கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
சிறிது சிறிதாய் உன்னை
விடுவித்துக் கொள்
முன்னைப் பழக்கத்தை விட்டு !
முக்கிய அறிவுரை இது
உரைப்பது நான் !
கருவில் இருக்கும் உனக்குக்
குருதியே சத்துணவு !
பிறந்ததும் சிசு
குடிப்பது பாலுணவு !
சிறு பிள்ளை பின்பு தின்பது
அரிசிச் சோறு !
அறிவு வளர்ச்சி அடைந்து
ஆய்வாளி ஆகும்
சேய்கள் எல்லாம் !
காட்டு விலங்குகளைப் பின்னர்
வேட்டை ஆடி
விளையாடு வார் !
++++++++++++
கருவில் இருக்கும் சிசுவுடன்
உரையாடல்
புரிவ தெப்படி ?
இப்படி நீ சொல்லலாம் :
“விரிந்தது, சிக்க லானது
வெளி உலகு !
மலைப் பாதைகளும்
கோதுமை வயல்களும்
பூந்தோப்பு களும் ஆங்கே
காணலாம் !
இரவு வானில் கோடான கோடி
ஒளி மந்தைகள்
விழித் தெழும் !
பரிதி வெளிச் சத்தில் நடக்கும்
திருமணத்தில்
நண்பர்கள் இசை பாடி
நடனம் புரிவது
ஒரு தனி அழகு !”
+++++++++++
கருவுக்குள் இருக்கும் சிசுவைக்
கேட்டுப் பார் :
“ஏன் அது வயிற்றுக்குள்
இமை மூடி
முடங்கிக் கிடக்குது
இருட்டிலே !”
வரும் பதிலைக் கேள் :
“வேறோர் உலகம்” இல்லை,
நேர் மேலே !
எனக்கு மட்டும் தெரியும்
எனது அனுபவம் ! நீ
மாயக் கனவுகள் காண்பதாய்
மனதுக்குத் தெரியுது !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3 , 2011)
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35
- கணையாழியும் கஸ்தூரிரங்கனும்
- ஊட்டவுட்டுத் தொரத்தோணும்
- விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்
- யார் கொலையாளி? – துப்பறியும் சிறுகதை
- மனசு
- இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10
- வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்
- ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)
- கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது
- மரணத்தின் தூதுவன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -4)
- களங்கமில்லாமல்..
- அதுவரை பயணம்.
- என் மண்!
- குதிரைகள் இறங்கும் குளம்
- இரட்டை ரோஜா இரவு
- அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)
- யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்
- நெய்தல் போர்
- பிரச்சாரம்
- தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி
- பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9
- அலை மோதும் நினைவுகள்
- நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.
- புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!
- செம்மொழித் தமிழின் பொதுமை
- 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)
- பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்
- இலக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34)
- அப்படியாகிலும் இப்படியாகிலும் …
- அதனதன் தனிமைகள்
- அறை இருள்
- கவலை
- என் மூன்றாம் உலகம்!
- சுயபரிசோதனை
- சிலர் வணங்கும் கடல்
- தேடும் உள்ளங்கள்…!
- பெருங்கிழவனின் மரணம்