தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
தேனம்மை லெக்ஷ்மணன்
அடுத்த கோர்ஸ்..
****************************
காய்ச்சலுக்கு.,
இருமலுக்கு
உடல்வலிக்கு.,
தொண்டைப் புண்ணுக்கு என
பல வண்ண மாத்திரைகளையும்
ஒன்றாய் விழுங்குவதாய்..
ஈழத்துக்கு.,
மீனவர்க்கு்.,
சாய(ந்த) மண்ணுக்கு.,
உரிமை மீறலுக்கு என
கவிதை எழுதித் தொலைக்கிறேன்..
ஒன்றையும் குணமாக்கும்
வழி தெரியாமல் விழிக்கிறேன்..
கையில் அடுத்த கோர்ஸை
தொடரச் சொல்லும்
மருத்துவக் குறிப்போடு..
———————
கலம்பகம் விரும்பி..
******************************
மரிப்பதற்கான நேரம்
இல்லை இது ..
வாகை மாலையில்
உலா வந்தாய்..
யானையோ..
ஒட்டகமோ..
இணைந்த கரங்களும்
பிணைந்த விழிகளுமாய்
நனைந்து கிடந்தோம்..
உலராமல்..
கோட்டை கொத்தளங்களும்
குலவிய அந்தப்புரங்களும்
கொடிகள் வேரோடி
மண்பாயக் கூடுமோ..
உப்பரிகையில்
தலை உலர்த்தி நான்.
சோகம் பாய்ந்த விழியோடு
உன் மேல் வெறுப்புற்று..
கலம்பகம் விரும்பி
காதலோடு விழுங்கி
கூர்ச்சூலம் பாய
புறமுதுகிடாத வீரனாய்
அருஞ்சொற்பொருள்
எப்படி அறிந்தாயோ..
என் அன்பழிந்த அக்கணம்
நீ மரித்திருந்தாய்..
————-
- இஸ்லாமிய உலகம் பற்றிய அமெரிக்க அவதானிப்புகள்
- கடல் உள்ளும் வெளியேயும்..
- காதல் என்பது
- அன்பளிப்பு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -17
- ஆயிரம் மினராக்களின் நகரம்
- தமிழ் ஒருங்குகுறி: கரவு வினைகளும் காப்பு முயற்சிகளும்!
- இளங்கோ கவிதைகள்
- பாழடைந்த வீட்டின் கதவு
- விண்வெளி ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன் (1912 -1977)
- விதைகளைத் தூவிச் செல்பவன்
- தேடல்
- பசுபதி கவிதைகள்
- இடைவெளி
- உருள்படும் பகடைக்காய்கள்
- உயிரோடு நீ
- வலி
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27
- அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட்.சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்!
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- செம்மொழி இலக்கியங்களில் கடல் சூறாவளியும், கடலழிவில் இருந்து மீளுதலும் ஆன குறிப்புகள்
- அறிவோர் கூடல் – குப்பிழான் ஐ. சண்முகன் உரை
- வலியதுகள் வாழ்கின்றன
- பூக்கள் விசித்தழும் மாலை
- மரப்பாச்சியின் கண்கள்
- ஹைக்கூ கொத்து – 2
- திரை
- சிந்தனையாளர் சங்கமத்தில் எழுத்தாளர் அம்பையுடன்
- ஸ்பரிசம்
- மௌனத்தோடு கைக்குலுக்குதல்!
- இவர்களது எழுத்துமுறை – 26 ஆதவன்
- “தடம் மாறா வாழ்க்கையினை வாழ்வோம்…….!”
- இதுஎன்ன?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -4)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -2)