கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
எம்மோடு அமர்ந்துள்ளாய்
இப்போது.
பொழுது புலர்ந்ததும் நீ
நிலத்தில் நடமாடுவாய் !
நீ நீயாக இருக்கிறாய் ! நாம்
விரட்டிச் செல்லும்
வேட்டை விலங்குகள்
வேட்டை யாடப் படும்
வேட்டைக்கு நீ எம்மோடு
விரையும் போது !
உடம்பிற்குள் உள்ளாய் நீ
நிலத்தில் நிற்கும்
திட மான செடிபோல் !
ஆயினும் நீயொரு
வாயு !
கடற்கரையில்
காலியாய்க் கிடக்கும்
நீ முத்தெடுப் போன் உடம்பு !
நீயொரு மீன் !
++++++++++++++
கடலுக்குள் கிடக்கின்றன
கதிர்வீசும்
கணக்கற்ற நாண்கள் !
கரிய நாண்களும் உள்ளன
ஏராளமாய் !
இரத்தக் குழல்கள் போல்
தெரியும் அவை
ஒருபுறம் திறக்கும் போது !
கடலிசை எழுப்பும்
இசைக் கருவியின் நாண்கள்
ஒளிந்திருக்கும்
உனது இரத்தக் குழாய்கள் !
கடல்நுரை நோகும் விளிம்பல்ல
காணாத
கடற்கரையின் ஓலம் !
***************
தகவல் :
1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)
Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.
2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)
3. Life of Rumi in Wikipedia
********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 28, 2010)
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -11
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)
- ஷங்கர நாராயணனன் காட்டும் ”வேற்றூர் வானம்”
- ஒப்பந்த மரணம்
- அர்ச்சனை
- கல்விக்குக் கொடுப்பவர்கள் காலத்தை வென்றவர்கள்
- அவரவர் பார்வையில்
- நினைவுகளின் சுவட்டில் – (59)
- தரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்?
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதன் விதிக்குப் பலியானவர் ! (கவிதை -39 பாகம் -1)
- தருணங்கள்
- M.ராஜா கவிதைகள்
- திரை கடல்
- இன்னொருவன்
- போதனை…
- அன்புக்கவி
- கோநா கவிதைகள்
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- தமிழினம் போற்றும் தமிழ்மனம்
- தோற்றம் எங்கே
- ஜான் ஹார்ட்டுங் கட்டுரை பற்றி
- தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீட்டு விழா
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 10 – இறுதியில்
- ஆதலினால் காதல் செய்வோம்.. கவிதைத் தொகுதி.. எனது பார்வையில்..
- கெண்டை மீன்குஞ்சும் குர்ஆன் தேவதையும், திறனாய்வியல் நோக்கு
- வியாபாரம்
- இவர்களது எழுத்துமுறை – 22 நாஞ்சில்நாடன்
- சிறுகதைச் சிற்பி கு.ப.ராஜகோபாலன்
- நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
- காலச்சுவடு நூல் வெளியீட்டு நிகழ்வு
- சில மழை இரவுகள்…
- பிரதீபா கவிதைகள்
- சாயல்கள்
- யாசகம்
- கொடுமைக்குக்குறைவில்லை!
- ஓயாத காற்று
- அது எது..!
- எப்படியும்… ப்ரியம் எனக்கு!
- வலியதுகள் வாழ்கின்றன
- ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்