M.ராஜா கவிதைகள்
M.ராஜா
1சாபச் சுமை
சுவர்வழி இறங்கிய ஈரம்
படர்ந்திருக்கும்.
பாதுகை உதிர்த்த மண்துகள்கள்
ஈரக் கோடிழுத்தூரும் அட்டைப்பூச்சி
மேலும் கீழுமாய்
பயணதிசை காட்டும் பாதச்சுவடுகள்.
எதையும்
பாரமெனவே கொள்ளுமோ மாடிப்படிகள்?
வருடிச் செல்லும் காற்றில்
விமோசனம் இல்லை
ஏதேனும் ஒரு அற்புதப்பாதத்தை
எதிர்பார்த்தபடி படுத்துக்கிடக்கிறது
கல்லாய்க் கடவது எனச் சபிக்கப்பட்ட
முனிவன் காலத்து நீரோடை ஒன்று.
__________________________________________________
2.அகத்துள் அகவை
கண்ணை மூடி
தூங்குங்க தாத்தா-
மஞ்சள் காமாலையால்
மூளை மழுங்கி
மூச்சிரைக்க
அழுது பிதற்றிக்கொண்டிருந்தவரின்
நெஞ்சுக்கூட்டில்
தட்டிக் கொண்டிருக்கிறாள்
கிருஷ்ணவேணி சிஸ்டர்.
தாய்த் தீண்டலின் கதகதப்பில்
தூங்கிப்போகிறது குழந்தை.
வயதுகளை
கூட்டியும் குறைத்தும்
சமன்படுகிறது காலம்.
____________________________________________________
3.ஒத்திகை
முன்சக்கரம்
உழுது பீய்ச்சும் மண்குழம்பு
படாது கால்களை உயரத் தூக்கி
நெகிழ்த்தும் ஈரமண்ணில்
விழாது வாகனத்தை வளைத்து
சேற்றுக்குளத்தைக் கடந்து
சமன்பரப்பை அடைந்ததும்
படர்கிறது ஒரு ஜெயக்களிப்பு…
சேதாரமின்றி
ஏதோவொன்றை கடந்து வந்துவிட்டதாய்.
___________________________________________________
4.வெளிச்சம்
அடுத்த முறை ஊருக்கு வரும்போது-
நண்பர்களை பார்க்கணும்.
சிவன்மலைக்கு நடந்தே போகலாம்.
பள்ளிக்கூடத்திற்குள் போய் வர வேண்டும்.
இன்னும் கொஞ்சம் கனிவோடு நடந்து கொள்ளலாம்.
பக்கவாட்டு சன்னல்வழி புகும் காற்றில்
ஈரத்துளிகள்
மழை எச்சில் சளிக்கு
ஈரம் பொது அம்சம்.
ஏறிய இடம் வேறு
இறங்கும் இடம் வேறு
சகவாசம் தற்காலிகம்.
அசைவன அசைவற்றன
சகலமும் பின்னகரும்.
இருட்டை கீறிப் பாயும் பேருந்து வெளிச்சம்.
________________________________________________________
நன்றி,
M.ராஜா
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22
- கண் திறக்கும் தருணம்..
- எதிர்காலம்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர
- விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு
- ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்
- கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்
- வெவ்வேறு சிறகுகள்…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10
- நீங்க போட்ட எட்டு
- வன்முறை 11
- M.ராஜா கவிதைகள்
- எங்கள் தெரு புளியமரம்!
- தமிழின் செம்மொழித் தகுதிகள்
- அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)
- கணினி மேகம் (cloud computing) பகுதி 1
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- திகட்டும் இசை
- எனதாக நீயானாய்
- சமத்து
- இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்
- தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு
- பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்
- முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)
- இந்தியன்
- மகரந்தங்களில் தேனுண்ணும் வண்டுகள்
- சிறிய சிறகு
- விபரீத கரணி
- இனம் இனத்தோடு…!
- மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு
- நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு
- அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா
- தேநீர் விரல்கள்
- உயிர் நீர்
- வளையல் துண்டுகளின் காட்சி
- விட்டுச் செல்லாதீர்
- விலகாத உறவு…
- பனிப்பிரதேச பேரழகி!
- இவையெல்லாம் அழகுதான்
- தொடர்பில் இருப்போம்
- என்னில் நிறைய
- ஆழிப்பேரலை
- இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி
- ஊறுக்காய் குறிப்பு!
- சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை