந்து வரும் அவற்றைக் கண்டறிந்து திறமையாக பயன்படுத்தவும் ஆக்கபூர்வமாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பங்களுடன் இணைவிக்கவுமான வாய்ப்பு மிகச்சிறந்த ஒரு ஆராய்ச்சி மேம்பாட்டு வாய்ப்பு. இதனை நாம் திறம்பட பயன்படுத்தவும் நாமே இன்று வரை உருவாக்கி உள்ள சாண எரி வாயு போன்ற தொழில்நுட்பங்களை மேலும் மேம்பாடடைய வைக்கவும் அவற்றை மக்களிடம் திறம்பட கொண்டுசெல்லவும் இம்மையங்கள் துணைபுரியும். மேலும் பல வளரும் நாடுகளுக்கான பொருந்திய தொழில்நுட்பமாக நாம் இவற்றை ஏற்றுமதி செய்யவும் இது வழி கோலும். ஏன் வளரும் நாடுகள் மட்டும் ? மிகச்சிறந்த முறையில் சாண எரிவாயு தொழில்நுட்பத்தை நாம் சர்வ தேச சந்தையில் விற்பனை பொருளாக்க முடிந்தால் வளர்ந்த நாடுகளுக்கே கூட நம்மால் தொழில்நுட்ப ஏற்றுமதி செய்யமுடியும் என்பதே உண்மை. 1500 பசுக்களை கொண்டு 1000 வீடுகளுக்கு போதுமானதாக ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து கலிபோர்னிய உழவர் அமைப்பின் அதிகாரி கூறியதாக மே 18,2002 தேதியிட்ட ரெயிட்டர் நிறுவன செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. பொருந்திய தொழில்நுட்பங்களை உருவாக்கும் பசுமை முதலாளித்துவம் இன்று மேற்கில் இலாபகரமான ஒன்றாகவும் நாளைய சர்வதேச கட்டுப்பாட்டுக்கு மற்றொரு ஆயுதமாகவும் கூட மேற்கு காண்கிறது. நமக்கோ அது நம் மரபோடிணைந்த புண்ணிய கைங்கரியம். இதுவே நம் வலிமையும் கூட. புண்ணியத்தை மையம் கொண்டதோர் (இலாப மையம் அற்ற) பொருளாதார மற்றும் தொழில்நுட்ப அமைப்புக்கான கருத்தியல் நம்மிடம் உள்ளது. (உதாரணமாக அறம் மீறா இன்ப விளைவும் இறைவெளிப்பாடே என்கிறது கீதை.) ‘புண்ணிய ஆத்மாக்கள், புண்ணிய அதிகாரிகள் புண்ணிய தலைவர்கள் ஆகிய தங்க முக்கோணத்தை நாடு முழுவதும் ‘ உருவாக்குவதன் மூலம் இது சாத்தியமாகலாம். (இந்தியா 2020, பக். 388) ஏனெனில் மண்ணோடிணைந்த பொருந்திய தொழில்நுட்பமான சாண எரிவாயு போன்றதோர் தொழில் நுட்பத்தை மக்களிடம் கொண்டு செல்வதில் அரசு சார்ந்த அமைப்புகளும் , இலாப மையம் கொண்ட நகர்ப்புற சந்தையும் அடைந்த தோல்வி நமக்கு உணர்த்தும் பாடமும் இதுவே.

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:5 சாண எரி வாயு கலன்களின் கள செயல்பாடு ஒரு கண்ணோட்டம்

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

அரவிந்தன் நீலகண்டன்


இதுவரை பாரதத்தில் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்கள் கூட்டுத்தொகையாக பின்வரும் அட்டவணையில் காட்டப்படுகின்றன.

வருடங்கள் சாண எரிவாயு கலன்கள் (கூட்டுத்தொகையாக)

1961: 62 < 25,000

1980 வரை 100,000

1990 வரை 150000

1999 டிசம்பர் வரை 290587

(1999:2000 பாரத அரசின் ஆண்டறிக்கையிலிருந்து)

இத்தொழில் நுட்ப பரவுதல் குறிப்பாக அரசு மானியங்கள் மூலமாகவும் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் மூலமாகவுமே நடக்கிறது. சந்தை பொருளாதார ஏற்பு இத்தொழில் நுட்பத்திற்கு ஏற்படவில்லை. பாரத கிராமப்புறங்களில் எரிபொருள் பயன்பாட்டில் சாண எரிவாயுவின் பங்களிப்பு 0.43 சதவிகிதம். அதே சமயம் நேரடி சாண எரியூட்டல் 19.6 சதவிகிதம். மிக மெதுவான தொழில் நுட்பபரவலுடன் நிறுவப்பட்ட சாண எரிவாயு கலன்களின் செயல்பாட்டு திறமும் சாண எரிவாயுவின் குறைவான கள பங்களிப்பில் முக்கிய காரணிகளாக கண்டறியப்படுகின்றன. மேலும் ஒரு கள ஆய்வாளர் கூறுவதை போல சாண எரிவாயு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட அளவிற்கு கிராம வாழ்வினுடன் இசைவிக்கப்படவில்லை. ( ‘introduced but not integrated ‘) 1992 இல் தேசிய அளவில் நடத்தப்பட்ட தேசிய பொருளாதார மையம் நடத்திய கள ஆய்வு நான்கு வருட காலத்துக்குள் சாண எரிவாயு கலன்களுள் நிறுவப்பட்ட 3600 கிராமங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. செயல்பாட்டு சதவிகிதம் : 66. 1996 இல் மரபு சாரா எரிபொருள் அமைச்சகம் 1992 முதல் ’95 கால கட்டத்துக்குள் நிறுவப்பட்ட கலன்களின் செயல்பாட்டு சதவிகிதம் 88 என தெரிவித்தது. (கள ஆய்வு மேற்கொள்ளப்பட்ட அளவு: 727) டாடா ஆற்றல் ஆய்வு மையம் (TERI) யின் 1997 இல் மேற்கொண்ட கள ஆய்வு இன்று தன்னார்வ அமைப்புகளால் ஆதர்ச கையேடாகவே பயன்படுத்தப்படுகிறது. 1981 முதல் 1996 வரையிலான கலன்கள் தேசம் முழுவதிலுமாக 58 கிராமங்களில் கள ஆய்வு செய்யப்பட்டன. செயல்பாட்டு சதவிகிதம்: 81. TERI சாண எரி வாயுகலன்களின் செயல்பாட்டின்மைக்கான காரணங்களாக பின்வருவனவற்றை முன்வைக்கிறது:

அ) சமுதாய பொருளாதார பிரச்சனைகள்: கால்நடைகளின் எண்ணிக்கை குறைவு (சாவு அல்லது விற்றல் விளைவாக), தகராறுகள், நில பாகப்பிரிவினை போன்றவை (30%)

ஆ) தொழில்நுட்ப பிரச்சனைகள்: எரிவாயு குழாய்களில் அடைப்பு, விரிசல், அடுப்பின் ‘பர்னரில் ‘ பிரச்சனைகள் (45%)

இ) கட்டுமான பிரச்சனைகள் (6%)

ஈ) மற்றவை: கவனக் குறைவால் அல்லது மானுட தவறினால் எழுபவை. உதாரணமாக குறைவான சாண உள்ளீடு போன்றவை.(19%)

கலனின் செயல்பாட்டுக்கும் அப்பால் கலனி முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுதல் என்பதும் முக்கியமானது, இப்பயன்பாட்டினை கணித அளவீட்டில் கொண்டு வருவதென்பது கடினமானது. லிட்மானின் ஆய்வு பலவித ஆற்றல் பயன்பாட்டு களநிலைகளை முன்வைத்து

பயன்பாட்டின் நல அளவீட்டினை நிர்ணயிக்கிறது. புரா கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட இக்கள ஆய்வில் சமுதாய சாண எரிவாயுகலன்கள் 78% பொருளாதார லாபத்தை ஏற்படுத்துவதாக கணிக்கப்படுகிறது. ஆனால் அதே சமயம் தனிநபர் கலன்களில் இந்த அளவு குறையுமென்றும் கணிக்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக சமுதாய அளவிலான கலன்களில் உள்ளீடு அளவு அதிகமாக உள்ளதால் சில சமயங்களில் சாணம் லாரிகளில் பக்கத்து ஊர்களிலிருந்து வரை கொண்டு வர வேண்டியதாகிவிடுகிறது. ஆய்வுகளில் வேதி உர பயன்பாடு குறைதல், சமையலறை புகைமண்டிய சூழல் மாற்றத்தால் ஏற்படும் மானுட நலம், மேம்படும் சுகாதாரம் அதனால் மிச்சப்படும் மருத்துவ செலவுகள் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சீனத்தில் மேற்கொள்ளப்பட்ட சாண எரிவாயு கலன்களின் செயல்பாட்டில் வேதி உர பயன்பாடு குறைதல் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டஆய்வுகளில் கட்டுமான செலவு 20% அதிகரித்த பின்னும் கூட நிகர பொருளாதார இலாபம் கிட்டியதாக கண்டறியப்பட்டுள்ளது.

இத்தொழில்நுட்ப பரவுதலுக்கு பொருளாதார அளவிலான ஊக்குவிப்பில் பொருளாதார இலாபம் குறித்த அளவிடுதல் முக்கியமானதாகும். சரியான தகவல் பரிமாற்றம் இன்றி முழுமையான சாண எரிவாயு கழிவின் உர பயன்பாடு இயலாத ஒன்றாகும். தொழில் நுட்ப தகவல் பரிமாற்றமின்றி இத்தொழில்நுட்பம் வேரூன்றுவது குதிரை கொம்புதான். நிறுவப்பட்ட கலனின் பராமரிப்புக்குக் கூட ‘காணப்பெறும் பொருளாதர இலாபம் ‘ (tangible economic gain, உதாரணமாக சுற்றுபுற சூழம் மேம்பாடு அல்லது தவிர்க்கப்படும் மருத்துவ செலவு ஆகியவை ‘காணப்பெறும் பொருளாதார இலாபங்கள் ‘ அல்ல.) ஒரு ஊக்குவிப்பு காரணமாகிறது. எனவே சரியான பயன்பாட்டு தகவலளிப்பு மற்றும் பயிற்சி இத்தொழில்நுட்பத்துடன் கொடுக்கப்படவேண்டும்.

பாரத அரசின் ஒன்பதாவது திட்டக்குழுவின் வார்த்தைகள் இத்தொழில்நுட்பத்தின் இன்றைய நிலையை தெளிவாக்குகின்றன. ‘சாண எரிவாயு நமக்கு இருக்கும் குவித்தன்மையற்ற எரிபொருள் மூலங்களில் மிகச் சிறந்தது. ‘ என கூறும் திட்டக்குழு அதே சமயம் மேலும் கூறுகிறது, ‘ஆனால் அதனை நியாயப்படுத்த அதன் பயன்பாட்டினை (உள்ளடங்கிய பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பயன்பாடு) அதனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மேம்பாட்டினை அளவிடும் கள ஆய்வுகள் விரிவாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். ‘

ஒரு பாரதிய விவசாயியின் பார்வையில் இத்தொழில் நுட்ப பயன்பாட்டினை ஏற்பதில் உள்ள சிரமங்கள் என்ன ?

அ) அதிக முதலீடு

ஆ) இயக்க, பராமரிப்பு செலவுகளின் தன்மை

இ) உள்ளீட்டு அளவு மாறுபடும் தன்மை

ஈ) சரியான பொருளாதார உதவுகரங்கள் இன்மை

உ) பயன்பாடு பராமரிப்பு குறித்து தகவலின்மை

பொதுவாகவே குவித்தன்மையற்ற தொழில்நுட்பங்களின் பரவுதலை தடுக்கும் காரணிகளும் இவையே. இவை எவ்வாறு எதிர்கொள்ளப்படலாம் ? பாரத குடியரசு தலைவரும், இந்த தேசத்தின் ஏவுகணை தொழில்நுட்ப செயல்திட்டத்தின் தந்தையுமான ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாமின் எழுச்சி எண்ணங்களில் அதற்கான விடை இருக்கலாம்.

அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து :2 நம் கிராம உலைகளுக்கான தொழில்நுட்பம்

This entry is part [part not set] of 33 in the series 20030317_Issue

அரவிந்தன் நீலகண்டன்


கிராமப்புற பாரதத்தின் முதன்மையான முக்கிய எரிபொருள் வாங்கப்படும் விறகும் மற்றும் சேகரிக்கப்படும் சுள்ளிகளும் தான்.வர்த்தக ரீதியற்ற எரிபொருள் பயன்பாடு 1978:79 முதல் 1992:93 வரை 95.53 % லிருந்து 95.18% க்கு குறைந்த அதே வேளையில் விறகு மற்றும் சுள்ளிகள் பயன்பாடு 42% லிருந்து 47% ஆக உயர்ந்தது.இவ்விதம் உட்கொள்ளப்பட்ட விறகு மற்றும் சுள்ளிகளின் அளவு 80 மில்லியன் டன்களிலிருந்து 130 மிலியன் டன்கள் ஆகும். இதே காலகட்டத்தில் கிராம ஆற்றல் பயன்பாடு 3,499 பீட்டா ஜூல்களாக 2,368 பீட்டா ஜூல்களிலிருந்து உயர்ந்தது (PJ). தங்கள் சமையலுக்கு விறகு மற்றும் சுள்ளிகளையே நம்பியிருக்கும் வீடுகளின் எண்ணிக்கை 35% லிருந்து 56% ஆக உயர்ந்தது.

இத்தகைய வளர்ச்சி கிராமப்புற இயற்கை வளங்கள் மீது ஏற்படுத்தும் அழுத்தம் கடுமையானது. கிராமப்புறங்களின் இச்சூழல் குறித்து டாடா ஆற்றல் ஆராய்ச்சி நிறுவனம் (TERI) நடத்திய கள ஆய்வு ஒன்றின் அறிக்கை பின்வரும் சித்திரத்தை அளிக்கிறது, ‘கிராமப்புற சமையலுக்கு பயன்படுத்தப்படும் விறகு மற்றும் சுள்ளிகள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மட்டும் பெறப்பட வில்லை. மாறாக பொது பூமி, பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலங்கள், வரையறை செய்யப்பட்ட வன இலாகாவுக்கு சொந்தமான நிலங்கள் ஆகியவற்றிலிருந்து அவை பெறப்படுகின்றன. குழந்தைகளாலும் பெண்களாலும் சுமந்து வரப்படும் இவை பின்னர் 20% குறைவான ஆற்றல் பயன்பாட்டு திறன் கொண்ட அடுப்புகளில், காற்றோட்டமற்ற புகை சூழ் அறைகளில் எரியூட்டப்படுகின்றன. ‘

எனவே இத்துறையில் ஏற்படும் திறன் கொண்ட ஆற்றல் பயன்பாட்டு மாற்றம் எத்தகைய மானுட மேம்பாட்டுக்கு, சமூக பொருளாதார வளர்ச்சிக்கு வகை செய்யும் என கூறவேண்டிய தேவையில்லை.ஏற்கனவே LPG போன்ற வர்த்தக எரிபொருட்களை கிராமங்களில் பயன்படுத்த முயன்ற முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. கிராமப்புற ஆற்றல் பயன்பாட்டுக்கான தொழில்நுட்பம் குவித்தன்மையற்றதாகவும் அந்த சுற்றுவட்டாரம் சார்ந்த தன்னிறைவு தன்மை கொண்டதாகவும் அமைவது அவசியம். ஆற்றல் பொருளியலாளர் சுஜாய் பாசு இது குறித்து பின்வருமாறு கூறுகிறார், ‘கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு கிராமங்களில் ஆற்றல் பயன்பாடு குறித்த தெளிவான கருத்தோட்டமும் செயல் திட்டமும் இருப்பது அவசியம்….மீள்பயன்படு தன்மை கொண்ட ஆற்றல் உற்பத்தியுடன் இணைந்த விநியோகம் குறித்தும் (அத்தகைய உற்பத்தி மற்றும் விநியோக இணைப்பினை) நிபுணர்கள் வடிவமைக்க வேண்டும். கிராமம் சார்ந்த அமைப்புகள் மூலம் கிராம ஜன சமூகங்களின் பங்கேற்புடன் அதனை நடைமுறை படுத்தவேண்டும். ‘

விறகிற்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்படும் எரிபொருள் சாணமே. பாரதத்தில் ஓர் ஆண்டிற்கு 960 X 10^6 டன் சாணம் கிடைக்கிறது. வருடாந்திர பயன்பாடு 106.9 X 10^6 டன். அதுவும் நேரடியாக எரியூட்டப்படுகிறது. இதனால் ஏற்படும் கரியமில வாயு மாசு மிகவும் சுற்றுப்புற சூழல் மற்றும் உடல்நல பாதிப்பினை ஏற்படுத்துகிறது. நேரடியாக சாணம் எரியூட்டப்படும் பட்சத்தில் அதில் இருக்கும் நைட்ரஜன் மீண்டும் மண்ணிற்கு அளிக்கப்படாமல் போய்விடுகிறது. இந்நிலையில் எத்தகைய தொழில்நுட்ப பயன்பாடு மூலம் இந்த நிலையில் நாம் மேம்பாடு காணலாம் ?

பாரத மண்ணில் வேர் கொண்டு உருவானதோர் ஆற்றல் தொழில்நுட்பம் இங்கு அதன் தொழில்நுட்ப, மற்றும் சமுதாய பொருளாதார தன்மைகளுடன் அதன் பரவுதலில் சமுதாய ஏற்பில் உள்ள சிக்கல்களுடன் ஆராயப்படுகிறது. பல்தன்மை கொண்ட இத்தொழில்நுட்பம் வளரும் நாடுகள் தன் மண் சார்ந்த மேம்பாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் கண்டுள்ள சாதனைகள் செல்லவேண்டிய துரெங்கள் மற்றும் அத்தொழில்நுட்பத்தை களத்தில் பரப்புவதில் சமுதாய ஒப்புமை பெறவைப்பதில் பெற்றுள்ள வெற்றி தோல்விகள் மற்றும் சவால்கள் ஆகிய அனைத்துக்குமானதோர் எடுத்துக்காட்டாக விளங்கலாம்.

பாரதத்தின் கிராமங்களில் 45% வீடுகள் 3 முதல் 4 மாடுகளை கொண்டுள்ளன. TERI யின் ஆய்வு ஒன்றின் அடிப்படையில் டாக்டர். அப்துல் கலாம், 17,000 மெகாவாட்களை சாண எரிவாயு கலங்கள் மூலம் உற்பத்தி செய்யலாம் என்கிறார்.இந்த அளவு மீள்பயன்படு தன்மை கொண்ட ஆற்றல் உற்பத்தியில் காற்றாலை மற்றும் சமுத்திர ஆற்றல் உற்பத்தி அளவுகளுக்கு அடுத்த படியாக விளங்குகிறது ஆனால் அவற்றை போன்ற அதிக முதலீட்டுத்தன்மையும் குவிதன்மையுமற்ற ஆற்றல் உற்பத்தி முறை என்பதால் பாரத கிராமத்தன்மையுடன் இணைந்தியங்க முடியும். சாண எரிவாயு தொழில்நுட்பத்தின் முழுமை தன்மையினை, பாரத கிராம மேம்பாட்டில் அதன் முக்கியத்துவத்தை முதன்முதலில் உணர்ந்தவர் மகாத்மா எனும் ரசவாத கல்லால் ஜோ.க. குமரப்பா ஆகிய ஜோஸப் கர்னீலியஸ் என்கிற தஞ்சாவூர்காரர்.

பாரத கிராமங்களில் அமைக்க முடிந்த குடும்ப பயன்பாட்டிற்கான சாண எரி வாயு கலன்களின் எண்ணிக்கை 12X10 ^6 க்கும் சில ஆயிரங்கள் அதிகம். அமைக்கப் பட்டிருப்பவை 3.02 X 10 ^6. கனாடிய சர்வதேச மேம்பாட்டு உதவி நிறுவனம் நடத்திய விரிவான கள் ஆய்வுகள் சாண எரிவாயுவால் பயன்படுத்துவோரின் வாழ்க்கை தரம் மேம்பாடடைந்திருப்பதை உறுதி படுத்துகின்றன. சுள்ளி பொறுக்க நெடுந்துரெம் அலைவது, புகை அடர்ந்த சமையலறைகளில் கஷ்டப்படுவது ஆகியவற்றிலிருந்து விடுதலை அடையும் கிராமத்து பெண்களால் இவ்வாறு சேமிக்கப்பட்ட நேரம் எழுத்தறிவு பெறுவது முதல் சிறு தொழில்களில் ஈடுபடுவது என பல உபயோகமான முறைகளில் கழிக்கப்படுவதை அந்த ஆய்வு உறுதி செய்கிறது. சேமிக்கப்பட்ட நேரத்தில் தான் ஒரு நாளுக்கு 20 ரூபாய் சம்பாதிப்பதாக பயன்படுத்தும் பெண்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன. ‘ஊர் முழுக்க அலைஞ்சு சுள்ளி பொறுக்கிட்டு வந்து சமையல் செஞ்சி போடணும். இப்போ அந்த நேரம் மிச்சம் அதிலே அகர்பத்தி செஞ்சு தினமும் 20 ரூபாய் சம்பாரிக்கிறேன். ‘

சாண எரிவாயு கலனின் விளைவுகள் எரிபொருள் சேமிப்பு என்பதனையும் தாண்டி மனித வள மேம்பாட்டிற்கு நேரடியாகவே பலனளிக்கிறது என்பது கண்கூடு. இனிவரும் நாட்களில் நைட்ரஜன் சார்ந்த வேதிஉர உற்பத்தியின் ஆற்றல் விலைகள் மிகக்கடுமையாக அதிகரிக்கும். மத்திய அரசும் யூரியாவுக்கு கொடுக்கும் மானியத்தை அப்படியே கொண்டு செல்வது மோசமான பொருளாதாரம் எனினும் அதனை குறைப்பது மோசமான ஓட்டுவங்கி அரசியல் என்பதால் ஓட்டுக்காக மானியம் என்கிற பேரில் விவசாயத்தை தன்னிறைவு தொழில் நுட்பத்தன்மையற்று போக வைத்து வருகிறது. பல ஆய்வுகள் சாண எரிவாயு கல கழிவு வேதி நைட்ரஜன் உரங்களுக்கு (குறிப்பாக யூரியா) மிகச் சிறந்த மாற்றாக அமைவதை நிரூபிக்கின்றன. (ஆனால் இந்த கட்டுரையாளன் மேற்கொண்ட கள ஆய்வில் சாண எரிவாயு கல கழிவு உரமாக பயன்படும் அதே நேரத்தில் அது யூரியா பயன்பாட்டை குறைக்கவில்லை என்பது தெரிந்தது.குமரி மாவட்ட அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு இது. சாண எரிவாயு கல கழிவு உர பயன்பாட்டால் ஆண்டுக்கு சராசரியாக சேமிக்கப்பட்ட யூரியாவின் விலை எவ்வளவு என்பது குறித்த ஆய்வுகள் தேடிய மட்டும் அகப்படவில்லை.) குறிப்பாக 2003 இல் நைட்ரஜன் வேதி உரங்களின் உற்பத்தி செலவுகள் 30 சதவிகிதமாக அதிகரிக்கும் என்கிறது ஓர் ஆய்வு. இந்நிலையில் மத்திய அரசு அளிக்கும் உர மானியம் எத்தகைய பொருளாதார சுமையினை நாட்டின் மீது ஏற்றும் என்பது யாராலும் எளிதாக அறிய முடிந்த ஒன்று. சாண எரிவாயு தொழில்நுட்பம் முழுமைத்தன்மையுடன் பரவுவதால் ஏற்படும் நன்மைகள் மிகத்தெளிவாகவே கணக்கிடப்பட முடிந்தவை.

ஆனால் இத்தொழில்நுட்ப பரவுதலில் மற்றும் அதன் முழுமை பயன்பாட்டில் உள்ள சிரமங்கள் குறித்து விவாதிப்பதன் முன் இத்தொழில்நுட்பத்தின் அறிவியல் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும், அடுத்த வாரம்.

: அரவிந்தன் நீலகண்டன்

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

அரவிந்தன் நீலகண்டன்


முன் குறிப்பு:

அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் குறித்து ஒரே வரியுடன், ஒதுக்கப்படுகிறது. இக்கட்டுரையாளன் அணு உலைகளுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் இன்றைய எரிபொருள் பயன்பாட்டு பாதைகள், அதன் மதிப்பீடுகள் ஆகியவை சார்ந்த மனமண்டலம் குறித்த (நம்பிக்கையின்மையின் விளிம்பிலான) ஐயம் உடையவன். பாரதத்தின் இன்றைய எரிபொருள் உற்பத்தி, பயன்பாடு விநியோகம் ஆகியவற்றில் பாரத சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களின் ‘சிறிய ‘ அளவு பங்களிப்பு மானுட நலம் மற்றும் மேம்பாட்டுக்கு வர்த்தக ரீதியிலான ஆற்றல் விளைவுகளை காட்டிலும் பெரும் அளவு இருக்கும் என கருதுகிறேன். அதாவது பெட்ரோலிய மூலத்திலிருந்து ஒரு மெகாவாட் ஆற்றல் பயன்பாடு இன்று விளைவிக்கும் மானுட நல அளவினைக் காட்டிலும் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் மூலம் கிட்டும் ஒரு மெகாவாட் ஆற்றல் பயன்பாடு விளைவிக்கும் மானுட நல அளவு இன்னமும் அதிகமாக இருக்கும் என்னும் கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை (முடிந்தால் தொடரினை) எழுத முற்படுகிறேன். மார்க்சியத்தின் மேம்போக்குத் தனமின்றி, ஒரு முழுமைத்தன்மை கொண்ட மானுடநலம் பற்றிய அடிப்படை இடத்தை, (மதிப்பீடுகள், தொழில்நுட்பம், சமூக பொருளாதார அமைப்புகள் ஆகியவை சந்திக்கும் ஒரு இடம்) ,ஆற்றல் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு குறித்த விவாதத்தின் மூலம் தொட முடியுமென நம்புகிறேன். அதன் தொடக்கமாக:

பாரத சமுதாயத்தின் எரிபொருள் பயன்பாட்டு தன்மைகள்

எந்த பண்பாட்டிற்கும் முன்நிபந்தனையாக ஆற்றல் பயன்பாடே விளங்குகிறது என்பார் புகழ்பெற்ற வருங்காலவியல் ஆய்வாளரான ஆல்வின் டாஃப்லர். இன்றைய வளரும் உலகின் வேக வளர்ச்சி பொருளாதாரங்களில் ஒன்றான பாரதமும் அதி வேகமாக வளரும் ஆற்றல் தேவையுடன் விளங்குகிறது.

கடந்த ஐம்பதாண்டுகளில் பாரதத்தின் ஆற்றல் அல்லது எரிசக்தி பயன்பாட்டு தேவை பெருக்கத்தன்மையுடன் வளர்ந்துள்ளது. 1953 இல் 90மில்லியன் டன் எண்ணெய்க்கு சமமான (million oil tonne equivalent MOTE) எரிசக்தி பயன்பாட்டிலிருந்து, நாற்பதாண்டுகளில் 370 MOTE பயன்பாட்டிற்கு பாரதம் சென்றுவிட்டது. அதே சமயத்தில் வர்த்தக தன்மை கொண்ட மற்றும் வர்த்தக தன்மையற்ற எரிசக்தி பயன்பாடுகளிலும் ஒரு பெரும் மாற்றத்தை காணமுடிகிறது. 1953 இல் 30% எரிசக்தி, வர்த்தக தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களிலிருந்தும் (நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், இயற்கை வாயு மற்றும் மின்சக்தி) 70% எரிசக்தி வர்த்தக தன்மையற்ற எரிசக்தி மூலங்களிலிருந்தும் (விறகு, சுள்ளி, விலங்கு கழிவுகள் மற்றும் வைக்கோல் போன்ற விவசாய கழிவுகள்) நமக்கு கிடைத்தது. 1997 இல் இந்த அமைப்பு 70% எரிசக்தி, வர்த்தக தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களிலிருந்தும் 30% எரிசக்தி வர்த்தக தன்மையற்ற எரிசக்தி மூலங்களிலிருந்தும் என தலைகீழாக மாறிற்று. ஆனால் இந்த தேசிய எரிசக்தி புரட்சி கிராமங்களின் எரிசக்தி பயன்பாட்டிற்கு எவ்வித தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது ?

பாரத மக்கள் தொகையில் 75% மேல் வாழும் கிராமப்புறங்களில் எரிசக்தி பயன்பாட்டினை இரு முக்கிய துறைகளாக பிரிக்கலாம்.

1.கிராம வீட்டு சமையலுக்கான பயன்பாடு. இதுவே இன்றைய தேதியில் பாரத கிராமங்களில் மிகவும் எரிபொருள் பயன்படுத்தும் துறை. (கிராம எரிசக்தி பயன்பாட்டில் 75% இத்துறையிலேயே செலவிடப்படுகிறது.)

2.விவசாய துறை (15 முதல் 20% எரிசக்தி பயன்பாடு)

3. இதர துறைகள் (கிராமப்புற சிறு தொழில்கள் போன்றவை : 5 முதல் 10%)

1980/81 முதல் 1990/91 வரையிலான காலத்தில் தேசிய எரிசக்தி பயன்பாடு 40.45% லிருந்து 50.57% ஆக உயர்ந்தது; ஆனால் வர்த்தகதன்மையற்ற ஆற்றல் பயன்பாடு 59.54% லிருந்து 49.42% சதவிகிதமாயிற்று அதே காலகட்டத்தில் வர்த்தக தன்மைகொண்ட ஆற்றல் பயன்பாடு கிராம சமையல்களில் 4.47% லிருந்து 4.82% ஆக மட்டுமே உயர்ந்தது. வர்த்தகதன்மையற்ற ஆற்றல் பயன்பாடு 95.53% லிருந்து 95.18% ஆக குறைந்தது. அதே சமயம் விவசாய துறையில் ஆற்றல் பயன்பாட்டு சதவிகிதம் கிராமங்களின் சமையல் பயன்பாட்டு சதவிகிதத்திலிருந்து மாறுபடுகிறது. 1953 இல் கால்நடை மற்றும் மானுட உழைப்பாற்றல் 85% லிருந்து 35.16% ஆக 1992 இல் குறைந்தது. அதே காலகட்டத்தில் வர்த்தக ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றல் 15% லிருந்து 64.84% ஆக உயர்ந்தது. (இந்த ஆற்றல் பயன்பாட்டு மாற்றமே பல பஞ்சங்களை எதிர்கொள்ளாது பாரதத்தை காத்தது.) மின்மயப்படுத்தலை எடுத்துக் கொண்டால், தேசிய அளவில் மின்னாற்றல் பயன்பாடு உடையோரின் சதவிகிதம் ஐம்பதுக்கும் குறைவு. ஒரு பில்லியன் தாண்டிய பாரத மக்கள் தொகையில் 75% வாழும் கிராமப்புறங்களில் மின்னாற்றல் பயன்பாடு உடையோரின் சதவிகிதம் தேசிய சதவிகிதத்திற்கும் குறைவு. சமுதாய மேம்பாட்டுத்தன்மையுடனான பொருளாதார வளர்ச்சியால் பாரதத்தின் ஆற்றல் பயன்பாட்டு அளவு மிக அதிகமாக அதிகரிப்பதை, கடந்த பத்தாண்டுகள் ஆற்றல் பயன்பாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக தன்மையுள்ள மற்றும் அத்தன்மையற்ற ஆற்றல் பயன்பாடுகளின் வேறுபாடுகள், குறிப்பாக முந்தையதன் வளர்ச்சியும் பிந்தையதனின் வீழ்ச்சியும் தெளிவாக இப்புள்ளிவிவரங்களில் நாம் காண முடியும்.

மிகத் தெளிவாக மாறிவரும் பாரதத்தின் ஆற்றல் பயன்பாடு அதன் 75% சதவிகித மக்களுக்கு எவ்வித சமுதாய பொருளாதார மாற்றங்களும் ஏற்படுத்தாத விதத்திலான உற்பத்தி மற்றும் விநியோக முறையினை கொண்டுள்ளது. அதிகரிக்கும், வர்த்தக தன்மையுடைய ஆற்றல் பயன்பாடு நகரங்களில் மாத்திரமே பயன்படுகிறது. மாறாக கிராமப்புறங்களுக்கு அதன் கசிவே உள்ளது. இனிவரும் வருடங்களில் பாரதத்தின் ஆற்றல் தேவை கீழே காட்டப்படுகிறது.

பாரதம் ஏற்கனவே ஒரு ஆற்றல் இறக்குமதியாளராக உலகச் சந்தையில் உள்ளது. பாரதத்தின் அந்நிய செலாவணி விகிதங்களை பாரதத்திற்கு பாதகமாக மாற்றிக் கொண்டிருக்கும் விஷயம் இது. இன்றைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை அப்படியே

நிலையாக கொண்டு செல்லும் பட்சத்தில், இன்று 3040 x 10^15 ஜூல்கள் ஆற்றலை இறக்குமதி செய்யும் பாரதம் அடுத்த பத்தாண்டுகளில் 17315 x 10^15 ஜூல்களை எட்டிப்பிடிக்கும். இது எத்தகைய பொருளாதார வலிமையற்ற தன்மைக்கு பாரதத்தை எடுத்துச் செல்லும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இதற்கு பாரதம் கொடுக்கும் விலையின் பயன் அதன் 75% சதவிகித மக்கள் தொகைக்கு எவ்விதம் சென்றடையும் ? மற்றும் அதனால் ஏற்படும் மானுட மேம்பாட்டால் பாரதத்தின் உற்பத்தி திறன் எவ்வாறு பெருகும் ? இக்கேள்விகளுக்கான பதிலை ,கடந்த ஐந்து பத்தாண்டுகளை வைத்து பார்த்தோமானால், மிகவும் கவலைக்குரியதாகவே காணவேண்டியுள்ளது. ஒரு வேளை இதற்கான பதில் 25 கோடி நகர்ப்புற பாரதியர்களுக்கு ‘பல் குத்தக் கூட போதுமானதாக இல்லாத ‘ ஆற்றலை உற்பத்தி செய்யும் மூலங்களிலிருந்து நமக்கு கிடைக்கலாம். ஐக்கிய நாடுகளின் சமுதாய மேம்பாட்டு செயல்திட்ட மேலாண்மை அதிகாரி ஜேம்ஸ் ஸ்பத்தே கூறுகிறார், ‘இன்றைய நடைமுறையிலேயே ஆற்றல் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியன தொடருமெனில் பல வளரும் நாடுகளுக்கு முன்னேற்ற வேகம் குறைந்துவிடும் முழுமையாக நின்றும் கூட போய்விடலாம். நமது ஆற்றல் பயன்பாட்டுத்தன்மை குறித்து நாம் மறு சிந்தனை செய்தே தீரவேண்டும். ‘

பின்குறிப்பு:

வர்த்தகதன்மையுள்ள ஆற்றல் தன் உற்பத்தியில் மிகுந்த சுற்றுப்புற சூழல் சார்ந்த விலைகளை நம்மை கொடுக்கவைக்கும் தன்மை கொண்டது.வர்த்தக தன்மையற்ற ஆற்றல் பயன் பாடு தன்னளவில் திறமையற்றதென்பதுடன் மாசுத்தன்மையையும் கொண்டது. எனவே பின்நோக்கி நகரும் தன்மையினை இக்கட்டுரை வலியுறுத்தவில்லை. மாறாக இன்றைய ஆற்றல் உற்பத்திக்கான தொழில்நுட்ப தேர்வு தன்னளவில் ஒரு பெரும் மானுட சமுத்திரத்தினை புறக்கணிக்கிறது. எனவே குவித்தன்மையற்ற, பரவுதன்மை கொண்ட தொழில்நுட்பத்தின் தேவையினை குறித்து பேசுகிறது பல் குத்தும் துரும்பினை பற்றிய

இக்கட்டுரை (அல்லது கட்டுரை தொடரின் முதல் கட்டுரை).

***

அரவிந்தன் நீலகண்டன்

பயன்படுத்தப்பட்ட இணைய தள பக்கங்கள்:

1.http://www.incg.org.in/CountryGateway/RuralEnergy/Overview/RuralenergyinIndia.htm

2.SARMA, E.A.S et al., ாIndia ‘s Energy Scenario In 2020ி, World Energy council, 2002.

(http://www.worldenergy.org/wec-geis/ publications/ default/ tech_papers/ 17th_congress/ 1_1_27.asp)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்

அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

அரவிந்தன் நீலகண்டன்


முன் குறிப்பு:

அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் குறித்து ஒரே வரியுடன், ஒதுக்கப்படுகிறது. இக்கட்டுரையாளன் அணு உலைகளுக்கு எதிரானவன் அல்ல, ஆனால் இன்றைய எரிபொருள் பயன்பாட்டு பாதைகள், அதன் மதிப்பீடுகள் ஆகியவை சார்ந்த மனமண்டலம் குறித்த (நம்பிக்கையின்மையின் விளிம்பிலான) ஐயம் உடையவன். பாரதத்தின் இன்றைய எரிபொருள் உற்பத்தி, பயன்பாடு விநியோகம் ஆகியவற்றில் பாரத சமுதாயத்தின் பெரும்பான்மை மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களின் ‘சிறிய ‘ அளவு பங்களிப்பு மானுட நலம் மற்றும் மேம்பாட்டுக்கு வர்த்தக ரீதியிலான ஆற்றல் விளைவுகளை காட்டிலும் பெரும் அளவு இருக்கும் என கருதுகிறேன். அதாவது பெட்ரோலிய மூலத்திலிருந்து ஒரு மெகாவாட் ஆற்றல் பயன்பாடு இன்று விளைவிக்கும் மானுட நல அளவினைக் காட்டிலும் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் மூலம் கிட்டும் ஒரு மெகாவாட் ஆற்றல் பயன்பாடு விளைவிக்கும் மானுட நல அளவு இன்னமும் அதிகமாக இருக்கும் என்னும் கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை (முடிந்தால் தொடரினை) எழுத முற்படுகிறேன். மார்க்சியத்தின் மேம்போக்குத் தனமின்றி, ஒரு முழுமைத்தன்மை கொண்ட மானுடநலம் பற்றிய அடிப்படை இடத்தை, (மதிப்பீடுகள், தொழில்நுட்பம், சமூக பொருளாதார அமைப்புகள் ஆகியவை சந்திக்கும் ஒரு இடம்) ,ஆற்றல் உற்பத்தி, விநியோகம், பயன்பாடு குறித்த விவாதத்தின் மூலம் தொட முடியுமென நம்புகிறேன். அதன் தொடக்கமாக:

பாரத சமுதாயத்தின் எரிபொருள் பயன்பாட்டு தன்மைகள்

எந்த பண்பாட்டிற்கும் முன்நிபந்தனையாக ஆற்றல் பயன்பாடே விளங்குகிறது என்பார் புகழ்பெற்ற வருங்காலவியல் ஆய்வாளரான ஆல்வின் டாஃப்லர். இன்றைய வளரும் உலகின் வேக வளர்ச்சி பொருளாதாரங்களில் ஒன்றான பாரதமும் அதி வேகமாக வளரும் ஆற்றல் தேவையுடன் விளங்குகிறது.

கடந்த ஐம்பதாண்டுகளில் பாரதத்தின் ஆற்றல் அல்லது எரிசக்தி பயன்பாட்டு தேவை பெருக்கத்தன்மையுடன் வளர்ந்துள்ளது. 1953 இல் 90மில்லியன் டன் எண்ணெய்க்கு சமமான (million oil tonne equivalent MOTE) எரிசக்தி பயன்பாட்டிலிருந்து, நாற்பதாண்டுகளில் 370 MOTE பயன்பாட்டிற்கு பாரதம் சென்றுவிட்டது. அதே சமயத்தில் வர்த்தக தன்மை கொண்ட மற்றும் வர்த்தக தன்மையற்ற எரிசக்தி பயன்பாடுகளிலும் ஒரு பெரும் மாற்றத்தை காணமுடிகிறது. 1953 இல் 30% எரிசக்தி, வர்த்தக தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களிலிருந்தும் (நிலக்கரி, பெட்ரோலிய பொருட்கள், இயற்கை வாயு மற்றும் மின்சக்தி) 70% எரிசக்தி வர்த்தக தன்மையற்ற எரிசக்தி மூலங்களிலிருந்தும் (விறகு, சுள்ளி, விலங்கு கழிவுகள் மற்றும் வைக்கோல் போன்ற விவசாய கழிவுகள்) நமக்கு கிடைத்தது. 1997 இல் இந்த அமைப்பு 70% எரிசக்தி, வர்த்தக தன்மை கொண்ட எரிசக்தி மூலங்களிலிருந்தும் 30% எரிசக்தி வர்த்தக தன்மையற்ற எரிசக்தி மூலங்களிலிருந்தும் என தலைகீழாக மாறிற்று. ஆனால் இந்த தேசிய எரிசக்தி புரட்சி கிராமங்களின் எரிசக்தி பயன்பாட்டிற்கு எவ்வித தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது ?

பாரத மக்கள் தொகையில் 75% மேல் வாழும் கிராமப்புறங்களில் எரிசக்தி பயன்பாட்டினை இரு முக்கிய துறைகளாக பிரிக்கலாம்.

1.கிராம வீட்டு சமையலுக்கான பயன்பாடு. இதுவே இன்றைய தேதியில் பாரத கிராமங்களில் மிகவும் எரிபொருள் பயன்படுத்தும் துறை. (கிராம எரிசக்தி பயன்பாட்டில் 75% இத்துறையிலேயே செலவிடப்படுகிறது.)

2.விவசாய துறை (15 முதல் 20% எரிசக்தி பயன்பாடு)

3. இதர துறைகள் (கிராமப்புற சிறு தொழில்கள் போன்றவை : 5 முதல் 10%)

1980/81 முதல் 1990/91 வரையிலான காலத்தில் தேசிய எரிசக்தி பயன்பாடு 40.45% லிருந்து 50.57% ஆக உயர்ந்தது; ஆனால் வர்த்தகதன்மையற்ற ஆற்றல் பயன்பாடு 59.54% லிருந்து 49.42% சதவிகிதமாயிற்று அதே காலகட்டத்தில் வர்த்தக தன்மைகொண்ட ஆற்றல் பயன்பாடு கிராம சமையல்களில் 4.47% லிருந்து 4.82% ஆக மட்டுமே உயர்ந்தது. வர்த்தகதன்மையற்ற ஆற்றல் பயன்பாடு 95.53% லிருந்து 95.18% ஆக குறைந்தது. அதே சமயம் விவசாய துறையில் ஆற்றல் பயன்பாட்டு சதவிகிதம் கிராமங்களின் சமையல் பயன்பாட்டு சதவிகிதத்திலிருந்து மாறுபடுகிறது. 1953 இல் கால்நடை மற்றும் மானுட உழைப்பாற்றல் 85% லிருந்து 35.16% ஆக 1992 இல் குறைந்தது. அதே காலகட்டத்தில் வர்த்தக ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றல் 15% லிருந்து 64.84% ஆக உயர்ந்தது. (இந்த ஆற்றல் பயன்பாட்டு மாற்றமே பல பஞ்சங்களை எதிர்கொள்ளாது பாரதத்தை காத்தது.) மின்மயப்படுத்தலை எடுத்துக் கொண்டால், தேசிய அளவில் மின்னாற்றல் பயன்பாடு உடையோரின் சதவிகிதம் ஐம்பதுக்கும் குறைவு. ஒரு பில்லியன் தாண்டிய பாரத மக்கள் தொகையில் 75% வாழும் கிராமப்புறங்களில் மின்னாற்றல் பயன்பாடு உடையோரின் சதவிகிதம் தேசிய சதவிகிதத்திற்கும் குறைவு. சமுதாய மேம்பாட்டுத்தன்மையுடனான பொருளாதார வளர்ச்சியால் பாரதத்தின் ஆற்றல் பயன்பாட்டு அளவு மிக அதிகமாக அதிகரிப்பதை, கடந்த பத்தாண்டுகள் ஆற்றல் பயன்பாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வர்த்தக தன்மையுள்ள மற்றும் அத்தன்மையற்ற ஆற்றல் பயன்பாடுகளின் வேறுபாடுகள், குறிப்பாக முந்தையதன் வளர்ச்சியும் பிந்தையதனின் வீழ்ச்சியும் தெளிவாக இப்புள்ளிவிவரங்களில் நாம் காண முடியும்.

மிகத் தெளிவாக மாறிவரும் பாரதத்தின் ஆற்றல் பயன்பாடு அதன் 75% சதவிகித மக்களுக்கு எவ்வித சமுதாய பொருளாதார மாற்றங்களும் ஏற்படுத்தாத விதத்திலான உற்பத்தி மற்றும் விநியோக முறையினை கொண்டுள்ளது. அதிகரிக்கும், வர்த்தக தன்மையுடைய ஆற்றல் பயன்பாடு நகரங்களில் மாத்திரமே பயன்படுகிறது. மாறாக கிராமப்புறங்களுக்கு அதன் கசிவே உள்ளது. இனிவரும் வருடங்களில் பாரதத்தின் ஆற்றல் தேவை கீழே காட்டப்படுகிறது.

பாரதம் ஏற்கனவே ஒரு ஆற்றல் இறக்குமதியாளராக உலகச் சந்தையில் உள்ளது. பாரதத்தின் அந்நிய செலாவணி விகிதங்களை பாரதத்திற்கு பாதகமாக மாற்றிக் கொண்டிருக்கும் விஷயம் இது. இன்றைய பொருளாதார வளர்ச்சி வேகத்தை அப்படியே

நிலையாக கொண்டு செல்லும் பட்சத்தில், இன்று 3040 x 10^15 ஜூல்கள் ஆற்றலை இறக்குமதி செய்யும் பாரதம் அடுத்த பத்தாண்டுகளில் 17315 x 10^15 ஜூல்களை எட்டிப்பிடிக்கும். இது எத்தகைய பொருளாதார வலிமையற்ற தன்மைக்கு பாரதத்தை எடுத்துச் செல்லும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இதற்கு பாரதம் கொடுக்கும் விலையின் பயன் அதன் 75% சதவிகித மக்கள் தொகைக்கு எவ்விதம் சென்றடையும் ? மற்றும் அதனால் ஏற்படும் மானுட மேம்பாட்டால் பாரதத்தின் உற்பத்தி திறன் எவ்வாறு பெருகும் ? இக்கேள்விகளுக்கான பதிலை ,கடந்த ஐந்து பத்தாண்டுகளை வைத்து பார்த்தோமானால், மிகவும் கவலைக்குரியதாகவே காணவேண்டியுள்ளது. ஒரு வேளை இதற்கான பதில் 25 கோடி நகர்ப்புற பாரதியர்களுக்கு ‘பல் குத்தக் கூட போதுமானதாக இல்லாத ‘ ஆற்றலை உற்பத்தி செய்யும் மூலங்களிலிருந்து நமக்கு கிடைக்கலாம். ஐக்கிய நாடுகளின் சமுதாய மேம்பாட்டு செயல்திட்ட மேலாண்மை அதிகாரி ஜேம்ஸ் ஸ்பத்தே கூறுகிறார், ‘இன்றைய நடைமுறையிலேயே ஆற்றல் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியன தொடருமெனில் பல வளரும் நாடுகளுக்கு முன்னேற்ற வேகம் குறைந்துவிடும் முழுமையாக நின்றும் கூட போய்விடலாம். நமது ஆற்றல் பயன்பாட்டுத்தன்மை குறித்து நாம் மறு சிந்தனை செய்தே தீரவேண்டும். ‘

பின்குறிப்பு:

வர்த்தகதன்மையுள்ள ஆற்றல் தன் உற்பத்தியில் மிகுந்த சுற்றுப்புற சூழல் சார்ந்த விலைகளை நம்மை கொடுக்கவைக்கும் தன்மை கொண்டது.வர்த்தக தன்மையற்ற ஆற்றல் பயன் பாடு தன்னளவில் திறமையற்றதென்பதுடன் மாசுத்தன்மையையும் கொண்டது. எனவே பின்நோக்கி நகரும் தன்மையினை இக்கட்டுரை வலியுறுத்தவில்லை. மாறாக இன்றைய ஆற்றல் உற்பத்திக்கான தொழில்நுட்ப தேர்வு தன்னளவில் ஒரு பெரும் மானுட சமுத்திரத்தினை புறக்கணிக்கிறது. எனவே குவித்தன்மையற்ற, பரவுதன்மை கொண்ட தொழில்நுட்பத்தின் தேவையினை குறித்து பேசுகிறது பல் குத்தும் துரும்பினை பற்றிய

இக்கட்டுரை (அல்லது கட்டுரை தொடரின் முதல் கட்டுரை).

***

அரவிந்தன் நீலகண்டன்

பயன்படுத்தப்பட்ட இணைய தள பக்கங்கள்:

1.http://www.incg.org.in/CountryGateway/RuralEnergy/Overview/RuralenergyinIndia.htm

2.SARMA, E.A.S et al., ாIndia ‘s Energy Scenario In 2020ி, World Energy council, 2002.

(http://www.worldenergy.org/wec-geis/ publications/ default/ tech_papers/ 17th_congress/ 1_1_27.asp)

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்