கோநா கவிதைகள்
கோநா
.
கவிதை 1; மந்திர மல்லி
வேலைக்குச் செல்லும் வேளையில்
மின்சார ரயில்நிலையத்தின் வெளியே
“ரெண்டு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி…”
கூவிக் கொண்டிருந்தாள்
ஒரு சிறுமி.
வேலை முடிந்த மாலையில்
அதே இடத்தில் அச்சிறுமி
“நாலு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி…”
கூவிக் கொண்டிருந்தாள்.
அது
அரைநாளில்
இருமடங்காகும்
மந்திர மல்லி
அச்சிறுமி
ஒரு தேவதையாக
அந்நிலமை
ஏதேனும் சாபமாகவும்
இருக்கக் கூடுமென்றேன்
ஒருவரும் நம்பவில்லை
சிரித்துச் செல்கிறார்கள்.
கவிதை 2; மழை விதைத்தவை
இரவு பெய்த மழை
சாலையில் குழிகளை
துளி ஏருகளால்
உழுது சேறாக்கி
ஒவ்வொன்றிலும்
விதைத்துச்
சென்றிருக்கிறது
ஒரு நிலவையும்
சில நட்சத்திரங்களையும்.
கவிதை 3; கதை தெரியாத காட்டின் கதை
ஒரு பெரிய காடு இருந்துச்சாம்
காட்ல ஒரு சிங்கமிருந்துச்சாம்
அப்றம் ஒரு புலி இருந்துச்சாம்
குரங்கு இருந்துச்சாம்
நரி இருந்துச்சாம்
மான் இருந்துச்சாம்
முயல் இருந்துச்சாம்
யானை இருந்துச்சாம் “ப்பா…ம்”
பூனை இருந்துச்சாம் “ம்மியாயாவ்”
எல்லாம் என்ன செய்தன,
என்ன கதை
என்பதெல்லாம் தெரியாததால்
எதுவும் சொல்லவில்லை
எதையும்
அவளும் கேட்கவில்லை
உறங்கிவிட்டிருந்தாள்.
அப்றம் எல்லாம்
நைட்டு சாப்ட்டு
சமத்தா தூங்கிடுச்சாம்
என கதையை முடித்து
கன்னத்தில் முத்தமிட
உறக்கத்தில் சிரிக்கிறாள் ஓவியா.
கவிதை 4; கைவிடப்பட்ட குழந்தைகள்
உருவானதும்
கருப்பையிலேயே சுமக்கிறார்கள்…
பிறந்ததும் மார்போடே
அணைத்து வைத்துக் கொள்கிறார்கள்…
சற்றே இறக்கி
இடையில் வைத்துக் கொள்கிறார்கள்
சிலகாலம்…
பின்
தரையில் விட்டு
விரல்களை மட்டும்
பிடித்துடன் வருகிறார்கள்…
மெ…ல்…ல… மெ…ல்…ல…
விரல்களையும் விட்டுவிடுகிறார்கள்…
பெரியவர்களால்
கைவிடப்பட்ட குழந்தைகளே
பெரியவர்களாகிறார்கள்…
இல்லையெனில்
குழந்தைகளாகவே இருக்கக் கூடும்
வளர்ந்தும்.
கவிதை 5; ஆடை துறந்த ஞானி
அஞ்சு வயசாகுது
ட்ரஸ்சே போட்டுக்க மாட்டேங்கறா…
எம் மாமிய என்னத் திட்றா,
என்ன புள்ள வளத்துருக்கேன்னு…
பக்கத்து வீட்டக்கா
பிராது கொடுத்தாள்
கண்ணாமூச்சி ஆட்டத்தோழியை
கண்டித்தேன் அழைத்து
வெட்கமாயில்லையா உனக்கு
அழகாய் சிரித்துக் கொண்டே
ஆடை துறந்த ஞானியென
அமைதியாய் திருப்பிக் கேட்டாள்
வெட்கமாயில்லையா உனக்கு
ச்சே…
ரொம்ப வெட்கமாய் போய்விட்டது.
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)
- ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”
- ஒப்பந்த மரணம்
- அர்ச்சனை
- கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்
- அவரவர் பார்வையில்
- நினைவுகளின் சுவட்டில் – (59)
- தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)
- தருணங்கள்
- M.ராஜா கவிதைகள்
- திரை கடல்
- இன்னொருவன்
- போதனை…
- அன்புக்கவி
- கோநா கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- தமிழினம் போற்றும் தமிழ்மனம்
- தோற்றம் எங்கே
- ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்
- ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..
- கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு
- வியாபாரம்
- இவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்
- சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
- காலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு
- சில மழை இரவுகள்…
- பிரதீபா கவிதைகள்
- சாயல்கள்
- யாசகம்
- கொடுமைக்குக்குறைவில்லை!
- ஓயாத காற்று
- அது எது..!
- எப்படியும்… ப்ரியம் எனக்கு!
- வலியதுகள் வாழ்கின்றன
- ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்