தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
தேனம்மை லெக்ஷ்மணன்
1. ஒளிதல்..
**************
எதிர் வீட்டு புஜ்ஜி
முந்தானை மூடி முட்டாச்சு..
பக்கத்து வீட்டு பாப்பு
திரைச்சீலையில் ஒளிந்து பிடித்து..
ரெண்டும் சென்றபின்
முந்தானையும் திரையும்
ஒளிய இடமில்லாமல்..
2.. பழசு..
***********
காலம் துவைக்கும்
கிழமைத் துணிகள்..
உரிந்து விழுந்தும்.,
சாயம் போகாமல்..
அதே முகப்பு.,
அதே பட்டாலை..
அதே ஆல்வீடு..
அதே சுவற்றலமாரி..
அதே கண்ணாடி..
ஆற்றிலொரு கால்..
சேற்றிலொரு கால்..
விளையாட்டாய் நரை..
ஐஸ்பால்., டப்பா வாய்
முதுகிலடிக்காமல்
முகத்தில் அடித்தது
சுருக்கங்களுடன்
அவுட்டான நானாய்..
3. மாமிசக் கடை.
*********************
முதிர் ஆடுகள் சில
இளங்கோழிகள் பல..
அபூர்வமாய்
புறாவும் ., முயலும்..
எலியும் ., பூனையும்.,
காகமும் உடும்பும் கூட
உணவாகும் நரர்க்கு..
ரத்தம் தெறிக்க
வெட்டுப் படவே
சுயமற்றுப் பிறந்த
அப்பிராணிகள்..
சகதித் துணுக்காய்
தேய்த்தும் சத்தம்
அடங்காத
பூட்ஸும் துப்பாக்கியும்..
வெட்டப் படுவதும்
விற்கப்படுவதும்..
சந்தைப் பொருளாவதும் குறித்து
ஏதும் செய்ய இயலாமல்..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)
- ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”
- ஒப்பந்த மரணம்
- அர்ச்சனை
- கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்
- அவரவர் பார்வையில்
- நினைவுகளின் சுவட்டில் – (59)
- தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)
- தருணங்கள்
- M.ராஜா கவிதைகள்
- திரை கடல்
- இன்னொருவன்
- போதனை…
- அன்புக்கவி
- கோநா கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- தமிழினம் போற்றும் தமிழ்மனம்
- தோற்றம் எங்கே
- ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்
- ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..
- கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு
- வியாபாரம்
- இவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்
- சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
- காலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு
- சில மழை இரவுகள்…
- பிரதீபா கவிதைகள்
- சாயல்கள்
- யாசகம்
- கொடுமைக்குக்குறைவில்லை!
- ஓயாத காற்று
- அது எது..!
- எப்படியும்… ப்ரியம் எனக்கு!
- வலியதுகள் வாழ்கின்றன
- ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்