கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
************************************
ஆண்மையின் குறைபாடு !
************************************
(சென்ற வாரத் தொடர்ச்சி)
+++++++++++
ஏழு குர்ரான் நூட்களை
ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி
உறுதி எடுப்பான்
காலி•ப் !
எழில் மாது கட்டுக்கடங்கி
உள்ளதைச் சொல்வாள்
தெளிவாய் :
புல்வெளியில் சிங்கத்தைக்
கொன்றது,
குடிலுக்குத் திரும்பிய காலி•ப்
குறி எழுந்தது,
குறுக்கே எலி ஓடிய போது
குறி குனிந்தது
எல்லாம் உரைப்பாள்
தயங்காது !
ஒளித்து வைத்த நினைவுகள்
வெளியே வந்தன !
++++++++++++++
வினை விதைக்காதே மனிதா !
விதைத்தால்
வினைதான் அறுவடை செய்வாய் !
வெய்யிலும் மழையும்
விளைவிக்கும் பயிர்களை !
இலையுதிர் காலத் துக்குப் பின்
வசந்தம் வரும் !
மீள் பிறப்பை வலுயுறுத்தும்
சான்றாய்ப்
பருவ காலச் சுழற்சி !
வசந்த காலத்தில் இரகசியம்
வந்திடும் வெளியே !
வயல் மண் வாய் பிளந்து
துளிர்விடும் இலைகள் !
கவலை மிகுந்திடும் ஒயின்
தலை வலியாக !
எங்கிருந்து ஒயின் வருதென்று
சிந்தித்துப் பார் !
+++++++++++++++
விரிந்து மலரும் பூக்கள்
விதைகள் போல் தோன்றா !
மீன் போலிருக்கும்
ஸீமன் போன்று மனிதன்
தோன்று வதில்லை !
ஏசு நாதர் பிறந்தது
காபிரியல் மூச்சி லிருந்து !
ஆயினும்
அந்த வடிவில் ஏசு இல்லை !
முந்திரிக் கொடி போல்
கனி தெரிவதில்லை !
காதல் உடல் உறவுகள்
சில வற்றின்
வேறு பட்ட விதைகள் !
மாறான இடங்கள் !
பிறவி எல்லாம் மூலம் போல்
இருப்ப தில்லை !
வலி எங்கிருந்து
வருவ தென்று அறியோம் !
நாம் முன்பு செய்த தெல்லாம்
ஏனென்று அறியோம் !
காரணம்
அறியா திருப்பது நல்லது !
கவலை தாக்கும்
அல்லது !
(தொடரும்)
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 8, 2011)
- ஐந்து குறுங்கவிதைகள்
- கபீரின் கனவும் நாம் கட்டமைத்த இந்தியாவும்
- தாமிரபரணித் தண்ணீர்
- இரவின்மடியில்
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபது
- பெண் – குழந்தை … குமரி … அம்மா
- முன்னேற்பாடுகள்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -2
- தோட்டத்துப்பச்சிலை
- வலை (2000) – 2
- நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல் :
- ஒரு கணக்கெடுப்பு
- ஊழிற் பெருவலி யாதுள ?
- நீ, நான் மற்றும் அவன்
- தண்ணீர்க் காட்டில் - 1
- நரம்பறுந்த நிலம்..
- ப.மதியழகன் கவிதைகள்
- இயல்பில் இருத்தல்
- ஆரம்பம்
- தியான மோனம்
- (3) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்
- சரஸ்வதி சகாப்தத்தின் நாயகர்.
- கூடா நட்பினால் விளைவது கேடே
- முடிவற்ற பயணம் …
- வரிசையின் முகம்
- இதய ஒலி.
- அப்பாபோல
- பூஜ்ஜியத்தின் கால்வாசி!
- கம்பன் கழகத்தின் இந்த ஆண்டின் விழா 2011
- திரு மலர்மன்னன் அவர்களுக்கு
- இளங்குருத்தினைக் காக்க உதவுங்கள்…
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – (1)
- பேட்டி : சுப்ரபாரதிமணியனுடன் பாலு சத்யா
- இவர்களது எழுத்துமுறை – 30 பிரபஞ்சன்
- ஒரு பறவையின் பயணம் பாவண்ணனின் ”ஒட்டகம் கேட்ட இசை”
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Split & Drift)
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- பிரியம் சுமக்கும் சொற்களால்…..
- நீ அறியும் பூவே
- போர்ப் பட்டாளங்கள்
- ஒரு ஊரையே
- கடன்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- இனி உங்களைத் தூங்க வைக்க முடியாது
- மனசாட்சி விற்பனைக்கு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -8)
- வலை (2000) – 1